Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
04 OCT, 2024 | 08:11 PM
image

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம்  மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்  என இந்திய வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாடு இறைமை ஆகியவற்றை பேணும் அதேவேளை  தொடர்பில் தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் நீதி கௌவரம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளிற்கு இந்தியா ஆதரவளிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவம், மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்துவதும் இந்த நோக்கங்களை அடைய உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த இந்தியாவின் கரிசனையை வெளியிட்டார்,அவர்களையும் அவர்களின் படகுகளையும் கூடிய விரைவில் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார், மேலும் அவர்களிற்கு எதிராக பெரும் அபராதத்தை விதிப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195512

  • கருத்துக்கள உறவுகள்

அடேய் 13வது திருத்தத்தத்தில் உருப்படியாக இருந்த வடக்கு கிழக்கு இணைப்பை வழக்கு  போட்டு நிரந்தரமாகப் பிரித்தவர்களே இந்த ஜேவிபி காரங்கள்தானேயடா!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டையும் வைத்து உங்கன்ட ராஜதந்திர நகர்வுகளை(கொள்கை வகுப்புக்கள்) எவ்வளவு காலத்துக்கு  செய்யப்போறீயல்...இவ்வளவு காலமும் வலதுசாரிகள் இருந்திச்சினம் இப்ப இடதுசாரிகள் வந்திருக்கினம் கொஞ்சம் நீங்களும் மாறுங்கோ...
 

14 minutes ago, புலவர் said:

அடேய் 13வது திருத்தத்தத்தில் உருப்படியாக இருந்த வடக்கு கிழக்கு இணைப்பை வழக்கு  போட்டு நிரந்தரமாகப் பிரித்தவர்களே இந்த ஜேவிபி காரங்கள்தானேயடா!!!

அதுகளை பற்றி இவருக்கு தெரியுமோ ....சிறிலங்காவுக்கு வரும் சகல இந்தியா ராஜத்ந்திரிகளுக்கு இந்த இரணடையும் பற்றி கதையுங்கோ ஆனால் அதை நடைமுறை படுத்துவது பற்றி முயற்சிக்க கூடாது என கல்வெட்டில் எழுதி வைச்சிருக்கினம்  போல ...

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புலவர் said:

அடேய் 13வது திருத்தத்தத்தில் உருப்படியாக இருந்த வடக்கு கிழக்கு இணைப்பை வழக்கு  போட்டு நிரந்தரமாகப் பிரித்தவர்களே இந்த ஜேவிபி காரங்கள்தானேயடா!!!

பாவம் புலவரையா பொல்லைக் கொடுத்தவிட்டார். சிறிலங்காத் தேசியர்களை கோபமூட்டப்போகிறது. யே.வி.பி வேறாம் என்.பி.பி வேறாம். அதனால் முடிச்சுபோடாதையுங்கோ.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

இந்த இரண்டையும் வைத்து உங்கன்ட ராஜதந்திர நகர்வுகளை(கொள்கை வகுப்புக்கள்) எவ்வளவு காலத்துக்கு  செய்யப்போறீயல்...இவ்வளவு காலமும் வலதுசாரிகள் இருந்திச்சினம் இப்ப இடதுசாரிகள் வந்திருக்கினம் கொஞ்சம் நீங்களும் மாறுங்கோ...

13ஆவது திருத்தமெனப்படும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ள தமது நலன்களை, தமது முதலாளிகளுக்கான முதலீடு மற்றும் முதலீடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் என்பவற்றைப் பேசிவிட்டு, வெளியில செய்திக்கு மாத்தி ஏதோ தமிழரது உரிமைபற்றிப் பேசியதாகக் காட்டுகிறார்கள். இவர்களிடம் பயிற்சி எடுத்த எங்கட அரசியல்வாதியளும் சிங்களத் தலைமையை சந்தித்து தமது சாராயக்கடை அனுமதி, மண் அள்ளுற அனுமதியளைப் பெற்றுக்கொண்டு 13 தீர்வல்ல. தீர்வுக்கான அடிப்படை என்று பேசியதாகக் கதைவிடுவினம். இது கடந்த 37ஆண்டுகளாக இப்பிடித்தானே போகுது. ஆனால் சிங்களம் தொடர்ந்து தமிழர் தாயகத்தை அழித்தே வருகிறது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

13ஆவது திருத்தமெனப்படும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ள தமது நலன்களை, தமது முதலாளிகளுக்கான முதலீடு மற்றும் முதலீடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் என்பவற்றைப் பேசிவிட்டு, வெளியில செய்திக்கு மாத்தி ஏதோ தமிழரது உரிமைபற்றிப் பேசியதாகக் காட்டுகிறார்கள். இவர்களிடம் பயிற்சி எடுத்த எங்கட அரசியல்வாதியளும் சிங்களத் தலைமையை சந்தித்து தமது சாராயக்கடை அனுமதி, மண் அள்ளுற அனுமதியளைப் பெற்றுக்கொண்டு 13 தீர்வல்ல. தீர்வுக்கான அடிப்படை என்று பேசியதாகக் கதைவிடுவினம். இது கடந்த 37ஆண்டுகளாக இப்பிடித்தானே போகுது. ஆனால் சிங்களம் தொடர்ந்து தமிழர் தாயகத்தை அழித்தே வருகிறது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

உண்மை ...தமிழ் தேசியத்தை தொடர்ந்து அழிப்பதில் ஜெ.வி.பினர் காய்களை நகர்த்துகின்றது...இனவாதம் பேசி தமிழ் தேசியத்தை அழித்தார்கள் ...இப்பொழுது ஊழல் ஊழல் என சொல்லி தமிழ் தேசியத்தை அழிக்கின்றனர் 

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி சலிக்கவில்லையோ இவர்களுக்கு? கடந்த காலங்கள், அது நடைபெறாதென நிரூபித்துள்ளன, சட்டத்தாலும் தமிழர் தாயகத்தை பிரித்தாயிற்று. இப்போ, அங்கிருக்கும் முஸ்லீம், நமது இனத்துரோகிகளும் இணைய விடமாட்டோம் என போராடுகிறார்கள். இவர்கள் இந்த துண்டை தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள் உறவை வளர்க்க, வாழ்த்துசொல்லவென. நான் சொல்லுறது போல சொல்லுறன், நீ மறுக்கிற மாதிரி மறு, இரண்டு பக்கமும் நான் குளிர் காய்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.