Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூருல் ஹுதா உமர்-
நாடு யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பலவற்றிலும் சிக்கித் தவித்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்க முஸ்லிம் அமைச்சர்களின் வகிபாகம் அதிகமாக இருந்துள்ளதை நாம் அறிவோம். இப்படியான நிலையில் அமைச்சரவைக்குள் முஸ்லிங்கள் உள்வாங்கப்பட்டமைக்கு காரணமாக முஸ்லிம் எம்.பிக்கள் அனுபவமற்ற தன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கூறும் காரணங்கள் அவர்களின் வேட்பாளர்கள் அவர்களே குறைத்து எடை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து அவர்கள் விடுபட்டு திறமையான பலரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

இன்று ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி அவர்களுக்கு வாக்களிக்காத ஏனைய கட்சி ஆதரவாளர்களுக்கும் இருந்தது. அவர்களது அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து வீணான செலவுகள் கட்டுப்படுத்துவதில் அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மக்கள் மத்தியில் அவர்களை பற்றி நம்பிக்கையை கொண்டு வந்துள்ளதுடன் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய உரிமையை வழங்க மறுத்ததனூடாக முஸ்லிம் சமூகத்தின் அதிருப்தியையும் அவர்கள் எதிர் கொண்டுள்ளார்கள்.

நாங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் நாட்டுக்கு நன்மையான வேலைத்திட்டங்களையும், முன்னெடுப்புக்களையும் ஆதரிக்கிறோம். உதாரணமாக குறைந்த செலவில் தேர்தல் நடத்தியது, வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தலை நடத்தியது, வாக்காளர்களுக்கு தேர்தல் கால லஞ்சத்தை வழங்காமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகளில் கட்டுப்பாடு போன்ற பல விடயங்களை கூறலாம். இப்படியான முன்மாதிரிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஏன் கணிசமான வாக்குகளை வழங்கினார்கள் என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

தமது சமூக அரசியல் தலைமைகளிடமிருந்து மக்கள் எதிர்பார்த்த அரசியல் அடைவுகளை அவர்கள் ஒழுங்கான முறையில் கடந்த காலங்களில் வழங்காமையினாலும், அரசியல் தலைவர்கள் சமூகம் எதிர்பார்த்த விடயங்களில் சிறப்பாக செயற்படாமையினாலும் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் விரக்தி காரணமாகவே தேசிய மக்கள் சக்தியை நோக்கி சிறுபான்மை மக்கள் அணி திரண்டார்கள். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு பிரதிநிதியையாவது அமைச்சரவைக்குள் உள்வாங்காமல் விட்டது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறான நிலைகளிலிருந்து விடுபட்டு தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கைகள் சிறுபான்மை முஸ்லிம் மக்களை அரவணைத்து செல்லும் விதமாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் கூட அமைச்சரவையில் ஒரு சமூகம் சார்ந்தவர் இருப்பது என்பது அந்த சமூகத்துக்கான அங்கீகாரம் என்பதை ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அவ்வாறான அங்கீகாரம் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவில்லை. இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அமைக்கப்பட்ட சகல அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் இடம்பெற்று வந்ததுடன் அவர்கள் எல்லோரும் நாட்டுக்கும், தன் சமூகத்திற்கும் நிறையவே சேவையாற்றியுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 10-15 வருடங்களில் அமைச்சராக இருந்த ஒரு சிலரை தவிர வரலாற்று நெடுகிலும் முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டுக்கும், முஸ்லிம்களுக்கும் நிறைய சேவைகளை வழங்கி உள்ளதை நாம் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், நாட்டின் அந்நிய செலாவணி ஒழுங்குபடுத்தல் கள், உள்நாட்டு உற்பத்தி மேம்பாடுகள், ஏற்றுமதி, இறக்குமதி விடய சீரமைப்புகள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை சிறப்பாக முன்னேற்ற தேசிய மக்கள் சக்தி எடுக்கும் முயற்சிகள் மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் இந்நிலையில் சிறுபான்மை சமூகமொன்று பாதிக்கும் விதமாக அரசாங்கம் நடப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கும் சிறப்பாக அமையாது என்றார்.
 

https://www.importmirror.com/2024/11/blog-post_872.html

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் ஜேவிபி தனது கடந்தகால பட்டறிவில் இருந்து தான் முஸ்லிங்களை அதிகமாக அமைச்சரவையில் உள்வாங்கவில்லை. கடந்தகாலங்களில் ஜேவிபி சார்பாக இரண்டு முஸ்லீங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள், அந்த இரண்டு பேருமே கட்சி மாறினார்கள் ( அஞ்சான் உம்மா, முஹம்மட் முசம்மில்). ஆனால் ஒரே ஒரு தமிழர் தான் பாராளுமன்றம் தெரிவானார்(ராமலிங்கம் சந்திரசேகர்), அவர் கடைசி வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, zuma said:

நான் நினைக்கின்றேன் ஜேவிபி தனது கடந்தகால பட்டறிவில் இருந்து தான் முஸ்லிங்களை அதிகமாக அமைச்சரவையில் உள்வாங்கவில்லை. கடந்தகாலங்களில் ஜேவிபி சார்பாக இரண்டு முஸ்லீங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள், அந்த இரண்டு பேருமே கட்சி மாறினார்கள் ( அஞ்சான் உம்மா, முஹம்மட் முசம்மில்). ஆனால் ஒரே ஒரு தமிழர் தான் பாராளுமன்றம் தெரிவானார்(ராமலிங்கம் சந்திரசேகர்), அவர் கடைசி வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தார்.

அஞ்சான் உம்மாவும், முஹம்மட் முசம்மிலும்... கட்சி மாறி இருக்காவிட்டால் தான் அதிசயம்.
ஆட்சியில் இல்லாத கட்சியில் குந்தி இருப்பது... அவர்களுக்கு நரக வேதனையாக இருக்கும். 
நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ... இவர்கள் கட்சி மாறுவதும் தடுக்க முடியாதது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபியின்  மதம் பார்க்காத இப்படியான  செயற்பாடு மற்றவர்களுக்கும் முன்மாதிரியானது நாட்டுக்க நன்மை தருவது. மதத்தை கட்டி அணைத்து கொண்டிருப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கொடுக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2005-2010 ) மகிந்தவின் கீழ் அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இருந்த முஸ்லீம் பா.உ. கள்*

1.ALM.அதாஉல்லா

2.ரிசாட் பதியுதீன்

3.றஊப் ஹகீம் (தபால்)

4.பேரியல் அஸ்றப்

5.AHM.பெளசி

6M.H.முஹம்மட்

*Deputy -பிரதி அமைச்சர்கள்*

1.Basheer

2.Husain bahaila

3.MIM.Hizbullah

4.abdul Majeed

5.Cader (காதர் ஹாஜ்யார் கண்டி)

6.Faizer Mushthafa

 

மகிந்தவின் 2 வது ஆட்சிக்காலத்தில் (2010-2015) மகிந்தயோடு அமைச்சரவையில் இருந்தவரகள்.

1.AHM.பெளசி

2.றஊப் ஹகீம் (நீதி)

3ALM.அதாஉல்லா

4.ரிசாட் பதியுதீன்

5.Abdul Cader கண்டி

6.Abdul haleem கண்டி

7.Basheer segudawuth

பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள்,

1.பைசர் முஸ்தபா

2.ஹிஸ்புல்லா

3.அமீர் அலி

4.ஹசன் அலி

5.பசீர் சேகுதாவூத்

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல அமைச்சரவையில் முக்கிய பங்கற்றும் செயலாளர்கள் 20 பேரில் இரண்டு தமிழர்கள் நியமிக்க பட்டுள்ளார்கள், ஆனால் ஒரு முஸ்லீம் கூட நியமிக்கபடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நான் நினைக்கின்றேன் ஜேவிபி தனது கடந்தகால பட்டறிவில் இருந்து தான் முஸ்லிங்களை அதிகமாக அமைச்சரவையில் உள்வாங்கவில்லை. கடந்தகாலங்களில் ஜேவிபி சார்பாக இரண்டு முஸ்லீங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள், அந்த இரண்டு பேருமே கட்சி மாறினார்கள் ( அஞ்சான் உம்மா, முஹம்மட் முசம்மில்). ஆனால் ஒரே ஒரு தமிழர் தான் பாராளுமன்றம் தெரிவானார்(ராமலிங்கம் சந்திரசேகர்), அவர் கடைசி வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தார்.

யுத்தகாலத்தில் ஜேவிபி மிக கடுமையாக இனவாதம் கக்கிய போது அதன் பேச்சாளராக இருந்தவர் முசம்மில்.

பின்னர் வீரவன்சவோடு சேர்ந்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவரின் கட்சியில் இருந்தார் என நினைக்கிறேன்.

——-

@colomban அடிக்கடி முஸ்லிம்கள் பொயிட்ன் ஒவ் வியூ செய்திகளை இணைப்பதன் மூலம் - உங்களை முஸ்லிம் என நம்பும் உறவுகளோடு நீங்கள் விளையாடும் விளையாட்டு ரசிக்கும்படியாக உள்ளது🤣.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் காணொலிகளில், கொலைகாரன் இவருக்குமேதகு என்று பட்டமா, என்று சகட்டுமேனிக்கு முஸ்லீம்கள் பதிவிடுகிறார்கள்,

ஆனால் பல சிங்களவர்கள் அது அவர்கள் உரிமை அவர்கள் துன்பங்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமையுண்டு, அந்த வாய்ப்பை வழங்கிய அநுரவிற்கு நன்றி என்று பதிவிடுகிறார்கள்.

மனிதன் வாழ்ந்தால் ராவணனாக வாழணும் இல்லையென்றால் ராமனாக வாழணும், இடையில் நின்று சகுனிபோல் வாழ்ந்தவர்களை சரித்திரம் தன் தோள்மேல் வைத்து தூக்கி கொண்டாடமாட்டாது.

சகுனிகளின் குணமறிந்தே அமைச்சர் பதவி கொடுக்காமல் அநுர தவிர்த்தாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராவின் சரியான முடிவே முஸ்லிம்களுக்கு பதவி கொடுக்காதது ....இவ்வளவு காலமும் பதவியில்  இருந்து கோத்தாவோடு சேர்ந்து குண்டு வைத்தவர்கள் தானே ....எப்படி அனுரா இவர்களை  இனியும் நம்புவார் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.