Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் பெண்ணின் கைப் பையை திருடினார்!

Arrest.jpg

லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று  செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் வசிக்கும் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த,   இரட்டைக் குடியுரிமையுடைய  55 வயதான அலுவலக உதவியாளர் சிறி ஷ்யாமலி வீரசிங்கவின் கைப் பையே திருடப்பட்டிருந்தது.

அவர் செவ்வாய்க்கிழமை (26.11.24) மதியம் 01.30 மணியளவில் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அவளது கைப்பையில் 14 இலட்சத்து இருபத்து மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுமதியான 2,700 ஸ்டெர்லிங் பவுண்ஸ், 02 புதிய வகை கையடக்கத் தொலைபேசிகள் (ஐ போன்) மற்றும் 02 சாம்சுங் ரக கைத்தொலைபேசிகள் இருந்தன.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இந்த கைப் பை தொலைந்து போனதால், அந்த பெண் இலங்கை விமான போக்குவரத்து அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த விமானத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இது தொடர்பில் விமானத்தின் விமானிக்கு அறிவித்ததையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை  அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புலனாய்வு அதிகாரிகள் பயணிகளையும் அவர்களது பயணப் பொதிகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

காணாமல் போன கைப்பையை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 60 வயதுடைய கணக்காளர் ஒருவரிடமிருந்த மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர், கனடாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர் ஆவார்.

அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே திருடப்பட்ட ஸ்ரேலிங் பவுண்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் விற்கப்பட்ட 06 விஸ்கி போத்தல்கள் மற்றும் 03 சுவடா விலவுன் போத்தல்களை வாங்கியுள்ளார், மேலும் மீதமுள்ள ஸ்டெர்லிங் மற்றும் மொபைல் போன்களும் அவரது கைப்பையில் இருந்து மீட்கப்பட்டன.

பின்னர், இலங்கை புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையிடம்  ஒப்படைத்துள்ளனர், அவர்கள் பயணியை கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய காவல்  நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அ திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களுடன் அவரை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (27.11.24) ஆஜர்படுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2024/208729/

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் இருக்கும் போலீஸ் அம்மணி ரொம்ப அழகா இருக்காங்க!

 

கேவலம் கெட்ட கணக்காளர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

படத்தில் இருக்கும் போலீஸ் அம்மணி ரொம்ப அழகா இருக்காங்க!

உங்களுக்கு கழுகுப் பார்வை!!

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:

காணாமல் போன கைப்பையை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 60 வயதுடைய கணக்காளர் ஒருவரிடமிருந்த மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர், கனடாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர் ஆவார்.

அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே திருடப்பட்ட ஸ்ரேலிங் பவுண்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் விற்கப்பட்ட 06 விஸ்கி போத்தல்கள் மற்றும் 03 சுவடா விலவுன் போத்தல்களை வாங்கியுள்ளார், மேலும் மீதமுள்ள ஸ்டெர்லிங் மற்றும் மொபைல் போன்களும் அவரது கைப்பையில் இருந்து மீட்கப்பட்டன.

வெட்கம் கெட்டவன், மானத்தை வாங்குகிறான். 
அக்கவுண்டனாக... கனடாவில் வேலை செய்து கொண்டு, 
இரட்டை குடியுரிமையும் வைத்துக் கொண்டு... 
பெண்ணின் கைப்பையை களவெடுக்க எவ்வளவு... 
பஞ்சப் பரதேசியாய் இருந்திருக்க வேண்டும்.

களவெடுத்த காசில்.. 9 விஸ்கிப் போத்திலும் வாங்கி இருக்குது இந்த எருமை.
ஒரு ஆள்... சுங்கப்  பகுதியால் இரண்டு போத்தில்தான் கொண்டு போகலாம் என்று நினைக்கின்றேன். இது 9 வாங்கி இருக்குது என்றால், இதன் நினைப்பு என்னவாக இருந்திருக்கும்.

நாயை... குளிப்பாட்டி  நடு வீட்டில் வைத்தாலும், நக்கித்தான் குடிக்குமாம்.
தரித்திரம் பிடித்தவனுக்கு, வெளிநாட்டு வாழ்க்கை  ஒரு கேடு. த்தூ... 😡

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறை உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அ திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களுடன் அவரை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (27.11.24) ஆஜர்படுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

களி திங்க ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறார்.

31 minutes ago, வாலி said:

படத்தில் இருக்கும் போலீஸ் அம்மணி ரொம்ப அழகா இருக்காங்க!

அட நாங்க மேசையில் உள்ளதைத் தானே பார்த்தோம்.

துளாவிப் பார்க்கலையே/

விமான நிலையத்தில்த் தானே வேலை. அடுத்தமுறை போகும்போது விசாரித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

 

காணாமல் போன கைப்பையை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 60 வயதுடைய கணக்காளர் ஒருவரிடமிருந்த மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர், கனடாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர் ஆவார்.

 

🫣...................

இதெல்லாம் ஒரு குற்றமோ அல்லது தகாத செயல்களோ அல்ல, இவை போன்றன வாழ்வின் ஒரு அங்கம், சாகசங்கள் என்ற ஒரு பார்வை சிலரிடம் இருப்பதை பல வருடங்களின் முன் அறிந்து, 'நன்றாகத்தானே வளர்ந்தோம்..............' என்று நினைத்தது உண்டு.

    

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையில் முழு உண்மைகளும் சொல்லப்பட்டிருக்கா தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது வயசாயிச்செல்லோ...இனி கனடாவில் செல்லம் பொழியேலாது...இதுகிள்லை இரட்டைக் குடியுரிமை..அப்ப சிங்கன் சிறீலங்காவில் துள்ளி விளையாடலம்...அதுக்கு காசு வேணுமே..பக்கத்தி ல் வந்திருந்த சிங்களக்குட்டிக்கு கண்போட்டுவிட்டு ..அவ கண்ணயர்ந்தநேரம் ..அண்ணர்  பாக்கை அமர்த்திப் போட்டார்....இப்ப அவங்கள்  ஒரேயடியாய் அமத்திப் போட்டங்கள்.. இனி கனடாவுமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்கன் விமானத்தில் பயணித்த ஒரு சிங்கள இரட்டை குடியுரிமையிடம் அதே விமானத்தில் பயணித்த ஒரு தமிழ் இரட்டை குடியுரிமை ஆட்டையை போட்டுள்ளது. வினோதமான உலகம். 😇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.