Jump to content

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

 மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தூயவன்.

 

இஸ்ரேலியரின் வேதாகமத்தில் இன்று போர்நடக்கும் பலபகுதிகள் அன்று அவர்களின் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1000 வருடங்களுக்கு (அண்ணளவாகத்தான்) முன்னர் அரேபியப் படையெடுப்புக்களால் இஸ்ரேலியர்கள் இங்கிருந்து விரட்டப்பட பலஸ்த்தீனர்கள் அங்கு குடியேறிவிட்டார்கள்.

1948 இற்குப் பின்னரே இஸ்ரேலியர்கள் அங்கு மீளவும் குடியேறினார்கள். தமது வேதாகமத்தின்படி பலஸ்த்தீனர்கள் தற்போது வாழும் , தமது முந்தைய தாயகத்தை மீட்டு,  மீள உருவாக்க முயல்கிறார்கள்.

அப்படியானால் அங்குவாழும் பலஸ்த்தீனர்கள் எங்கு செல்வது? கடந்த 1000 வருடங்களாக அவர்களும் அங்குதானே வாழ்கிறார்கள்?

யூதரும், பலஸ்த்தீனியர்களும் இருக்கும் தாயகத்தை பகிர்ந்து வாழ்வதே சரியாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு. 

 

இஸ்ரேலில் 20 வீதம் முஸ்லீம்கள் தான். இஸ்ரேல் என்ற நாட்டை அங்கிகரிப்பவர்களுக்கும், அங்கிகரிக்காதவர்களுக்கும் தான் இங்கே பிரச்சனை. அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக பணத்தை வாங்கி நிலத்தை விற்றுவிட்டு தாம்- தூம் என்று ஆடக்கூடாதல்லவா? 

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியா, இலங்கை. ஈரான்  உற்பட்ட பல நாடுகள் இஸ்ரேல் உருவான
 காலமும் இஸ்ரேல் உருவானதும் ஒரே காலப்பகுதி தான். இலங்கையில் வெள்ளைக்காரர் கைப்பற்றாவிடின் 3 தனிநாடுகளாக இருந்திருக்கும். இந்தியா கூட அப்படித் தானே இருந்தது. ஆனால் எல்லோருக்கும் இஸ்ரேல் தான் பிரச்சனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாஹ்யா சின்வார்: ஹமாஸ் அமைப்பினரே கண்டு அஞ்சிய இவர் யார்?

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, யாஹ்யா சின்வாரின் இறப்பை வியாழக்கிழமை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை தங்கள் படையினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சின்வாரை கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் தீவிரமாகத் தேடி வந்தது.

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இஸ்ரேல் போரின் ஆரம்பக் கட்டத்தில் சின்வார் தலைமறைவானார். ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ட்ரோன்கள், ஒட்டுக்கேட்பு கருவிகள், உளவாளிகள் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் சின்வாரின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி செய்த நிலையில், அவர் கொல்லப்பட்டது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை.

“(ஹமாஸின்) தளபதி யாஹ்யா சின்வார் தற்போது இறந்துவிட்டார்,” என்று இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

 

காஸாவுக்குள் எங்கோ பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தனது மெய்க்காப்பாளர்களுடன், கடந்த ஆண்டின் பெரும்பகுதியை அவர் கழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தன் இருப்பிடத்தை அடையாளம் காணலாம் என்ற பயத்தால் வெகு சிலருடன் மட்டுமே அவர் தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்டது. இஸ்ரேல் பணயக் கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்திக்கொண்டு அவர் இருந்திருக்கலாம் என்றும் அஞ்சப்பட்டது.

ஆனால், தெற்கு காஸாவில் பணயக் கைதிகள் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாத ஒரு கட்டடத்திற்குள் சின்வார் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. விரல் ரேகை மற்றும் பற்களின் ஆதாரங்களை வைத்து இறந்தது சின்வார்தான் என்பதை இஸ்ரேல் அறிவித்தது.

“இனப்படுகொலை வரலாற்றுக்குப் பின்னர், இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் மோசமான படுகொலையை அவர் நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் நுற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டதற்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, இன்று எங்களின் வீரமிக்க படையினரால் கொல்லப்பட்டார். நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தது போன்று இன்று அவரைப் பழிதீர்த்துவிட்டோம்,” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

காஸாவில் ஏற்கெனவே ஹமாஸின் மூத்த தலைவர்கள் பலரை இஸ்ரேல் கொன்றுள்ளது. அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸ் ராணுவ பிரிவின் தலைவர் முகமது டைஃப் அப்படி கொல்லப்பட்டவர்களுள் ஒருவர். கடந்த ஜூலை மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் மூத்த கொள்கை ஆய்வாளர் ஹியூ லாவிட் கூறுகையில், அக்டோபர் 7 தாக்குதல் ராணுவ நடவடிக்கை என்பதால், முகமது டைஃப்தான் அதன் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்பட்டது என்றும், “ஆனால், அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட குழுவின் ஒரு பகுதியாக சின்வார் இருந்திருக்கலாம், அக்குழுவில் அவர் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்” என்றும் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஜூலை மாதம் டெஹ்ரானில் ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. தலைமறைவாக இருந்தபோதிலும் அடுத்த மாதமே சின்வார் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

 

இளமைக் காலமும் கைது நடவடிக்கையும்

டெல் அவிவில் நடைபெற்ற பேரணியில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளின் படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெல் அவிவில் நடைபெற்ற பேரணியில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளின் படங்கள்

அபு இப்ராஹிம் எனப் பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா முனையின் கடைக்கோடி தெற்கில் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஆஷ்கெலான் நகரை சேர்ந்தவர்கள்.

ஆனால், 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பாலத்தீனத்தில் பெருந்திரளான பாலத்தீனர்கள் தங்களின் முன்னோர்களின் வீடுகளில் இருந்து புலம்பெயர்ந்தனர்.

அதையடுத்து அவர்கள் அகதிகளாகினர். பாலத்தீனர்கள் இதை, “அல்-நக்பா” (al-Naqba) பேரழிவு என்று அழைக்கின்றனர்.

கான் யூனிஸ் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பின்னர், காஸாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் அரபு மொழியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில் கான் யூனிஸ் ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ ( Muslim Brotherhood) எனும் சன்னி இஸ்லாமிய அமைப்பின் “ஆதரவு கோட்டையாக” திகழ்ந்ததாக, ‘நியர் ஈஸ்ட்’ கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆய்வாளரான எஹூட் யாரி (Ehud Yaari) தெரிவித்தார். இவர், யாஹ்யா சின்வாரை சிறையில் நான்கு முறை நேர்காணல் செய்தார்.

‘நியர் ஈஸ்ட்’ என்பது மேற்கு ஆசியா, பால்கன் மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதி. அந்தப் பகுதிக்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை கவனப்படுத்தும் மையமே ‘நியர் ஈஸ்ட்’ மையம்.

“அகதிகள் முகாமில் வறுமையான சூழலில் மசூதிகளுக்குச் செல்லும் இளம் வயதினருக்கான பெரும் இயக்கமாக” இஸ்லாமிய அமைப்பு திகழ்ந்ததாக யாரி கூறுகிறார். இது ஹமாஸ் அமைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயக்கமாகக் கருதப்பட்டது.

கடந்த 1982ஆம் ஆண்டில் தனது 19வது வயதில் “இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக” சின்வார் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். அதன்பின், 1985இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையை சின்வார் பெற்றார்.

அந்தச் சூழலில் இருவரும் “மிகவும் நெருக்கமாகினர்” என, டெல் அவிவில் உள்ள தேசிய பாதுகாப்பு இயல் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பின் மதத் தலைவருடனான உறவு “அந்த இயக்கத்திற்குள் சின்வாருக்கு நல்லெண்ணம் ஏற்பட வழிவகுத்ததாகவும்" மைக்கேல் தெரிவித்தார்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஹமாஸ் நிறுவப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த அமைப்பினருக்கே பயத்தை ஏற்படுத்தக்கூடிய அல்-மஜ்த் (al-Majd) அமைப்பிற்கு உள்ளேயே செயல்படும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே.

நன்னடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கும் நடவடிக்கைக்காக அல்-மஜ்த் அமைப்பு பரவலாக அறியப்பட்டது. “பாலியல் ரீதியான காணொளிகள்” அடங்கிய கடைகளை சின்வார் குறிவைத்ததாக மைக்கேல் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் எவராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்பட்டனர்.

 
ஹமாஸின் மதத்தலைவர் ஷேக் அகமது யாசிம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹமாஸின் மதத் தலைவர் ஷேக் அகமது யாசிமின் ஓவியம்

இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஏராளமானோரின் “கொடூரமான கொலைகளுக்கு” சின்வார் பொறுப்பானவர் என்றும் யாரி தெரிவித்தார். மேலும், “சிலர் அவருடைய கைகளாலேயே கொல்லப்பட்டனர். அதுகுறித்து என்னிடமும் மற்றவர்களிடமும் அவர் பெருமையுடன் பேசினார்” என்றார்.

உளவாளி என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அவருடைய சகோதரரை வைத்தே உயிருடன் அடக்கம் செய்ய வைத்ததாக சின்வார் பின்னர் ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தன்னைப் பின்பற்றுபவர்கள், தன் மீது பயம் கொண்டவர்கள், தன்னுடன் எந்த சண்டைக்கும் செல்லாத பலரும் சூழ இருக்கும் ஒரு நபர்தான் யாஹ்யா சின்வார்” என்கிறார் யாரி.

இஸ்ரேலிய வீரர்கள் இருவரை கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டதாக, கடந்த 1988ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டு, பாலத்தீனர்கள் 12 பேரை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அதே ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

சின்வாரின் சிறை நாட்கள்

தன்னுடைய இளம் பருவத்தின் பெரும்பகுதியை, 1988-2011 வரையிலான 22 ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய சிறைகளிலேயே கழித்தார். சில காலத்தை அவர் தனிமை சிறையிலும் கழித்தார். அப்போது அவர் தன்னுடைய அமைப்பு சார்ந்து மேலும் ஊக்கம் பெற்றதாகத் தெரிகிறது.

அவர் “தன்னுடைய அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தியதாக,” கூறுகிறார் யாரி. சிறைவாசிகளிடையே தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தினார். சிறை அதிகாரிகளுடன் அவர்களின் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நன்னடத்தை ரீதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார்.

 
கடந்த 2021-ல் யாஹ்யா சின்வார் கூட்டமொன்றில் உரையாற்றிய போது நின்றிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2021இல் யாஹ்யா சின்வார் கூட்டமொன்றில் உரையாற்றியபோது நின்றிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்

சிறையில் அவர் இருந்த நேரத்தில், சின்வார் குறித்த இஸ்ரேல் அரசின் மதிப்பீடு, “கொடூரமான, அதிகாரமிக்க, செல்வாக்கு கொண்டவர். வழக்கத்திற்கு மாறான சகிப்புத் தன்மை, கபடம் மற்றும் தவறாகச் சித்தரித்தல் ஆகிய குணங்களைக் கொண்டவர். சிறைக்குள் மற்ற சிறைவாசிகள் மத்தியிலும் ரகசியங்களைக் காத்தவர். பெருந்திரளான கூட்டத்தைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்” என்பதாக இருந்தது.

சின்வாருடன் நிகழ்ந்த சந்திப்புகள் மற்றும் உரையாடல்களின் அடிப்படையில், அவர் ஒரு மூர்க்க குணம் கொண்ட மனநோயாளி (psychopath) என்று யாரி மதிப்பிட்டுள்ளார்.

“ஆனால், சின்வாரை ‘மனநோயாளி’ என்பதோடு நிறுத்தினால் அது தவறாகிவிடும்” எனக் கூறிய அவர், “அப்படி மட்டும் நினைத்தால் அவருடைய மிகவும் விநோதமான, சிக்கலான குணத்தைத் தவறவிட்டு விடுவீர்கள்” என்றார்.

யாரி கூறுகையில், “சின்வார் மிகவும் தந்திரமான, சூட்சும புத்தி கொண்டவர். தன்னுடைய தனிப்பட்ட வசீகரத்தைத் தேவையான நேரத்தில் கொண்டு வரவும் பின்னர் மறைக்கவும் தெரிந்த நபர் அவர்” என்று விவரித்தார்.

இஸ்ரேல் அழித்தொழிக்கப்பட்டு, பாலத்தீனத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது எனக் கூறும்போது, “வேண்டுமானால் உங்களை மட்டும் விட்டு வைக்கிறோம்’ என நகைச்சுவையாகக் கூறுவார்” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட சின்வார், ஹீப்ரு மொழியை சரளமாகக் கற்றார், இஸ்ரேல் செய்தித்தாள்களையும் அவர் வாசித்தார். தனக்கு அரபு மொழி தெரிந்திருந்தாலும், தன்னுடன் பேசும்போது அவர் ஹீப்ரு மொழியில் பேசுவதையே சின்வார் விரும்பியதாக யாரி தெரிவித்தார்.

“ஹீப்ரு மொழியில் பேசுவதை மேம்படுத்திக் கொள்ள அவர் நினைத்தார். சிறைப் பாதுகாவலர்களைவிட ஹீப்ரு மொழியை நிபுணத்துவத்துடன் பேசும் யாரோ ஒருவரிடம் இருந்து அவர் ஏதோவொன்றை அடைய விரும்பியதாக நினைக்கிறேன்,” என்கிறார் யாரி.

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரை விடுவிப்பதற்குப் பதிலாக, பாலத்தீன, இஸ்ரேலிய அரபு சிறைக் கைதிகள் 1,027 பேரை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சின்வார் 2011ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த கிலாட் ஷாலிட் கூறுகிறார்.

ஹமாஸின் மூத்த படைத் தளபதியான சின்வாரின் சகோதரர் தன்னை, மற்றவர்களுடன் சேர்ந்து கடத்தி, ஐந்து ஆண்டுகள் சிறைபிடித்ததாக, ஷாலிட் கூறுகிறார். இஸ்ரேலிய வீரர்கள் பலரைக் கடத்த வேண்டும் என சின்வார் பின்னர் அழைப்பு விடுத்தார்.

அந்த நேரத்தில், காஸா முனையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, யாச்செர் அராஃபதா கட்சியைச் சேர்ந்த தன்னுடைய எதிரிகள் பலரை உயரமான கட்டடங்களில் இருந்து தூக்கி எறிந்து ஹமாஸ் கொன்றது.

கொடுமையான நன்னடத்தை விதிகள்

சின்வார் மீண்டும் காஸாவுக்கு திரும்பியபோது, அவர் உடனடியாக தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸின் நிறுவன தலைவராக இஸ்ரேலிய சிறைகளில் தனது பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்த பெருமைக்காக அவர் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

ஆனால், “தன் கைகளாலேயே பலரை கொன்ற நபர் அவர். பலரும் அவரைப் பார்த்து பயந்தனர். அவர் மிகவும் கொடூரமான, ஆக்ரோஷமான, அதேசமயம் வசீகரிக்கக்கூடிய நபராகவும் இருந்தார்,” என்கிறார் மைக்கேல்.

“அவர் நன்றாக சொற்பொழிவாற்றக்கூடிய நபர் அல்ல” எனக் கூறும் யாரி, “மக்களை நோக்கி அவர் பேசும்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பேசுவதாகவே தோன்றும்” என்கிறார்.

சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே, அஸிஸடின் அல் அசம் படைப்பிரிவு மற்றும் அதன் தலைவர் மார்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு, காஸா முனையில் ஹமாஸின் அரசியல் பிரிவு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2017ஆம் ஆண்டு அதன் தலைவரானார்.

சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் முக்கியப் பங்கு வகித்தார். இஸ்ரேலின் பல தாக்குதல் முயற்சிகளில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறினார். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததாக ஹமாஸால் அறிவிக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் இன்னும் உயிரோடு இருக்கலாம் என்றும், காஸாவில் பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதையில் ஹமாஸ் ராணுவப் பிரிவில் அவர் செயல்படலாம் என்றும், அக்டோபர் 7 தாக்குதலில்கூட அவர் பங்கு வகித்திருக்கலாம் என்றும் ஊடக செய்திகள் வலம் வந்தன.

 
முகமது சின்வார்
படக்குறிப்பு, முகமது சின்வார்

தன்னுடைய இரக்கமின்மை மற்றும் வன்முறை குணம் காரணமாக சின்வார், கான் யூனிஸின் கசாப்புக்காரர் (Butcher) என்ற பட்டப்பெயரை பெற்றார்.

“சின்வார் கொடுமைமிக்க நன்னடத்தை விதிகளைச் செயல்படுத்தியதாக” கூறிய யாரி, அவற்றுக்குக் கட்டுப்படாவிட்டால், “தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்பதை” ஹமாஸ் படையினர் அறிவார்கள் என்றார்.

கையாடல் மற்றும் தன்பாலின உறவில் ஈடுபட்டதாக, ஹமாஸ் தளபதி மஹ்மூத் இஷ்டிவி-யை (Mahmoud Ishtiwi) சிறைப்படுத்தி, கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக சின்வார் பரவலாக அறியப்படுகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், சர்வதேச ஊடக சந்திப்பு ஒன்றில், அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான எதிர்ப்புகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து காஸா பகுதியைப் பிரிக்கும் எல்லை வேலியைத் தகர்க்கும் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்குத் தனது ஆதரவை குறிப்பால் உணர்த்தினார்.

கடந்த ஆண்டு மேற்குக் கரையில் பாலத்தீன அதிகார அமைப்பை (PA) ஆதரிக்கும் பாலத்தீனர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறியிருந்தார்.

எனினும், இஸ்ரேலுடன் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு, கைதிகள் பரிமாற்றம் மற்றும் பாலத்தீன அதிகார அமைப்புடன் நல்லிணக்கம் என, நடைமுறைக்கேற்ப முடிவுகளை அவர் எடுத்துள்ளார். தன் எதிரிகளால் அவர் மிதவாதி எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

 

இரானுடன் நெருக்கம்

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சின்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்தது மோசமான தவறு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பலரும் கருதினர்.

அதிகளவிலான பணி அனுமதிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான ஊக்கம் காரணமாக, ஹமாஸ் போர் மீதான தனது நாட்டத்தை இழந்திருக்கும் என்ற தவறான நம்பிக்கையால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். இது நிச்சயமாக ஒரு பேரழிவு தரும் தவறான நம்பிக்கையாக மாறியது.

“பாலத்தீனத்தை விடுதலை செய்ய விதிக்கப்பட்ட நபர்” என சின்வார் தன்னைத் தானே கருதியதாக யாரி கூறுகிறார். மேலும், அவர், “காஸாவில் பொதுளாதார நிலைமை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை” என்றும் அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை சின்வாரை “உலகளாவிய பயங்கரவாதி” (Specially Designated Global Terrorist) என அறிவித்தது. கடந்த மே 2021இல் காஸா முனையில் உள்ள இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது வீடு மற்றும் அலுவலகம் இலக்கு வைக்கப்பட்டது.

அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் அதன் அரசியல் பிரிவை இணைப்பதில் முக்கிய நபராக அவர் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஸிஸடின் அல் அசம் படை அக்டோபர் 7 தாக்குதலை வழிநடத்தியது.

கடந்த அக்டோபர் 14, 2023 அன்று, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், சின்வாரை “தீய சக்தியின் உருவம்” எனக் கூறியிருந்தார். மேலும், “அவரும் அவருடைய குழுவினரும் எங்களின் கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் அவரை அடைவோம்” என்றார்.

சின்வார் இரானுடனும் நெருக்கமான நபராக இருந்தார். சன்னி அரபு அமைப்பானது, ஷியா நாட்டுடன் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கமானது அல்ல. ஆனாலும், இஸ்ரேலை அழித்து, அதன் ஆக்கிரமிப்பில் இருந்து ஜெருசலேமை “சுதந்திரப்படுத்துவது” எனும் ஒரே இலக்கை அவர்கள் கொண்டிருந்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டில் எகிப்து எல்லையில் சின்வார் (நடுவில் இருப்பவர்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2017-ம் ஆண்டில் எகிப்து எல்லையில் சின்வார் (நடுவில் இருப்பவர்)

அவர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்தனர். ஹமாஸுக்கு நிதியுதவி, பயிற்சி மற்றும் ஆயுதங்களை இரான் வழங்கியது. அதன் ராணுவ திறன்களை மேம்படுத்தவும், இஸ்ரேலிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கவல்ல ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளையும் வழங்கியது.

அந்த ஆதரவுக்கு சின்வார் தனது நன்றியுணர்வை 2021ஆம் ஆண்டு தன்னுடைய உரையில் தெரிவித்தார். “இரான் இல்லாமல் இருந்திருந்தால், பாலத்தீனத்தின் எதிர்க்கும் திறன் தற்போதைய நிலையை அடைந்திருக்காது” என்றார்.

யாஹ்யா சின்வாரை இழந்தது ஹமாஸுக்கு பெருத்த அடியாக இருக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹனியேவுக்கு பதிலாக ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபோது, சவால்களைக் கடந்து, மீண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்பட்டது. அவரைவிட சமரசமற்ற ஒரு தலைவரை அக்குழுவால் தேர்வு செய்திருக்க முடியாது.

காஸா முனையை அழித்தொழித்த இஸ்ரேலின் ஓராண்டு ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது முடிவெடுக்க வேண்டும். அல்லது, அதற்கு முரணாக, இந்த மோதலால் பாலத்தீன மக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள போதிலும், இஸ்ரேலை எதிர்த்துச் சண்டையிட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் “90% எட்டப்பட்டதாக” சமீபத்தில் தெரிவித்திருந்தார். சின்வார் கொலையின் மூலம் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்பலாம்.

இல்லையேல் அதற்கு மாறாக, முன்னெப்போதையும்விட கோபமான ஹமாஸ் உறுப்பினர்களை எந்தவிதமான சமரசத்தில் இருந்தும் விலக்கி வைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

ஜான் கெல்லி வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் சிசேரியா நகரில் ட்ரோன் எச்சரிக்கை!

லெபனானில் இருந்து வந்த ஒரு ஆளில்லா விமானத்தால் ஒரு வீடு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (74) அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியின்படி, நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவோ அவரது மனைவியோ இருவரும் வீட்டில் இருக்கவில்லை.

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,“சனிக்கிழமை காலை லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த மூன்று ஆளில்லா விமானங்கள் கடைசி நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டன. அதில் இரண்டு தடுத்து நிறுத்தப்பட்டனஎன்றிருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

இஸ்ரேலின் சிசேரியா நகரில் ட்ரோன் எச்சரிக்கை!

லெபனானில் இருந்து வந்த ஒரு ஆளில்லா விமானத்தால் ஒரு வீடு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (74) அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியின்படி, நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவோ அவரது மனைவியோ இருவரும் வீட்டில் இருக்கவில்லை.

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,“சனிக்கிழமை காலை லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த மூன்று ஆளில்லா விமானங்கள் கடைசி நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டன. அதில் இரண்டு தடுத்து நிறுத்தப்பட்டனஎன்றிருக்கின்றது.

இனி இதுதான்....... வாழ்க்கை முழுக்க பெரிய தாக்குதல் ஏதுமில்லாமல் சும்மா சும்மா இஸ்ரேலுக்கு சொட்டிக்கொண்டே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மரணம் என்றால் உண்மையில் என்ன?" / பகுதி : 02     மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளைவிப்பது. மனிதன் மறக்க விரும்புவது, ஆனால் அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது. பிறந்த கணத்திலிருந்து பயணம் அதை நோக்கித்தான் நகர்கிறது. எதிர்காலத்தில், அடுத்த வினாடியில் எதுவெல்லாம் நடக்க வேண்டும் மென்று ஆசைப் படுகிறோமோ, திட்டமிடுகிறோமோ, உழைக்கிறோமோ, அவையெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். ஆனால் நம்மைக் கேட்காமலேயே நமக்கு நிச்சயமாக நடக்கப்போவது மரணம் மட்டுமே! அது மட்டுமல்ல, அது எப்போது வரும், எப்படி வரும் என்பது கூட நமது அறிவிற்கு எட்டாததாகவே எப்போதும் இருக்கிறது.   2000 ஆம் ஆண்டில் புட்டபர்த்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்துக் கொள்ளும் சாய்பாபா, "நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்" என்று உறுதிபட ஆருடம் கூறினார். அதன் பின் பலமுறை அவர் ஆருடம் கூறி வந்துள்ளார். ஆயினும் அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே பல வார காலம் கடும் நோய்வாய்பட்டு, தீவிர சிகிச்சை பலனளிக்காமல், ஏப்ரல் 24 , 2011 இயற்கை எய்தினார். கடவுள் அவதாரம் எடுத்தவருக்கே தன் 'இறப்பு' அல்லது அவர் பாணியில் 'அவதாரத்தை முடித்துக் கொள்ளும் நாள்' தெரியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடவுளின் அவதாரம் என சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிய அவர் ஏன் இந்த உலகை விட்டு மறையப்போகிறோம் என்பதை முன் கூட்டியே சரியாக கூற முடியவில்லை? மற்றும் வேடிக்கை என்னவென்றால், அவரது கை பட்டு மற்றவரின் நோய் தீர்க்க தெரிந்த அவருக்கு அவரது உடல்நலம் பேண நவீன மருத்துவ வசதி தான் வேண்டியிருந்தது என்பதே ? எனவே, உண்மையில் இறப்பு என்றால் என்ன?   மூச்சு நிற்பது இறப்பா ? இல்லை, இதயத் துடிப்பு நிற்பது இறப்பா ? இல்லை, மூளை சிந்திக்காமல் நிற்பது இறப்பா ? இல்லை, இரத்த ஓட்டம் நிற்பது இறப்பா ? இல்லை, மேற்கூறியவற்றில் ஏதாவது, ஒன்றுக்கு மேற்பட்டவை நிற்பது இறப்பா ? அல்லது எல்லாமே நிற்பது இறப்பா ? இல்லை, இவற்றை விட வேறு பல காரணங்கள் இருக்கின்றனவா? பொதுவாக இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை, சாதாரண மக்களாகிய‌ நாம், மரண‌‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?   மருத்துவ அறிவியலின் படி, மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம். முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போவதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம். மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள். அதை நாம் "மருத்துவச் சாவு" (Cardiac death / Clinical death) என்றும், "மூளைச் சாவு"(brain death / Cerebral death) என்றும் குறிப்பிடுகின்றோம்.   மருத்துவச் சாவுக்கும் [கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த்] மூளைச் சாவுக்கும் [செ‌ரிபர‌ல் டெ‌த்] உள்ள வித்தியாசம் மிக மிக சிறிதே. உண்மையில், ஒரு சில முக்கியமான, தீர்மானிக்கிற நிமிடங்களே இவை இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் ஆகும். மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும். அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்றுவிடுகின்றன. இதயம் நின்று போய்விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை இந்த மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. இக் கால வரம்பிற்குப் பிறகு, ஆக்ஸிஜன் [பிராணவாயு] பற்றாக் குறையால் மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுகிறது. இதையே மூளைச் சாவு என்கிறோம். மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது. இ‌ப்போது தா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது. எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.   சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் 30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் சராசரியாக 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மூப்படைதல் ஒரு உயிர் வேதியியல் செயன்முறையாகும் [biochemical process].அதனால் மனிதன் அதனை குறுக்கிடு செய்து எப்படி அதை இன்னும் தாமதமாக்கலாம் என்பதை வருங்காலத்தில் அறிவான் என நாம் நம்பலாம்.   பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் [Encyclopedia Britannica] முதல் பதிப்பில் இறப்பு என்பது "உயர் உடலில் இருந்து பிரிவது" என சமய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மனித உடலைப் பற்றிய எமது இன்றைய மேலதிக அறிவால், பதினைந்து பதிப்பின் பின், அது முப்பது தடவை நீளமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளி அடையாளங்களான மூச்சு விடுதல், இதய துடிப்பு போன்றவை நின்றாலும் அல்லது இல்லாமல் போனாலும், இன்னும் அந்த நபர் சாகாமல் இருபதற்கு சந்தர்ப்பம் உண்டு என இப்ப மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள். செயற்கை இதயம் [mechanical heart], சுவாசிபதற்கான கருவி [breathing aids] மற்றும் நரம்பு வழி உணவு செலுத்துதல் [intravenous feedings] போன்றவற்றால், மருத்துவர் ஒருவர் நோயாளியை, அவர் ஆழமான எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்க நிலையில் [deep coma] இருந்தாலும், அவரை பல மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ உயிர் உடன் வைத்திருக்க முடியும் என்பதால். இன்று, இறப்பு என்ற சொல்லின் சொற்பொருள் விளக்கத்திற்கு மேலும் சில சேர்க்க வேண்டி உள்ளன. எனவே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மரணம் என்பதற்கு எம்மால் ஒரு விளக்கம் கட்டாயம் இன்று கொடுக்க முடியும். ஆனால், உண்மையான கேள்வி என்னவென்றால், இறந்த பின் எமக்கு என்ன நடக்கிறது? மற்றும் எம்மை விட்டு பிரிந்த அன்பு உயிர்களை, நாம் மீண்டும் காண, சந்திக்க முடியுமா? உதாரணமாக, ஆன்மீக நூலான பகவத் கீதை என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.     देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥ तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥ dehino ’smin yathā dehe kaumāraṁ yauvanaṁ jarā tathā dehāntara-prāptir dhīras tatra na muhyati   "ஆத்மாவிற்கு இவ்வுடலில் எங்ஙனம் குழந்தைப் பருவமும், இளமை பருவமும், முதுமை பருவமும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே, ஆத்மாவிற்கு மற்றொரு உடல் பிறப்பும் இந்த உடல் இறந்த பின் தோன்றுகிறது. எனவே, தீரன் [வீரன்] அதில் கலங்கமாட்டான்" என்று பகவத் கீதை 2.13 அறிவுரை கூறுகிறது. அதாவது, உடல் எப்படி மாறி மாறி வந்தாலும், இந்த மூன்று நிலைகளிலும் எவ்விதம் ஆத்மா மாறாததாக உள்ளதோ, அவ்விதமே உடல் மரணித்து வேறு உடல் கிடைக்கும் போதும் அது எவ்வித மாற்றாத்தையும் அடைவதில்லை என்கிறது.     जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च। तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥ jātasya hi dhruvo mṛityur dhruvaṁ janma mṛitasya cha tasmād aparihārye ’rthe na tvaṁ śhochitum arhasi   "பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரண மடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது." என்று பகவத் கீதை 2.27 மீண்டும் அறிவுரை கூறுகிறது. ஆகவே, இறப்பு ஒரு துக்கம் தரும் நிகழ்வு அல்ல. இது எமது இந்த உடலின் பயணத்தின் முடிவு ஆகும். இது ஒரு மாயை, அவ்வளவுதான்.   பொதுவாக, மரணத்தில் இருந்து எவருமே தப்ப முடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுப்பதுடன், ஆனால் மற்றவர்களுக்கு: "ஏன், எதற்கு மரணம் இருக்கிறது?", "எல்லாம் வல்ல கடவுளால் மரணத்தை இல்லாமல் செய்ய முடியாதா?", "எல்லா உயிர்களும் இயற்கையாக ஏன் சதாகாலமும் வாழமுடியாது?" போன்ற கேள்விகளுடன் ஆச்சரியமடைய வைக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • உண்மையில் சனாதிபதியின் பயிற்சிப்பட்டறை அப்படி. எப்படி எதிரிகளைச் சாய்த்து ஓரங்கட்டுவது என்பதற்கான வியூகங்கள் வியக்க வைக்கிறது. எல்லாம் 14ஆம் திகதிவரை மட்டுமே. அதன்பின்னர் அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்று போட்டுவிடுவார்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • நீங்கள் கேட்ட காணொளி இந்தத் திரியிலே உள்ளதா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்…. இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.