Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தப் பழம் புளிக்கும்..

Featured Replies

என் காதலை...

சொல்லவிடாது..

என்.. கரிய வண்ணம்..

தடுக்கின்றதே...

இதயமெல்லாம் நீ..

பரந்த பின்னும்..

என்.. ஆசையைச்

சொல்ல பெண்ணே...

பயமாக இருக்கிறதே..

கையை நீட்ட சொல்லி..

இந்த வண்ணம்..

எப்படி ஒத்துப்போகும்..

என நீ கேட்டுவிட்டால்..

என் மௌனத்தைத்

தாங்கிக் கொள்வேன்..

உனக்காக என்றால்..

மரணத்தையும் வாங்கிக்கொள்வேன்..

ஆனால் நீ இல்லையென்று

சொல்வதனை மட்டும் என்னால்

உள் வாங்கிக் கொள்ள

முடியவே முடியாது..

சொல்லாத காதல்..

செல்லாத காசாம்..

இருந்துவிட்டுப் போகட்டும்..

நிராகரிக்கப்பட்ட..

காசோலையாக..

என் காதல் மாற வேண்டாம்..

காதல் வங்கியில்..

அபராதம்..

பெற்று என்னிதயம்..

சுக்குநூறாய் உடைய வேண்டாம்..

இப்படியே.. உன்

எண்ணங்களோடாவது..

சந்தோசமாக

வாழ்கிறேன்..

தேவதையைக் காதலித்தால்..

சாதரணமானவன்..

கற்பனையில் மட்டும்தான்..

அவள் கைப்பிடிக்கமுடியும்..

போகட்டும்..கனவில்..

விரல் மீட்டி...

எனக்கு நானே..

கலைஞனாக....

இருந்துவிட்டுப்போகிறேன்..

என்னைப்

பித்துப்பிடித்தவன் என்று

சொல்வார்கள்..

சொல்லட்டும்..

இந்தப் பழம் புளிக்கும்..

என்று பொய்..

சொல்ல என்னால் முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதை கதை சொல்கிறது கவிஞரே. உங்கள் கவிதை அழகு விகடகவி .

இந்தப் பழம் புளிக்கும்..

என்று பொய்..

சொல்ல என்னால் முடியாது..

முயற்சியுங்கள் முயற்சியங்கள்.

வெற்றி உங்களுக்குத்தான்.

மாமா கவிதை சூப்பராக இருகிறது வாழ்த்துகள் :lol: !!என்ன காதலை சொல்ல கரிய வண்ணம் தடுக்கின்றதோ இது நல்லாவே இல்லை கறுப்பில தான் ஊத்தையே வராது இது தெரியாதோ :lol: மாமா பயப்பிடாம சொல்லுங்கோ எனி கெல்ப் என்னட்ட சொன்னா நான் எனி டைம் மாமாவிற்கு கெல்ப் பண்ண வருவேன் மாமா!! :lol:

உனக்காக என்றால்..

மரணத்தையும் வாங்கிக்கொள்வேன்..

இந்த வரி எனக்கு பிடிக்கவே இல்லை மாமா இப்படி ஒரு வரியை போட்டிருக்க கூடாது :lol: ....மரணத்தை வாங்கினா பிறகு யார் கரம் பிடிகிறது காதலியை நல்லா இல்லை சொல்லிட்டேன்!! :icon_mrgreen:

இந்தப் பழம் புளிக்கும்..

என்று பொய்..

சொல்ல என்னால் முடியாது..

பழம் புளிக்கும் என்று ஏன் பொய் எல்லாம் சொல்ல வேண்டாம் காதலை முதலில சொல்லுங்கோ மாமா...... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் பஞ் கவிதை-

நேற்று நான் வந்தேன்

நீவிரோ நித்திரை

இன்று நான் மீண்டும் வந்தேன்.

இன்னுமா உறக்கம்!

விகடகவி வணக்கம்

உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்.

உனக்காக என்றால் மரணத்தையும் வாங்கிக்கொள்வேன்

சொல்லாத காதல் செல்லாத காசு

இப்படியே உன் எண்ணங்களோடாவது

சந்தோசமாய் வாழ்கிறேன்

என்ன அருமையான வரிகள்.

ஆனால் ஒரு சின்ன சந்தேகம்

கவிதை மீது உங்களுக்கு இப்படி

காதல் வந்தது எப்படி?

உங்கள் கவி வரிகளில்

அடிக்கடி என்னையும்

அறியாமல் நான்

நெகிழ்ந்து போவது உண்டு

அந்த வரிசையில்

இக்கவிதையும்.

நன்றி விகடகவி

Edited by marumakan

இதயமெல்லாம் நீ..

பரந்த பின்னும்..

என்.. ஆசையைச்

சொல்ல பெண்ணே...

பயமாக இருக்கிறதே..

சொல்லாத காதல்..

செல்லாத காசாம்..

இருந்துவிட்டுப் போகட்டும்..

நிராகரிக்கப்பட்ட..

காசோலையாக..

என் காதல் மாற வேண்டாம்..

காதல் வங்கியில்..

அபராதம்..

பெற்று என்னிதயம்..

சுக்குநூறாய் உடைய வேண்டாம்..

இப்படியே.. உன்

எண்ணங்களோடாவது..

சந்தோசமாக

வாழ்கிறேன்..

என்னைப்

பித்துப்பிடித்தவன் என்று

சொல்வார்கள்..

சொல்லட்டும்..

இந்தப் பழம் புளிக்கும்..

என்று பொய்..

சொல்ல என்னால் முடியாது..

அண்ணா கவிதை நன்றாக உள்ளது.... ஆனால் கருத்து எனக்கு பிடிக்கவில்லை.

காதலை சொல்ல கூட பயம் என்றால் ஏன் காதலிப்பான்.... :lol:

  • தொடங்கியவர்

நன்றி..கபி

நன்றி ஜம்மு...

நன்றி மருமகன்...

எனக்குத் எங்கள் தமிழைப்பிடிக்கும்..

அதனால்.. எழுதப்பிடிக்கும்..

நான் எழுதப்னோ படித்தபோது..

அது இஸ்டத்திற்கு...

எழுதியது...

என் அதிர்ஸ்டம்..

உங்கள் கால கஸ்டம்...

அது உங்களுக்கு..

பிடித்த கவிதையாகிவிட்டது..

கவரிமானே..

காதலை சொல்வது..

அவ்வளவு இலகுவென யார் சொன்னது...

காதலித்துப்பார்..

உன்னோடு அன்பாய் பழகுபவரை..

அப்போது உருவாகும் காதலை சொல்வது..

தந்தை இறந்த விடயத்தை தாயிடம் சொல்வதைக் காட்டிலும் கடினமானது...

அவள் தரும் தினசரிப்புன்னகையைக்கூட..

நான் காதல் சொல்வதனர்.. அவள்..

தராமல் போவாளோ.. என்னோடு பேசாமல் போவாளோ என்றெண்ணும்போது..

அந்தக்காதல் சொல்லாமல் இரக்கும் ரணம் பரவாயில்லை என்று தோணும்..

ஒவ்வொருவரின் நிலையும் காதலில் ஒவ்வொரு கோணம்தானே....

Edited by vikadakavi

கவரிமானே..

காதலை சொல்வது..

அவ்வளவு இலகுவென யார் சொன்னது...

காதலித்துப்பார்..

உன்னோடு அன்பாய் பழகுபவரை..

அப்போது உருவாகும் காதலை சொல்வது..

தந்தை இறந்த விடயத்தை தாயிடம் சொல்வதைக் காட்டிலும் கடினமானது...

அவள் தரும் தினசரிப்புன்னகையைக்கூட..

நான் காதல் சொல்வதனர்.. அவள்..

தராமல் போவாளோ.. என்னோடு பேசாமல் போவாளோ என்றெண்ணும்போது..

அந்தக்காதல் சொல்லாமல் இரக்கும் ரணம் பரவாயில்லை என்று தோணும்..

ஓ அப்படியா??? :lol:

உங்களுடன் அன்பாய் பழகுபவர் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும் தானே... அவர் உங்கள் காதலை ஏற்பார இல்லையா என்று... அப்போ ஏன் இந்த வருத்தம்??? ம்ம்??

உங்களுடன் அன்பாக பழகுபவர் உங்கள் ஆழ்ந்த காதலையும் அன்பாக ஏற்று கொள்வார்.. நம்பிக்கை தான் வாழ்க்கை... நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.... வெற்றி நிச்சயம். :lol:

Edited by Kavarimaan

விகடகவி அண்ணா..... கவி வரிகள் நல்லாயிருக்கு.,...! :lol:

கவரிமான் வேற நம்பிக்கையா சொல்லச் சொல்லுறார்.... ஒருக்கா சொல்லிப்பாருங்கோ..... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி கவிதை வரிகள் அருமை தென்றலை போல் வருடி செல்கின்றன.

ஆனா ஒன்டு தான் எனக்கு பிடிக்கவில்லை காதல் சரிவராட்டி ஏன் சாக வேணும்???? :lol:

எல்லாத்துக்கும் முதல் உங்கட காதலை ஒருக்கா சொல்லி பாருங்கோ சரி வந்தாலும் வரும். அவவும் நீங்க சொல்லட்டும் என்டு பார்த்துகொண்டிருக்கிறாவோ தெரியாது

  • தொடங்கியவர்

பிள்ளைகள் என்ன அண்ணன் காதலிக்கிறன் எண்டு நினைச்சிட்டியளோ...

தப்புக்கணக்கு போட்டுட்டியள்..

எனக்கும் காதலுக்கு..கன தூர இடைவெளி இருக்கு..

அப்புறம்.. என் கவிதை ..கவிதைதான்..அதில இருப்பது..உணரப்படுவது.. ஆனால் எனக்கு மட்டும் உரியதல்ல.. :o

காதலை படம் பிடிச்சு

மனதிலை எடிட்பண்ணி

பிறேம் போட்டு வைக்காமல்

டெலிவரி கொடுத்துவிடுங்கள்.

:o:o:lol:

:lol::lol::lol:

பிள்ளைகள் என்ன அண்ணன் காதலிக்கிறன் எண்டு நினைச்சிட்டியளோ...

தப்புக்கணக்கு போட்டுட்டியள்..

எனக்கும் காதலுக்கு..கன தூர இடைவெளி இருக்கு..

அப்படி சொல்லாதிங்கோ விகடகவி

காதலித்துப் பார்

சொர்க்கம் நரகம்

இரண்டில் ஒன்று

இங்கேயே முடிவாகி விடுமாம்

(சொன்னவர் வைரமுத்து)

விகடம் ஒரு காதற்கோழையா?

  • தொடங்கியவர்

காதலை படம் பிடிச்சுமனதிலை எடிட்பண்ணி பிறேம் போட்டு வைக்காமல்டெலிவரி கொடுத்துவிடுங்கள். :lol::lol::lol::lol::lol::lol:
டெலிவரி பத்தி யோசிக்கவேயில்லை...அதுக்கு..மாம

ஸ்..(நீங்களாவது.. ரோயல் லெவல்ல கை குடுக்க்மாட்டீங்க..)

அப்படி சொல்லாதிங்கோ விகடகவிகாதலித்துப் பார் சொர்க்கம் நரகம்இரண்டில் ஒன்றுஇங்கேயே முடிவாகி விடுமாம்(சொன்னவர் வைரமுத்து)
சொல்லுறவங்க இலகுவாக சொல்லிடறாங்க.. பாவம் பசங்க.. கேட்டுட்டு..பாதிபேர் சட்டையை கிழிச்சிட்டு திரியறாங்களேப்பா.. அவங்க வாழ்க்கை வைரமுத்து வரியில நரகமா.....எல்லோரும் தைரியமா காதலிங்கோ... :wub:
விகடம் ஒரு காதற்கோழையா?
மெய்தான்...விகடம்... காதல் கோழைதான்..ஆனா கண்ணா.. எனக்குத்தெரிஞ்சு காதலிச்சதால.. ரொம்ப பெரிய வீரன்லாம்.. கோழையாகியிருக்காங்கப்பா... :D விகடகவிக்கு.. வன்முறை தெரியாது.. பிடிக்காது..பயம்... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.