Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, Kapithan said:

மிஸ்ரர் கந்தையரின் சங்காத்தமே வேண்டாமென்றுதான் நான் ஒதுங்கியிருக்கிறேன்

என் கட்சிக்காரர் அப்படி என்ன செய்யக்கூடாத கோதாரிகளை செய்து விட்டார்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை சொல்லியிருந்தார், அதை சொல்லியிருந்தார் ஆகவே அவர் அதை நிறைவேற்றுவார், என்னை பிரதமமந்திரி பதவி ஏற்க அழைத்தார் அப்போது என்று இன்று அனுரா வென்றபின் கதை விடுகிறார், தன்னை பிரதமந்திரி பதவிக்கு அழைக்கக்கூடும் என்று எதிர் பார்த்திருக்கும் இவர்,  ஏன் சஜித் ஆதரவு எடுத்தார்? அன்று, சஜித்துக்கு வாக்களிக்கும்படி கூறிய இவர் இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனம் என்கிறார். அப்போ ஏன் அந்த பொது வேட்பாளர் அழுத்தத்தை இவர் விமர்சித்தார்? இரண்டாயிரமாம் ஆண்டு சந்திரிகா கொண்டுவந்த திட்டத்தை இன்றுவரை நடைமுறைப்படுத்தாததன் காரணம் என்ன? பண்டாரநாயக்க செல்வா ஒப்பந்த காலம் முதல் இதுதான் வரலாறு. செய்வோம் என்பார்கள், செய்ய மாட்டார்கள். நாங்கள் யாரையும் நம்புவது கிடையாது என்கிறார். நல்லாட்சி தேர்தலுக்கு முன் சந்திரிக்கா எழுத்துமூலம் செய்வோம் உடன்படிக்கை என்று கேட்ட போது, நாங்கள் உங்களை நம்புகிறோம், எழுத்தெல்லாம் வேண்டாம் என்று கூறினேன் என்றார் இவர். சரி.... மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானத்தை தான் அறிவிப்பதே தவிர, தான் முடிவும் எடுப்பதில்லை, நான் எங்கேயோ இருந்தேன் என்கிறார். சரி.... அவர்கள் எடுத்த முடிவை இவர் ஏன் அறிவிக்க வேண்டும்? தான் பேச்சாளராம்! அந்தப்பதவி எப்போவோ காலாவதியாகிவிட்டது, இன்னும் ஏன் அதை கட்டிப்பிடித்து உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்? மது பான அனுமதி பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடும்படி கேட்டோடினது சிறீதரனை தேர்தலில் போட்டியிடாமல் அகற்றுவதற்கே. அவரை அகற்றியிருந்தால்; சுமந்திரனின் அரசியல் கனவு அதோடு கலைந்திருக்கும். ஆனால் தப்பித்து விக்கினேஸ்வரன் மாட்டினார். ஆனால் அவர் தன் தவறை ஏற்றுக்கொண்டார், யாரையும் குற்றம் சாட்டவில்லை, கதையை திசை திருப்பவில்லை. அவர் தான் கொடுத்த வாக்கின்படி இளைஞருக்கு தேர்தலில் இடம் விட்டு விலகிக்கொண்டார். சுமந்திரன் சொல்வதுபோல் அவர் சாராய அனுமதி பெற்று பகிரங்கப்படுத்தப்பட்டதால் விலகினார் என்று வைத்தாலும், அவர் தனது தவறுக்கு பொறுப்பேற்று விலகியது நேர்மைத்தனமே ஒழிய கோழைத்தனமல்ல. இன்று ஒரு பத்திரிகைக்கு சுமந்திரன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதாவது இந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிட சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாமென தான் கூறியதாகவும், அவர் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து செயற்பட்டதாகவும், அதற்கு சி .வி .கே. சிவஞானம் தேர்தல் காலத்தில் அப்படி செய்தால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று சொன்னதால் தான் கட்டுப்பட்டதாக. அப்போ; தேர்தலுக்காக முடிவை மாற்றிக்கொண்டார், தோற்றுவிடுவோம் என்கிற பயம். இவர் கட்சியின் தீர்மானத்தை மதித்து நடந்தவரா மற்றவர்களை அகற்ற? நேற்று இதே கேள்வியை  கேட்ட போது அதாவது தனக்கெதிராக பலபேர் செயற்படுவதாக சிறீதரன் கூறியிருக்கிறாரே, அவர் யாரை குறிப்பிடுகிறார்? உங்களையா எனக்கேட்டபோது, எனக்கு தெரியாது, அவரைத்தான் கேட்கவேண்டும், நான் தான் அவரை தலைவர் பதவியை ஏற்கும்படி வற்புறுத்தினேன் என்றார். இன்று இப்படி சொல்கிறார். நாக்கில் சுத்தமில்லை. எந்தப்பக்கமும் கதைப்பார். அனுரா, தான் செய்ய விரும்புவதை செய்வார். யாரும் சொல்லி அவர் செய்யப்போவதில்லை. ஆனால் அதற்கு தான் உரிமை கொண்டாட வலியப்போய் முட்டுக்கொடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

என் கட்சிக்காரர் அப்படி என்ன செய்யக்கூடாத கோதாரிகளை செய்து விட்டார்? 😎

மை லோட், 

 கூண்டில் நிற்கும் எதிர்த் தரப்பு கந்தையர், வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்கிறார். மாரீசன்கூடலுக்கு  வழி கேட்டால்,  இளவாலை, பண்டைத்தரிப்பு, சில்லாலை ஏறு என்கிறார்.

லொள்ளு தாங்க முடியவில்லை மை லோட். அவருக்கு அன்னியன் பட அம்பி என்கிற நினைப்பு,...

அவரால் எனக்கு யாழ்.கொம் பக்கமே வரப் பிடிக்கவில்லை யுவர் கொணர்,......

🤣

  • கருத்துக்கள உறவுகள்

1969 .பொ.. சாதாரணப் பரீட்சை. அன்று ஆங்கிலப்பாட சோதனை. நடுத்தர வயது மனிதர் ஒருவரும்  பரீட்சை  எழுத மண்டபத்திற்கு வந்திருந்தார். ஒரு நண்பன் சொன்னான், “ அவர்தான் தமிழரசுக்கட்சி எம்.பி. கே.துரைரத்தினம். சட்டம் படிக்க ஆங்கிலத்திலே கிறெடிற் தேவை. அதுக்குத்தான் சோதனைக்கு வந்திருக்கிறார்என்றான். கே.துரைரத்தினம் முதலில் வாத்தியார். எம்பி ஆனதன் பின்னால் சட்டம் படித்தார்.

அரசியல் என்பது சட்டத்தோடு பின்னிப் பிணைந்தது. சட்டத்தரணிகள் எம்பிகளாக வருவது அனுகூலமே.

எங்களுடைய பிள்ளையான் மாதிரி எம்ஜிஆர், காமராஜர் எல்லாம் மாநில முதல்வர்கள்.  ரீகன் ஒரு பட்டதாரி மட்டுமல்ல அவருக்கு வேறு தகமைகளும் இருக்கின்றன.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, “தமிழக அரசு சார்பாக, இலங்கைப் போராளிகளுக்கு ஆயுதம் வாங்க 4 கோடி தரப்படும்என்று அறிவித்தார். அவரது அறிவித்தலைக் கேட்ட இந்திரா காந்தி மிரண்டு போனார். “யோவ் இதெல்லாம் மத்திய அரசு செய்யும் வேலை. உனது மாநிலத்தை மட்டும் பார் போதும்என இந்திரா காந்தி அதட்டி வைக்க, கருணாநிதியிடம் மாட்டிக் கொண்டார். உடனடியாக பல்டி அடித்து, தமிழர்களது புனர்வாழ்வுக்காக தனது சொந்தப் பணம் (?) நாலு கோடியை புலிகளுக்குக் கொடுத்து தப்பித்துக் கொண்டார். அரசியல் அறிவு மட்டுமல்ல, சட்டமும் தெரிந்திருக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.