Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

large.IMG_6014.jpg.03835757b7400ca5fdc5e9a83f92da13.jpg

நம்பிக்கை ஒளி தெரிகிறது!
********************************


பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து
பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி
புதுமுக வரவால் பொங்குது மண்றம்
பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை
குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை
கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை
கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை.

இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை
இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை
எனிவரும் காலம் பஞ்சமுமில்லை
எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை.

தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை
தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர்
போரின் அவலத்தை புரிந்ததேயில்லை
போன கதிரயை மறப்பதேயில்லை.

தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு
தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு
அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

அன்புடன் -பசுவூர்க்கோபி.
 

Edited by பசுவூர்க்கோபி

  • கருத்துக்கள உறவுகள்

75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?! 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பசுவூர்க்கோபி said:

 

large.IMG_6014.jpg.03835757b7400ca5fdc5e9a83f92da13.jpg

நம்பிக்கை ஒளி தெரிகிறது!
********************************


பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து
பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி
புதுமுக வரவால் பொங்குது மண்றம்
பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை
குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை
கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை
கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை.

இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை
இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை
எனிவரும் காலம் பஞ்சமுமில்லை
எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை.

தமிழர் தரப்பிலே ஒறுமையில்லை
தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர்
போரின் அவலத்தை புரிந்ததேயில்லை
போன கதிரயை மறப்பதேயில்லை.

தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு
தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு
அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

அன்புடன் -பசுவூர்க்கோபி.
 

நம்பிக்கை தரும்... அருமையான கவிதையை எழுதிய பசுவூர்க்கோபிக்கு நன்றி. 
புதிய அரசு... தமிழ் மக்களின் நீண்ட கால ஏக்கத்தையும், துயரத்தையும் போக்க முன் வர வேண்டும். இராணுவ  முகாம் அகற்றுதல், பாதை திறப்பு போன்ற விடயங்கள் நல்ல முன்மாதிரியாக உள்ளது.   பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?! 

75 வருடத்தைவிட
இது புதுமையாக தென்படுகிறது

என்றுநினைக்கிறேன்.

கருத்துக்கு மிக்கநன்றிகள் ஏராளன் அவர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

நம்பிக்கை தரும்... அருமையான கவிதையை எழுதிய பசுவூர்க்கோபிக்கு நன்றி. 
புதிய அரசு... தமிழ் மக்களின் நீண்ட கால ஏக்கத்தையும், துயரத்தையும் போக்க முன் வர வேண்டும். இராணுவ  முகாம் அகற்றுதல், பாதை திறப்பு போன்ற விடயங்கள் நல்ல முன்மாதிரியாக உள்ளது.   பொறுத்திருந்து பார்ப்போம்.

75 வருடத்துக்குப் பின் புதிய அரசின் வரவு நம்பிக்கை தருமென நினைக்கிறேன்
உங்களின் கருத்தே நானும்விரும்புகிறேன்.
உளமார்ந்த நன்றிகள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பசுவூர்க்கோபி said:

இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை
இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை
எனிவரும் காலம் பஞ்சமுமில்லை
எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை

கேட்க வாசிக்க நன்றாக இருந்தாலும்  இவர்கள் மீதான நம்பிக்கை என்பது மட்டும் என்னவோ இன்னும்   என் போன்ற பலரதும் மனதிலும்   தோன்றவில்லை

நம்பிக்கையே வாழ்க்கை என்று தொடரவும் முடியவில்லை.
 
சிங்கள பௌத்த அரசுகள் பல இவர்களுக்கு முன்னே வந்து பல வாக்குறுதிகளை ஈழத் தமிழ் மக்களின் முன் வைத்து ஏமாற்றிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைப்பது  இந்த NPP  யின் அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தராமல் ஏமாற்றி விட்டு

அடுத்து வேறு ஒரு கட்சியிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது
 

அதாவது   அடுத்த தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்து  வெளியேறும் பொழுது 

அடுத்த நூறு வருடங்களுக்கு

அவர்களுடைய எதிர்காலம் இருட்டினில் கவிழ்ந்து விடும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, பசுவூர்க்கோபி said:

நம்பிக்கை ஒளி தெரிகிறது!

கவிதையில் வரும் எதிர்பார்ப்புகளில் தப்பில்லை. அந்த நம்பிக்கையை நான் நம்ப மாட்டேன்.

எல்லா இனவாத முகங்களையும் பார்த்து விட்டோம். தற்போதைய ஆட்சியாளர்களின் முன்னாள் இனவாத முகங்கள் உட்பட......

இன்று பழைய கட்சிகளின் செயல்களை விட இந்த புதுமைவாத கட்சி என்ன செய்கிறதென்பதையும் பார்க்கலாம்.

இளையவர்களும் பழையவர்களைப் போல் அப்படித்தான் என இந்த தோழர் ஆட்சியில் நிறுவுவார்களா  என சிலமாதங்கள் பொறுத்திருந்து காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

 

எல்லோருடைய ஆவலும் இது தான். காலம் பதில் சொல்லும் பொறுத்திருப்போம். காலத்துக்கேற்ற கவி வரிகளோடு   வரும் தங்களுக்கு நன்றி  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாத்தியார் said:

கேட்க வாசிக்க நன்றாக இருந்தாலும்  இவர்கள் மீதான நம்பிக்கை என்பது மட்டும் என்னவோ இன்னும்   என் போன்ற பலரதும் மனதிலும்   தோன்றவில்லை

நம்பிக்கையே வாழ்க்கை என்று தொடரவும் முடியவில்லை.
 
சிங்கள பௌத்த அரசுகள் பல இவர்களுக்கு முன்னே வந்து பல வாக்குறுதிகளை ஈழத் தமிழ் மக்களின் முன் வைத்து ஏமாற்றிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
 

அடிக்குமேலடிவிழுந்து எழமுடியாத எமக்கு ஏகேடியாரின் உரையில் சில மாற்றம் தெரிகிறது. அது ஏமாற்றமா?என்பதை பொறுத்திருந்து பார்போம். 
உங்கள் கருத்துக்கு உளமார்ந்த நன்றிகள்.வாத்தியார். 

15 hours ago, குமாரசாமி said:

கவிதையில் வரும் எதிர்பார்ப்புகளில் தப்பில்லை. அந்த நம்பிக்கையை நான் நம்ப மாட்டேன்.

எல்லா இனவாத முகங்களையும் பார்த்து விட்டோம். தற்போதைய ஆட்சியாளர்களின் முன்னாள் இனவாத முகங்கள் உட்பட......

இன்று பழைய கட்சிகளின் செயல்களை விட இந்த புதுமைவாத கட்சி என்ன செய்கிறதென்பதையும் பார்க்கலாம்.

இளையவர்களும் பழையவர்களைப் போல் அப்படித்தான் என இந்த தோழர் ஆட்சியில் நிறுவுவார்களா  என சிலமாதங்கள் பொறுத்திருந்து காத்திருப்போம்.

மற்றவர்களைவிட இவரின் கருத்தில் சில மாற்றம் தெரிகிறது.நீங்கள் சொல்வதுபோல் பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்கு நெஞ்சார்ந்தநன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2024 at 02:28, நிலாமதி said:

பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம்.

அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு
அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு.

 

எல்லோருடைய ஆவலும் இது தான். காலம் பதில் சொல்லும் பொறுத்திருப்போம். காலத்துக்கேற்ற கவி வரிகளோடு   வரும் தங்களுக்கு நன்றி  

உளமார்ந்த நன்றிகள் அக்கா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.