Jump to content

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

06 MAY, 2024 | 04:26 PM
image
 

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 'பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்', 'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே', 'பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்' என்றவாறு கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பாக 10 பேரை அழைத்துப் பேசியிருந்தார். 

இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட சில பொலிஸார் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அந்த தந்தையை தாக்கியிருந்தார். 

தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240506_110331.jpg

IMG_20240506_110313.jpg

IMG_20240506_110455.jpg

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lkIMG_20240506_110524.jpg

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ பிரான்சில் இருந்து போன “ஓமான்/இலண்டன்” போல இருக்கு இந்த குழாய்கிணறு ராசன்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம நாலு பொடியங்கள் சேர்ந்து இப்ப மூண்டு குழாய்க்கிணறு கட்டிக் குடுத்திருக்கிறம்.

 வால்வினால் தண்ணீ வந்து நிலத்தில விழுற இடத்தில ஒரு சிறிய கொங்கிறீட் பாத்தி போட பொருட்களை வாங்கித் தாறம்,  பயனாளிகள் கூடச் சேர்ந்து கட்டுவார்களோ எண்டு கேட்க ; 

"ஐயோ ஐயா,  அடிக்க வந்திடுவாங்கள்,  அங்கையிருந்து காசு வருது - வந்தாயா,  கிணறு அடிச்சாயா,, போனாயா,, எண்டிருக்க வேணும்"  எண்டு தான் சொல்லுவினம் எண்டு சொல்லுறார் கிணறு அடிக்கிறவர் ..

குழாய் கிணறு எண்டாலே யாருக்காவது அடி தான் விழும் போல கிடக்கு மக்காள் ....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்றாவது பந்தியில கால் , அரைக்கால்,  முக்கால்,  முழு மற்றும் தலைகீழ்,  தலை மேல்,  ஒரு கால்,  இருகால் புள்ளி வகையாறாக்களை எவ்வாறு சரியாகப் போடுவது எண்டு பண்டிதர் யாரேனும் அறிவுறுத்துவினமே ....🤫

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன் 15 ஆண்டுகள் சென்றுவிட்டன. இப் 15 ஆண்டுகளில் தமிழரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. ஐநாவில் சான்றுகளைத் திரட்டும் ஒரு பலவீனமான பொறிமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பாக கனடாவில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இமாலயப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் அங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இவற்றைவிட முக்கியமாக இறுதிக்கட்டப் போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள். அதாவது 15ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும் சித்திரம் என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் உடைந்து கொண்டே போகிறார்கள். நினைவு கூர்தல்தான் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சி புள்ளியில் ஒன்றுகூட்டி வைத்திருக்கிறது. அதே நினைவு கூரும் விடயத்தில், தமிழ்ச் சமூகத்தில் உடைவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் கட்சிகளாய்; அமைப்புகளாய்; குழுக்களாய்; கொள்கைகளாய்; பிரகடனங்களாய்; ஊர்களாய்; சங்கங்களாய்; வடக்காய்; கிழக்காய்; சமயமாய்; சாதியாய் ;இன்ன பிறவாய் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை, நினைவு நாட்கள்தான் ஓரளவுக்காவது உணர்வுபூர்வமாக ஒன்றுகூட்டி வைத்திருக்கின்றன. அதனால்தான் அரசாங்கம் நினைவுகளைக் கண்டு பயப்படுகின்றது. நினைவின் குறியீடாக தமிழ் மக்களால் உருவகப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியை அரசாங்கம் ஒரு குற்றப் பொருளாகப் பார்க்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்த களத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு “தமிழ் சிவில்சமூக அமையம்” உணவையே நினைவுப் பொருளாக உபயோகித்தது. அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. இப்பொழுது அந்த உணவையே அதாவது, நினைவையே ஒரு குற்றமாக அரசாங்கம் பார்க்கின்றது. சில நாட்களுக்கு முன், திருகோணமலையில் உணவு ஒரு குற்றமாகக் காட்டப்பட்டது. இறுதிக்கட்டப் போரில் ஒடுங்கிய கடற்கரைக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் மத்தியில் கஞ்சி இருந்தது; போண்டா இருந்தது; ரொட்டி இருந்தது. இதில் கஞ்சியானது தமிழ்ப் பண்பாட்டில் வெவ்வேறு பண்பாட்டு நிகழ்வுகளோடு சம்பந்தப்படுகின்றது. அது மிக எளிமையான உணவு. ஆனால் தமிழ் வீடுகளில் காய்ச்சும் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒன்று அல்ல.ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய்க்குத் தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே அது ஒரு பால் இல்லாத கஞ்சி. அரிசியை கிடாரத்தில் போட்டு நீர் விட்டு, உப்புப் போட்டு வேக வைப்பார்கள். அரிசி வெந்ததும் அதில் இரண்டு பால்மா பக்கெட்டுகளை உடைத்துக் கரைத்து அதில் சேர்ப்பார்கள். அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. அது தேங்காய்ப் பாலற்றது. பயறு இல்லாதது. ருசியற்றது. அந்த ருசியின்மைக்குள் அதன் அரசியல் செய்தியிருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் ஒரு கொடிய போர்க்களத்தின் நினைவு இருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் இனப்படுகொலையின் பயங்கரம் இருக்கின்றது. அந்த ருசியின்மைக்குள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நீதிக்கான தாகம் இருக்கிறது. அந்த ருசியின்மைதான் இனப்படுகொலையின் ருசி. அந்த ருசியின்மைதான் மரணத்தின் ருசி. கூட்டுக் காயங்களின் ருசி. கூட்டு மனவடுக்களின் ருசி. சுற்றி வளைக்கப்பட்டிருந்த; தனித்து விடப்பட்டிருந்த ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கண்ணீரின் ருசி; ரத்தத்தின் ருசி.தோல்வியின் ருசி; ஒரு யுகமுடிவின் ருசி. அந்த ருசியை தலைமுறைகள் தோறும் கடத்தும் பொழுது ஏன் அது ருசியாயில்லை என்ற கேள்வி வரும். அந்த ருசியின்மைக்குப் பின்னால் மேலும் பல கேள்விகள் அவிழும். ஒடுங்கிய சிறிய கடற்கரையில் ஏன் அந்த மக்கள் தனித்துவிடப்பட்டார்கள்?அருகில் இருந்த தமிழகம் ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? முழு உலகமுமே ஏன் அவர்களை காப்பாற்றவில்லை? உலகப் பெரு மன்றங்களான ஐநா போன்றவை ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அவர்களை நோக்கி அனுப்பப்பட்ட” வணங்கா மண் “என்ற கப்பல் ஏன் வந்து சேரவில்லை? என்ற கேள்விகளை  அந்த ருசியின்மை எழுப்பும். அந்த ருசியின்மையை தலைமுறைகள் தோறும் கடத்தும் போதுதான் நீதிக்கான போராட்டம் மேலும் வலுப்பெறும். மட்டுமல்ல, தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடியும். அந்த ருசியின்மைக்குள் இருக்கும் கேள்விகளை வீடுகள் தோறும் கேட்டு அதற்கு பதில் கொடுக்க வேண்டும். மூத்த தலைமுறை அதைச் செய்ய வேண்டும். தமிழ் வீடுகளில் சாப்பாட்டு மேசைகளில்; பாடசாலைகளில்; பொது இடங்களில்; என்று எல்லா இடங்களிலும் அந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.அது நினைவுகளைக் கடத்தும் ஒரு பொறிமுறை மட்டுமல்ல, அதைவிட ஆழமாக அது ஓர் அறிவூட்டும் செய்முறை.அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தோற்காமல் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுக்கும்.எனவே அந்த நினைவுகளைப் பரிமாற வேண்டும். தலைமுறைகள் தோறும் கடத்த வேண்டும். உலகில் பொதுவாக எல்லா மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் கதை சொல்லும் பாரம்பரியம் உண்டு. உறங்கும் நேரக் கதைகள்;பாட்டி செல்லும் கதைகள் என்று பலவாறாகக் கதை சொல்லும் பாரம்பரியங்கள் உண்டு. இவ்வாறு கூறப்படும் பல கதைகள் நீதிநெறிக் கதைகள். ஈழத் தமிழர்கள் அதைவிட மேலதிகமாக நீதிக்காகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கதைகளை தமது அடுத்த தலைமுறைக்குக் கூறவேண்டும். நீதிக்கான போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் எங்கே தேங்கி நிற்கிறார்கள்? என்பதனைச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டவேண்டும்.எனவே கஞ்சியின்மூலம் கடத்தப்படும் நினைவுகள் அல்லது கேள்விகள் எனப்படுகின்றவை,ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்கு இறந்த காலத்தின் நினைவுகளைப்  பகிர்வது, கடத்துவது என்பது பழைய காயத்தை திரும்பத்திரும்பக் கிண்டி இரத்தம் பெருகச் செய்யும் வேலை என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டுவார்கள். காயங்களைக் கிண்டாதீர்கள். அயர் மூடிய காயங்களின் அயரை உரித்து அதை புதுப்பிக்காதீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டும். காயம் எப்பொழுது ஆறியது? காயங்கள் ஆறவில்லை. அவை எப்பொழுதும் உண்டு. புதிய காயங்களும் உண்டு. மயிலத்தமடுவில் குருந்தூர் மலையில் வெடுக்கு நாறி மலையில் புதிய காயங்கள் உண்டு. ஓர் உணவை அதாவது நினைவை குற்றமாகப் பார்க்கும் அரசியல் காயங்களை ஆற விடாது.ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கூட்டுக் காயங்கள் ஆறாதவை. அவை ஆறாதவை என்பதனால்தான் அவற்றைக் குறித்து உரையாட வேண்டியிருக்கிறது. அவற்றை எப்படி சுகப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீன கவிஞர் ஒருவர் எழுதினார் “குணப்படுத்தவியலாத ஒரு காயமாக” நினைவைப் பேணுவது என்று. அதுதான் உண்மை. ஈழத் தமிழர்களின் கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் குணப்படுத்தப்படாதவை. அதற்கான குணமாக்கல் செய்முறைகளை சிறு தொகை மருத்துவர்கள் மட்டுமே முன்னெடுக்கின்றார்கள். அதற்கும் போதிய அளவு மனநல மருத்துவர்கள் கிடையாது. அது மட்டுமல்ல,அது மருத்துவர்களால் மட்டும் சுமக்கப்படக்கூடிய ஒரு சுமை அல்ல. அது ஒரு கூட்டுச் சுமை. கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மன வடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சை தான் இருக்கலாம். தனிய மருத்துவர்கள் மட்டும் அதைச் சமாளிக்க முடியாது. தவிர்க்க முடியாதபடி அது ஓர் அரசியல் பண்பாட்டுச் செய்முறையாகத்தான் இருக்கலாம். அதற்குப் பொருத்தமான அரசியல் தலைமை வேண்டும். அத்தலைமையின் கீழ் குடிமக்கள்சமூகங்கள்; மதத்தலைவர்கள்; கருத்துருவாக்கிகள்; புத்திஜீவிகள்;படைப்பாளிகள் என்று எல்லாத் தரப்புக்களும் இணைக்கப்பட வேண்டும். கூட்டுச் சிகிச்சையானது மேலிருந்து கீழ் நோக்கியும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்யப்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்க வேண்டும். அது அரசியல் தீர்வாக அமைய வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரான நீதியாக அது அமைய வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி அந்தத் தீர்வை நோக்கி தமிழ்மக்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டம்தான் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்யும். தமிழ்மக்கள் இப்பொழுது சிதறிப் போய் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக; ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக;எல்லாருக்கும் பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக; கட்சிகளாக; வடக்குக் கிழக்காக;சமயமாக; சாதியாக இன்னபிறவாக சிதறிப்போய் இருக்கிறார்கள். அதேசமயம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு புலம்பெயரும் தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள்,உயர் உத்தியோகங்களில் இருந்தவர்கள் என்ற வகையினரும் அடங்குவர். இவ்வாறாக மூளைசாலிகளும் தொழில் அனுபவம் மிக்கவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைத் திரட்டுவது எப்படி? ஒருவர் மற்றவரை நம்பாமல் சமூகத்தைத் திரட்ட முடியாது. ஒருவர் மற்றவரை நம்புவதில் இருந்துதான் சமூகத் திரட்சி தொடங்குகின்றது. எனவே நம்பிக்கை முக்கியம். சமூகத்துக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். புலம்பெயரும் தலைமுறைக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கையைக் கொடுக்க யார் உண்டு? அந்தக் கூட்டு நம்பிக்கைதான் கூட்டுத்தோல்வி மனப்பான்மையிலிருந்தும்,கூட்டுக் காயங்களில் இருந்தும், கூட்டு மனவடுக்களில் இருந்தும் ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலை செய்யும். ஈழத் தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கிறார்கள். எல்லாப் பேரரசுகளுக்கும் அவர்கள் தேவை. தமிழ் மக்களின் இக்கேந்திர முக்கியத்துவத்தை தமிழ் மக்களே உணராதிருக்கிறார்கள். அனுமார் தன் பலத்தை தானே அறியாதிருந்ததுபோல. தமிழ் மக்களுக்கு அவர்களின் பலத்தை உணர்த்தி,அவர்களைப் பலமான திரளாக்கி,அவர்களை கூட்டு அவநம்பிக்கையிலிருந்து விடுவிப்பதுதான் கீழிருந்து மேல் நோக்கிய கூட்டுச் சிகிச்சையாக அமையும்.அதுதான் கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும்.அதுதான் உண்மையான நினைவு கூர்தலாக அமையும்.   https://www.nillanthan.com/6761/
    • மே18.2024 – நிலாந்தன்! மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமிழர்களை பொருத்தவரை கட்சி பேதமின்றி,இயக்க பேதமின்றி,வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி,சமய பேதமின்றி,சாதி பேதமின்றி, தமிழ் மக்கள் ஒன்றாகக் கூடும் ஒரே நிகழ்வு மே 18 தான்.இந்த முறையும் அந்த நாளின் புனிதம்;அந்த நாளின் மகிமை தாயகத்தில் நிலைநாட்டப்பட்டது. அந்த நாளின் மகிமை என்பது எல்லாத் தமிழ் தரப்புகளும் அங்கே திரள்வதுதான். முள்ளிவாய்க்காலுக்கு வெளியே தமிழ் பகுதிகளெங்கும் பரவலாக நினைவு கூர்தல் நடந்திருக்கின்றது.கொழும்பிலும் நடந்திருக்கிறது.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வழமை போல பெருமெடுப்பில் நடந்திருக்கின்றது. எனினும்,விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையும் அவருடைய குடும்பத்தவர்களையும் நினைவு கூர்வதா இல்லையா என்ற விடயத்தில் புலம்ம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் உடைவு தென்படுகின்றது.கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. தமிழ் மக்கள் இன்னும் எத்தனை துண்டுகளாக உடையப் போகின்றார்களோ? தமிழர்கள் எத்தனை துண்டுகளாக உடைந்தாலும் நினைவு நாட்கள் அவர்களை திரட்டிக் கட்டி விடும் என்று அரசாங்கத்திற்கு தெரியும்.அதனால் தான் கிழக்கில் மே 18ஐ அனுஷ்டிக்க முற்பட்ட அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு எதிராக கடுமையான கெடுபிடிகள் ஏவி விடப்பட்டுள்ளன ஆனால் வடக்கில் நிலைமை அப்படியல்ல. வடக்கில் மே 18ஐ அனுஷ்டிப்பதற்கு போலீசார் பெரிய அளவில் தடைகள் எதையும் விதிக்கவில்லை. சில இடங்களில் படைவீரர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியிருக்கிறார்கள். வடக்கில் கஞ்சி காய்ச்சுவதற்குத் தடைகள் இருக்கவில்லை.தமிழர் தாயகப் பகுதியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலும் பரவலாகவும் கஞ்சி காய்ச்சப்பட்டது வடக்கில்தான்.பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் தாமாக முன்வந்து.தன்னார்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைச் சமைத்துப் பரிமாறியிருக்கிறார்கள். ஆனால் கிழக்கில் போலீசார் அதைத் தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட, கிழக்கில் போலீசார் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைப்பதை தடுக்க முனைந்தார்கள். சில இடங்களில் அடுப்பை கால்களால் தட்டி நெருப்பை அணைக்க முற்படுகிறார்கள். கடந்த ஆண்டும் மாவீரர் நாளை முன்னிட்டும் கிழக்கில் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன.இந்த விடயத்தில், அதாவது நினைவுகளை அனுஷ்டிக்கும் விடயத்தில் அரசாங்கம் வடக்கை வேறாகவும் கிழக்கை வேறாகவும் கையாள்வதற்குக் காரணம் என்ன? இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் காலூன்ற முற்படுகின்றது.கடந்த ஆண்டு திலீபனின்நினைவு நாளின்போது, அந்தக் கட்சியானது ஒரு வாகன ஊர்தியை திருகோணமலை வழியாக எடுத்துச் சென்றபொழுது அந்த வாகன அணி தாக்கப்பட்டது. அதன் பின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க முயன்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இம்முறையும் மே 18ஐ முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அல்லது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கிழக்கில் பலமடைவதை அரசாங்கம் தடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. இது ஒரு காரணம். இரண்டாவது காரணம் கிழக்கில் ஏற்கனவே பலமடைந்து வரும் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களைத் தொடர்ந்தும் பலப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.கிழக்கில்,கிழக்குமைய அரசியலை ஊக்குவிப்பதன் மூலம், வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர் தாயகத்தை உடைக்கலாம்.அதேசமயம், கிழக்குமையக் கட்சிகள் பெருமளவுக்கு முஸ்லிம்களுக்கும் எதிரானவை. அங்கே அக்கட்சிகளைப் பலப்படுத்தினால் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் பகை நிலைக்குத் தள்ளலாம். அதன்மூலம் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டி விடலாம். அதாவது அரசாங்கத்தின் நோக்கம் மிகத்தெளிவானது.கிழக்கில் கிழக்குமையக் கட்சிகளைப் பலப்படுத்துவது. அதற்கு நினைவு கூர்தலை அங்கே அனுமதிக்கக்கூடாது.ஏனென்றால் நினைவு நாட்கள் தமிழ் மக்களை ஒன்றாக்கும் சக்திமிக்கவை .அவை வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர்களின் தாயகத்தை,தாயக ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தும் சக்தி மிக்கவை.எனவே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க நினைப்பவர்களைப் பொறுத்தவரை, நினைவு கூர்தலை கிழக்கில் அனுமதிக்கக் கூடாது.அதுதான் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றது. ஆனால் கிழக்கில் நினைவு கூர்தலைத் தடுக்கும் அதே அரசாங்கம் இன்னொரு புறம்,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றைப்பற்றி உரையாடுகின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு எனப்படுவது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு. நிலை மாறுகால நீதி எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொறுப்பு.அதன்படி உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்புத்தான், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகும். ஆனால் நிலைமாறு கால நீதியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவு கூரும் முழு உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நிலை மாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்று ஆகிய “இழப்பீட்டு நீதி” என்ற பகுதிக்குள் அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இழப்பீட்டு நீதியின் கீழ்,தமிழ் மக்கள் போரில் இனஅழிப்பு செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமையுடையவர்கள் ஆகும். தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டாக நினைவுச் சின்னங்களை நிறுவி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கிழக்கில் அது மறுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளை,நல்லிணக்க முயற்சிகளை தமிழ் மக்கள் ஏன் நம்புவதில்லை என்பதற்கு கிழக்கில் கடந்த வாரம் போலீசார் நடந்து கொண்ட விதம் ஓர் ஆகப்பிந்திய சான்று ஆகும். இதே அரசாங்கம் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுச் சின்னத்தை உருவாக்கும் நோக்கத்தோடு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்நிபுணர் குழு மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து மக்கள் கருத்துக்களை கேட்டது.தமிழ்ப் பகுதிகளில் அவர்களுக்கு கருத்துக்கூறிய அனேகர், பொது நினைவுச் சின்னத்தை நிராகரித்திருக்கிறார்கள். கொலை செய்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் ஒன்றாக நினைவு கூர முடியாது என்று தமிழ் மக்கள் மேற்படி நிபுணர் குழுவுக்குக் கருத்து கூறியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கம் நினைப்பதுபோல ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்குவது இலகுவானது அல்ல என்பதைத் தமிழ் மக்கள் நிபுணர்களுக்கு அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்க முற்படும் அரசாங்கம் நினைவை ஒரு உணவின்மூலம் பகிர முற்படும் தமிழர்களைத் தடுக்கின்றது. ஒர் உணவைப் பார்த்து அதாவது கஞ்சியைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? அந்தக் கஞ்சி கடத்தக்கூடிய அல்லது பேணக்கூடிய நினைவுகளைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்றுதானே பொருள் ? “மக்கள் ஒன்றுகூடுவதன் மூலம் உணவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக”மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியென்றால் ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வெசாக் கொண்டாட்டங்கள்,தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சிகளை ஜெனீவாவில் மற்றுமொரு தீர்மானத்தை தடுப்பதற்கான ஏமாற்று நடவடிக்கை என தமிழ்மக்கள் கருதுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். எனினும்,இம்முறை நினைவு கூர்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிழக்கில் தமிழ் மக்களைப் பயமுறுத்தப் போதுமானவைகளாக இல்லை என்பதோடு, முக்கியமாக திருக்கோணமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியது. அரசாங்கம் நினைப்பதுபோல கிழக்கில் நிலைமைகளைக் கையாள முடியாது என்பதனை அது காட்டுகின்றதா? https://athavannews.com/2024/1383017
    • வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் ! வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, யுத்ததில் வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவித்திருந்த நிலையிலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களை அனுஸ்டிக்கும் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்தனர். இதனால் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் வெளியிட்டதுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகை தந்திருந்த தமிழ் மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறிச சென்றிருந்தனர். இதனையடுத்து அதிதிகளாக வருகை தந்திருந்த மதத்தலைவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். https://athavannews.com/2024/1383033
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.