Jump to content

உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

02-5.jpg?resize=750,375

உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி

உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 

நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார்.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில்,

எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு அதிகளவான வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உக்ரேனுக்கு முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, இந்த போரில் உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த போரில் ரஷ்யா தோல்வியடைந்து வருவதாகவும், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விளாடிமர் புட்டினின் இந்த விருப்ப போரில், அவரது இழப்புகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் – ரஷ்ய போரில் 3½ இலட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாது எனவும், உக்ரைனே வெற்றி பெறும் எனவும் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

https://athavannews.com/2024/1391843

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி

உக்ரேன் அழிந்து போவது உறுதியாகிவிட்டது.

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாய்தவறிச் சொல்லியிருப்பார்,. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று அரை லட்சம் இழப்பு என்பது மிகப்பெரிய தொகை. இது பெரும் கொந்தளிப்பை ரசியாவில் உருவாக்கும். உக்ரைனில் புட்டின் கால் பதிக்கிறாரோ இல்லையோ ரசியாவில்????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

மூன்று அரை லட்சம் இழப்பு என்பது மிகப்பெரிய தொகை. இது பெரும் கொந்தளிப்பை ரசியாவில் உருவாக்கும். உக்ரைனில் புட்டின் கால் பதிக்கிறாரோ இல்லையோ ரசியாவில்????

மக்றோன் கவிழ்ந்தது போல பிட்டினும் கவிழ்வார் என்கிறீர்கள்? 

......ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மக்றோன் கவிழ்ந்தது போல பிட்டினும் கவிழ்வார் என்கிறீர்கள்? 

......ம்ம்ம்ம்ம்

மக்றோன் ஐனநாயக முறைப்படி இரண்டு தரம் இருந்தாச்சு. இனி அவுட். ஆனால் புட்டின்...?

ஆனால் ஐனநாயகம் பற்றிய கொள்ளளவு உங்களுக்கு பூச்சியம் என்று யாழ் அறியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மக்றோன் ஐனநாயக முறைப்படி இரண்டு தரம் இருந்தாச்சு. இனி அவுட். ஆனால் புட்டின்...?

ஆனால் ஐனநாயகம் பற்றிய கொள்ளளவு உங்களுக்கு பூச்சியம் என்று யாழ் அறியும். 

இங்க பார்ரா,..

தொர,... சனநாயகம் பேசுது,...🤣

ரஸ்யாவிலும் தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது தங்களுக்குத் தெரியாவிட்டால் ஐனநாயகம் பற்றிய கொள்ளளவு உங்களுக்குத்தான் பூச்சியம் (Copy and paste) 🤣

அதுசரி  விசுகர்,  பிரான்ஸ்ஸில் எதிர்க் கட்சியினர்  பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக  மக்ரோனின் கட்டியினரி பலர் கூட்டாகப் போட்டியில் இருந்து விலகி தங்கள் கட்சியினரின் வாக்குப் பலத்தை அதிகரித்ததாகக் கேள்வி,.... உண்மையே,......

😁

பிரான்ஸ் ரஸ்யாவுக்குப் படைகளை அனுப்புவதாக உத்தேசம் போல,... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

வாய்தவறிச் சொல்லியிருப்பார்,. 😁

ஒரு வயதுக்கு மேல பொய் சொல்லுறது வலு கஷ்ரம் கண்டியளோ🤣. உண்மை அமெரிக்காவுக்கு தெரியும்.:cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

ஒரு வயதுக்கு மேல பொய் சொல்லுறது வலு கஷ்ரம் கண்டியளோ🤣. உண்மை அமெரிக்காவுக்கு தெரியும்.:cool:

அந்த வீடியோவில் .23 - 29 நொடிகளைத் திரும்பத் திரும்ப zoom செய்து பார்க்கவும். மேற்குலகின் ஆச்சரியத்தை Biden னின் முகத்தில் காணலாம். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது முதிர்ப்பு காரணமாக பைடன் பல உண்மைகளை உளறப்போகின்றார் போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

மூன்று அரை லட்சம் இழப்பு என்பது மிகப்பெரிய தொகை. இது பெரும் கொந்தளிப்பை ரசியாவில் உருவாக்கும். உக்ரைனில் புட்டின் கால் பதிக்கிறாரோ இல்லையோ ரசியாவில்????

இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷ்யா மீதான ஜேர்மனியின் படையெடுப்புகளிலும் இழந்த உயிர்த்தொகைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
கூட்டி கழித்து பார்த்தால்  நீங்கள் சொல்வதெல்லாம் கொசுறு கணக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷ்யா மீதான ஜேர்மனியின் படையெடுப்புகளிலும் இழந்த உயிர்த்தொகைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
கூட்டி கழித்து பார்த்தால்  நீங்கள் சொல்வதெல்லாம் கொசுறு கணக்கு.

உண்மையில் உக்ரேனியர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. 
எல்லோராலும் கைவிடப்பட்ட, பலிக்கடாவாக்கப்பட்ட  ஒரு இனமாகிவிட்டது. 

😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷ்யா மீதான ஜேர்மனியின் படையெடுப்புகளிலும் இழந்த உயிர்த்தொகைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
கூட்டி கழித்து பார்த்தால்  நீங்கள் சொல்வதெல்லாம் கொசுறு கணக்கு.

எத்தனையாவது நூற்றாண்டில் வாழ்கிறோம் அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இங்க பார்ரா,..

தொர,... சனநாயகம் பேசுது,...🤣

ரஸ்யாவிலும் தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது தங்களுக்குத் தெரியாவிட்டால் ஐனநாயகம் பற்றிய கொள்ளளவு உங்களுக்குத்தான் பூச்சியம் (Copy and paste) 🤣

அதுசரி  விசுகர்,  பிரான்ஸ்ஸில் எதிர்க் கட்சியினர்  பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக  மக்ரோனின் கட்டியினரி பலர் கூட்டாகப் போட்டியில் இருந்து விலகி தங்கள் கட்சியினரின் வாக்குப் பலத்தை அதிகரித்ததாகக் கேள்வி,.... உண்மையே,......

😁

பிரான்ஸ் ரஸ்யாவுக்குப் படைகளை அனுப்புவதாக உத்தேசம் போல,... 😁

உண்மையில் நீங்கள் ஒருவித??????

மக்கள் மற்றும் நாட்டின் நன்மை கருதி கூட்டுச் சேர்த்தல் மற்றும் விட்டு விலகுதலுக்கும் 

வாழ்நாள் முழுவதும் நானே ராஜா என்பதற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மேற்கத்தைய எதிர்ப்பு உணர்வை பார்க்கும் போது....

உண்மையில் நீங்கள் ஒருவித??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எத்தனையாவது நூற்றாண்டில் வாழ்கிறோம் அண்ணா?

ஏன் விசுகர் இந்தக்கேள்வி? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உண்மையில் நீங்கள் ஒருவித??????

மக்கள் மற்றும் நாட்டின் நன்மை கருதி கூட்டுச் சேர்த்தல் மற்றும் விட்டு விலகுதலுக்கும் 

வாழ்நாள் முழுவதும் நானே ராஜா என்பதற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மேற்கத்தைய எதிர்ப்பு உணர்வை பார்க்கும் போது....

உண்மையில் நீங்கள் ஒருவித??????

எந்த மக்கள்?

எந்த  நாடு? 

உக்ரேன் என்று தாங்கள் இப்போதும் கூறுவீர்களானால் .......🤦🏼‍♂️

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.