Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம்

வீரகேசரி இணையத்தளம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்க்கான ஆனையாளர் லூயிஸ் ஆர்ப்பர் இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.பல்வேறு மனித உரிமைகள் ஆமைப்புக்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.இது தொடர்பான உண்மை நிலைகளை அரியும் பொருட்டு ஆர்பரின் இவ்விஜயம் அமையவுள்ளது.

இலங்கை விஜயம் செய்யும் ஆர்ப்பர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்,மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க .ஐக்கிய தேசிய கட்சி, ஜாதிக ஹெல உறுமைய, சிலங்கா முஸ்கிம் காங்கிரஸ், தமிழரசு கட்சி மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைவர்களை சந்திக்கவுள்ளார்.வெள்ளிக்கி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்ப் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா தலைநகர் கொழும்பு வந்தடைந்தார்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வின் மனிதஉரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இலங்கை வருகை நாளை ஜனாதிபதியை சந்திப்பார்

இலங்கையின் மனிதஉரிமை நிலைவரம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக ஐ.நா.வின் மனிதஉரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

இன்றுகாலை 10 மணியளவில் லூயிஸ் ஆர்பர் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதேவேளை இன்று பிற்பகல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு லூயிஸ் ஆர்பரை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. இதில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தன், எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது அரசாங்கத்தின் மோசமான மனித உரிமை மீறல்கள், அவற்றின் மூலம் தமிழ் மக்கள் அடைந்துள்ள பாதிப்புக்கள் குறித்தும் லூயிஸ் ஆர்பரிடம் எடுத்துக் கூறவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவற்றை தடுக்க இங்கு ஐ.நாவின் பிரசன்னத்தை வலியுறுத்தவுள்ளதாகத் தெரிகிறது.

நாளை 11 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு லூயிஸ் ஆர்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் காணாமல் போனோர்களின் குடும்ப உறுப்பினர்களை கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் லூயிஸ் ஆர்பர் சந்திக்கவுள்ளார்.

இதனையடுத்து நாளை மறுநாள் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் லூயிஸ் ஆர்பர் அங்கு அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகளையும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அன்று முற்பகல் 11 மணியளவில் டெம்பிள் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் காணாமல் போனோரின் குடும்ப பிரதிநிதிகளை லூயிஸ் ஆர்பர் சந்திக்கவுள்ளார்.

அதன் பின்னர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ள லூயிஸ் ஆர்பர், மனிதஉரிமை ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளோரை சந்திக்கவுள்ளதோடு அவர்களின் நலன் குறித்தும் ஆராயவுள்ளார்.

மேலும் அவர் தனது நான்கு நாள் விஜயத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, மேலக மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல்கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தனது விஜயத்தின் இறுதி நாளான 13 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் லூயிஸ் ஆர்பர், அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தவுள்ளார்.

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 10-10-2007 06:42 மணி தமிழீழம் [மயூரன்]

நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் லூயிஸ் ஆபர் சந்திப்பு

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆபர் அவர்களை நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளடங்கிய குழு ஆபரைச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி

பதிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Oct 10 9:10:00 2007

.கடத்தப்பட்டோர், படுகொலை செய்யப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் உறவினர் வெள்ளியன்று ஐ.நா. அதிகாரியை இங்கு சந்திக்க வசதி கொழும்பில் பாதிக்கப்பட்டோருடன் நாளை கலந்துரையாடுவார்

குடாநாட்டில் காணாமற்போனோர், கடத்தப்பட்டோர், படுகொலை செய்யப்பட்டோ ரின் உறவினர்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக் கான தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரை யாழ்ப்பாணத்தில் சந்தித்து தமது முறைப்பாடு களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா. தூதரகம் செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

தில், அவர் குடாநாட்டில் காணாமற்போனோர், கடத்தப்பட்டோர், உயிர் அச்சுறுத்தல் காரணமாகச் சரணடைந்தோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர் களின் முறைப்பாடுகளைக் கேட்டு அறி வார்.

பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றிச் சென்று தமது உள்ளக்கிடக்கையை அவரிடம் தெரி விக்க வேண்டும். அதன் மூலம் விடிவு கிட்ட வழி பிறக்கும் என்று மக்கள் கண் காணிப்புக் குழுவின் பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

லூயிஸ் ஆர்பர் அம்மையார், கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 11 மணிக்கு கொழும்பில் உள்ள ஐ.நா. அலு வலக வளாகத்தில் சந்திக்க உள்ளார்.

இதேவேளை

லூயிஸ் ஆர்பர் அம்மையார், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர் களை இன்று சந்தித்து வடக்கு கிழக்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிவார். (அ1)

http://www.uthayan.com/

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தமது நிர்வாகப் பகுதிக்கும் வருகை தர வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி சிறிலங்காவின் வெலிக்கடைச் சிறையில் உள்ள 80 தமிழ்க் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க

சிறிலங்கா வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் இன்று சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கவையும், ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவையும் சந்தித்தார்.

மேலும் வாசிக்க

விடுதலைப் புலிகளுடனான சந்திப்பை தடுத்தது குறித்து லூய்ஸ் ஆர்பர் கவலை

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தனது சந்திப்பை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடுத்தமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்விபரங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறவில்லை லூயிஸ் ஆர்பரிடம் தமிழ் எம்.பி.க்கள் தெரிவிப்பு

பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மேலக மக்கள் முன்னணியும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரிடம் எடுத்துக்கூறியுள்ளனர்.

அதேவேளை, ஐ.நா. சபையின் மனித உரிமை அலுவலகம் ஒன்று கொழும்பில் அமைக்கப்படவேண்டுமென்ற வேண்டுகோளையும் அவர்கள் லூயிஸ் ஆர்பரிடம் விடுத்தனர். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கான எத்தகைய அங்கீகாரமும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். அவ்வாறான அலுவலகம் ஒன்று அமைக்கப்படுவது நல்லது என்றும் அது தொடர்பாக பரிசீலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்புக்கு விஜயம் செய்துள்ள லூயிஸ் ஆர்பரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் ஆகியோர் சந்தித்து சமகால அரசியல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுத்து விளக்கிக் கூறியபோது மேற்படி விடயங்கள் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்றுமாலை 5.45க்கு ஆரம்பித்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்றது. சிங்களவர்களுக்கு முன்னமே தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்ந்த பாரம்பரியம் உண்டு. ஆனால், அந்த வரலாறுகளை மாற்றியமைத்து சிங்கள பௌத்த தேசிய நாடாக சர்வதேச அரங்கில் சித்திரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்படுவதாக சம்பந்தன் எம்.பி., லூயிஸ் ஆர்பரிடம் எடுத்துக் கூறினார்.

அத்துடன், தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுதலித்து வருகின்றமை மற்றும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டிய சம்பந்தன் இந்த நிலைமைகளை மாற்றியமைப்பதற்கு சர்வதேசம் கடுமையான அழுத்தங்களை அரசுக்கு கொடுக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். ஆனால் அவ்வாறான அழுத்தம் ஒன்றை சர்வதேசம் அரசாங்கத்திற்கு கொடுக்கவும் முடியாது. கொடுக்கவும் மாட்டார்கள் என்ற நம்பிக்கையீனத்தையும் சம்பந்தன் வெளிப்படுத்தினார்.

இந்த சந்திப்பின்போது லூயிஸ் ஆர்பருக்கு மேலும் எடுத்து கூறிய விடயங்கள் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்றிரவு கேசரிக்கு தெரிவித்ததாவது: வடக்கு கிழக்கில் பாதுகாப்பு கெடுபிடி என்ற பெயரிலும் இராணுவ நடவடிக்கை என்ற போர்வையிலும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை ஆர்பர் அம்மையாரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம். அரசாங்கம் சிங்கள, பௌத்த நாடாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது. இங்கு தமிழ், சிங்கள மக்கள் உயிர்வாழ முடியும். ஆனால், அவர்களது உரிமைகளை பெற்று, தனித்துவத்தை பேணி தலைநிமிர்ந்து வாழமுடியாத நிலைமையை அவருக்கு விளக்கினோம்.

ஜனாதிபதி இதனை தனது தலையான செயற்திட்டமாக கருதி அதனை அமுல்படுத்தி வருகின்றது. இராணுவ ரீதியான அணுகுமுறை மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காண அரசாங்கம் முயற்சிப்பதாக அவரிடம் தெரிவித்தோம். கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்ற கொலைகள், கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதை ஆர்பர் அம்மையாரிடம் சுட்டிக்காட்டியதோடு, இதிலிருந்து மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள உண்மையான கரிசணையை புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தோம். அத்தோடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள வெலிக்கடை சிறைக் கைதிகளால் எமக்கு அளிக்கப்பட்ட அறிக்கையை லூயிஸ் ஆர்பர் அம்மையாரிடம் சமர்ப்பித்தோம்.

லூயிஸ் ஆர்பருக்கு முடியாவிட்டாலும் அவரது பிரதிநிதி ஒருவரையாவருது வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தோம். கடந்த வாரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணையாளர் மான் பிறெட் நொவெக் தொடர்பான எவ்வித விபரமும் சிறைக் கைதிகளிடம் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் இக்கைதிகள் தமது கோரிக்கைகளை நொவெக்கிடம் அளிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தமிழ் அரசியல் கைதிகள் கடந்த இரண்டு வருடமாக எவ்வித வழக்குகளோ விசாரணைகளோ இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமையை லூயிஸ் ஆர்பருக்கு விளக்கினோம். எனவே மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் இங்கு ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பு அலுவலகம் நிறுவப்படவேண்டும் என வலியுறுத்தினோம்.

இதேவேளை, தாம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து, விடுதலைப்புலிகளிடம் மனித உரிமை குறித்து கலந்துரையாட விரும்பியதாக தெரிவித்த லூயிஸ் ஆர்பர் எனினும், தாம் அங்கு செல்ல அனுமதிக்கப்படாமை குறித்து கவலை அடைவதாக தெரிவித்தார். அதேவேளை கனடாவின் கியூபெக் மாநிலத்தை தான் பிறப்பிடமாக கொண்டதாகவும் பிரஞ்சு மொழி பேசுகின்ற எங்களை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது ஏற்பட்ட உணர்வுகள் இருப்பதனால் உங்களின் நிலைமைகளை புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் தன்னிடம் உண்டு எனவும் லூயிஸ் ஆர்பர் எடுத்துக்கூறியதாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

-வீரகேசரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Thu Oct 11 9:00:00 2007

விடுதலைப் புலிகளைச் சந்திக்க முடியவில்லையே; லூயிஸ் ஆர்பர் அம்மையார் பெரும் ஆதங்கம்!

விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்திக்க ஆவலாக இருந்தேன். துரதிஷ்டவசமாக அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டது.

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான தூதர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இப்படிக் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினரைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தனது ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவிரும்பினேன். அவர் களுடன் பல விடயங்கள் குறித்துப் பேசவேண்டும் என்று இருந்தேன். முக்கிய சில விட யங்களை அவர்களுக்குத் தெளிவாக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

ஆனால், துரதிஷ்டவசமாக அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டது என்று அவர் கவலை தெரிவித்தார். (அ1)

http://www.uthayan.com/

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தனது சந்திப்பை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடுத்தமை குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.