Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது?

தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது?

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தனது முகநூலில் நேற்று 01 ஆம் திகதி அவருடைய புகைப்படத்துடன் பதிவிட்ட விடயம் பலருடைய கவனத்திற்கு வந்துள்ளது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் என்னவென்றால், “உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நோக்கிய தமிழர் தாயகம்” என்ற கருத்து பட அவர் இதனை கூறியிருக்கின்றார்.

தமிழரசு கட்சி ஆரம்ப காலம் முதல் அபிருத்தியை இரண்டாமிடத்திற்கு வைத்து, தமிழ் தேசியத்தை முன்னுரிமை படுத்தியே இதுவரை காலமும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட தமிழ் தேசியத்தை உறுதிப்படுத்துவதாக கூறியே சஜித்திற்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் திடீரென சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் அபிவிருத்தியையும் சேர்த்திருப்பது பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது.

image-61.png

தமிழரசு கட்சி தமிழ் தேசியத்தை கைவிட்டுள்ளதா? அல்லது தமிழ் தேசியம் இப்பொழுது தேவையில்லாத விடயம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? ஏனைய கட்சிகள் கூறுவதை போலவும், இலங்கையிலே இருக்கின்ற பெரும்பான்மை தேசிய கட்சிகள் கூறுவதை போலவும் அபிவிருத்தியை நாங்கள் எட்டிவிட்டால் இனப்பிரச்சனை தானாக தீர்ந்துவிடும் என்கின்ற சித்தார்ந்தத்திற்கு துணைபோகின்றதாக அமைகின்றதா? அல்லது இப்போதைக்கு தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால் அபிவிருத்தியையும் கொண்டுவந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இடங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசு கட்சி செய்யும் முயற்சியா என்ற கேள்விகள் எல்லாம் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றது.

தமிழர் தேசியத்தை அடிப்படையாக கொண்டு இதுவரை காலமும் செயற்பட்டு வந்த தமிழரசு கட்சி திடீரென உரிமையுடன் கூடிய ஒரு விடயத்தை முன்வைக்கின்ற பொழுது இது தமிழரசு கட்சி எடுத்த முடிவா என்று கேட்ட தொன்றுகிறது. அத்தோடு தமிழரசு கட்சி இது தொடர்பில் யாருடன் கலந்துரையாடியுள்ளது, மக்களிடம் இது தொடர்பான அபிப்பிராயம் பெறப்படதா என்பது போன்ற கேள்விகளெல்லாம் கேட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே சாணக்கியன் தன்னுடைய முகநூல் புத்தகத்தில் பதிவிட்ட தேசியத்தையும், அபிவிருத்தியையும் சமமாக பார்க்கின்ற அல்லது ஒன்றையொன்று குறைத்து மதிப்பிட்டு பார்க்கின்ற இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்ல போகின்றார்.

WhatsApp-Image-2024-10-02-at-12.48.37_b4
 

https://battinaatham.net/?p=91440

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.... அபிவிருத்திதான் எம் மக்களுக்கு இப்போது அவசியம் அதிகாரப்பகிர்வல்ல என்று முழங்கி அரசியலில் குதித்த அங்கயன்,விநாயகமூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என விளக்கிவிட்டு, இவர்களிடம் விளக்கம் கேட்கலாம். அதிகாரம் முக்கியம் என்று போனவர்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுத்து இப்போ அபிவிருத்தி என்கிற க(கு)திரையில் ஏறி இன்னும் எழுபது வருடம் சவாரி செய்ய நினைத்துவிட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அபிவிருத்தியும் இல்லை, அதிகாரமும் இல்லை இனி சிங்களத்தோடு மக்கள் அடிபணிந்து தமது நாளாந்த வாழ்க்கையை ஓட்டப்பழகி விட்டார்கள். இதற்கு தரகர் எல்லாம் இனிமேல் தேவையில்லை.    

  • கருத்துக்கள உறவுகள்

//தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது? வீட்டுக்கு போகிறது//

இந்தக் கேள்விக்கு எனக்கு இப்படித்தான் பதில் எழுத தோன்றுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, P.S.பிரபா said:

//தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது? வீட்டுக்கு போகிறது//

இந்தக் கேள்விக்கு எனக்கு இப்படித்தான் பதில் எழுத தோன்றுகிறது.

தங்கச்சி வீட்டை விட்டுப் போகுது என்றும் சொல்லலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.