Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்கள், 10 விசைப்படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர்.

அவர்களை  புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது  நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  10 மீனவர்களும்  நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது இந்த 10   மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கமைய , 45 தமிழக மீனவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் மேலும் கடுமையான /கூடுதலான அபராதம் விதிக்க வேண்டும் என்பதுடன் வட   கடலில் இடம்பெறும் உள்ளூர் மீனவர்களின்  கடலடி இழுவைப் படகுகளுக்கும் கடுமையான அபராதத்தை விதிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதேபோல் மேலும் கடுமையான /கூடுதலான அபராதம் விதிக்க வேண்டும் என்பதுடன் வட   கடலில் இடம்பெறும் உள்ளூர் மீனவர்களின்  கடலடி இழுவைப் படகுகளுக்கும் கடுமையான அபராதத்தை விதிக்க வேண்டும். 

முழுமையான தடை விதிக்க வேண்டும், இந்த இழுவை படகுகளில் பயன்படுத்தப்படும் வலையின்  முன் பகுதி பெரிய கனமான பொருளால் உருவாக்கப்படுவதாக கூறுகிறார்கள், அது கடல் நீரில் அடியில் தரையில் காணப்படும், படகு பயணிக்கும் பகுதி எங்கும் ஒரு உழுவை இயந்திரம் போல் கடலடி வளங்களை அழிக்கின்றது, இந்த இழுவைப்படகுகளை  தொடர்ந்து பயன்படுத்தினால் சில காலங்களில் கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். 

ஒரு காலத்தில் (தற்போதும் என நினைக்கிறேன்) மிகவும் மீன் வளம் பொருந்திய சோமாலிய கடற்பரப்பில் வெளிநாட்டு மீன் பிடி இழுவைப்படகுகள் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினையினை பயன்படுத்தி அங்குள்ள வழங்களை கொள்ளை அடித்து உள்நாட்டு  மீன்வர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டமையால் சிறு குழுக்களாக  தாமாகவே தமது கடல் வழங்களை காப்பாற்ற (ஆயுதம் மூலம்) முயன்றவர்கள் பின்னாளில் கடல் கொள்ளையர்களானார்கள், இத்தனைக்கும் அது ஒரு ஆழ் கடல் மீன் வளம் கொண்டநாடு ஆனால் இலங்கையின் வட கடல் அவ்வாறு ஆழம் கூடிய கடல் அல்ல.

இலங்கை கடற்பகுதியில் இவ்வகை இழுவைப்படகுகளை தடை செய்து சட்டம் இயற்றினால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

முழுமையான தடை விதிக்க வேண்டும், இந்த இழுவை படகுகளில் பயன்படுத்தப்படும் வலையின்  முன் பகுதி பெரிய கனமான பொருளால் உருவாக்கப்படுவதாக கூறுகிறார்கள், அது கடல் நீரில் அடியில் தரையில் காணப்படும், படகு பயணிக்கும் பகுதி எங்கும் ஒரு உழுவை இயந்திரம் போல் கடலடி வளங்களை அழிக்கின்றது, இந்த இழுவைப்படகுகளை  தொடர்ந்து பயன்படுத்தினால் சில காலங்களில் கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். 

ஒரு காலத்தில் (தற்போதும் என நினைக்கிறேன்) மிகவும் மீன் வளம் பொருந்திய சோமாலிய கடற்பரப்பில் வெளிநாட்டு மீன் பிடி இழுவைப்படகுகள் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினையினை பயன்படுத்தி அங்குள்ள வழங்களை கொள்ளை அடித்து உள்நாட்டு  மீன்வர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டமையால் சிறு குழுக்களாக  தாமாகவே தமது கடல் வழங்களை காப்பாற்ற (ஆயுதம் மூலம்) முயன்றவர்கள் பின்னாளில் கடல் கொள்ளையர்களானார்கள், இத்தனைக்கும் அது ஒரு ஆழ் கடல் மீன் வளம் கொண்டநாடு ஆனால் இலங்கையின் வட கடல் அவ்வாறு ஆழம் கூடிய கடல் அல்ல.

இலங்கை கடற்பகுதியில் இவ்வகை இழுவைப்படகுகளை தடை செய்து சட்டம் இயற்றினால் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்.

பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில  மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. 

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும்  உயிரினம்.  இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு  போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. 

 

இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. 

 

கற்பனை செய்து பாருங்கள் ;  500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். 

இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? 

இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில  மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. 

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும்  உயிரினம்.  இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு  போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. 

 

இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. 

 

கற்பனை செய்து பாருங்கள் ;  500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். 

இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? 

இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡

தரவுகள் நிறைந்த சிறப்பான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில  மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. 

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும்  உயிரினம்.  இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு  போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. 

 

இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. 

 

கற்பனை செய்து பாருங்கள் ;  500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். 

இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? 

இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡

நன்றி நேரம் எடுத்து மற்றவர்களுக்கு விரிவாக சொல்லியதுக்கு அதே போல் சிங்களவர்களால் முல்லை தீவில் உலகளவில் முதலாவதாக தடை செய்யபட்ட மீன் பிடி முறையையும் சொன்னால் நல்லது .

உதவி தேவை என்றால் சொல்லவும் ling தருகிறேன் @நிழலி அன்று கேட்டவர் முழுமையாக கொடுக்க முடியவில்லை .

 

Edited by பெருமாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.