Jump to content

மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!


பிழம்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலை அமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல்பாணில் செயல்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றச்சாட்டினார். 

இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன்  பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு  திரைப்படம் ஒன்றில் வாக்குச் சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என பணம் வாங்கியவர்கள் எல்லோருக்கும் புள்ளடி போட்ட வாக்குச் சீட்டை காண்பித்த மையை படத்தில் பார்த்திருக்கிறோம் 

அவ்வாறு சம்பவமாக மாவை மற்றும் மகனின் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.

சஜித்துக்கு ஆதரவு தமிழரசு கட்சி தீர்மானம் என கூறும் தலைவர் மாவை ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டுக்கு வந்தபோது நீங்கள் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்கிறார்.

அதன் பின் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தில் சஜித்துக்கு தமிழரசு ஆதரவு வழங்கியதில் மாற்றம் இல்லை எனக் கூறிவிட்டு வரும் வழியில் கிளிநொச்சியில் பொது வேட்பாளர் ஆதரவு மேடையில் ஏறினார்.

மகன் கலை அமுதன் யாழ் வந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் மறுநாள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்கிறார்.

இவற்றையெல்லாம் நோக்கும்போது பணம் வாங்கியவர்களிடம் எமது இனத்தை காட்டி கொடுத்து சந்தர்ப்பவாத அரசியலை தகப்பனும் மகனும் செய்கிறார்கள். 

பணம் வழங்கியவர்கள் யாருக்கு வாக்கு போட்டீர்கள் என கேட்டால் வடிவேல் பானியில் இருவரும் வாக்கு சீட்டை காட்டி அவருக்கு ஒரு குத்து இவருக்கு ஒரு குத்து என சொல்லு நிலை ஏற்படும்.

தந்தை செல்வாவால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட தமிழரசு கட்சி இன்று பணத்துக்காக பல கோணங்களில் பிரிந்து நிற்கிறது. 

தந்தை செல்வாவின் மனைவி இந்த அரசியல் செயற்பாடுகள் உங்களுக்கு வேண்டாம் என மண்ணை அள்ளி அவர் மீது தூவியபோதும் அதனை தட்டிவிட்டு இனத்துக்காக என்னால் முடிந்தவரை போராடுவேன் என கூறிய பெருந்தலைவர் உருவாக்கிய கட்சி.

ஆகவே தமிழரசு கட்சியை சீரழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்களால் விரைவில் துரத்தி அடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.  (ப)

மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு! (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரச்சார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன்  பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது.

மாவையின் மகன், முளைத்து மூன்று இலை விடவில்லை,

இன்னும் அரசியலில் முழுமையாக கால் பாதிக்கவில்லை....

அதற்குள் 30 லட்சம் ரூபாய் பெறுகின்ற அளவிற்குர்த்துள்ளார் என்றால்...

அரசியலில், பலகாலமாக இருக்கும் பாரளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை கோடிகளை அமுக்கிக் கொண்டு இருப்பார்கள்.

இதை மறுத்து வெள்ளையடிக்கவும்... யாழ் களத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் வேடிக்கை.

முன்பெல்லாம்.... 1975களில் அருளம்பலம், தியாகராஜா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசட்சியில் சேர்ந்து இருந்து கொண்டு... அரச உத்தியோகம் எடுத்துக் கொடுக்க 5,000 ரூபாய் வாங்குவார்கள். அதனை இரு பக்கமும் பயன் பெறும் ஒரு சேவை என்று எடுத்துக் கொண்டு கடந்து சென்றாலும்...

இப்போதைய அரசியல்வாதிகள்..... தமது வயிறு, வளர்ப்பதற்காக தமிழ் மக்களை சாட்டி.. அரசியல் செய்யும் ஈனச் செயலை எப்படி அழைப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/uHLucLg7rB/

இந்தக் காணொளியைப் பாருங்கள். தமழரசுக்கட்சியின் நிலை கந்தலாகிக் கிடக்கிறது.

சஜித் தொடர்பில் மிக அதிர்சியான தகவலை வெளியிட்ட சீ.வி.கே

https://fb.watch/uHLVLK_Bhk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

https://fb.watch/uHLucLg7rB/

இந்தக் காணொளியைப் பாருங்கள். தமழரசுக்கட்சியின் நிலை கந்தலாகிக் கிடக்கிறது.

சஜித் தொடர்பில் மிக அதிர்சியான தகவலை வெளியிட்ட சீ.வி.கே

https://fb.watch/uHLVLK_Bhk/

புலவர், காணொளி இரண்டும் வேலை செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/uH_qUE5Veg/

யாழ்ப்பாண புலனாய்வு

இந்த முகப்புத்தகப்பக்கத்திற்கு சென்று பாருங்கள்.சுமத்திரன் என்ற பிசாசு என்கிறார்.சிவிகே

எனக்கு வேலை செய்யுது.

https://fb.watch/uH_YgH4ndP/

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

https://fb.watch/uH_qUE5Veg/

யாழ்ப்பாண புலனாய்வு

இந்த முகப்புத்தகப்பக்கத்திற்கு சென்று பாருங்கள்.சுமத்திரன் என்ற பிசாசு என்கிறார்.சிவிகே

எனக்கு வேலை செய்யுது.

https://fb.watch/uH_YgH4ndP/

இப்ப வேலை செய்யுது புலவர். 

சிவஞானம், சுமந்திரனை பிசாசு என்று பேசிப் போட்டு…
சஜித்தின்ரை பிரச்சாரக் கூட்டத்துக்கு… சுமந்திரனுடன்,
சிவஞானம் மட்டும் தானே ஒன்றாய் போனவர். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

எல்லாரும் மாறிமாறி கடிபடுகிறார்கள்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில்… இவர்களின் கடிபாடு உச்சத்தை தொடும். அதோடு இவர்கள் காணாமல் போவார்கள். அந்த இடத்தை @நிழலி சொன்ன மாதிரி சிங்கள கட்சிகள் எடுக்கும்.
2009’ல்  இருபத்தி இரண்டு (22) பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தவர்கள். இப்போ 12 பேர்தான் உள்ளார்கள். வருகின்ற தேர்தலில், தமிழரசு கட்சி 5 இடத்துக்குள் குறுகி விடக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

வருகின்ற தேர்தலில், தமிழரசு கட்சி 5 இடத்துக்குள் குறுகி விடக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. 

இப்பவே 5 இடங்கள்தான் தேசியப்பட்டியலைச்சேர்த்துததான் 6

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.