Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240821-WA0048.jpg?resize=750,375

வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச  மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் அறிவித்தல் பதாதையில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

அத்துடன் ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” பிரிவின் தொலைபேசி இலக்கமும் அறிவித்தல் பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1396617

நோயாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, அவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்த சுகாதார துறையினர் மேலும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிகாட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1396617

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு ஆளுநர் பிறப்பித்துள்ள அவசர உத்தரவு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” பிரிவின் தொலைபேசி இலக்கமும் அறிவித்தல் பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/308179

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வளவு காலமும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு என்ன நடந்தது?

ஏதாவது விசாரணை நடந்ததா?அதன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதா?

சாவகச்சேரியில் பாம்பு கடித்து வந்தவர் வைத்தியசாலையில் யாருமே இல்லை என்றார்களே இதன் விசாரணை முடிந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு காலமும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு என்ன நடந்தது?

ஏதாவது விசாரணை நடந்ததா?அதன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதா?

சாவகச்சேரியில் பாம்பு கடித்து வந்தவர் வைத்தியசாலையில் யாருமே இல்லை என்றார்களே இதன் விசாரணை முடிந்ததா?

இதையெல்லாம்... " சுபம்' என்று போட்டு முடித்திருப்பார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, alvayan said:

இதையெல்லாம்... " சுபம்' என்று போட்டு முடித்திருப்பார்கள்..

அப்புறம் ஏன்தானய்யா முறைப்பாட்டு இலக்கங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு காலமும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு என்ன நடந்தது?

ஏதாவது விசாரணை நடந்ததா?அதன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதா?

சாவகச்சேரியில் பாம்பு கடித்து வந்தவர் வைத்தியசாலையில் யாருமே இல்லை என்றார்களே இதன் விசாரணை முடிந்ததா?

பி.எஸ். எஸ். எம் சாள்ஸ் எல்லாத்தையும் அழித்து விட்டு இனி முதலில் இருந்தாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் ஏன்தானய்யா முறைப்பாட்டு இலக்கங்கள்?

அது வந்தண்ணை மக்களுக்கு ஒரு மன ஆறுதலுக்கு....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.