Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mp-1.jpg?resize=750,375&ssl=1

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இதனை கூறினார். இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், விசாரணைகளின் தீவிரம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1403207

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்தில் இவை சரியானதாக அமையாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

தேர்தல் காலத்தில் இவை சரியானதாக அமையாது. 

விசுகு… ஊழல்  ராஜபக்சக்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று… பெரும்பாலான சிங்களவர்களே ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

3 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு… ஊழல்  ராஜபக்சக்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று… பெரும்பாலான சிங்களவர்களே ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

போன முறை தேர்தலில் நின்று வெற்றியடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை வெல்லக்கூடாது என்று சிங்கள சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி கொண்டு வருகின்றனர். அதனால் தான் பல முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் வரலாம் என்று திட்டமிடுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

போன முறை தேர்தலில் நின்று வெற்றியடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை வெல்லக்கூடாது என்று சிங்கள சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி கொண்டு வருகின்றனர். அதனால் தான் பல முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் வரலாம் என்று திட்டமிடுகின்றனர்.

உண்மையில் இந்த தேசியப் பட்டியல் முறை ஒழிக்கப் படவேண்டும்.
மக்களால்… நிராகரிக்கப் படுகின்றவர்கள், கள்ள வழியால் பாராளுமன்றம் போய், கதிரையில் குந்துவது வாக்களித்த மக்களை அவமதிப்பது போலாகும்.
இது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மையில் இந்த தேசியப் பட்டியல் முறை ஒழிக்கப் படவேண்டும்.
மக்களால்… நிராகரிக்கப் படுகின்றவர்கள், கள்ள வழியால் பாராளுமன்றம் போய், கதிரையில் குந்துவது வாக்களித்த மக்களை அவமதிப்பது போலாகும்.
இது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியாது.

அண்ணை, தேசியப்பட்டியல் மூலம் நேரடி தேர்தலில் போட்டியிட முடியாத மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களிற்கு மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் நாடாளுமன்றில் வழங்கப்பட வேண்டும்.

56 minutes ago, ஏராளன் said:

அண்ணை, தேசியப்பட்டியல் மூலம் நேரடி தேர்தலில் போட்டியிட முடியாத மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களிற்கு மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் நாடாளுமன்றில் வழங்கப்பட வேண்டும்.

தமிழ் சிறியின் கருத்துத்தான் எனது கருத்தும் இதில்.

மாற்றுத்திறனாளிகள், திரு நங்கை / திரு நம்பிகள், ஒடுக்கப்பட்டவர்கள் போன்றோரை அரசியல் கட்சிகள் ஒரு போதும் வேட்பாளராக நியமிப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியல்.

இந்தியாவிலேயே இவ்வாறான ஆரோக்கியமான விடயம் நிகழ்ந்து இருக்கின்றது. சப்னம் மவுசி (Shabnam "Mausi") எனும் திரு நங்கை எம்.எல்.ஆக இருக்கின்றார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உண்மையில் இந்த தேசியப் பட்டியல் முறை ஒழிக்கப் படவேண்டும்.
மக்களால்… நிராகரிக்கப் படுகின்றவர்கள், கள்ள வழியால் பாராளுமன்றம் போய், கதிரையில் குந்துவது வாக்களித்த மக்களை அவமதிப்பது போலாகும்.
இது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியாது.

தமிழர் கட்சிகள் இந்த தேர்தலில் தேசிய பட்டியலை குறிவைத்து நகர்கிறார்கள்.மிக மோசமான பிரச்சனைகள் இதனால் வரலாம்.

தேர்தலில் நின்று தோற்றவர்கள் தேசியபட்டியலில் பாராளுமன்றம் போகக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் குற்றவாளிகளையும், பணம் படைத்தோரையும், வெறும் செல்வாக்கானோரைம் தமது பிரதிநிதியாக அனுப்பினால்( மக்கள் மாக்கள் ஆனால் )படித்த ஆனால் செல்வாக்கோ பணபலமோ அற்ற ஆனால் சட்டப் புலமை உள்ள , international low தெரிந்த நிதி, கணக்கியல் அனுபவம் உள்ள நபர்கள் பாராளுமன்றம் செல்வது எப்படி?  அதற்க்கு தேசியப் பட்டியல் உதவும். 

உதாரணம் 

தமிழ் நாட்டில் திமுக வில் பாராளுமன்றதில் மேல் சபையில் வில்சன் என்ற ஒருவர் உள்ளார். அவர் தான் இப்போது தி மு க தமிழ் நாடு சம்பந்தமான விஷயங்களுக்கு டில்லியில் உள்ள நபர். அவர் மக்களால் தேர்ந்து எடுக்கப்படவில்லை.

இங்கே எதற்கு senate, house of commons என்று இருக்கிறது? 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

தமிழ் சிறியின் கருத்துத்தான் எனது கருத்தும் இதில்.

மாற்றுத்திறனாளிகள், திரு நங்கை / திரு நம்பிகள், ஒடுக்கப்பட்டவர்கள் போன்றோரை அரசியல் கட்சிகள் ஒரு போதும் வேட்பாளராக நியமிப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியல்.

இந்தியாவிலேயே இவ்வாறான ஆரோக்கியமான விடயம் நிகழ்ந்து இருக்கின்றது. சப்னம் மவுசி (Shabnam "Mausi") எனும் திரு நங்கை எம்.எல்.ஆக இருக்கின்றார்.
 

அண்ணை, 1 கோடி செலவழிக்கவேணுமாம் தேர்தலுக்கு! நேற்று பாடசாலைக்கருகில் சந்தித்த தம்பி சொன்னான். ஒருத்தர் 30 லட்சம் வைச்சுக்கொண்டு என்ன செய்ய என்று கையை பிசைகிறாராம்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அண்ணை, 1 கோடி செலவழிக்கவேணுமாம் தேர்தலுக்கு! நேற்று பாடசாலைக்கருகில் சந்தித்த தம்பி சொன்னான். ஒருத்தர் 30 லட்சம் வைச்சுக்கொண்டு என்ன செய்ய என்று கையை பிசைகிறாராம்!

அதுசரி முதலைப் போட்டால் வட்டியும் குட்டியுமாக வருமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அதுசரி முதலைப் போட்டால் வட்டியும் குட்டியுமாக வருமா சார்?

அதுக்கு முதலில் வெல்லவேணுமே அண்ணை!
இப்ப வந்துள்ள ஆட்சியாளர்கள் வேற சலுகைகளை குறைக்கப் போகினமாம், சேவை செய்ய வருவோர்களுக்குத் தான் நிலமை சரிவரும் போல இருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.