Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறதுஎன்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது.

June 10, 2024
f231a2ef-6873-46a5-9eef-c1da9e011087-696

தமிழர் தலைநிமிர் காலம் என்ற தொனிப்பொருளில் சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில்  கடந்த 3 நாட்களாக கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற  13வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மகாநாடு  சுவிஸ் நாட்டுக்கு தமிழர் அகதிகளாக வந்து 44 ஆண்டுகள் பூர்த்தியான நிகழ்வூட்டல் நினைவுடன் இனிதே  நிறைவு பெற்றது.

இம்மகாநாட்டில் உலகின் 27 நாடுகளிலிருந்து 550ற்கு மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோரும் திறனாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மகாநாட்டின்போது உலகப்பொருளாதாரம், இயற்கைச்சூழல், தற்போதைய தொழில்நுட்பம், வியாபார முயற்சிகள், தொடர்பாடல், இலங்கை சிவில் சமுகத்தின் வாழ்க்மைமேம்பாடு போன்ற பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

நிகழ்வின்போது பல்வேறு திறமையாளர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ,இலங்கையின் வடகிழக்கு மலையகப்பிரதேசங்களிள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளதாக  மாகாநாட்டின் ஏற்பாட்டாளர்களான  The Rise எழுமின் அமைப்பினர் தெரிவித்தனர்.

கண்ணாரக் கண்டோம் – தமிழர் ஒற்றுமையின் வெற்றியை. சுவிட்சர்லாந்து Davos நகரில் நாங்கள் நின்று வென்று மகிழ்கிறோம். தமிழர்கள் நாங்கள் பெரிதாக உயர்வோம் என்ற நம்பிக்கை தூரத்து வெளிச்சமாய் தெரிகிறது.

கருமேகங்கள் சூழ்கையில் ராசாளிகள் பதறுவதில்லை. அவை கருமேக வானுக்கு மேலே பறக்கின்றன. இடர் வரும் காலை நாங்களும் இடறுவதில்லை. உணர்வில், உறுதியில் நாங்களும் தமிழ் ராசாளிகள். இறைவன் எம்மோடு. இயற்கை எம்மோடு. அறம் எம்மோடு. அன்பும் நட்பும் எம்மோடு. அன்னைத் தமிழ் எம்மோடு. எமது தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறது. இனி நாங்கள் நம்பிக்கையுடன் முன் செல்வோம். The RISE எழுமின் அமைப்பின் 13-ம் உலக மாநாடு Davos நகரில் இனிதே நிறைவுற்றது! 27 நாடுகள்; 550 உறவுகள்; பல நூறு தொழில் வணிகக் கதைகள். நாளை நமதே!! எல்லோருக்கும் நன்றி என The RISE Global நிறுவனர் – தலைவர் தமிழ்ப்பணி  வணபிதா ம. ஜெகத் கஸ்பர் அடிகளார் தனது நன்றியறிதலில் தெரிவித்துள்ளார்.f231a2ef-6873-46a5-9eef-c1da9e011087-102IMG_3170.jpgIMG_3126.jpgIMG_3095.jpgIMG_3060.jpgIMG_3049.jpgIMG_3040.jpgIMG_3028.jpgIMG_3020.jpgIMG_3019.jpgIMG_3014.jpgIMG_3001.jpgIMG_2988.jpgIMG_2984.jpgPHOTO-2024-06-09-13-49-53.jpgPHOTO-2024-06-09-13-51-27.jpg

 

https://www.supeedsam.com/200802/

  • கருத்துக்கள உறவுகள்

சொறி சிங்களத்தின் பேய்க்காட்டுதல் திட்டத்தில் இதுவும் ஒன்று.

ராசமாணிக்கம் சிங்களத்தின் அடிவருடி.

சுயநிர்ணய என்ற  தமிழ் மக்களின் வலுவான அரசியல் உரிமையை,  ஏகோபித்த அபிலாசையை, பொருளாதாரம் கொண்டு மூடுவதற்கு சிங்களம் போடும் திட்டம். 

இதில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் பொருளாதர புள்ளிகள், வாய்ப்புகழ்ச்சிக்கும், பொன்னாடைக்கும்  மயங்கிவிட்டன போலும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2024 at 09:31, Kadancha said:

 

ராசமாணிக்கம் சிங்களத்தின் அடிவருடி.

 

எனக்கும் இந்த மாநாட்டில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. அதற்காக போகிற போக்கில் சிங்கள அடிவருடி அமெரிக்க கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது. 
ஏதாவது ஆதாரம் அல்லது நிரூபிக்க கூடியவை இருந்தால் பதிவிடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்


ராசமாணிக்கம் தான்  சந்திரிகா சமாதான பொதியை சிங்கள அரசு சார்பாக புலிகளுக்கு கொண்டு சென்றவர்.

தொடர்ந்த பேச்சுக்களில் சிங்கள அரசை பிரதிநிதித்துவம் செய்தவர்.

இதனால்  தான் அவரை அடிவருடி என்றேன், ஏனெனில்  வெளிப்படையாக சிங்கள அரசு சார்பாக நிற்பவர் . 


(செய்தியில் சொல்லப்பட்டு  இருப்பது  வேறு இராசமாணிக்கம் ஆயின் நான் சொல்லியதில் தவறு).

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:


ராசமாணிக்கம் தான்  சந்திரிகா சமாதான பொதியை சிங்கள அரசு சார்பாக புலிகளுக்கு கொண்டு சென்றவர்.

தொடர்ந்த பேச்சுக்களில் சிங்கள அரசை பிரதிநிதித்துவம் செய்தவர்.

இதனால்  தான் அவரை அடிவருடி என்றேன், ஏனெனில்  வெளிப்படையாக சிங்கள அரசு சார்பாக நிற்பவர் . 


(செய்தியில் சொல்லப்பட்டு  இருப்பது  வேறு இராசமாணிக்கம் ஆயின் நான் சொல்லியதில் தவறு).

இராசமாணிக்கம்  நல்ல வேலைதானே செய்திருக்கிறார்? 

பிறகெப்படி அவர் அடிவருடியானார்? 


பின் குறிப்பு

சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை விபு க்களிடம் கொண்டு சென்று Middleman ஆகச் செயற்பட்டது மறைந்த மன்னார் மாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு அடிகளார் என்று நம்புகிறேன். 

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இராசமாணிக்கம்  நல்ல வேலைதானே செய்திருக்கிறார்? 

பிறகெப்படி அவர் அடிவருடியானார்? 

அவர் சமாதான பொதியை கொண்டு போனார் தானே அது தான் தவறு அதனால் தான் அடிவருடி
போர் முழக்கம் செய்தால் அவர் தமிழ் தேசிய பிரமுகர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கைத்தீவு தமிழர் பிரச்சனையில் , தீர்க்கும் தொற்றப்பட்டில், (சிங்கள) அரசின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தமிழர் சிங்களத்தால் முற்றாக நம்பப்படுவர், சிங்கள  நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று.


அதனால் தான் அடிவருடி என்றேன் (துரோகி அல்ல.) 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kadancha said:

 

இலங்கைத்தீவு தமிழர் பிரச்சனையில் , தீர்க்கும் தொற்றப்பட்டில், (சிங்கள) அரசின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தமிழர் சிங்களத்தால் முற்றாக நம்பப்படுவர், சிங்கள  நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று.


அதனால் தான் அடிவருடி என்றேன் (துரோகி அல்ல.) 

விபு களாலேயே  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரை தீர்ப்பிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? 

தேசத் துரோகி, அடிவருடி, ......

தமிழ்ச் சமூகம்  ஒரு பாசிச சமூகமாக மாறி வருகிறது.....

😳

  • கருத்துக்கள உறவுகள்

வி.பு, அவர் சிங்கள நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் சொல்லுவார் என்ற கணிப்பு சரி. 

வி.பு.  ஆல் வி.பு அல்லது  தமிழர் நிலைபாட்டை சொல்லுவார் என்று இருக்கவில்லை.

ஏன், வி.பு  துரோகிகள் என மாத்தையா, கருணாவை துரோகி என்று கணிப்பிடும் போது (இருவரும் அதை மறுத்தனர், மாத்தையா முழு புலிகளின் பிடியில் இருந்தும் அவரின் நிலைப்பாடானா தான் துரோகி இல்லை என்பதில் இருந்த்து இறங்கவில்லை. களத்தில் ஆரம்ப போராளியாகவேனும் சண்டை பிடித்து சாவதே மேல் என்று உறுதியுடன் இருந்தவர்), சிங்களத்தை  பிரதிநிஹிஹுவம் செய்யும் ஒரு தமிழரை பற்றி கணிப்பிற்கு எவர் எனக்கு அதிகாரம் தரவேண்டும்.  


பாசிசத்தை சொல்லவில்லை கேட்டு விட்டு பிரோயோகித்தால் ..  

 

8 hours ago, Kapithan said:

அடிவருடி, ......

தமிழ்ச் சமூகம்  ஒரு பாசிச சமூகமாக மாறி வருகிறது....

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.