Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது

 

குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

https://seithy.com/breifNews.php?newsID=323490&category=TamilNews&language=tamil

1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சுமந்திரன் சாணக்கியன் பங்கு கொளளவில்லையோ?  

அமெரிக்க தூதுவராலயத்துக்கு போட்டினமோ?

அல்லது தனியாக போய் சந்திக்கப் போகினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை. இந்தியனுக்கு வாக்குறுதி  கொடுத்துள்ளார்கள் என்றால் அதன் அர்த்த்ம் இந்தியன் எங்கள் எசமானர் என்று தானே. 

அப்படியனால் சிங்களம் தமிழனுக்கு கொடுக்கும் அடி சரியானதுதான் . 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை. இந்தியனுக்கு வாக்குறுதி  கொடுத்துள்ளார்கள் என்றால் அதன் அர்த்த்ம் இந்தியன் எங்கள் எசமானர் என்று தானே. 

அப்படியனால் சிங்களம் தமிழனுக்கு கொடுக்கும் அடி சரியானதுதான் . 

 

வாவ் ...சரியான கண்டுபிடிப்பு 
இந்தியன் எங்கள் எஜமானர் என்கிற கூத்தமைப்பிற்கு பாய்ந்து பாய்ந்து வாக்கு போடும் தமிழ் தேசிக்காய்களுக்கு சிங்களவன் வெளுப்பதில் எந்த குற்றமும் இல்லை. இந்த கூஜா தூக்கும் கூத்தமைப்பான்களை வெளுப்பது எனக்கும் ரொம்ப பிடிக்கும் (கருமாந்திரம் உட்பட)

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவை இழந்தபோது ஒற்றுமையாக செயற்பட விரும்பவில்லை, மக்கள் கோரிக்கை வைத்தபோது கேட்கவில்லை, இந்தியா பாடம் எடுத்தவுடன் கேப்பினமாம். பின் தேர்தல் முடிய பிடுங்குப்படுவினமாம். 

4 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரன் சாணக்கியன் பங்கு கொளளவில்லையோ?  

அமெரிக்க தூதுவராலயத்துக்கு போட்டினமோ?

அல்லது தனியாக போய் சந்திக்கப் போகினமோ?

சுமந்திரன்தானே கூட்டுக்கட்சிகளை விட்டு பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதென்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை அவர்கள் பாவிக்கக்கூடாது என்றும் சட்டம் போட்டவர். பிறகு எப்பிடி அவர்களோடு இணைந்து போயிருப்பார் இந்தியாவிடம் பாடம் கேட்க? அதோடு அவர் தனியாகத்தானே சந்திப்புக்களை நடத்துகிறவர். நீங்கள் சொல்வது  போல் அமெரிக்க தூதுவரை தனியாக சந்திக்க சென்றாரோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இவ்வளவை இழந்தபோது ஒற்றுமையாக செயற்பட விரும்பவில்லை, மக்கள் கோரிக்கை வைத்தபோது கேட்கவில்லை, இந்தியா பாடம் எடுத்தவுடன் கேப்பினமாம். பின் தேர்தல் முடிய பிடுங்குப்படுவினமாம். 

சுமந்திரன்தானே கூட்டுக்கட்சிகளை விட்டு பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதென்றும் தமிழரசுக்கட்சியின் பெயரை அவர்கள் பாவிக்கக்கூடாது என்றும் சட்டம் போட்டவர். பிறகு எப்பிடி அவர்களோடு இணைந்து போயிருப்பார் இந்தியாவிடம் பாடம் கேட்க? அதோடு அவர் தனியாகத்தானே சந்திப்புக்களை நடத்துகிறவர். நீங்கள் சொல்வது  போல் அமெரிக்க தூதுவரை தனியாக சந்திக்க சென்றாரோ தெரியவில்லை. 

தக்கன பிழைக்கும்.  😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரன் சாணக்கியன் பங்கு கொளளவில்லையோ?  

அமெரிக்க தூதுவராலயத்துக்கு போட்டினமோ?

அல்லது தனியாக போய் சந்திக்கப் போகினமோ?

ஒரு கட்சியில் இருக்கும் ஆட்களே…. ஒரு விடயத்தை ஒற்றுமையாக செய்ய முடியாமல் இருக்கின்றார்கள். இதற்குள் மற்றவர்களையும் ஒன்றாக நின்று தேர்தலில் போட்டியிடட்டாம் என்று அறைகூவல் வேறை.  😂
மற்றையவர்களை  திரத்தி…. விட்டதே சுமந்திரன் தான்,
பிறகு வந்து, கிழங்கு புடுங்கட்டாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஒரு கட்சியில் இருக்கும் ஆட்களே…. ஒரு விடயத்தை ஒற்றுமையாக செய்ய முடியாமல் இருக்கின்றார்கள். இதற்குள் மற்றவர்களையும் ஒன்றாக நின்று தேர்தலில் போட்டியிடட்டாம் என்று அறைகூவல் வேறை.  😂
மற்றையவர்களை  திரத்தி…. விட்டதே சுமந்திரன் தான்,
பிறகு வந்து, கிழங்கு புடுங்கட்டாம். 🤣

அவர், போவென்று விரட்டுவாராம், பிறகு வாவென்று வரவேற்பாராம், எல்லோரும் இவர் வைத்த ஆட்கள், தான் சொல்வதுபோல் ஆட வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு இவருக்கு.  இனிமேல் தனித்து ஆடிப்பாக்கட்டும். தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்காவிட்டால் சந்தர்ப்பத்தை குழிதோண்டி புதைப்பது போலாகுமென்றவர், ஒருவரும் பொதுக்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறைகூவல் விட்டிட்டு, இப்போ இணைந்து போட்டியிட வாருங்கள் என்றால் யார் போவார்? ஒருவேளை சஜித் வென்றிருந்தால்; மற்றைய தமிழ் வேட்பாளரின் நிலை என்னவாக இருந்திருக்குமென கற்பனை பண்ணிபாருங்கள். ஒருமுறை சேனாதிராஜா எடுத்த எடுப்பு யாருக்காவது நினைவிருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, satan said:

அவர், போவென்று விரட்டுவாராம், பிறகு வாவென்று வரவேற்பாராம், எல்லோரும் இவர் வைத்த ஆட்கள், தான் சொல்வதுபோல் ஆட வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு இவருக்கு.  இனிமேல் தனித்து ஆடிப்பாக்கட்டும். தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்காவிட்டால் சந்தர்ப்பத்தை குழிதோண்டி புதைப்பது போலாகுமென்றவர், ஒருவரும் பொதுக்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அறைகூவல் விட்டிட்டு, இப்போ இணைந்து போட்டியிட வாருங்கள் என்றால் யார் போவார்? ஒருவேளை சஜித் வென்றிருந்தால்; மற்றைய தமிழ் வேட்பாளரின் நிலை என்னவாக இருந்திருக்குமென கற்பனை பண்ணிபாருங்கள். ஒருமுறை சேனாதிராஜா எடுத்த எடுப்பு யாருக்காவது நினைவிருக்கா?

சாத்தான்.... நான் சொல்வதை நினைவில் வைத்திருங்கள். 
பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன், அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கு மீண்டும் தமிழரசு கட்சி  தனித்து போட்டியிடப் போகுது என்று சொல்லி, போனவர்களை மீண்டும் வெளியே அனுப்பி விடுவார். இது நிச்சயம் நடக்கும். 
மனது சுத்தம் இல்லாத மனிதன். 
வாயை திறந்தால்.... பொய்யும், பிரட்டும்தான் வெளியே வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சாத்தான்.... நான் சொல்வதை நினைவில் வைத்திருங்கள். 
பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன், அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கு மீண்டும் தமிழரசு கட்சி  தனித்து போட்டியிடப் போகுது என்று சொல்லி, போனவர்களை மீண்டும் வெளியே அனுப்பி விடுவார். இது நிச்சயம் நடக்கும். 
மனது சுத்தம் இல்லாத மனிதன். 
வாயை திறந்தால்.... பொய்யும், பிரட்டும்தான் வெளியே வரும்.

ம்..... உந்த கூத்தாடியின்ர குணம் தெரிந்து. கூட்டுக்கட்சிகள் தாங்கள் தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இனிமேல் இவரின் பருப்பு வேகாது. சுமந்திரனின் பேச்சுக்கு தலையாட்டிய மாவையர், எல்லோரின் வேண்டுகோள், சேர்ந்து போட்டியிடுவதே என கதை விட்டுப்பார்க்கிறார். இவர்களை தள்ளிவைப்பதோடு, கூட்டுக்கட்சிகளும் மக்களுக்காய் தங்களை மா ற்றாவிடில் இவர்களும் தள்ளிவைக்கப்படுவர். மக்களுக்கு ஏமாற்றமும் விரக்தியும் வந்துவிட்டது. இனிமேல் யார் புதுசாய் வருகிறார்களோ அவர்கள் பின்னால் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களை நம்பி தமிழுணர்வும் வலிமையிழந்து, நிலங்களும் பறிபோய், உறவுகளும் இழந்து அநாதரவாக நிற்பதால், இனி தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்களால் தள்ளப்பட்டுள்ளனர். இனி எதை, யாரை வைத்து வியாபாரம் நடத்தப்போகிறார்கள்? சிங்களமும் திரும்பிப்பாராது இவர்களை, மக்கள் இல்லையென்றால் வாக்குகளும் இல்லை. தனித்து விடப்பட்ட இவர்களை எதற்கு? அப்போ புரியும் மக்களின், இனத்தின், தேசியத்தின் வீரியம், ஒற்றுமையின் பலம் என்ன என்பது. எல்லா சிங்கள அரசியல்வாதிகளும், நேற்று அரசியலுக்கு வந்த நாமலும் கூறுகிறார்கள், தமிழ்கட்சிகள் தம் மக்களின் பிரச்சனைகளுக்காக எந்த விதமான அழுத்தத்தையும் கொடுப்பதில்லை, அப்படி அவர்கள் செய்திருந்தால்; எப்பவோ அவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்களென்று. ஆனால் அதற்கு, நம்மவர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி செய்தால் தாம் பெற்ற சலுகைகள் வெளிவந்துவிடும் என்கிற பயமோ தெரியவில்லை. சலுகை அளித்து அவர்களை விலைக்கு வாங்கியவர்கள், தங்களை இந்த கனவான்கள் எதிர்க்க மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்தே காட்டிக்கொடுக்கிறார்கள். காலம் எவ்வளவு வலிமையானது பாருங்கள். தேர்தல் வரபோகுதென்று போன ஆண்டு கதை எழுந்தபோது, கூட்டுக கட்சிகளை விரட்டியடித்த சுமந்திரனை, யாரும் தங்களோடு இணைத்துக்கொள்ள தயாரில்லை. வேண்டுமானால் டக்கிளசுக்கு தூது விட்டுப்பார்க்கலாம், குணங்கள் ஒரே மாதிரி, இனத்தை விற்று, எதிரிக்கு வாலாட்டுவது. அநுர இவர்களை கணக்கிலெடுக்கவும் மாட்டார். ஏதோ முயற்சித்துப் பார்க்கட்டும். வடக்கின் வசந்தம் சொல்லிப்போட்டார், இந்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து விடைபெறப்போவதாக. அவர் என்ன. யாரிடம் இருந்து விடைபெறுவது? எல்லோருமே வீணர்களை வீட்டுக்கு அனுப்புவதாக முடிவெடுத்து விட்டனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.