Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 Oct, 2024 | 06:21 PM
image

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09)  கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. 

அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக்கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது அவ்வாறான நிலமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம். 

அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது. அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரியவேண்டும்என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது. 

இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது. 

அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது.தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று.. அவனவன் தமிழரசு கட்சியை விட்டு தலை தெறிக்க ஓடுறாங்கள்.
இவர்கள் என்னவென்றால்… ராஜுனாமா கடிதம் கிடைக்கவில்லை, கட்சியின் யாப்பின் பிரகாரம்  நடவடிக்கை எடுப்போம் என்று காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 😂
போய்… ஓரமாக உட்கார்ந்து விளையாடுங்கப்பா.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று.. அவனவன் தமிழரசு கட்சியை விட்டு தலை தெறிக்க ஓடுறாங்கள்.
இவர்கள் என்னவென்றால்… ராஜுனாமா கடிதம் கிடைக்கவில்லை, கட்சியின் யாப்பின் பிரகாரம்  நடவடிக்கை எடுப்போம் என்று காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 😂
போய்… ஓரமாக உட்கார்ந்து விளையாடுங்கப்பா.. 🤣

என்ன செய்வார்கள் மரண தண்டனை கொடுப்பார்களா?? 😀🤣😂

சிறைச்சாலை இருந்து தான் அனுமதி இன்றி வெளியேற முடியாது  

தமிழரசு கட்சியில். இருந்து அனுமதி இன்றி வெளியேற  முடியாது என்றால்   தமிழரசுகட்சி சிறைச்சாலையா 

வழக்கு ஏதாவது போட்டு தான் வெளியில் வரவேண்டுமா. வரவேண்டுமா?? நல்ல காலம் நான் சேரவில்லை   தமிழரசு கட்சியில். 🙏

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று.. அவனவன் தமிழரசு கட்சியை விட்டு தலை தெறிக்க ஓடுறாங்கள்.
இவர்கள் என்னவென்றால்… ராஜுனாமா கடிதம் கிடைக்கவில்லை, கட்சியின் யாப்பின் பிரகாரம்  நடவடிக்கை எடுப்போம் என்று காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 😂
போய்… ஓரமாக உட்கார்ந்து விளையாடுங்கப்பா.. 🤣

பிச்சை  வேண்டாம் என்று யோசித்தாலும் அதைப் பிச்சையிடுபவனிடம் "எனக்குப் பிச்சை வேண்டாம் "" என்று சொல்ல வேண்டுமல்லவா? 

தேர்தலில் போட்டியிட்டு தமிழீழம் பிடிச்சுக் கொடுக்கத் தெரிந்த உவையழுக்கு ஒரு விலகல் கடிதம் கொடுக்கவா தெரியாது? 

போட்டியிட இடம் கிடைக்கவில்லை என்றவுடன் கழன்று ஓடும் ஒட்டுண்ணி,  பிச்சைக்காறக் களுசடைக்  கூட்டத்தை நம்பித்தானே இத்தனை இளைஞர் யுவதிகளும் இரத்தம் சிந்தினர்? 

😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.