Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!

934249324.jpeg

வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக 30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியையும் ,ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்து வரும் தேர்தலில் போட்டியிடவைத்து, நாடாளுமன்ற பலத்தை அனுரவுக்கு வழங்காதிருக்க முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்ட்டு வருகிறது.

நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னர் ஊழலுடன் தொடர்புபட்ட கைதுகள் அடுத்தடுத்து இடம்பெறலாம்?

அவ்வாறான செயற்பாடு இடம்பெற்றால் ஜனாதிபதித் தேர்தலை விட கூடுதல் ஆதரவை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர தரப்பு பெற்றுவிடும்.

வரும் நாட்களில் படைத் தளபதிகளில் இருந்து  நாட்டில் பல மாற்றங்கள் நிகழவுள்ளதாக கொழும்பு உயர்மட்டத்த தகவல்கள் தெரிவிக்கின்றன
 

https://newuthayan.com/article/வெளிநாடு_செல்வதை_தடுக்கும்_நடவடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

பசிலும், கோத்தாவும்…. சுழியன்கள். 🤣
அனுர தான் அடுத்த ஜனாதிபதி என்று மோப்பம் பிடித்து…
தேர்தல் நடப்பதற்கு முதல் நாளே… அமெரிக்காவுக்கு ஓடித் தப்பி விட்டார்கள். 😂 

இளனி குடித்தவன் யாரோ இருக்க…. கோம்பை சூப்பினவனை கைது பண்ண போகிறார்கள். 😁 😃

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

பசிலும், கோத்தாவும்…. சுழியன்கள். 🤣
அனுர தான் அடுத்த ஜனாதிபதி என்று மோப்பம் பிடித்து…
தேர்தல் நடப்பதற்கு முதல் நாளே… அமெரிக்காவுக்கு ஓடித் தப்பி விட்டார்கள். 😂 

இளனி குடித்தவன் யாரோ இருக்க…. கோம்பை சூப்பினவனை கைது பண்ண போகிறார்கள். 😁 😃

எவரும் ஒடித் தப்பிக்க முடியாது   அரசாங்கம் நினைத்தால்   அமெரிக்கா அரசுக்கு கோரிக்கை விடுத்து அவர்களை அழைக்க முடியும்   இவர்கள் அகதிகள் இல்லை   பச்சை காட்.  வைத்திருக்கிறார்கள்   இப்ப குடியுரிமை இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

எவரும் ஒடித் தப்பிக்க முடியாது   அரசாங்கம் நினைத்தால்   அமெரிக்கா அரசுக்கு கோரிக்கை விடுத்து அவர்களை அழைக்க முடியும்   இவர்கள் அகதிகள் இல்லை   பச்சை காட்.  வைத்திருக்கிறார்கள்   இப்ப குடியுரிமை இருக்கும் 

அவர்களை அமெரிக்காவில் வைத்தாவது  கைது பண்ணி நாட்டுக்கு கொண்டு வந்தால்தான்… அனுர தனது விம்பத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
ஆனால் இந்த நடைமுறைகள் ஒப்பேற சில / பல வருடங்களாவது எடுக்கும். அதற்குள்…. அடுத்த பிரச்சினை கதவை தட்டும். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அவர்களை அமெரிக்காவில் வைத்தாவது  கைது பண்ணி நாட்டுக்கு கொண்டு வந்தால்தான்… அனுர தனது விம்பத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
ஆனால் இந்த நடைமுறைகள் ஒப்பேற சில / பல வருடங்களாவது எடுக்கும். அதற்குள்…. அடுத்த பிரச்சினை கதவை தட்டும். 😂

அனுர ஜனாதிபதியாகிய பின்னர் அவரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை மூன்று மாதம் சென்ற பின்னரே  சொல்ல முடியும். அதிலும் வரும் மாவீரர் தினத்தில் எல்லாவற்றையும் கணிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அனுர ஜனாதிபதியாகிய பின்னர் அவரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை மூன்று மாதம் சென்ற பின்னரே  சொல்ல முடியும். அதிலும் வரும் மாவீரர் தினத்தில் எல்லாவற்றையும் கணிக்க முடியும்.

வரும் மாவீரர் தினத்திற்குப் பின்…. பாராளுமன்ற தேர்தல் நடக்குமாக இருந்தால், மாவீரர் தின நிகழ்வுகளை கண்டும் காணாமல் அடக்கி வாசிப்பார்கள்.  பாராளுமன்ற தேர்தலின் போது… தமிழ் வாக்குகளும் அவர்களுக்கு தேவை படுகின்றது.

ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது… அவர்களின் போராளிகளும் கொல்லப் பட்டமையால்… அவர்களுக்கு அந்த வலி தெரியும் என நினைக்கின்றேன். 
ஆனால்…. இனவாதம் கண்ணை மறைத்தால், சிங்கள சுய ரூபத்தை காட்டலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

வரும் மாவீரர் தினத்திற்குப் பின்…. பாராளுமன்ற தேர்தல் நடக்குமாக இருந்தால், மாவீரர் தின நிகழ்வுகளை கண்டும் காணாமல் அடக்கி வாசிப்பார்கள்.  பாராளுமன்ற தேர்தலின் போது… தமிழ் வாக்குகளும் அவர்களுக்கு தேவை படுகின்றது.

ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது… அவர்களின் போராளிகளும் கொல்லப் பட்டமையால்… அவர்களுக்கு அந்த வலி தெரியும் என நினைக்கின்றேன். 
ஆனால்…. இனவாதம் கண்ணை மறைத்தால், சிங்கள சுய ரூபத்தை காட்டலாம்.

அனுர தமிழ் எதிர்ப்பாளரா? அல்லது விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளரா என்பது அடுத்த தினங்களில் தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த தம் உறவுகளை  அமைதியான  வழியில் நினைவுகூர யாருக்கும் ஜனநாயக நாட்டில் உரிமை உள்ளது. அதை தடுக்க, இழப்பை அறியாதவர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் உரிமையில்லை, சமாதானத்துக்கும் நாட்டின் அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தால் போதும். தாங்களாகவே தலையைகொடுக்க விரும்ப  மாட்டார்கள். மக்களின்  பலம், ஊழல் குழப்ப காரருக்கு சாதகமாயில்லை. சரத், தேரர்கள் போட்ட ஓலம், கொழுத்திய தீ பற்றவில்லை கடந்த வருடம்.   ஓடித்தப்பவும் முடியாது, பொறியில் மாட்டிய மூஞ்சூறு மாதிரி தப்பிக்க வழிதேடுவார்களே ஒழிய இதிலெல்லாம் மினக்கெடாமல்.  மிக இலகுவாக விசாரணைக்குழு வழியில் இழுக்கப்படுவார்கள். பொறுத்திருந்து  பாப்போம். ஊழல்வாதிகளாலும் இனவாதிகளாலும் போற்றி  வளர்க்கப்பட்ட பிக்குகள் கொஞ்சம் வீதிக்கிறங்கும். பௌத்தம் இல்லாமல் ஆக்கப்படப்போகிறது, அதற்கான ஒரு பாதுகாப்புமில்லை என்று இவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டையும் தாண்டியே அனுரா வென்றார். ஆகவே பௌத்தம் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது. இல்லையேல் மகிந்த பட்டாளத்துக்கு ஏற்பட்ட நிலையே பிக்குகளுக்கும் வரும். சும்மா இருந்து சாப்பிட்டு பழகிய அவர்கள் உழைத்துச்சாப்பிட தயாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, satan said:

அவர்கள் உழைத்துச்சாப்பிட தயாரா? 

அப்படி என்றால்  அவர்கள் பௌத்தத்தை பின்பற்ற தாயர் இல்லை  விட்டு விடுவார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, பௌத்தத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பது கடந்த கால மக்களின் சிந்தனை தெளிவுபடுத்தியுள்ளது. மஹிந்த பட்டாளத்துக்கு இந்த நிலை வந்து நாட்டை  விட்டு தப்பியோடும் நிலை வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அவர்களுடபட. நாடு முன்னேற வேண்டுமென்றிருந்தால்; அதுவும் நடக்கும் காலம் வரும்போது. சும்மா தெண்டத்துக்கு மக்களுக்கு சுமையாயிருந்து அவர்களில் வயிறு வளர்த்து இந்த கூட்டம் பெருகி, நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிய பிரச்சினை!

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையர்! இலங்கை அரசியலில்  என்றும் இல்லாத வரலாறு காணாத அதிசயம், ஒரு நிகழ்ச்சி, அனுரா கத்தோலிக்க கர்தினாலை முதலில் சந்தித்திருக்கிறார். மஹிந்த கூட்டம் சிறை செல்ல தாயாராக வேண்டும். இங்கே பிக்குகள் குழம்புமென அனுராவுக்கு தெரியாத சிறுகுழந்தையா அவர்?  ஆனால் தமிழருக்கு எடுத்த எடுப்பில் தட்டில் வைத்து தருவார் என்று நான் சொல்லவில்லை. எங்கே அடியை ஆரம்பித்தால் மற்றவை தானாக சரியுமென தெரிந்திருக்கிறார். நாங்கள் ஊழல் செய்யவில்லை, முடிந்தால் எந்த நாட்டிலேயும் வழக்கு தொடர்ந்து நிரூபியுங்கள், என்று நாமல் சவால் விட்டார். அதற்கு முதல், இவர்களை எப்படி விசாரணை வலையத்துக்குள் கொண்டு வருவது என்று நிதானித்தே வைக்கிறார் ஆரம்ப அடியை. அரியத்தார் இவருடன் இணைந்து செயற்படுவார் என நினைக்கிறன். நீதிமன்றம் சட்டம் மூலமே தனது நகர்வுகளை செய்வார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.