Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயம்…! தேடுதல் பணி தீவிரம்..!

malavi.jpg

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவிய பாதுகாப்பு படை விமானம், ராடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளன” என்று மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

விமான நிபுணர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனதை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடங்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:17 மணியளவில் விமானம் புறப்பட்டு, காலை 10:02 மணிக்கு Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட தரையிறங்க வேண்டும், ஆனால் விமானம் அப்படி இல்லாமல், ரேடாரில் இருந்து விலகியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த மே மாதம், ஹெலிகாப்டரில் சென்ற ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பயணித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

https://thinakkural.lk/article/303482

  • கருத்துக்கள உறவுகள்

images-1-2.jpg?resize=300,168&ssl=1

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்!

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட பின்னர் ராடார் அமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் தொடர்புடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்துள்ளது

விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்துடன் விமானத்தை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்தார்.

மேலும் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும், விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை நடவடிக்கை தொடர வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1387111

  • கருத்துக்கள உறவுகள்

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் காட்டுபகுதியில் விபத்தில் சிக்கியிருக்கலாம் - பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்

11 JUN, 2024 | 03:37 PM
image

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவுடன்  காணாமல்போன  ஹெலிக்கொப்டரை தேடும் பணிகள் தொடர்கின்ற அதேவேளை குறிப்பிட்ட ஹெலிக்கொப்டர் காட்டுபகுதியில் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என மலாவி இராணுவம் தெரிவித்துள்ளது.

தலைநகரிலிருந்து புறப்பட்ட பின்னர் ஹெலிக்கொப்டருடான தொடர்பு அற்றுப்போயுள்ளதாக மலாவியின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி உடனடி தேடுதல் நடவடிக்கைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்

நாட்டின் வடபகுதியில் உள்ள காட்டில் ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மோசமான காலநிலைக்கு மத்தியிலேயே இராணுவ ஹெலிக்கொப்டர் பயணத்தை மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெலிக்கொப்டரை கண்டுபிடிப்பதற்காக படையினர் சிகாங்கவா காட்டுபகுதியில்  தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பனி காரணமாக காட்டிற்குள் எவற்றையும் சரியாக பார்க்கமுடியவில்தை இதனால் மீட்புநடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என மலாவியின் பாதுகாப்பு தளபதி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185832

  • கருத்துக்கள உறவுகள்


 

10 பேரும் இறந்து விட்டதாக செய்தி கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update)

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update)

கிழக்கு ஆபிாிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) விமான விபத்தில் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் துணை ஜனாதிபதியுடன் பயணித்த 9 பேரும் குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேர் பயணித்த இராணுவ விமானமானது நேற்றைய தினம் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காமல்  மாயமானது.

இதனையடுத்து மாயமான விமானத்தைத் தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று  விபத்துக்குள்ளான நிலையில் குறித்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தில் சிக்கி, துணை ஜனாதிபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக  மலாவி ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், துணை ஜனாதிபதியின் மறைவிற்கு  அந்நாட்டு தலைவர்களும்  உலகத் தலைவர்களும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் பயணித்த ஹெலிகொப்டரானது கடந்த மாதம் 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1387282

  • கருத்துக்கள உறவுகள்

மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

11 JUN, 2024 | 05:49 PM
image
 

மலாவியின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்

அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்  எவரும் உயிர் தப்பவில்லை எனவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துணை ஜனாதிபதி உட்பட பத்துபேர் பயணம் செய்துகொண்டிருந்த விமானப்படை விமானம் நேற்று தொடர்பை இழந்தது.

https://www.virakesari.lk/article/185853

  • கருத்துக்கள உறவுகள்

malawi.webp?resize=750,375&ssl=1

மலாவியின் மறைந்த துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் 4 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின்  மறைந்த துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவின்  (Saulos Chilima)  இறுதி ஊர்வலத்தின் மீது  வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று மோதியத்தில் 4  பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் லிலாங்வேக்கு தெற்கே 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிலிமாவின் சொந்த கிராமமான என்சிபே வழியாக அவரது உடல்  நேற்றைய தினம்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோதே இவ்விபத்து  இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் கடந்த 10 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1388333

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.