Jump to content

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள்  தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. 

தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன்.  எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். 

இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன். 

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன்.  எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். 

நானும் ஆதரிக்கிறேன்.

ஆனாலும் முதலாவது எண்ணிக்கையில் யாருக்குமே 50 வீதம் கிடைக்கவில்லை என்றால் 

இரண்டாவது தடவை எண்ணப்படும்.

இங்கு தான் பிரச்சனையே.

இரண்டாவது விருப்பு வாக்காக சிங்கள் வேட்பாளருக்கே தமிழர்கள் தங்கள் வாக்கைப் போடுவார்கள்.

இங்கே தான் குழப்பமாக உள்ளது.

அன்று ஒரு காணொளியில் நிலாந்தன் கூறும்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு வர்த்தகரின் பிரதிநிதி பொதுவேட்பாளரை நிறுத்தினாலே ரணில் வெல்ல முடியும் என்று பகிரங்கமாகவே கேட்டுக் கொண்டதாக சொன்னார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஜனாதிபதி : ஜே ஆர் ஜெயவர்த்தன‌
ஆட்சிக்காலம் : 1978 ‍- 1988
தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக 
மட்டக்களப்பு : 40.05 %
யாழ்ப்பாணம் : 20.54%
திருகோணமலை : 48.64%
வன்னி : 46.42 %
சராசரி : 38.9125 %

ஜெயவர்த்தன நிகழ்த்திய முக்கியமான படுகொலைகளில் சில‌
1977 தமிழர் மீதான அரச வன்முறை அல்லது கலவரம் : 300+ தமிழர்கள்
1981 இல் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தமிழர் மீதான படுகொலைகள்  : 25+ தமிழர்கள்
1983 தின்னைவேலிப் படுகொலை : 60+ தமிழர்கள்
1983 வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் : 53 தமிழ் அரசியல்க் கைதிகள்
1983 கறுப்பு ஜூலை இனக்கொலை : 3000+ தமிழர்கள் கொல்லப்பட்டு 125,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு, தமிழர்களின் வர்த்தகங்களும், வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன‌
1984 வவுனியா சாம்பல்த்தோட்டம் படுகொலைகள் : 70+ தமிழர்கள்
1984 சுன்னாகம் சந்தை மற்றும் பொலீஸ் நிலையப் படுகொலைகள் : 100+ தமிழர்கள்
1984 ஆவணி மன்னார் படுகொலைகள் : 140+ தமிழர்கள்
1984 யாழ்ப்பாணம் கோடைகாலப் படுகொலைகள் : 250+ தமிழர்கள்
1984 வடமராட்சி படுகொலைகள் : 35 + தமிழர்கள்
1984 கார்த்திகை உரும்பிராய்ப் படுகொலைகள் : 60+ தமிழர்கள்
1984 கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து மற்றும் புகையிரதங்கள் மீதான படுகொலைகள் : 100+ தமிழர்கள்
1984 மணலாறு, தென்னைமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் படுகொலைகள் : 500 + தமிழர்கள்
1984 மார்கழிப் படுகொலைகள் , வடக்குக் கிழக்கில் : 1200+ தமிழர்கள்
1984 ஒதியாமலை, செட்டிகுளம், சேமமடு படுகொலைகள் : 340+ தமிழர்கள்
1984 வவுனியா இராணுவ முகாம் படுகொலைகள் : 100 + தமிழர்கள்
1984 அமரவயல், மணலாறு, தென்னைமரவாடி படுகொலைகள் : 180 + தமிழர்கள்
1984 மன்னார் மார்கழி படுகொலைகள் : 150 + தமிழர்கள்
1984 மார்கழி வவுனியா படுகொலைகள் : 100 + தமிழர்கள்
1984 மார்கழி மதவாச்சிப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 
1984 மார்கழி முல்லைத்தீவு படுகொலைகள் : 210 + தமிழர்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1985 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 1690 +
https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka

1986 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 720 +
https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka

1987 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 270 +
https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka
 

 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிங்கள ஜனாதிபதி : ரணசிங்க பிரேமதாச‌
ஆட்சிக்காலம் : 1988 ‍‍- 1993
தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக 
மட்டக்களப்பு : 51 %
யாழ்ப்பாணம் : 28.034%
திருகோணமலை : 45.64%
வன்னி : 55.82 %
சராசரி : 45.11 %

1988 இலிருந்து 1993 வரையான காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாசவினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 5100 +

https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கும், ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஒருமித்து வாக்களிப்பதற்கும் இடையே நடைமுறை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லையென நினைக்கிறேன்.

தமிழ் வேட்பாளருக்கு தமிழரின் வாக்குகள்: உலகிற்கு எம் நிலைப் பாட்டை அறிவித்தல். இது moot point, பயன் மிகுந்த ஒரு விளைவாக எனக்குத் தெரியவில்லை.

மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கும், ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஒருமித்து வாக்களிப்பதற்கும் இடையே நடைமுறை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லையென நினைக்கிறேன்.

இல்லை ஜஸ்ரின் இரண்டாம் மூன்றாம் வாக்குகள் இரண்டாவது எண்ணிக்கையின் போது எண்ணப்படும்.

ஏற்கனவே இரண்டாவது வாக்காக ரணிலுக்கு போட ஆயத்தமாகுகிறார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2024 at 13:37, ரஞ்சித் said:

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

தமிழ் வேட்பாளர்களாக .......
கடந்த காலங்களில் குமார் பொன்னம்பலமும் ,சிவாஜிலிங்கமும்  நின்ற போது என்ன நடந்தன?
இது பற்றியும் ஆராய வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கும், ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஒருமித்து வாக்களிப்பதற்கும் இடையே நடைமுறை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லையென நினைக்கிறேன்.

மிகச்சரி. இரண்டுமே ஒரு செய்தியைத்தான் சொல்கின்றன. அதாவது, சிங்கள ஜனாதிபதியொருவரில் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது. ஆனால், இவை இரண்டுமே சிங்கள ஆளும்தரப்பிற்கும் சிங்கள் மக்களுக்கும் ஓரளவிற்கு அதிர்ச்சியையோ , எரிச்சலையோ கொடுக்கவல்லன. 

தேர்தல்ப் பகிஷ்கரிப்பு என்பது முன்னர், 2005 இல் பரீட்சிக்கப்பட்டதுதான். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்து பேசவேண்டிய தேவையில்லை. ஆனால், ஒருங்கிணைந்த தமிழ் வேட்பாளர் என்பது புதியது. சிவாஜிலிங்கமோ, குமார் பொன்னம்பலமோ தமிழர்களுடன் இதுகுறித்துச் சரியான வகையில் கருத்துருவாக்கம் ஒன்றினைச் செய்தார்களா என்பது சந்தேகமே. தமிழர் வேட்பாளர் என்றபோதும் கூட, தம்மை முன்னிறுத்தி அவர்கள் வாக்குக் கேட்டது தமிழர்களின் கவனத்தை பெரிதாகப் பெறவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.

15 hours ago, Justin said:

தமிழ் வேட்பாளருக்கு தமிழரின் வாக்குகள்: உலகிற்கு எம் நிலைப் பாட்டை அறிவித்தல். இது moot point, பயன் மிகுந்த ஒரு விளைவாக எனக்குத் தெரியவில்லை.

இருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு இன்னமும் பிரச்சினை இருக்கிறது, அவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை, ஆகவேதான் சிங்களத் தேசிய அரசியலில் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என்கிற செய்தியை நாம் சொல்லமுடியும். ஏனென்றால், 2009 இற்குப் பின்னரான 15 வருடத்தில் எமது அவலங்கள் குறித்துச் சர்வதேசம் பேசுவதை முற்றாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.  

சிங்கள ஜனாதிபதியொருவரே மீளவும் வரப்போகிறார் எனும்போது, அவர்களில் எவரையும் தெரிவிசெய்வதில் தமிழர்கள் அடையப்போகும் நண்மையென்ன? ஒரு சிங்கள ஜனாதிபதியிடமிருந்து, இன்னொரு சிங்கள ஜனாதிபதி தமிழரைப் பொறுத்தவரையில் எந்தவகையில் வேறுபடப்போகிறார்? தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் "நல்ல" சிங்கள ஜனாதிபதியாக இதுவரை இருந்தவர்களும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதே சிங்கள பெளத்தத்தைப் பாதுகாக்கவும், அதற்குத் தொண்டாற்றவும்தான். 

10 hours ago, குமாரசாமி said:

தமிழ் வேட்பாளர்களாக .......
கடந்த காலங்களில் குமார் பொன்னம்பலமும் ,சிவாஜிலிங்கமும்  நின்ற போது என்ன நடந்தன?
இது பற்றியும் ஆராய வேண்டும்.

சிவாஜிலிங்கத்தை சிவாஜிலிங்கமாகவும், குமார் பொன்னம்பலத்தைக் குமார் பொன்னம்பலமாகவும் தமிழர்கள் பார்த்ததால்த்தான் அவர்களுக்கான ஆதரவு அன்று கிடைக்கவில்லை. தம்மை பொதுவான தமிழ் வேட்பாளராக  அடையாளப்படுத்தப் போதுமானவற்றை அவர்களும் செய்யவில்லை, தமிழ் மக்கள் முன்னால் இதற்கான தர்க்கரீதியிலான கருத்துருவாக்கத்தையோ அல்லது இன்று ஏற்பட்டிருப்பதுபோன்ற மக்களின் ஈடுபாட்டையோ அன்று அவர்களால் செய்ய முடியவில்லை. ஆகவே தான் சிவாஜிலிங்கத்தின் முயற்சி ஏளனமாகப் பார்க்கப்பட்டதுடன், குமார் பொன்னம்பலத்தின் முயற்சி கொழும்புத் தமிழர்களுடன் மட்டுமே சுருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான 53 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 154,022 இலிருந்து 253,818 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 

இவற்றுள், 1956 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான 45 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 79,155 பேர் ஆகும். இவர்களுள் 54,044 தமிழர்களின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, மீதி 25,266 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரையான ஆறுவருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,867 பேர். இவர்களுள் 3,545 பேரின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் மீதி 1,322 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டின் தை மாதம் முதல் வைகாசி வரையான ஐந்து மாத காலப்பகுதியில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,796 என்று நீதிக்கும், சமாதானத்திற்குமான சர்வதேச மையம் கூறுகிறது. 
இக்காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இலிருந்து 146,000 ஆக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையினாலும் மற்றும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினாலும் ம‌திப்பிட்டிருக்கிறது. 

1956 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையான 48 வருட காலத்தில் காயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 61,132 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதே காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், சிங்களப் பொதுமக்களாலும் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை 12,437 பேர் என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 2005 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புக்களும், காணாமற்போதல்களும், பாலியல் வன்புணர்வுகளும், இடப்பெயர்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. 

மேலும் 112,246 தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், 24 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். 

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையில் இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து சிங்களத் தலைவர்களும் தமது பங்கினை நல்கியிருக்கிறார்கள். இவர்களுள் எவருமே விதிவிலக்கில்லை.
 டட்லி சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமா, ஜெயார், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜேதுங்க, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய, ரணில் என்று அனைவருமே எம்மீதான இனக்கொலையினை நேரடியாக நடத்தியவர்கள். இவர்களைத் தவிரவும் சிங்கள் இட‌துசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் மீதான வன்மத்தைக் கக்கி வருவதுடன், தமிழ மக்களின் தாயக் கோட்பாட்டையும் நிர்முலமாக்க முயன்று வருகிறது. நாட்டில் இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே அன்றி, இனப்பிரச்சினை இல்லையென்றும், தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினைகள் என்று நாட்டில் எதுவுமே இல்லையென்றும் அது வாதிடுகிறது.

ஆகவே, இப்படியான, தமிழ் மக்களின் இனவழிப்பை தமது தாரக மந்திரமாக ஏற்று செயற்பட்டு வரும் எந்தச் சிங்களத் தலைவரையும் தமிழர்கள்  எதற்காக இன்னுமொருமுறை தெரிவுசெய்வதில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கேள்வி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1994 ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டு 
ஜனாதிபதி : சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க‌
யாழ்ப்பாணம் : 96.35% (1994) & 46.65 % (1999)
வன்னி : 85.30% (1994) & 25.8% (1999)
மட்டக்களப்பு : 87.3% (1994) & 34.7% (1999)
திருகோணமலை : 71.6% (1994) & 45% (1999)
சராசரி : 85.13% (1994) & 38% (1999)

சந்திரிக்காவினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் பட்டியலில் ஒரு சில,
1. முன்னேறிப்பாய்தல் படுகொலைகள்
2. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயப் படுகொலை
3. யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றியபோது  அந்நிய நாடொன்றினைக் கைப்பற்றிய நிகழ்வினை ஒத்த விதத்தில் அனுருத்தை தனது மருமகளும் இராணியுமான சந்திரிக்காவிடம் யாழ்ப்பாணத்திற்கான திறவுகோலினைக் கையளித்தார்.
4. செம்மணிப் புதைகுழிகள்
5. கிளிநொச்சி மீதான ஆக்கிரமிப்புப் போர்
6. ஜயசிக்குரு ஆக்கிரமிப்புப் போர்
7. புதுக்குடியிருப்புப் பாடசாலைச் சிறுவர்கள் படுகொலை
8. படுகொலை செய்யப்பட்ட 20,000 தமிழர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005 தேர்தல்
ஜனாதிபதி : மகிந்த ராஜபக்ஷ‌ (தமிழர்கள் வன்னியில் வாக்களிக்காது விட்டமையினால் தெரிவுசெய்யப்பட்டவர்)

யாழ்ப்பாணம் : 25%
வன்னி : 20%
மட்டக்களப்பு : 18.8%
அம்பாறை : 43%
திருகோணமலை : 37%

சராசரி : 28.76%

இதே தேதலில் தமிழர்களால் ஆதரவளிக்கப்பட்ட வேட்பாளர் ரணிக்குக் கிடைத்த வாக்குகள் 
யாழ்ப்பாணம் : 70%
வன்னி : 77%
மட்டக்களப்பு : 79.5%
அம்பாறை : 55%
திருகோணமலை : 61 %

சராசரி : 68.5%

ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்காது, இன்னொருவர் ஆட்சிக்கு வர உதவியமையினால் தமிழர்கள் சரித்திரத்தில் கண்டிராத அழிவையும், அவலங்களையும், ஆக்கிரமிப்பையும் இவ்வாட்சிக் காலத்தில் கண்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 தேர்தல்
ஒரே இனவழிப்பில் தோளுக்குத் தோள் நின்று தமிழர்களைக் கொன்றொழித்த இரு இனக்கொலையாளிகளில் ஒருவனான மகிந்தவுக்கு எதிராகவும், அவனது இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவாகவும் தமிழர்கள் வாக்களித்த விதம் கீழே,

மகிந்தவுக்கான தமிழரின் வாக்குகள்
யாழ்ப்பாணம் : 24.7%
வன்னி : 27.3%
மட்டக்களப்பு : 26.2%
திருகோணமலை : 43%
சராசரி : 30.3%

சரத் பொன்சேகாவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 63.8%
வன்னி : 66.8%
மட்டக்களப்பு : 68.93%
திருகோணமலை : 54%
சராசரி : 63.4%

இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி
1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2015 தேர்தல்

இனக்கொலையாளியான மகிந்த ராஜபக்ஷவுக்கெதிராகவும், அதே இனக்கொலை யுத்தத்தில் அவனது பிரதமராகவும், இறுதிப்போரின் இறுதிநாட்களின்போது மகிந்த வெளிநாடு சென்றிருந்தவேளை நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பினைக் கவனித்துக்கொண்ட‌வனுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் வாக்களித்த விதம்

மகிந்த ராஜபக்ஷவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 21.8%
மட்டக்களப்பு : 16.2%
திருகோணமலை : 26.6%
வன்னி : 19%
சராசரி :20.9%

மைத்திரிபால சிறிசேனவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 74.4%
மட்டக்களப்பு : 81.6%
திருகோணமலை : 71.8%
வன்னி : 78.5%
சராசரி : 76.6%

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழர்கள் தெரிவுசெய்த ஜனாதிபதியான மைத்திரியும், தமிழர்கள் தெரிவுசெய்த பிரதமரான ரணிலும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2019 தேர்தல்

இத்தேர்தலில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கெதிராகவும்,  இன்னொரு பெயர்பெற்ற‌ சிங்கள இனவாதியான பிரேமதாசவின் மகனும், பிரேமதாசவை ஒத்த இனவாதியுமான  சஜித் பிரேமதாசவுக்குத் தமிழர்கள் வாக்களித்த விதம்

கோட்டாபய ராஜபக்ஷ‌
மட்டக்களப்பு : 12.6%
யாழ்ப்பாணம் : 6.2%
வன்னி : 12.2%
திருகோணமலை : 23.3%
சராசரி : 13.5%

சஜித் பிரேமதாச‌
மட்டக்களப்பு : 78.7%
யாழ்ப்பாணம் : 83.36%
வன்னி : 82.1%
திருகோணமலை : 72%
சராசரி : 79.04%

அன்று தமிழர்கள் வாக்களித்த அதே சஜித் இன்று தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கமாட்டேன், பிரிவினையை அனுமதிக்கமாட்டேன், எவராவது மீளவும் ஆயுதப்போராட்டம் குறித்துப் பேசினால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவேன் என்று இனவாதம் பேசி வருகிறான். 

இவர்களுள் தமிழர்கள் ஆதவளிக்கக் கூடிய வகையில் இருப்பது யார்? எவர் சிறந்தவர்?

தெரியாத பேயை விடவும், தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று வாக்களிக்கப்போகிறோமா அல்லது, பேயும் வேண்டாம் பிசாசும் வேண்டாம், எமக்கென்று ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்கப்போகிறோமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் ! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தமிழர்களுக்கு இன்னமும் பிரச்சினை இருக்கிறது, அவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை, ஆகவேதான் சிங்களத் தேசிய அரசியலில் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என்கிற செய்தியை நாம் சொல்லமுடியும். ஏனென்றால், 2009 இற்குப் பின்னரான 15 வருடத்தில் எமது அவலங்கள் குறித்துச் சர்வதேசம் பேசுவதை முற்றாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது. 

உண்மையும் அதுதானே.
ஈழத்தீவின் வரலாற்றில் எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் இருப்பதையே விரும்பாத சிங்களப் பேரினவாதம், தமிழர் ஒருவரை சனாதிபதியாக ஏற்குமா(?)என்ற வினாவைக் கேட்கவே தேவையில்லை. ஆனால், பேராசிரியர் புல்ஜென்ஸ் கூற்றுப்படி''எதையுமே நினைவில் கொள்ளாத , ஞாபகத்தில் வைத்திராத மறதி தேசமிது'' என்று சிறிலங்காவைச் சுட்டுவதுபோல்(எரிமலை யூலை2006)  தமிழினமும் ஆகிவிட்ட சூழலில், அனைத்துலகு தனது நலனுக்காகப் பலியிட்ட தமிழர்குறித்துப் பேசித் தானே குற்றவாளிக் கூண்டில் ஏறிநிற்குமா(?)என்றால் நடவாதுதானே. ஆனால், தமிழின அரசியல் இருப்பின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய ஏதுநிலையை ஏற்படுத்தவல்லதாக சனாதிபதித் தேர்தலை மாற்றுவதற்கான சூழலைப் பயன்படுத்தலாம். ஒருவேளை ரணில் தோற்கடிக்கப்பட்டால,; மேற்குலகுக்கான செய்தியும் அதில் உள்ளடங்கும். தமிழினத்தினது ஆதரவின்றித் தமது இலக்குகளை அடையலாம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமையும்.

நன்றி 

3 hours ago, ரஞ்சித் said:

இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி
1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். 

ரஞ்சித் அவர்களே இதில் ஒரு திருத்தம், அதாவது தமிழ்மக்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(சம்,சும் கொம்பனி) சொல்லவைத்தது. எப்படி போற்குற்றத்தில் இருந்து வெளியே எடுத்ததோ, அதேபோன்று தமது நிலையைத் தமிழ் மக்கள் ஊடாக வெளிப்படுத்தியதாகவே கொள்ளலாம். நேரடியாகத் தமிழ் மக்களது முடிவாகக் கொள்ளமுடியாது. 
நன்றி

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

ஒருவேளை ரணில் தோற்கடிக்கப்பட்டால,; மேற்குலகுக்கான செய்தியும் அதில் உள்ளடங்கும். தமிழினத்தினது ஆதரவின்றித் தமது இலக்குகளை அடையலாம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமையும்.

மேற்குலகின் நண்பனான ரணில் 2005 இல் புலிகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த மகிந்தவுடன் சேர்ந்து அதே மேற்குலகு எம்மை அழிக்கவில்லையா? அதேபோல, ரணில் இம்முறை தோற்கடிக்கப்பட்டாலும் அநுரவுடனோ அல்லது சஜித்துடனோ சேர்ந்து மேற்குலகு வேலை செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

சிங்கள ஜனாதிபதியொருவரே மீளவும் வரப்போகிறார் எனும்போது, அவர்களில் எவரையும் தெரிவிசெய்வதில் தமிழர்கள் அடையப்போகும் நண்மையென்ன? ஒரு சிங்கள ஜனாதிபதியிடமிருந்து, இன்னொரு சிங்கள ஜனாதிபதி தமிழரைப் பொறுத்தவரையில் எந்தவகையில் வேறுபடப்போகிறார்? தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் "நல்ல" சிங்கள ஜனாதிபதியாக இதுவரை இருந்தவர்களும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதே சிங்கள பெளத்தத்தைப் பாதுகாக்கவும், அதற்குத் தொண்டாற்றவும்தான். 

 

இதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், இலங்கையின் IMF வழியிலான பொருளாதார மீட்சியை அனுர திரும்பவும் பாதாள லெவலுக்கு இறக்கினால், தமிழர்களுக்கு ஒரு பாதிப்பும் வராதென்கிறீர்களா? கடந்து போன பொருளாதாரச் சரிவில் வடக்கு கிழக்கில் ஒரு பாதிப்பும் இருக்கவில்லையா?

எனவே, ஒன்றுக்கும் பயனில்லாத "சர்வதேசத்திற்கு செய்தி சொல்லல்" என்ற ஒரு விடயம் ஒரு பக்கம்.

அனுர போன்ற ஒருவர் வந்து எல்லோருக்கும் ஆப்பு வைக்கும் ஆபத்து மறு புறம்.

இது 2004 இல் தேர்தல் பகிஷ்கரிப்பினால் மகிந்த பதவிக்கு வந்து தமிழர்களின் தலைவிதியை மாற்ற வழி சமைத்த "இராசதந்திரம்" போலல்லவா தெரிகிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ஆனால், இலங்கையின் IMF வழியிலான பொருளாதார மீட்சியை அனுர திரும்பவும் பாதாள லெவலுக்கு இறக்கினால், தமிழர்களுக்கு ஒரு பாதிப்பும் வராதென்கிறீர்களா? கடந்து போன பொருளாதாரச் சரிவில் வடக்கு கிழக்கில் ஒரு பாதிப்பும் இருக்கவில்லையா?

நிச்சயமாக தமிழருக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால், அதைச் சரிசெய்ய புலம்பெயர் தமிழரின் உதவியிருக்கிறது, பெரும்பாலான தமிழர்களுக்கு, ஓரளவு காலத்திற்காவது.

 

3 minutes ago, Justin said:

இது 2004 இல் தேர்தல் பகிஷ்கரிப்பினால் மகிந்த பதவிக்கு வந்து தமிழர்களின் தலைவிதியை மாற்ற வழி சமைத்த "இராசதந்திரம்" போலல்லவா தெரிகிறது? 

2004 - 2005 இல் நடந்தது உண்மை, மறுப்பதற்கு எதுவுமில்லை.

ரணிலையோ அல்லது சஜித்தையோ ஆதரிக்காமல் விடுவதாலோ அல்லது தமிழ் வேட்பாளரை ஆதரித்து அநுர ஆட்சிக்கு வந்தாலோ, தமிழர் அடையப்போகும் அதியுச்ச பாதிப்பு என்ன? பொருளாதார நிலை சரியும் என்பதைத் தவிர, ஏனைய சிங்களத் தலைவர்களைக் காட்டிலும் அநுர புதிதாக தமிழருக்கு எவ்வகையான அழிவினை ஏற்படுத்திவிடப்போகிறார்? சிங்கள அரசியல்வாதிகளில் நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு இருக்கின்றதா? என்னைப்பொறுத்தவரை ரணிலோ, சஜித்தோ, அநுரவோ, எல்லோருமே ஒரே வகையானவர்கள்தான். இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் எமது வாழ்வு மீளப்போவதில்லை. ஆனால், இவர்களில் எவரையுமே நாம் ஆதரிக்கவில்ல என்கிற செய்தியாவது மிச்சமிருக்கும். 

43 minutes ago, nochchi said:

எப்படி போற்குற்றத்தில் இருந்து வெளியே எடுத்ததோ, அதேபோன்று தமது நிலையைத் தமிழ் மக்கள் ஊடாக வெளிப்படுத்தியதாகவே கொள்ளலாம். நேரடியாகத் தமிழ் மக்களது முடிவாகக் கொள்ளமுடியாது. 

உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

நிச்சயமாக தமிழருக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால், அதைச் சரிசெய்ய புலம்பெயர் தமிழரின் உதவியிருக்கிறது, பெரும்பாலான தமிழர்களுக்கு, ஓரளவு காலத்திற்காவது.

 

2004 - 2005 இல் நடந்தது உண்மை, மறுப்பதற்கு எதுவுமில்லை.

ரணிலையோ அல்லது சஜித்தையோ ஆதரிக்காமல் விடுவதாலோ அல்லது தமிழ் வேட்பாளரை ஆதரித்து அநுர ஆட்சிக்கு வந்தாலோ, தமிழர் அடையப்போகும் அதியுச்ச பாதிப்பு என்ன? பொருளாதார நிலை சரியும் என்பதைத் தவிர, ஏனைய சிங்களத் தலைவர்களைக் காட்டிலும் அநுர புதிதாக தமிழருக்கு எவ்வகையான அழிவினை ஏற்படுத்திவிடப்போகிறார்? சிங்கள அரசியல்வாதிகளில் நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு இருக்கின்றதா? என்னைப்பொறுத்தவரை ரணிலோ, சஜித்தோ, அநுரவோ, எல்லோருமே ஒரே வகையானவர்கள்தான். இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் எமது வாழ்வு மீளப்போவதில்லை. ஆனால், இவர்களில் எவரையுமே நாம் ஆதரிக்கவில்ல என்கிற செய்தியாவது மிச்சமிருக்கும். 

 

எவ்வளவு காலத்திற்கு புல உதவி தக்க வைக்கும் என்கிறீர்கள்? அல்லது, தாயகத்தில் இருக்கும் எத்தனை வீதமான தமிழர்களுக்கு புல உதவி கிடைக்குமென நினைக்கிறீர்கள்? வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே மட்டுமே புலத் தமிழர் உதவியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறு பாடு இருக்கிறது. மலையகத் தமிழர் -இன்னும் அரசினதும் தேயிலைக் கம்பனிகளினதும் வருமானத்தில் தங்கியிருப்போர்- இவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? "பட்டினியை,  வாழ்க்கைத் தர இழப்பைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசத்திற்கு நாம் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது!" என்பீர்களா? இது போன்ற ஆழ நோக்கற்ற, inclusiveness இல்லாத காரணத்தினால் தான் தாயக தமிழர்களுக்கு புலத்தமிழர்கள் அரசியல் விடயங்களில் வழங்கும் முன்மொழிவுகள் நகைப்புக்கிடமாகின்றன என நினைக்கிறேன்.

மூவரும் சிங்களவர்கள் என்பதும், தமிழர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த  அநியாயங்களுக்கு ஒத்தாசை செய்தார்கள் என்பதும் மட்டுமே, தற்போது இருக்கும் நிலையை மோசமாக்க உங்களுக்குப் போதுமான நியாயங்களாகத் தெரிகின்றனவா? "elections have consequences" என்பார்கள். இது எந்த நாட்டிலும் உண்மை, சிறி லங்காவிலும் உண்மை. இந்த விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?  

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2024 at 13:37, ரஞ்சித் said:

ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும்

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

ஐயா பெரியவரே!  யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்.ஆனால் 70 வருடமாக நீங்கள் நினைத்த படி,கீறல் விழுந்த இசை தட்டு போல் ஒரே  சங்கீதங்களுக்கு வாக்கு செலுத்தி என்ன மாற்றத்தை கண்டீர்கள்?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

எவ்வளவு காலத்திற்கு புல உதவி தக்க வைக்கும் என்கிறீர்கள்? அல்லது, தாயகத்தில் இருக்கும் எத்தனை வீதமான தமிழர்களுக்கு புல உதவி கிடைக்குமென நினைக்கிறீர்கள்? வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே மட்டுமே புலத் தமிழர் உதவியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறு பாடு இருக்கிறது. மலையகத் தமிழர் -இன்னும் அரசினதும் தேயிலைக் கம்பனிகளினதும் வருமானத்தில் தங்கியிருப்போர்- இவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? "பட்டினியை,  வாழ்க்கைத் தர இழப்பைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசத்திற்கு நாம் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது!" என்பீர்களா? இது போன்ற ஆழ நோக்கற்ற, inclusiveness இல்லாத காரணத்தினால் தான் தாயக தமிழர்களுக்கு புலத்தமிழர்கள் அரசியல் விடயங்களில் வழங்கும் முன்மொழிவுகள் நகைப்புக்கிடமாகின்றன என நினைக்கிறேன்.

மூவரும் சிங்களவர்கள் என்பதும், தமிழர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த  அநியாயங்களுக்கு ஒத்தாசை செய்தார்கள் என்பதும் மட்டுமே, தற்போது இருக்கும் நிலையை மோசமாக்க உங்களுக்குப் போதுமான நியாயங்களாகத் தெரிகின்றனவா? "elections have consequences" என்பார்கள். இது எந்த நாட்டிலும் உண்மை, சிறி லங்காவிலும் உண்மை. இந்த விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?  

நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள்.

தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத த‌டையினையா  இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்?

சரி, அதை விடுங்கள், 2020 ‍- 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது.

80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை. 

3 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள். 

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂. BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 39     இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.   இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும்.   இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது.   மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு [Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).].   தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது.   கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) ( அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.   நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார்.   [Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian –speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra]   மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 40 தொடரும்            
    • மிகவும் வித்தியாசமான கண்ணோட்டம் ........ அருமையான பேச்சு ........!   👍
    • வந்தவர் விழுந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை. இதுக்கெல்லாம் வரத் தேவையில்லை. கடைக்கண் பார்வை இருந்தாலே போதும்.
    • "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 17     5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture / pleasure is above all Culture]     இன்பவியல் [Hedonism] என்பது இன்பமே மதிப்புப் பெற்ற ஒரே இலக்கு என்ற கோட்பாடு ஆகும், சிலர் இன்று அதற்க்கே அடிமையாகிறார்கள். அது எப்படி தம்மை கெடுக்கும் என்று எள்ளளவும் கவலைப் படுவதில்லை. உதாரணமாக, ஒரு உணவு எனக்கு உருசி என்றால், அந்த "உணவு" கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்றவற்றை கொடுக்கும் என்றாலும் எந்த கவலையும் இன்றி இப்ப இன்பமே அதை விட எனக்கு பெரிது என்று சாப்பிட்டு மகிழ்வதை குறிக்கலாம்.   வாழ்வு சலிப்பாக உள்ளதா? வாழ்க்கை எம்மை மூழ்கடிக்கிறதா? "ஓ, நான், நாள் முழுவதும் வீடியோ விளையாட்டு [video games] விளையாடுவேன். எனக்கு இந்த உண்மையான உலகம் தேவையில்லை" என்று எந்த மக்களுடனும் சமுதாயத்துடனும் பெரிதாக பங்கு பற்றாமல் இருந்த இடத்தில் சந்தோசம் என்று களித்து உடல் பருமனையும் நோயையும் வரவழைப்பதையும் மேலும் ஒரு உதாரணமாக கூறலாம்.   அதாவது ஒரு பரந்த அடிப்படையில், மகிழ்ச்சியை மட்டும் தனக்கு அதிகரிக்க முயற்சித்து, அதன் மூலம் தனது வலியை குறைக்க முயலும் ஒரு செயல் என்றும் கூறலாம். ஆனால் இந்த அவர்களின் கட்டாய கலாச்சாரத்தால், புத்திசாலித்தனமான, பொறுப்பான வாழும் வழியை [sensible, responsible way to live] அவர்கள் நிராகரிப்பதை காண்கிறோம். இது தான் எமக்கும் சமுதாயத்திற்கும் கவலை தரும் விடயம்.   ஒரு மனிதனுக்கு காதலனின் அல்லது காதலியின் சீராட்டு மகிழ்ச்சியை தருகிறது, அதே போல, ஒருவருக்கு ஒரு இசை, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக களித்தல், அல்லது வெறுமனே ஒரு தீவிரமான நாளின் பின், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து காற்று வாங்குதல் போன்றவை கட்டாயம் அவனுக்கு அல்லது அவளுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த நடவடிக்கைகள் உண்மையில் நல்லவையே, அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.   என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல, ஒரு மனிதன் முற்றும் முழுதாக ஒன்றில் சார்ந்திருத்தல், ஒரு பழக்கத்திற்கு அடிமையாதல், அளவுக்கு மீறி உண்ணுதல் அல்லது குடித்தல், மற்றும் கட்டாய நுகர்வு [Dependence, addiction, bingeing and compulsive consumption] போன்ற ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.   முன்னர் மகிழ்ச்சியைத் தந்த நடவடிக்கைகள் அல்லது பழக்கங்கள், எந்த கட்டத்தில் சிக்கல் நிறைந்ததாக மாறும் என்று நாம் சரியாக குறித்துக் காட்ட முடியாது. என்றாலும், உதாரணமாக, எப்போதாவது ஒரு போதை பானம் பியர் [Beer/ஒரு வகைச் சாராயம்] அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு காலை படுக்கையிலிருந்து எழும்பும் போது ஏதாவது ஒரு போதை பானம் தேவை என்ற நிலைக்கும், இடையில் இந்த பிரச்சினைக்கு உரிய நிலையை நாம் கடந்து இருப்போம் என்று கூறலாம்.   பென்தாம் (Bentham) என்பவர் கூறும் இன்பவியல் கோட்பாடு ஆண்டாளுக்கு முற்றிலும் பொருந்தும், எல்லா நேரங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு நோக்கத்தின்பால், நடத்தைக்கு உட்படுகிறான். அந்த நோக்க வெற்றியின் இறுதியில் கிட்டும் மகிழ்ச்சியைச் சுவைப் பதற்க்கே ஒருவன் அவ்வாறான நடத்தைக்கு உட்படுகிறான் என்கிறார்.   உதாரணமாக, நாணம் மிகுதியால் நிந்திப்பது போல் மீண்டும் மீண்டும் நினைத்து திருமாலைப் பற்றி பேசுவதும் மற்றும் இது போன்ற ஆண்டாளின் செயல்களும், அவள் பெருமானையே நினைக்கும் நோக்கில், அவள் உண்மையில் சுவைக்கும் இன்ப நிகழ்ச்சிகளைக் நாம் காணலாம். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் என கருதப்படும் ஆண்டாள், பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்து, திருமாலைக் காதலிப்பதாகவும் – அத்திருமாலையே மணமுடிக்க வேண்டு மென்று துடிப்பதாகவும் அவரின் பாடல்கள் அமைந்தன எனலாம் . இதில் அவள் தன்னில் எழும் காதல் உணர்ச்சியையும் – காம வேட்கையையும் தீர்த்துக் கொள்கிறார் என்று நம்புகிறேன். இதனால் அவள் நடத்தை, - இன்று சிலர் முற்றும் முழுதாக ஒன்றில் அடிமையாவது போல, உதாரணமாக பாலியல் வீடியோ- அப்படி மாறி, அதில் அவள் இன்பம் துய்த்திருக்கலாம் என்று நம்புகிறேன். உதாரணமாக திருப்பாவை, பாடல்-19 இல் அவளின் இன்ப ரசனையை மிக தெளிவாக காணலாம்.     “குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்...”     இதன் அர்த்தம், படுக்கை அறையில் குத்துவிளக்கு எரிகிறதாம். அழகிய கட்டிலில் விரிக்கப்பட்டிருக்கும் மெத்தையின் மீது ஏறிய கண்ணன், அழகிய கூந்தலையுடைய தன் மனைவி நப்பின்னை மேல் பாய்கிறான்; பலவாறு சுகம் கண்டவன், அவளது கொங்கைகளை தன் அகன்ற மார்பின் மீது வைத்துக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றானாம். இந்த இடத்தில் ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுது படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா? இமைப் பொழுது பிரிந்திருக்க மாட்டாயா? என்று கேட்கிறாள் என்கிறது.   இங்கு ஒரு பெண்ணின் அவலம் வெளிப்படுகின்றது. பெண் அதில் பங்காற்றித் தனது தேவையைப் பூர்த்தி செய்ய நினைக்கும் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது.   எழுத்து கண்டுபிடிக்கப் பட்ட பின், கி மு 2100 அளவில் எழுதப்பட்ட மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh], சிடூரி [ Siduri] என்பவர்,   "உங்கள் வயிற்றை நிரப்புங்கள், பகலும் இரவும் மகிழ்ச்சியாகட்டும், நாட்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கட்டும், பகலும் இரவும் நடனமாடி இசை முழங்குங்கள்..... இந்த விடயங்கள் மட்டுமே மனிதர்களின் [ஆண்களின்] அக்கறையாகட்டும்" [Fill your belly. Day and night make merry. Let days be full of joy. Dance and make music day and night ... These things alone are the concern of men]   என்று ஆலோசனை வழங்குகிறார். ஒரு வகையில் பார்த்தால், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு இன்பவியல் வாதத்தை இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது எனலாம். அதே போல, "ஆசை செழிக்கட்டும், உங்களுக்கான துடிப்புகளை இதயம் மறக்கட்டும், நீ வாழும் வரை உமது விருப்பத்தைப் பின்பற்றுங்கள் [Let thy desire flourish, In order to let thy heart forget the beatifications for thee.Follow thy desire, as long as thou shalt live.], என்ற கி மு 2030 க்கும் கி மு 1640 க்கும் இடைப்பட்ட பண்டைய எகிப்தின் ஹார்ப்பரின் பாடல் [Harper's Songs] ஒன்றும் இன்பவியல் வாதத்தை பிரதிபலிக்கிறது எனலாம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 18 தொடரும்        
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.