Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

சரிதானே! கள்ளனுக்குக் கள்ளன் தானே மாற்றீடாக முடியும். கருணாநிதி இப்ப உயிரோடு இல்லை எனவே இருக்கும் அந்த வெற்றிடத்துக்கு (கள்ளருந்தும்) செந்தமிழன் சீமான் அண்ணாதான் சிறந்த மாற்றீடாக இருக்கமுடியும்.😂

🤣 ரைட்டு…நாமதான் இந்த லொஜிக் விளங்காமல் கிடந்து புரண்டிருக்கிறம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

அது மட்டுமல்ல 1982 ல் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பின் பிரபா, உமா இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜே. ஆர் கேட்ட போது  தமிழ் நாட்டில் இருந்த திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் வேறு பல கட்சிகளும் இணைந்து   அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக போராடியதோடு  மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தனர்.  அதனாலேயே அந்த நாடுகடத்தில் தவிர்க்கப்பட்டது.  அன்று பிரபாவோ  உமாவோ தமிழ் நாட்டில்  எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற வெறும் தமிழ்  போராளிகள்  மட்டுமே. 

அதை விட போராட்டம் நடைபெற்ற காலத்தில்  பல திராவிட இயக்க தொண்டர்கள் நினைத்து பார்கக   பாரிய உதவிகளை போராளிகளுக்கு செய்திருந்தனர். குளத்தூர் மணி  புலிகள் மறைவாக  பயிற்சி பெற  பெரும் நிலப்பரப்பை தனது ஊரில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு போராட்டத்திற்கு பல விடயங்களில் உறுதுணையாக இருந்தார். அவரின் சிபார்சுலேயே சீமான் ஈழத்திற்கு சென்றார். 

ராஜீவ் கொலைக்கு பின்  இந்திய கியூ பிராஞ் பொலிசாரால் அதிகம் துன்புறுத்தப்பட்டவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அந்த அடக்கு முறையையும்  மீறி பலர் உதவி செய்ததி ருந்தனர்.  அதனால் பலர் வருடக்கணக்கில் சிறை சென்றனர்.  

ஆனால் நன்றி கெட்ட புலம் பெயர் ஈழ தமிழர்கள்  சீமானின்  சொல்லை கேட்டு அவர்களில் பலரை துரோகிகளாக முத்திரை குத்தினர்.

உண்மை, நாம் நன்றி கெட்டவர்கள் தான்.

எங்களுக்காக போராடிய, சிறையில் அடைக்கப்பட்ட எத்தனையோ பல முகம் தெரியாத திராவிட இயக்க, திமுக தொண்டர்களை தெலுங்கன் என்றும் முதுகில் குதியவர்கள் என்றும் 2009 இல் facebook, youtube மூலம் மட்டுமே உலகை அறிந்துகொண்ட  தலைமுறை திட்டியப்பொழுது நான் இல்லை என்று சொன்ன பொழுது என்னையும் தெலுங்கன் list ல் சேர்த்து விட்டார்கள் இந்த நன்றி கெட்ட கயவர்கள். பிறகு இல்லை நான் இந்த ஊர், இன்னார் சொந்தம் என்று சொன்ன பின் கிடைத்தது சாதி வெறியன் பட்டம். கடைசி வரைக்கும் நல்ல தமிழனாக உண்மையை சொல்ல வெளிக்கிட்டால் கிடைப்பது துரோகி, சாதி வெறியன், சிங்களவனுக்குப் பிறந்தவன் மற்றும் தெலுங்கன் பட்டமே. 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

அவர் கடவுள் மறுப்பாளர் இல்லையே. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு.கருணாநிதி சாய்பாபாவைச் சந்திக்கலாம். அவரின் மனைவி துணைவி எல்லாம் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசிகள் வேண்டலாம். செஉதயநிதி  கோவிலுக்குப் பேபாகலாம்> துர்க்கா போலாம். சபரீசன் சத்துரு எதிர்ப்பு யாகமே நடத்தலாம்.  சீமான் மட்டும் ய்தால் எரியுதடி மாலா!!!!!!

கருணாநிதியில் சுயநல அரசியலில் சீமான் அவரின் வாரிசு தான். ஆனால் கருணாநிதி சாயிபாபாவை சென்று சந்திக்கவில்லை. சாயிபாபா தான் கருணாநிதியிடம்  நேரம் கேட்டு,  வீடு தேடிசென்று சந்தித்தார். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் தனக்கான நாட்டை அடைய முதல்ப்படி தம்மை தனித்த வேறுபடுத்தக் கூடிய இயல்புடையவர்கள் என்று காட்டுவது.

அதை சரியாக செய்ய முயன்றவர்கள் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் 

அவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியவர்கள் நாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, பகிடி said:

ஒரு இனம் தனக்கான நாட்டை அடைய முதல்ப்படி தம்மை தனித்த வேறுபடுத்தக் கூடிய இயல்புடையவர்கள் என்று காட்டுவது.

அதை சரியாக செய்ய முயன்றவர்கள் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் 

அவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியவர்கள் நாம்.

 

திராவிடம் திராவிட கொள்கையை சரிவர செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் செய்யும் அரசியல் அவருக்கானது. ஈழத்தமிழர்களுக்கு அதனால் பலன் ஏதும் இல்லையென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சர்வ வல்லமை பொருந்திய எம் ஜி ஆரே முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்ய முடியாததை இதுவரை தேர்தலில் ஒரு ஆசனத்தைத்தன்னும் வெல்லக் கஸ்ட்டப்படும் சீமான் செய்வார் என்று எதனை வைத்து எதிர்பார்க்க முடியும், ஆகவே அவரைக் கடந்து சென்று விடலாம். 

ஆனால், சீமானை எதிர்க்கிறோம் என்கிற கொள்கையில் இருந்துகொண்டு கருனாநிதியை ஆதரிக்கின்ற சிலர் அவர் ஈழத்தமிழர் தொடர்பாக நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா?எம் ஜி ஆரிற்குப் போட்டியாகவே அரசியல் செய்துவந்த கருனாநிதி புலிகள் உட்பட ஏனைய போராளிகளை ஆதரித்ததோ அல்லது அவ்வாறு நடந்துகொண்டதோ தனது அரசியல் ஆதாயத்திற்காகவே என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? சகோதர யுத்தம் சகோதர யுத்தம் என்று தொடர்ச்சியாக பேசிவந்த கருனாநிதி இறுதிப் போர்க்காலத்தில் நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழ்நாட்டில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்கியமை, பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுத்து மாணவர் விடுதிகளை மூடியமை, பாசாங்கு உண்ணாவிரதம் இருந்து தமிழர்களை ஏமாற்றியமை, இறுதி நாட்களில் தில்லியில் கூடாரமடித்து தனது குடும்ப உறவுகளுக்கு பாராளுமன்ற பதவிகளை உறுதிப்படுத்திக்கொண்டமை, இனக்கொலை அகோரமாக நடந்துகொண்டிருக்கும்போது யுத்தநிறுத்தம் வந்துவிட்டதாக பொய்கூறி பின்னர் மழை விட்டாலும் தூவானம் விடாது பெய்வதில்லையா அதுபோலத்தான் என்று சப்பைக் கட்டுக் கட்டியமை.................என்று பல விடயங்களைச் செய்திருந்தாரே? அவற்றைச் சரியென்று இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? 

2015 ஆம் ஆண்டில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் எனும் புத்தகத்தை எழுதினார். அதில் இறுதிப்போரை நடத்த முன்னர் தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களைச் சந்தித்து போரிற்கெதிரான அவர்களின் நிலைப்பாட்டை நாடிபிடித்தறிந்து, அதனைத் தணிக்கும் காரியங்களில் ஈடுபடுமாறு தன்னையும், பிரணாப் முகர்ஜியையும் சோனியா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி அனுப்பி வந்ததாகக் கூறியிருந்தார். அந்தப் பயணங்களின்போது தானே அதிசயித்துப் போகும் வண்ணம் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்த் தலைவர்கள் புலிகளை அழிக்கும் போரிற்கெதிராக தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பெதனையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார். வெளியில் மேடைகளில் போரை எதிர்ப்பதாகக் கூறும் அதே தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் புலிகள் அழிக்கப்படுவதை விரும்பினார்கள் என்று கூறுகிறார். கருனாநிதி ஒரு படி மேலே சென்று தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் புலிகளால் ஆபத்து வரும் என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறுகிறார். இந்த அரசியல்வாதிகளில் ஜெயலலிதா கூட விதிவிலக்கல்ல. 

சீமானை எதிருங்கள், அதில் தவறில்லை. அதற்காக கருனாநிதியை தியாகியாகக் காட்டுவதை நிறுத்துங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

xyz.jpg

நான் நினைக்கிறேன் அவா இவாவை(இளையராசா) கூப்பிட்டு கூப்பிட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து அவாளை போல எண்ணத்தை இவா மனதில் பதிய வைத்துவிட்டினம்..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.