Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   26 AUG, 2024 | 05:08 PM

image
 

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, 

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வருகை தந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார். 

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்வவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.  

https://www.virakesari.lk/article/192058

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

யேர்மனியில் நான் வசிக்கும் நகரில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் நூறன் பேர்க் நகரில் வசிக்கும்  எனக்குத் தெரிந்த ஊரவன் ஒருவர் ஊருக்குப் போவதாக சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தான். அப்பொழுது நாட்டில்  நிலமைகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை என்பதால் நான் போவதை தவிர்த்திருந்தேன். ஊருக்குப் போய் மூக்கு முட்ட கள்ளு குடிக்க வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது.

ஊருக்குப் போய் திரும்பி வந்து அலைபேசியில் தொடர்பு கொண்டான்.  ஊர் விடையங்களைப் பற்றி நிறையக்  கதைத்தான். கள்ளு குடித்ததைப் பற்றி ஒரு வரி கூட அவன் சொல்லவில்லை. ஆனால் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“கள்ளுக் குடிக்கலாம் எண்டு ஆசையாத்தான் இருந்தது. கூட வாறதுக்கு இரண்டு மூன்று பேர் தயாராகவும் இருந்தினம். ஆனால் எனக்குள்ளை ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. கள்ளுக் குடிச்சு வெறி ஏறினாப் போலே, ‘வெளிநாட்டுக்குப் போயிற்று வந்தால் பெரிய நினைப்பு. நாங்களெல்லாம் அவரிட்டை கள்ளுக் குடிக்க  ஊம்போணுமோ?’ எண்டு எனக்கு அவங்கள் இரண்டு சாத்து சாத்தினால் என்ன செய்யிறது எண்டு பயம் வந்தது. எதுக்கு வில்லங்கம் எண்டு நான் கள்ளுக் குடிக்கப் போக இல்லை”

இந்த நினைவை மீட்ட வைத்தது இந்தச் செய்தி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

குறித்த வீட்டில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த நபரும், அவரது உறவினரும் இரவு மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார். 

இது நிச்சயம் காணி அல்லது எல்லைப் பிரச்சனைதான் கொலையில் முடிந்துள்ளது.😳

பணப் பிரச்சனைகூடப் பெரிதாக அங்கு உறவுகளைக் கொலைவரை கொண்டுசெல்வதில்லை.🧐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

இது நிச்சயம் காணி அல்லது எல்லைப் பிரச்சனைதான் கொலையில் முடிந்துள்ளது.😳

பணப் பிரச்சனைகூடப் பெரிதாக அங்கு உறவுகளைக் கொலைவரை கொண்டுசெல்வதில்லை.🧐

ஊரில் எனக்கு கொஞ்ச காணி பூமியள் இருக்கு.....
அதை பராமரிப்பவர்கள் வந்து ஒருக்கால் காணி பூமியளை பார்த்து விட்டு போகுமாறு வற்புறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வந்தால் குல தெய்வத்திற்கு பொங்கல் பொங்கி கழிப்பு செய்தால் நல்லதென்றும் சொல்கிறார்கள்.

Ex9-Fa2r-U4-AUPXhz.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஊரில் எனக்கு கொஞ்ச காணி பூமியள் இருக்கு.....
அதை பராமரிப்பவர்கள் வந்து ஒருக்கால் காணி பூமியளை பார்த்து விட்டு போகுமாறு வற்புறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வந்தால் குல தெய்வத்திற்கு பொங்கல் பொங்கி கழிப்பு செய்தால் நல்லதென்றும் சொல்கிறார்கள்.

எனக்கு அங்கு காணி, பூமி எதுவுமே இல்லை ஆகையால் பயப்படாமல் போய்வருவேன்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஊரில் எனக்கு கொஞ்ச காணி பூமியள் இருக்கு.....
அதை பராமரிப்பவர்கள் வந்து ஒருக்கால் காணி பூமியளை பார்த்து விட்டு போகுமாறு வற்புறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வந்தால் குல தெய்வத்திற்கு பொங்கல் பொங்கி கழிப்பு செய்தால் நல்லதென்றும் சொல்கிறார்கள்.

Ex9-Fa2r-U4-AUPXhz.jpg

போகாதே போகாதே என் அண்ணா??? 

காணி பூமி வாங்கலாம் 

பொங்கல் வைத்தால்....???😪

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240826-WA0002.jpg?resize=750,375

சுவிஸ்லாந்தில் இருந்து வவுனியாவுக்கு வந்தவா் சடலமாக மீட்பு!

சுவிஸ்லாந்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்து கனகராயன்குளம் சின்னடம்பன் பகுதியில் தங்கி இருந்த நபரொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

66 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவிலுள்ள சின்னடம்பன் கிராமத்தில் அவரது உறவினரின் வீடு ஒன்றில் தங்கி இருந்தபோதே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் நேற்றிரவு இரவு வீட்டிற்குள் புகுந்து குழுவினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று காலை நான்கு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருவதோடு இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பதில் நீதிபதி திருவருள் விஜயம் மேற்கொண்டு சடலத்தை பார்வையிட்டிருந்தார்.

https://athavannews.com/2024/1397190

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் குடும்பஸ்தர் கொலை; இருவர் கைது

Published By: VISHNU   28 AUG, 2024 | 12:23 AM

image
 

வவுனியா கனகராயன்குளம் சின்னடம்பன் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐய்யனார் கோவில் திருவிழாவில் பின்னர் அங்குள்ள வீடொன்றில் சுவிசில் இருந்து வந்தவரும் அவரது உறவினரும் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் இரவு மது போதையில் வீட்டில் தூங்கிய போது வீட்டுக்குள் நுழைந்தவர்களினால் ஒருவர் வீட்டிற்குள் இருந்து இழுத்து வரப்பட்டு வெளியே விடப்பட்டதன் பின்னர் மற்றவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவரும் சுவிஸில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த நபர் ஒருவரும் கனகராயன்குளம் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வீட்டில் இருந்த சிசிடிவி கமரா இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/192173

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.