Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24-66c72d6c8f839.jpeg?resize=600,375&ssl

மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட  நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1397031

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் மனைவி அன்று!

மனைவி இறந்தால் உயிரை மாய்க்கும் கணவன் இன்று!!

குழந்தைகள்??????.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் மனைவி அன்று!

மனைவி இறந்தால் உயிரை மாய்க்கும் கணவன் இன்று!!

குழந்தைகள்??????.

அதிக பட்ச மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..அரளிக்காய் உட்கொண்டு இருக்கிறார்.பிறந்த பிள்ளை தான் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

அதிக பட்ச மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..அரளிக்காய் உட்கொண்டு இருக்கிறார்.பிறந்த பிள்ளை தான் பாவம்.

இதற்கெல்லாம் காரணமானவர்கள், நாங்களும் எங்கள் சமூகமுமே, வைத்தியர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணாமல், கடவுள்களாகப் போற்றி வணங்கியமைதான்.😩

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் . இந்த சாபம் அந்த வைத்தியர்களையும் சம்பந்த பட்டவர்களையும் வாழ விடாது. மிக கொடுமையான நிகழ்வு .
குறுகிய காலத்திற்குள் பணம் படைக்கவேண்டும் என்று அலையும் வைத்தியர்களை என்ன செய்வது .
சமுதாயம் இப்ப பிழையான பாதையில் செல்கின்றது ....பணம் பணம் ....

  • கருத்துக்கள உறவுகள்

Dr முரளி வல்லிபுரநாதன் வாட்ஸப்பில் இருந்து..

 

மருத்துவ அலட்சியத்தால் நேரிடும் மரணங்களும் ஊடகங்களது சமூகப் பொறுப்பும்.

மருத்துவ அலட்சியத்தால் மன்னாரில் இறந்த இளம் தாயின் கணவர் நீதி தாமதிக்கப்பட்ட நிலையில் தவறான முடிவினை எடுத்த தகவலானது மனதைப் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது.

தவறான முடிவுகள் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பதுடன் ஊடகங்கள், மருத்துவர் ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய தரப்பினர் மேலும்  பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால் இந்த அநாவசிய இறப்புத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 2014 இல் முதன் முதலில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு 2017இல் மேம்படுத்தப்பட்ட தற்கொலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் பாரிய பொறுப்பை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

குறிப்பாக தற்கொலையை நியாயப்படுத்துவது, தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளை வெளிப்படுத்துவது, மற்றும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரங்களை வெளியிடுவது ஆகியவற்றால் சமூகத்தில் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் ஏனையவர்களையும் தற்கொலை செய்யத் தூண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மன்னாரில் இளம் தாயின்  சாவைத் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகர்கள், வலையொளி (Youtube) ஊடகர்கள் எனப் பலரும் ஊடக ஒழுக்க நெறியினைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக மீறியுள்ளனர். முக்கியமாக இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து "யார் குற்றவாளி" என்று கருத்து வெளியிடும் நீதிபதிகளாக ஊடகவியலாளர்கள் குறிப்பாக Youtube பதிவாளர்கள் செயல்படுவது ஏற்கனவே குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களின் மனவேதனையை அதிகரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி அவர்களை மோசமான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது.

இதனாலேயே பல சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் செயல்படும் ஒரு சிலரைத்தவிர ஏனைய Youtube பதிவாளர்களையும் சமூக ஊடகர்களையும் பொறுப்பற்ற- தமது இலாபத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்படும்- பிணந்தின்னிக் கழுகுகளாக கருத வேண்டியுள்ளது.  

அத்தோடு இவ்விடயத்தில் நேரடியாகத் தன்னார்வ அடிப்படையில் தலையிட்ட ஒரு வைத்தியர் வைத்தியத்துறையின் மீதான தனது நம்பிக்கையீனங்களை சமூகமயப்படுத்தியதால்- அதாவது 'வைத்தியர்களைத் தான் குறைகூறியதால் அவர்கள் தமக்குப் பாதகம் செய்துவிடுவார்கள்' என்ற கருத்தைக் கூறி, 'தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதாகவும் தொடர்ச்சியாகக் கூறி வருவதால்'- சமூகத்தில் வைத்தியத்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் அச்சத்தால் வைத்திய சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கும் நிலைப்பாட்டினை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதன் காரணமாக 'வைத்தியருக்கே ஆபத்து வருமானால் நாம் எல்லாம் எம்மாத்திரம்' என்று அஞ்சி உரிய சிகிச்சைகளைப் பெறாது மக்கள் மரணிக்கும் ஆபத்து அதிகரித்திருக்கிறது.

குறித்த கணவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட பயம் காரணமாக, மருத்துவ உளவளத்துணை எதனையும் நாடாது மரணித்திருக்கக் கூடும். ஆகவே, தாமே குறித்த பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரைப் பாதுகாப்பதாக பகிரங்கமாகக் கூறித்திரியும் அதே வைத்தியர் உண்மையாகவே அக்குடும்பத்தின் நலன்களில் அக்கறை காட்டியிருந்தால் தகுந்த உளவள ஆற்றுகைககள் ஊடாக இந்த மரணத்தினைத் தவிர்த்திருக்கலாம்.

 
மறுபுறம் இளம் தாயின் இறப்பு தொடர்பான விசாரணையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் பெயர்களை ஊடகங்கள் எந்தவித சுய கட்டுப்பாடும் இன்றி வெளிப்படுத்தி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். பணி இடைநீக்கம் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்தேகத்துக்குரிய ஊழியர்கள் மீது எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை ஆகும். இரண்டு மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் அதன்பின் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்பவம் நடந்து 6 மாதங்களுக்குள் விசாரணை பூர்த்தி செய்யப்பட்டு .குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பலர் பின்னர் முறையான விசாரணையில் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான சம்பளத்துடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதை நான் அவதானித்து இருக்கிறேன். எனவே ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் பெயர் விபரங்களை அவர் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில் ஊடகங்கள் வெளிப்படுத்தி சமூகத்தில் குற்றவாளியாக வெளியே நடமாட முடியாதவாறு செய்வது ஊடகங்களின் ஒழுக்க நெறியை மீறிய அராஜக செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இவரது மரணத்திற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய கடமை இன்னொரு தரப்பினருக்கும் சம அளவில் உண்டு. கர்ப்பகாலத் தாயார் ஒருவரது இழப்பு எவராலும் ஈடுகட்டமுடியாத இழப்பு. அதனால் குறித்த தாயாரது குடும்பத்தவர்கள் நெருங்கியவர்கள் என அனைவரும் சுகாதாரத்துறையினரது உளவள மருத்துவப் பிரிவினர் மற்றும் தாய்சேய் நலப்பிரிவினர் ஆகியோரால் நெருக்கமான அரவணைப்பு மற்றும் ஆற்றுப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு உள ஆற்றுப்படுத்துகைக்குச் சென்ற உளவளத்துணையாளர்கள் சம்பந்தப்பட்ட  குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், சுகாதாரதுறையினர் தொடர்பில் வழங்கப்படும் எதிர்மறையான தகவல்களால் சுகாதாரப் பணியாளர்களை எட்ட வைத்திருக்கவே அக்குடும்பத்தினர் விரும்பினர் என்றும் தெரியவருகிறது.

குறித்த செயற்பாட்டால் சுகாதாரப் பணியாளர்கள் மனச்சோர்வடைந்தும், பொறுப்பற்ற ஊடக வசைச் சொற்களால் அச்சமடைந்தும் போனதால் அக்குடும்பத்தைத் தமது அரவணைப்பில் வைத்திருக்காது விலகியிருக்கலாம்.
 
அதேபோல் ஒரு இணையத் தளத்தில் மன்னார் இறப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்தியர் செந்தூரனின் குடும்பப் புகைப்படங்களுடன் பாலியல் ரீதியாகக் கொச்சைப் படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவது ஊடக தர்மத்துக்கு ஒவ்வாத ஒட்டுண்ணிகளால் இயக்கப்படும் ஊடக மாபியாவின் செயல்பாடாகவே கருதவேண்டியுள்ளது. இது போலவே GMOA மாபியா குழு உறுப்பினர்களினால் இயக்கப்படும் அநாமதேய முகநூல் பதிவுகள், கருத்துக்களைப் பதில் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் தனிப்பட்ட ரீதியாகத் தாக்கும் கேவலமான செயலாக எடுத்துக்கொள்ளலாம்.

இவை ஒருபுறம் இருக்க, மன்னார் இளம் தாயின் அநியாயச் சாவுக்காக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாதது அனைவரின் மனதிலும் பெரும் கிலேசத்தினை எழுப்பியுள்ளது. ஏனைய இடங்களில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் மருத்துவ அலட்சியத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் பலரும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் மன்னாரைச் சேர்ந்த சட்டவாளர்களும் ஏனைய மன்னார் சமூக செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் ஏழைகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்காத இந்தக் கேவலமான நிலையை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும் [Justice delayed is justice denied] என்பது ஒரு சட்ட அறம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் மனத்தில் இருத்தி விரைவான நீதியைப் பெற முற்படுவதே இழந்த உயிர்களுக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் செய்யும் கைமாறாக இருக்கும்.


வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மையான மருத்துவர்கள், கட்சி அரசியல் செய்யாத சட்டத்தரணிகள், சமூக நீதிக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊறுபடும் நிலையில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு தன்னார்வ சுயாதீனக் கட்டமைப்பினை மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தி வைத்தியசாலைகளில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரிழப்பிலும் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.. மருத்துவ அற நெறியை [medical ethics] கற்பிக்கும் ஆசிரியர் என்ற வகையில் நான் எப்போதும் எனது பக்கச்சார்பற்ற ஆலோசனைகளை வழங்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான எழுச்சி பாதிக்கப்படும் பிராந்தியங்களில் இருந்து உருவாக வேண்டும். அதன் மூலமாகவே வவுனியா உட்பட வட பகுதியில் தொடர்ச்சியாக கவனக்குறைவு காரணமாக இடம் பெறும் தாய் மற்றும் சிசு மரணங்கள் தவிர்க்கப்படலாம்.

நன்றி 

Dr முரளி வல்லிபுரநாதன் 
சமுதாய மருத்துவ நிபுணர் 
25.8.2024

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மையான மருத்துவர்கள், கட்சி அரசியல் செய்யாத சட்டத்தரணிகள், சமூக நீதிக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊறுபடும் நிலையில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு தன்னார்வ சுயாதீனக் கட்டமைப்பினை மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தி வைத்தியசாலைகளில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரிழப்பிலும் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முன்வரவேண்டும்..

சமுதாய மருத்துவ நிபுணர் Dr. வல்லிபுரநாதன் அழகாகச் சொல்லி இருக்கின்றார்.

வைத்திய சிகிச்சையில் தவறு நடந்தால் கேட்கப்படல் வேண்டும்.கண்டிக்கப்பட வேண்டும். இனி அதுபோல் தவறுகள் நிகழாத நிலை வரவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இங்கே எங்களிடம், பாதிக்கப்பட்டவர், அவர் உறவுகள் பற்றிய அக்கறைகள் பின் தள்ளப்பட்டு விடுகிறது. பிரச்சினையை மட்டும் தூக்கிப் பிடித்து  ஊதிப் பெரிதாக்கி சமூகமாக நாங்கள் செய்ய வேண்டிய மற்றவைகளை மறந்து போகிறோம்.

உலகமெங்கும் வைத்தியத்துறையில் பல தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் வாழும் யேர்மனியில் கூட கடந்த வருடம், 2679  தவறான முறையில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனால் 75 உயரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பதியப்பட்டிருக்கிறது

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

உலகமெங்கும் வைத்தியத்துறையில் பல தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் வாழும் யேர்மனியில் கூட கடந்த வருடம், 2679  தவறான முறையில் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனால் 75 உயரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பதியப்பட்டிருக்கிறது

எனது சுவிஸ் உறவுடன் சிந்துஜா கணவர் பற்றி பேசிய போது அவரும் அங்கே நடைபெறுகின்ற மோசமான மருத்துவ தவறுகளை குறிப்பிட்டார். மற்றும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களே தங்களுக்கு மருத்துவ தவறுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.