Jump to content

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
07 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் எனவும், ஆகவே அநுரகுமார திஸாநாயக்க கூறுவதைப்போன்று சிங்கள மக்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழ் மக்களால் வாக்களிக்கமுடியாது எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:  

'நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்? இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தீர்மானம் அந்த மாற்றத்துக்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்? யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், கற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். மாற்றத்துக்கு எதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அத்தகைய தீர்மானம் தவறானது என்பதை நீங்கள் உங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நாங்கள் வெற்றிபெறுவோம். தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாம் வெற்றிபெறுவோம். ஆனால் அந்த வெற்றியின், மாற்றத்தின் பங்குதாரர்களாக நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். மாறாக அந்த மாற்றத்துக்கு எதிரானவர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.'

தென்னிலங்கை சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு விரோதமாக தமிழ் மக்கள் செயற்படக்கூடாது எனும் தொனியில் அமைந்த அநுரகுமார திஸாநாயக்கவின் இக்கருத்து தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்திருப்பதாகவும், எனவே சிங்களவர்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழர்களால் வாக்களிக்கமுடியாது எனவும், மாறாக எது சரியோ அதற்கே வாக்களிக்கமுடியும் எனவும் தெரிவித்தார். அதேபோன்று தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை யாரேனுமொரு வேட்பாளர் வழங்கியிருந்தால் தாம் அதுபற்றிப் பரிசீலித்திருப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், வடக்கில் மக்கள் முன்பு உரையாற்றுகின்ற அநுரகுமார திஸாநாயக்க, 'தெற்கில் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு எதிராக நின்றதாக நீங்கள் அடையாளப்படுத்தப்படுவதை விரும்புகின்றீர்களா?' எனக் கேட்கின்றார். அதாவது அவர்களுக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எதிர்க்கக்கூடாது என்ற எச்சரிக்கையே அதுவாகும். அதுமாத்திரமன்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தீர்மானத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகின்றார்.  இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானவையாகும். ஆகையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இன்னமும் மாற்றமடையவில்லை என்று நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். எனவே இதுகுறித்து நாட்டுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டார்.

அதேபோன்று 'அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்றுப்படி தமிழர்களுக்கென எந்தவொரு அரசியல் இலக்குகளும் இல்லை. அவர்கள் தமது அரசியல் கோரிக்கைகளை மறந்துவிட்டு, நீதிக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டும்' என்று விசனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான சஞ்சுலா பீற்றர், 'ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளைப் போலன்றி, தேசிய மக்கள் சக்தி மாறுபட்டது என்று கூறுவதை இனியேனும் நிறுத்துங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/193096

Link to comment
Share on other sites

சிங்கள அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் மூவரும் ஏதோ வகையில் இனவாதிகளே. இவர்களில்  எவராவது தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு தருவார்கள் என மனமார சொல்லவில்லை. சிலர்  நேரடியாக இனவாதத்தை கக்கி வருகிறார்கள். சிலர் நாசுக்காக சொல்லி வருகிறார்கள். குறிப்பாக ரனிலை பற்றி தமிழ் மக்களுக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை. இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தாலும் விட்டாலும் தீர்வு பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அல்லது  வழமை போல் பேசியே காலத்தை கடத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்?

சிங்கல மக்கள் வெனிசுலா மாதிரி மாற்றம் வேண்டும் என்று இவரிடம் சொன்னவர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாம் வெற்றிபெறுவோம்.

இதை முன்பு  எங்கோ கேட்டமாதிரி இருக்கே! சரி, வெற்றி பெற பாராட்டுக்கள். பிறகு ஏன் தமிழர் வாக்கு அளிக்க வேண்டுமென்று அச்சுறுத்தல் என்பதுதான் விளங்கவில்லை. அந்த வெற்றியல் பங்குதாரர்களாக இருப்பதில் நமக்கு என்ன நன்மை? கடந்த காலத்திலும் அதை செய்த நம்மை அளித்தீர்களே மறந்து விடுவோமா என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுரகுமார யாழ்ப்பாணத்தில் இனவாத கருத்து எதனையும் வெளியிடவில்லை, ஊழல் அற்ற அரசாங்கம் என்ற விடயத்தில் அவருக்கு முழுமையான ஆதரவு – சுமந்திரன்

Published By: RAJEEBAN   08 SEP, 2024 | 07:56 AM

image
 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள்  அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும், ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்திருந்தார்.

அவர் இந்த சொற்களை பயன்படுத்தி இதனை தெரிவித்தவேளை பலர் உடனடியாக இது கோட்டாபய ராஜபக்சவின்  கூற்றை நினைவுபடுதுகின்றது என தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச நான்  அனைவரும்  எனது வெற்றியின் பங்குதாரர்களாகயிருக்கவேண்டும் என விரும்பினேன், ஆனால் வடபகுதி மக்கள் இந்த வெற்றியில் என்னுடன் இணைந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

வடபகுதி மக்களிற்கு அவ்வேளை உணர்வொன்று காணப்பட்டது, அது சரியானது என நிரூபிக்கப்பட்டது ஏனென்றால் கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்த தென்பகுதி மக்களே அவரை துரத்தினார்கள்.

நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம், விரும்புகின்றோம், 70 வருடங்களிற்கு மேலான ஆட்சிமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கோருகின்ற மாற்றம் இல்லை.

நாங்கள் அந்த மாற்றத்தினையும் கோருகின்றோம்.

ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் தோழர் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம்.

நாங்கள் அவருக்கு இந்த விடயத்தில் முழுமையாக ஆதரவை வழங்குகின்றோம்,  ஊழலை ஒழிப்பதில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். இது குறித்து எந்த கேள்வியும் இல்லை.

வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வெவ்வேறு மொழிகளை வசிக்கின்ற மக்கள், அவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தவர்களாகயிருக்கலாம் ஆனால், அவர்களிற்கும் அரசாங்க அதிகாரங்களிற்கான சமமான அணுகல் காணப்படும் மாற்றத்தை விரும்புகின்றோம்.

இதுவே உண்மையான மாற்றமாகயிருக்கும்.

தோழர் அனுரகுமார இனவெறி உணர்வுகளுடன் இந்த கருத்தினை வெளியிட்டார் என நான் கருதவில்லை,

அவரை எனக்கு நன்கு தெரியும், அவர் இனவாத உணர்வுகள் அற்ற மனிதர், அவர் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளார், இந்த விடயத்தில் எங்களிற்கு வேறு உணர்வுகள் வித்தியாசமான உணர்வுகள் இல்லை,

நாங்கள் வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கலாம் ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் இணைந்திருக்கலாம்.

https://www.virakesari.lk/article/193102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதில்மேல் இருக்கிற இந்தப்பூனை எந்தப்பக்கம் தாவும் என்று தெரியவில்லையே? அனுரா கூறிய கருத்துக்கு இவர் விளக்கம் கொடுக்க எப்படி முடிந்தது? மொத்தத்தில் எல்லா கட்சிகளும் இனவாத பிரச்சனையில் ஒரே கொள்கை, அதில் இவர் பங்குதாரர் அவ்வளவே. ரணில் உறுதியளித்தார் என்கிறார், ரணிலோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்றவுடன் நாமல் இவர் வீட்டுக் கதவை தட்டினார். அப்புறம் சஜித் என்கிறார், இப்போ அனுராவுக்கு வக்காலத்து? மக்கள் எந்தப்பக்கம் என்று தெரியாமலேயே கொப்புக்கு கொப்பு தாவித்திரியிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு சுமந்திரன் தெளிவான பதிலை வழங்கிவிட்டார் – அனுரகுமார

08 SEP, 2024 | 07:35 PM
image
 

யாழ்ப்பாணத்தில் தான் ஆற்றிய உரை குறித்த விமர்சனங்களிற்கு பதிலளித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் ஏற்கனவே தகுந்த பதிலை தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் சரியான பதிலை ஏற்கனவே வழங்கியுள்ளதால் நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதிலளிக்கவேண்டியதில்லை என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை கிளறியமைக்காக ரணில் விக்கிரமசிங்கவே மன்னிப்பு கோரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193179

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

அனுரகுமார யாழ்ப்பாணத்தில் இனவாத கருத்து எதனையும் வெளியிடவில்லை

பெரும்பான்மை சிங்கள மக்கள் இவரை விரும்பினால் யாழ்பாணத்து  மக்களும் அப்படி தான்  விரும்ப   வேண்டும் என்பது அவர்களது கட்சி கொள்கை ஏதோச்சதிகார கருத்து .தமிழ் மக்கள் இம்முறை வாக்கு   இவருக்கும் இல்லை தமிழ் பொது வேட்பாளருக்கும் இல்லை என்பதை காட்டுவார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில், ஹர்த்தால் என்று அறிவித்தும் கடையை திறந்தவர்களுக்கு இயக்கத்தால் பச்ச மட்ட அடி விழுந்ததை யாம் கண்ணால் கண்டோம். அநுரவின் வெற்றி என்பது, தற்போது அநுர நினைத்தால் கூட நிறுத்த முடியாது.
    • ஒற்றையாட்சிக்கு வாக்களிப்பதென்றால்; ஏதோ ஒரு சிங்களகட்சிக்கு தானே வாக்களிப்பது? இங்கு, இன்னும் ஒரு இனமுண்டு, அவர்களுக்கும் அரசியல் அதிகாரம், கனவு, உரிமை, சுதந்திரம் உண்டு, இதுவரை அது ஏற்றுகொள்ளப்ப்டாதத்தினாலேயே இன்று அதற்கான தேவையேற்படுள்ளது எனக்காட்டுவதே பொதுவேட்பாளரின் தோற்றம். இங்க ஒற்றையாட்சி எங்கே வந்தது? எங்களையும் சமஉரிமையாய் நடந்து இல்லையில் உனக்கு எதற்கு எங்களின் வாக்கு என்பதே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆளாளுக்கு ஏதோ விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், மக்களின் தேவையில், இழப்பில் உடனிருக்க, ஆறுதலளிக்க, கேட்க யாருமில்லை. தேர்தல் வந்தால்; கனைக்க வந்துவிடுவார்கள்.       
    • ஏறேறு சங்கிலி “என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீ வேலையா இருக்கிறாய் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன்.  அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான்.  திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன்.  எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான்.  ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன்.   ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட.  முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது . “அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை. அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான்.  ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன்.  மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான்.  காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான்.  “என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் .   இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் . வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை,  காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும்.   Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
    • ஒரு கையில் வாங்கி, மறுபக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் போட்டிருப்பார், இதுதானே இருவரும் சேர்ந்து எழுதிய உடன்படிக்கைகளுக்கும் நடந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றறிய தெரியாது, அதை தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை, தெரிந்து என்னதான் செய்யப்போகிறார்கள்? ஏதோ சந்தர்ப்ப சூழ் நிலையால் வந்தவரை இப்படி பிடி என்று கையில கொடுத்தால் என்ன செய்யிறது அவர்? ஒருவேளை முதல் ஓலையை வழங்கி ஆசி பெற்று அடுத்து அவர் கட்சியில் சேரப்போகிறாரோ யாராவா? அதை, அவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கல்லவா தெரியப்படுத்த வேண்டும்? தமிழ் தெரியாத ஒருவருக்கு கொடுப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை, வெறும் பித்தலாட்டம், எல்லோரையும் ஏமாற்றும் செயல்!  இதுவரை இல்லாத புதுக்கலாச்சாரம், தேர்தல் பிரச்சார மேடையில் கோமாளிக்கூத்து.  உதுதான் முதலும் கடைசியுமான இதழோ தெரியவில்லை? அவ்வளவு கைராசி, முதற் பிரதி குப்பைக்கூடையில். சுமந்திரனை பாத்து பல்லிளிக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.