மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
By
பிழம்பு
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
🤣.......... கதையை மாமாவிற்கு அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்............😜.
-
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இந்நாளிலும், குறிஞ்சி வாழ்ப் பழங்குடி மக்களுடன் தங்கள் தொன்மையை இழக்காமல் பண்பாட்டைச் சமரசம் செய்து கொள்ளாமல், கால ஓட்டத்தை எதிர்த்து நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாயன ஒரு மீனவ சமூகத்தில், ரவி என்ற எளிய மீனவன், இலங்கையின் வடக்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணத்தின் ஒரு பாரம்பரிய மீனவ கிராமத்தில் வாழ்ந்து வந்தான். ரவியின் வாழ்க்கை எப்போதும் அலைகளின் தாளத்திலும் வலைகளின் இழுப்பிலும் சுழன்று கொண்டிருந்தது. என்றாலும் அவனது ஏக்கம் எல்லாம் கொந்தளிக்கும் கடல் அலைகளோ, தூக்கி எறியும் புயல் காற்றுகளோ அல்ல, அதை அவன் எப்படி சமாளிப்பது என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டு, அவனின் பரம்பரையின் அனுபவம் அவனுக்கு கற்றுக் கொடுத்து விட்டது. ஆனால் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் எல்லைக்குள் புகுந்து, கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுத்தும் இழுவைப்படகு, மீன்பிடியில் அத்துமீறி ஈடுபடுவதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தும் அந்நிய நாட்டு மீனவர்களின் கொடுமை தான் அவனின் முதன்மை ஏக்கம். தன் குடும்பம், தன் சமுதாயம் நிம்மதியாக வாழவேண்டும் என்பது தான் அவனின் ஒரே கனவு. அதேநேரம் பொதுவாக எல்லா இளம் சமூகத்தினர் போல, காதலிலும் அவன் விழாமல் இருக்கவில்லை. அவனின் காதலியின் பெயர் மீரா, அவள் கூந்தல் ஆற்றின் நீரோட்டத்தால், வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல் இருக்கிறது, நெற்றியோ பிறைநிலா போல் இருக்கிறது, புருவம் வில் போல் வளைந்தும், அழகிய இளமையான குளிர்ந்த கண்ணுடன் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய். அந்த கொஞ்சும் பேச்சுத்தான் அவனின் இதயத்தை நிரப்பியது என்றே கூறலாம்? மீராவுடனான ரவியின் காதல், கடற்கரையின் தாள அலைகளுக்கு மத்தியில், எளிமையாக பகிர்ந்த உணர்வுகள் மற்றும் அவர்களால் திருடப்பட்ட மகிழ்ச்சியின் இழைகளால் பின்னப்பட்ட ஒரு நாடா! அவள் தன் மீனவ தந்தையின் மீன் பிடிப்புகளை, கூடையில் சுமந்து விற்கும் பொழுதுதான் அவன் அவளை முதல் முதல் சந்தித்தான். "நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக் கடலும் கானலுந் தோன்றும் மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே" நிலவையும் அதனோடு சேர்ந்த இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலையும், அதன் கரையிலுள்ள சோலையையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுமுடைய அவனின் அதே கிராமத்தில் தான் அவளை சந்தித்தான். சூரியன், தினம் முத்தமிட்ட இதமான தனது தோலுடனும், கடல் மாதாவின் பாடலை எதிரொலிக்கும் சிரிப்புடனும் மீரா ரவியின் மனதில், உணர்வில் ஒரு விறுவிறுப்பைக் என்றும் கொடுத்துக் கொண்டுவந்தார். மணற்பாங்கான கரையில் அவர்களின் காதல் ஒரு மென்மையான நடனம் போல் இருந்தது, அங்கு அலைகளின் ஒலி அவர்களின் காதல் இசையாக செயல்பட்டது. ரவியும் மீராவும் அடிக்கடி தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, கரையோரம் கைகோர்த்து நடந்து, அன்பும் மிகுதியும் நிறைந்த எதிர்கால கனவுகளைப் பகிர்ந்துகொண்டனர். இருவரும் தங்கள் கால்களை அலைகளில் நனைத்தபடி கைகள் உடல்களை அணைத்தபடி, “இருதலைப் புள்ளின் ஒருயிரம்மே” ஆக அங்கு கொஞ்ச நேரம் நடந்து இயற்கையின் அழகை ரசித்தனர்; “ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும் சீதையின் நடையை நூக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் மாதவள் தானும் அங்கு வந்து நீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் செய்தாள் ” கம்பனின் காதல் காட்சிப் படைப்பு இவர்களில் அப்படியே மாறாமல் இருந்தது. கோதாவரி ஆற்றுக்குப் பக்கத்தில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரைக் கண்டு, அன்னத்தின் நடையை சீதையின் ஒய்யார நடையுடன் ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் ராமனின் நடையுடன் ஒப்பிட்டு இருவரும் மகிழ்ந்தது ரவியிலும் மீராவிலும் வெளிப்படையாகவே தெரிந்தது. அங்கு அச்சம், மடம், நாணம் ,பயிர்ப்பு என்று ஒன்றுமே இருக்கவில்லை, அவை கவிதைக்கு அழகேற்ற பாவிக்கும் வார்த்தைகளே என்பதை அவர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள், ஆனால், "காதல் என்பது இயற்கை தரும் போதை", அதிலும் " முதல் காதல் என்பது ஒருத்தர் உணர்த்தும் உணர்ச்சிகளை காதலிப்பது" என்பதின் உண்மையை ரவி அன்று உணரவில்லை. அவன் " முதிர்ந்த காதல் ஒருத்தரைக் காதலிப்பது", அப்படித்தான் மீராவும் என்று தான் எண்ணினான். வங்காள விரிகுடாவின் பரந்த நிலப்பரப்பில், தன் ஊரின் கடற்கரையில், ஒரு பாறைகளின் மீது அமர்ந்து நாளை தான் கடலுக்கு புறப்படும் திட்டத்தைக் கூறி, ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வானத்தை வரைந்து, அடிவானத்திற்கு கீழே சூரியன் மறையும் தருவாயில், மீராவின் முத்தத்துடன் வீடு திரும்பினான். ஒரு மகிழ்வு தரக்கூடிய சுறுசுறுப்பான அடுத்தநாள் காலையில், சூரியன் அடிவானத்தை தங்க நிறத்தில் வரைந்த போது, ரவி தனது காதலி மீராவிடம் விடை பெற்றுக் கொண்டு, இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் தன் திருமணத்துக்கு நிறைய மீன்கள் தினமும் பிடிபட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் "சூர்யா" என்ற தனது படகில் புறப்பட்டான். ஆனால் இந்த நாள் அவனது வாழ்க்கையில் ஒரு வேதனையான அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை. அவன் மீராவின் அழகில், அவளின் காதலில், அவளின் கொஞ்சும் பேச்சில் எங்கு எங்கேயோ பறந்து கொண்டு இருந்தான். சில வேளைகளில் ரவி தனது படகான "சூர்யா" வில் மீன்பிடிக்க, திறந்த கடலின் நீரில் பயணிக்கும்போது, மீரா சில சமயங்களில் அவனுடன் செல்வாள். படகின் மென்மையான அசைவும் உப்பு நிறைந்த காற்றும் அவர்களிடையே பகிரப்பட்ட சொல்லப்படாத வாக்குறுதிகளுக்கு சாட்சிகளாக இருக்கும். கடல், அதன் பரந்த மற்றும் கணிக்க முடியாத தன்மையுடன், அவர்களின் அன்பின் ஆழத்தை பிரதிபலிக்கும். ஆனால் இம்முறை அவன் தனியாவே தன் கூட்டாளிகளுடன் புறப்பட்டான். தாராளமாக மீன்பிடிபடும் என்ற நம்பிக்கையுடன் அவன் தனது கடற் பயணத்தை மேற்கொண்ட போதும் , அவர்கள் எதிர்பாராத சவாலை எதிர் கொண்டனர். இந்திய மீன்பிடி படகுகள், நவீன தொழில் நுட்பத்துடன், கூடிய எண்ணிக்கையில், விலைமதிப்பற்ற இலங்கைக்கே உரித்தான கடற் பரப்பில் தமது இழுவை வலைகளை வீசியது மட்டும் அல்ல, இலங்கையின் மீன் பிடி வளத்தை சேதப்படுத்தியதுடன், இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப் படுத்தினர். இவர்களின் அத்துமீறிய செயல்களால் தனது மட்டும் அல்ல, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் நழுவுவதைக் கண்டு ரவி விரக்தியும் கோபமும் அடைந்தான். கிழிந்த வலைகள் வெறும் நூல்களும் கயிறுகளும் அல்ல; அவை ரவியின் அபிலாஷைகளின் உயிர்நாடியாக இருந்தன. ஒவ்வொரு முறையும் கிழிந்த வலைகளை சரிசெய்து மீண்டும் மீன் பிடியில் ஈடுபட்டாலும், அவன் தனது நம்பிக்கை மேலும் அவிழ்ப்பதைக் கண்டான். அவனை கடலுடன் இணைத்த ஒரு காலத்தில் துடிப்பான இந்த நூல் வலைகள் இப்போது அவனது சிதைந்த கனவுகளுக்கு ஒரு உருவகமாக மாறியது. ரவி … நான்கைந்து பேருடன் சாதாரண படகில் இரவில் தான் கடலுக்குள் செல்வன். அவர்கள் எல்லோரும் தாய் அல்லது மனைவி கொடுத்து அனுப்பும் கஞ்சியோ அல்லது பழைய சோறோ கையில் வைத்திருப்பர். இரவு முழுக்க கண் விழித்து, வலை வீசுவார்கள். சில சமயம் நல்ல, தேவைக்கு அதிகமாக மீன்கள் கிடைக்கும். உடனே அடுத்த நாளே திரும்புவர். பல சமயங்களில் மீன்கள் கிடைக்காது. அதனால் படகில் சென்ற இவர்கள், இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று செல்வர் மீன்கள் கிடைக்கும் வரை. கையில் இருக்கும் குடிநீரும் தீர்ந்திருக்கும். அரை வயிறுதான் சாப்பிடுவர். இவர்கள் வர இதனால் தாமதிக்கும் பொழுது பெண்கள் எல்லாம் கடல் அன்னையையே பார்த்துக் கொண்டு இருப்பார்கள் கண்களில் கண்ணீரோடு. இது தான் அவர்களின் வாழ்க்கை. இந்த எளிய வாழ்க்கைக்கு தான் இந்த இந்திய மீனவர்கள் கொடுமை செய்கிறார்கள். அது தான் ரவி கோபத்துடன் இருந்தான். நாட்கள் வாரங்களாக மாறியது, ரவி தனது வாழ்க்கையைச் சந்திக்க சிரமப்பட்டான். அவனது வருமானம் குறைந்துவிட்டது, மேலும் அவனது குடும்பத்திற்கு வழங்க வேண்டிய சுமை தாங்க முடியாத சுமையாக மாறியது. அவனது வாழ்க்கையின் காதலாக இருந்த மீரா, தொடர்ச்சியான நிதி நெருக்கடியால் அவன் மேல் ஒரு சோர்வு கொண்டாள். அவனின் கனவுகளின் சிதைந்த எச்சங்களில் தனது எதிர்காலத்தைப் பார்க்க முடியாமல், அவள் தயக்கத்துடன் ரவியைப் பிரிந்தாள், அவள் ரவியை காதலித்தாலும், தனது எதிர்காலத்தை நல்ல மகிழ்வான வாழ்வாக அமைக்க வேண்டும் என்பதில், கூடுதலான அக்கறை கொண்டவளாகவும் இருந்தாள். தென்னிந்திய மீனவர்களுடனான அடிக்கடி நிகழும் சம்பவம் ரவியும் மீராவும் ஒரு காலத்தில் பகிர்ந்து கொண்ட அமைதியைத் தகர்த்தது. சேதமடைந்த வலைகள் மற்றும் குறைந்து வரும் மீன் பிடிப்புகள், ஒரு காலத்தில் அவர்களின் உறவை வரையறுத்த மகிழ்ச்சியை, சிதைக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் அவர்களின் காதலுக்கு சாட்சியாக இருந்த கடல், மீரா விலகிச் சென்ற இந்த நாட்களில், அது இப்ப புலம்புவது போல் ரவிக்குத் தோன்றியது. கரையில் தனியாக நின்று, மீராவின் நிழற்படத்தை பார்த்துக் கொண்டிருந்த போது மோதிய அலைகள் அவன் இதயத்தின் வலியை எதிரொலித்தன. ஒரு காலத்தில் துடிப்பான கடல் பரப்பும் அதனுடன் சேர்ந்த நிலப்பரப்பும், இப்போது பாழடைந்ததாக அவன் உணர்ந்தான். அவனுக்கு நங்கூரமாக இருந்த மீரா இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் அவன் தவித்தான். அந்தத் தனிமையான இன்றைய தருணத்தில், காற்றில் உப்பு வாசனையோடும், தலைக்கு மேல் கடற்பறவைகளின் அழுகையோடும், ஒரு காதலியை மட்டுமல்ல, அவனுடன் வாழ்க்கையின் புயல்களை எதிர்கொண்ட ஒரு தோழியையும் இழந்து, ஆழ்ந்த தனிமையை ரவி இன்று அனுபவிக்க தொடக்கி விட்டான். ஒரு காலத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்த கடல், இப்போது இழந்த காதல் மற்றும் கனவுகள் சிதைந்த கசப்பான நினைவுகளை அவனுக்கு உணர்த்திக் கொண்டு இருந்தது. ஆனால் மீரா இப்ப யாரோ ஒருவனின் மனைவியாக , அதே கடற்கரையில், தன் கணவனின் மடியில் கொஞ்சி செல்லம் பொழிந்து கொண்டு இருக்கிறாள். அவள் ரவியை மறந்தேவிட்டாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] -
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி ஆண் : கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய் கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய் ஆண் : அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன் ஆண் : கண்டவுடன் என்னையே தின்றதடி விழியே என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே ஆண் : அடி சுட்டும் விழி சுடரே நக்ஷத்திர பயிரே ரெக்கை கட்டி வா நிலவே ஆண் : ஓரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே நீ ஒற்றை துளியா கோடிக் கடலா உண்மை சொல்லடி பெண்ணே ஆண் : கன்னகுழி நடுவே சிக்கி கொண்டேன் அழகே நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே ஆண் : அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே வெட்கம் விட்டு வா வெளியே ஆண் : நில் என்று கண்டிதாய் உள் சென்று தண்டிதாய் சொல் என்று கெஞ்சதான் சொல்லாமல் வஞ்சித்தாய்.......! --- பொய் சொல்ல கூடாது காதலி ---
-
எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்? இலங்கை யில் bottom trawling முறையில் மீன் பிடிப்பது மிக குறைவு. அரிது என்று கூட சொல்ல முடியும். அங்கொன்று இங்கொன்றாக வேண்டுமானால் களவாக நடக்கலாம்.
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts