Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 SEP, 2024 | 03:34 PM
image

நாகப்பட்டினம்: தங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து செருதூர் மீனவர்கள் இன்று (செப்.12) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள சுமார் 2500 பேர் வேலையிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகின்றன.

சில நேரங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவங்ளும் அதனால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன இதனைத் தடுத்து நிறுத்தக்கோரி மத்திய - மாநில அரசுகளிடம் தமிழக மீனவர்கள் முறையிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் செருதூர் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிகொடுத்தனர்.

அந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளாக கடந்த 10-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்களின் ஃபைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். நல்லவேளையாக அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய அந்த நான்கு மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்இ தமிழக மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்இ தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை கண்டிக்கும் விதமாகவும் செருதூர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி கடலுக்கு ஏற்கனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில்இ இன்று புதிதாக யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் செருதூர் பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என செருதூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/193504

இதனை, இந்த வேலை நிறுத்தத்தை, இவர்கள் காலவரையின்றி தொடர வேண்டும் என்று உள்ளன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இதனை, இந்த வேலை நிறுத்தத்தை, இவர்கள் காலவரையின்றி தொடர வேண்டும் என்று உள்ளன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

சிங்கள கடற்படையினரால் தமிழக மக்களுக்கு இழப்புகள் வரக்கூடாது என்ற உங்கள் அன்பு புரிந்து கொள்ள கூடியதே.?🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Buoy sea border hi-res stock photography and images - Alamy

Buoy sea border hi-res stock photography and images - Alamy

Lights, buoys – aids to navigation RYA courses.

இதுபோல மிதவைகளை சர்வதேச கடல் எல்லையில் மிதக்க விடலாமே?!

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தடை செய்யப்பட்ட ரோலர் bottom trawling.

What is Bottom Trawling? | Facebook

இந்த முறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்களை பிடித்து அவர்கள் பகுதி மீன் வளத்தை இல்லாமல் பண்ணிவிட்டு இலங்கையின் வடகிழக்கு கடலின்  மீன் வளத்தை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறார்கள் .

படத்தில் உள்ளவாறு கடலின் அடியில் உள்ள சிறு மீன் குஞ்சுகளை கூட விட்டுவைக்காமல் துடைத்து எடுத்து விடுவார்கள் முதலில் இந்த வகை மீன்பிடி முறை மூலம் கடல் வளத்தை அழிகிறார்கள் என்ற விபரம் கூட தெரியாதவர்கள் தான் மீன்பிடிக்க வரும் கூலிகள் ஆனால்  மீன் பிடி வள்ள உரிமையாளர்கள் பெரும் பணக்கார அரசியல் வாதிகள் அவர்களுக்கு பணம் ஒன்றே குறி .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

Buoy sea border hi-res stock photography and images - Alamy

Buoy sea border hi-res stock photography and images - Alamy

Lights, buoys – aids to navigation RYA courses.

இதுபோல மிதவைகளை சர்வதேச கடல் எல்லையில் மிதக்க விடலாமே?!

இதெல்லாத்தையும் அவனுகள் கடற்கொள்ளைக்காரனுகள் அறுத்தெறிஞ்சுபோடுவானுகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாலி said:

இதெல்லாத்தையும் அவனுகள் கடற்கொள்ளைக்காரனுகள் அறுத்தெறிஞ்சுபோடுவானுகள்!

அண்ணை படகு உரிமையாளர்கள் தான் முழுவதும் தூண்டி விடுவது என நினைக்கிறேன்.
எங்கட பக்கமும் வழிச்சுத் துடைச்சால் பிறகு என்ன செய்வினம் என யோசிக்கிறேன்!
யார் இவர்களுக்கு மாற்று மீன்பிடி முறைகள், ஆழ்கடல் மீன்பிடித்தல் போன்றவை குறித்து அறிவூட்டுவது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

அண்ணை படகு உரிமையாளர்கள் தான் முழுவதும் தூண்டி விடுவது என நினைக்கிறேன்.
எங்கட பக்கமும் வழிச்சுத் துடைச்சால் பிறகு என்ன செய்வினம் என யோசிக்கிறேன்!
யார் இவர்களுக்கு மாற்று மீன்பிடி முறைகள், ஆழ்கடல் மீன்பிடித்தல் போன்றவை குறித்து அறிவூட்டுவது.

 

உலகளவில் ஆறு  மீன் பிடி முறைகள் தடை செய்யபட்டுள்ளது .

6 Illegal Fishing Methods and Destructive Practices
  • Cyanide fishing. A deadly chemical used by offenders to stun the fish and make them easier to catch.
  • Use of explosives. ...
  • Keeping undersized or oversized fish. ...
  • Overfishing. ...
  • Bycatch. ...
  • Bottom trawling.

Edited by பெருமாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.