Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இமாம் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையினை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196760

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே அனைத்து விடயங்களும் தெரியும் - உதயகம்மன்பில குற்றச்சாட்டு

image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

udaya_55.jpg

பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21 திகதி வரை ரவி செனவிரத்னவுக்கு 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களின் பெயர்கள் இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் இவ்விரு அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

https://www.virakesari.lk/article/196758

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும் விசாரணைகளை திரிபுப்படுத்தவா செனவிரத்ன, சானி மீளிணைப்பு ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்குங்கள் - உதய கம்மன்பில

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளார்.  அரசியலமைப்பின் 38 ஆவது ஏற்பாடுகளை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும். குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அல்விஸ்' அறிக்கையை பகிரங்கப்படுத்தி அறிக்கையின் பிரதான உள்ளடக்கங்களை குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தகுதியற்றவர்களுக்கு உயர் பதவிகள்

சிறந்த முறையில் நாட்டை நிர்வகிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி  சிறந்தவர்களையும், அறிவானவர்களையும் உயர் பதவிகளுக்கு நியமிக்க வேண்டும். ஜனாதிபதி பதவியேற்றவுடன் மூன்று உயர் பதவிகளுக்கு நியமனங்களை வழங்கினார். அதில் இரண்டு பதவிகளுக்கு நியமித்தவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள்.

ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நபர் அந்த பதவிக்கு தகுதியற்றவர். பதவிக்கான பொறுப்பினை ஜனாதிபதியின் செயலாளர் தெரிந்திருந்தால் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிபுனராட்சி இன்று அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பார்.

பொதுத்தேர்தல் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் சூழல் காணப்படுகிறது. வாக்கெடுப்பு திகதியில் பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே இதற்கு ஜனாதிபதியின் செயலாளர் பொறுப்புக்கூற வேண்டும். ஆகவே தகுதியற்றவரே ஜனாதிபதி செயலாளராக உள்ளார்.

பொலிஸ் விசாரணையின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் நபரையே ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார். தேர்தல் காலத்தில் தனக்கு ஆதரவாக செயற்பட்டவர்களையே ஜனாதிபதி பாதுகாக்க முயற்சிக்கிறார்.இதுவே உண்மை.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை

ஒருமாத காலத்திலேயே இந்த அரசாங்கம் பாரதூரமான தவறிழைத்துள்ளது.  இந்த இரண்டு அறிக்கைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. தனது சகாக்களை பாதுகாக்க ஜனாதிபதி அறிக்கைகளை பகிரங்கப்படுத்தவில்லை. ஆகவே ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஜனாதிபதி நாட்டு மக்களின் சிந்திக்கும் மற்றும் தகவலறியும் உரிமைகளை மீறியுள்ளார். ஆகவே ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளார். அரசியலமைப்பின் 38 ஆவது ஏற்பாடுகளை மீறியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர முடியும்.

ரவி செனவிரத்ன, சானி அபேசேகரவை இணைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன ?

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான தொழிலதிபர் இப்ராஹிமை பாதுகாப்பதற்காக விசாரணைகளை திரிபுப்படுத்துவதற்காகவா ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகரவை ஜனாதிபதி தன்னுடன் இணைத்துக் கொண்டார் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்குங்கள்

அஸ்விஸ் விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்னவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை மேற்கொண்டு அவருக்கு தண்டனையளிக்குமாறும், அத்துடன் பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய 17 உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். குற்றவாளி தலைமையில் எவ்வாறு நியாயமான விசாரணைகளை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

கத்தோலிக்க சபைக்கு மாத்திரம் தனியுரிமை கிடையாது

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகளை தெரிந்துக் கொள்ளும் தனியுரிமை கத்தோலிக்க சபைக்கு மாத்திரம் கிடையாது. ஏனெனில் குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் கத்தோலிக்கர்களை போன்று ஏனைய மதத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்.

கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் இடம்பெறுவதாக கத்தோலிக்க சபை குறிப்பிடுகிறது. விசாரணைகளை மேற்கொண்ட அறிக்கைகளில் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே இவர்களின் தலைமையில் சிறந்த விசாரணைகளை எதிர்பார்க்க முடியுமா ? என்றார்.

https://www.virakesari.lk/article/196800

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் சின்னன் சின்னனா குண்டுவெடிக்குது..இரண்டு பிரச்சார மேடையில் நம்ம சனாதிபதி பெரிய பேச்சு பேசியிருக்கிறார்..ஒன்றிலும் தமிழினம் பற்றி...நோ மூச்...அட வடக்கு கிழக்கு சனங்களை விடுங்கப்பா...அனுர யாழ் விசிறிகளே ...மூச்சு விடக்காணம்....அட மொழிபெயர்ப்பாளர்களே ..நீங்களாவது...உள்ளுடன் சேர்த்து விடுங்கப்பா..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

இப்பத்தான் சின்னன் சின்னனா குண்டுவெடிக்குது..இரண்டு பிரச்சார மேடையில் நம்ம சனாதிபதி பெரிய பேச்சு பேசியிருக்கிறார்..ஒன்றிலும் தமிழினம் பற்றி...நோ மூச்...அட வடக்கு கிழக்கு சனங்களை விடுங்கப்பா...அனுர யாழ் விசிறிகளே ...மூச்சு விடக்காணம்....அட மொழிபெயர்ப்பாளர்களே ..நீங்களாவது...உள்ளுடன் சேர்த்து விடுங்கப்பா..

நீங்கள் வேற...

அப்படியே சிக்கல் வளர தமிழருக்கு நாலு சாத்து சாத்த எல்லாம் மறைஞ்சு போகும்....??? 😭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது கத்தோலிக்க திருச்சபை

image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.

உதயகம்மன்பில வெளியிட்ட அறிக்கையில் இரண்டு அரசாங்க அதிகாரிகளிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளது.

நாங்கள் இன்று எங்களின் நிலைப்பாட்டினையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த எங்களின் பதில்களையும் வெளியிடுவோம் என அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196818

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதய கம்மன்பிலவின் தேவைக்காக ஷானி, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாது - விஜித ஹேரத்

image
 

உதய கம்மன்பிலவின் தேவைக்காக ஷானி அபேசேகர, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாதுதென அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/196835

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

வி செனவிரத்ன, சானி அபேசேகரவை இணைத்துக் கொண்டதன் நோக்கம் என்ன ?

குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான தொழிலதிபர் இப்ராஹிமை பாதுகாப்பதற்காக விசாரணைகளை திரிபுப்படுத்துவதற்காகவா ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகரவை ஜனாதிபதி தன்னுடன் இணைத்துக் கொண்டார் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்குங்கள்

இரண்டு அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போதும் இதுபற்றி மூச்சு விடாத உதயன் கம்மன்பில இப்போ தானாக முன்வந்து இதனை வெளியிடுவதும், அவர்களை பதவி விலக்க வேண்டுமென்றும் அடம் பிடிப்பதற்கும் பின்னால் இவருக்கும் அவர்களுக்குமிடையில் ஏதோ பிணக்கு இருக்கிறது போல் தெரிகிறது, அதனால் முந்திக்கொண்டு அவர்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கிறாரோ என சந்தேகம் எழுகிறது. எதற்கும்  கொஞ்சம் அமைதியாய் இருப்போம் அவர்களால் வெளிவரும். அட..... கோத்தா, மஹிந்தா, சரத் பொன்சேகாவை அமைச்சர்களாக நியமித்திருந்தால் முக்கிய தகவல்கள் வெளிவந்திருக்கும் போலிருக்கிறதே.

1 hour ago, ஏராளன் said:

நாங்கள் இன்று எங்களின் நிலைப்பாட்டினையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த எங்களின் பதில்களையும் வெளியிடுவோம்

"கலகம் பிறந்தாற்தான் நிஞாயம் பிறக்கும்." நீங்கள் உங்களின் அறிக்கையை வெளியிடுங்கள், அவர்கள் தங்கள் அறிக்கையை வெளியிடட்டும், அதை தொடர்ந்து இதனோடு சம்பந்தப்பட்டமற்றவர்களும் வெளியிடட்டும். குற்றவாளிகளை கைது செய்ய இலகுவாக இருக்கும்."உப்பு போட்ட பாண்டமும் நியாயங்கற்ற நெஞ்சும் தட்டி உடையாமல் தானே உடையுமாம்." சொல்லுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறோம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நோக்கத்துடனேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்- விஜித ஹேரத்

image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வெளியிட்டுள்ள அறிக்கைகள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

இரண்டு அறிக்கைகளும் அரசியல் நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகள் பூர்த்தியான பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கவேண்டுமா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. எனினும் விசாரணைகளின் பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும்.

2019 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் உயர்நீதிமன்றமும் இரண்டு சிஐடி உத்தியோகத்தர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.

உயர்நீதிமன்றமும் ஆணைக்குழுவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல அரசாங்க அதிகாரிகள் தாக்குதலை தடுக்க தவறியமையால் குற்றவாளிகள் என தெரிவித்திருந்தது.

உரிய புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்த தவறினார்கள் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அவர்களை நஷ்ட ஈட்டை செலுத்துவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் எந்த இடத்திலும் ஷானி அபயசேகரவும் ரவி செனிவிரட்ணவும் குற்றவாளிகள் என தெரிவிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/196839

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.