Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்

19 Dec, 2024 | 11:45 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளே தவிர பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகள் அல்ல, அரசாங்கத்தின் சலுகைகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் தீர்மானிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. எவரையும் விமர்சித்து நான் அரசியல் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய விஜயத்தை மேற்கொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்த போது நானும் இந்தியாவுக்கு சென்றிருந்தேன்.

அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மலையகத்துக்கான இந்திய வீட்டுத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக மலையகத்துக்கு 14 ஆயிரம் வீடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த திட்டம் தொடர்ந்து இழுபறி நிலையில் இருப்பதற்கு அரசாங்கங்களை மாத்திரம் குறை கூற முடியாது. 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உரிமைகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம். ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இதனை அரசாங்கமும் தற்போது விளங்கிக் கொண்டிருக்கும் என்று கருதுகிறேன்.

 மலையக பகுதியில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் மீது மாத்திரமே குறை கூறப்படுகிறது. முதலில் உண்மையான குறைகளை கண்டுக் கொள்ள வேண்டும்.

பெருந்தோட்டங்களில் தோட்ட நிர்வாகங்களே ஆதிக்கம் கொண்டுள்ளன. ஒரு தோட்டத்தில் 100 குடும்பங்கள் வாழ்வார்களாயின் அவர்களின் 10 குடும்பங்கள் மாத்திரமே தோட்டங்களில் தொழில் புரிகிறார்கள்.

அரச சலுகைகள் வழங்கப்படும் போது தோட்ட நிர்வாகங்களே அவற்றை யாருக்கு வழங்க வேண்டும் அதாவது தோட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு வழங்க வேண்டுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கின்றன. அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் உள்ளடங்குகிறார்கள் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

பெருந்தோட்ட பகுதிகளில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை அமுல்படுத்தும் போது பொதுவான கொள்கையை செயற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். பெருந்தோட்டங்களில் தொழில் செய்பவர்களைப் போல், தொழில் செய்யாதவர்களுக்கும் அஸ்வெசும திட்டம் மற்றும் தற்போது பாடசாலை மாணவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ள 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளே தவிர பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகள் அல்ல, அரசாங்கத்தின் சலுகைகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று பெருந் தோட்ட நிறுவனங்கள் தீர்மானிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

 எவரையும் குறை கூறி, விமர்சித்து நான் அரசியல் செய்யவில்லை. நாங்கள் பரம்பரை பரம்பரையாக மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. சிறந்த மாற்றத்துக்காகவே மக்கள் புதியவர்களை தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுங்கள். எமது மக்களின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/201627

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதெப்படி சொல்ல முடியும் அவர்களின் சந்தாப்பணத்தில் தானே எமது வாழ்க்கை ஓடுகிறது. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் நினைப்பது போல் நானோ ரசோ அண்ணாவோ சும்முக்கு இதை அனுப்பி வைக்கும் அளவுக்கு அவரை தெரின்வர்கள் அல்ல🤣. அதே போல் சுமந்திரன் மீதான அதிருப்தி ஏன் என்பது பற்றி @ரசோதரன் எழுப்பிய கேள்விகள் மிக நியமானது. அதற்க்கான உங்கள் பதிலும்.  
    • சரி இனி என் நிலைப்பாட்டை சொல்கிறேன். அதற்கு முன் இரெண்டு பொறுப்பு துறப்புகள். 1. சும்மா எழுதுகிறேன் என்பதால் என்னை போராட எல்லாம் கூப்பிட கூடாது. பிறகு எழுதுவதையும் நிப்பாட்டி போடுவன். முன்னர் இன்னொரு திரியில் எழுதியது போல கூட்டாக புலம்பெயர்தேசத்தில் போராடும் போது ஒரு தலை என்பதுதான் என உச்ச எல்லை. 2. கீழே நான் சொல்லும் நிலைப்பாடு - வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் மட்டும்தான். அவர்கள் கைவிடாமல் இவற்றை கைவிடும் அல்லது கைவிட கோரும் அதிகாரம் எமக்கு இல்லை என்பது என் நிலைப்பாடு. அதே போல் அவர்கள் கைவிட்டால் நானும் அக்னி, ஐலண்ட் போல உஜாலாவுக்கு மாறி விடுவேன்.  ஆனால் அந்த நிலைப்பாட்டை பற்றி பத்தி எழுதி மினகெடமாட்டேன், தேவையும் இல்லை. என நிலைப்பாடு 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும்.  இல்லை. இப்போ காணாமல் போனோர் என எவரும் இல்லை அனைவரும் கொல்லப்பட்டார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் - கேள்வி 4க்கு இது முக்கியம். 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்?  இல்லை. இதை தனியார் சட்ட, போராட்ட வழிகளில் போராடி பெற வேண்டும். இது அந்த மக்களின் தனியார் காணிகள். இதை அவர்கள் மீட்க மிகுதி அனைவரும் உதவ வேண்டும். 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? இல்லை - மேலே குசா அண்ணை சொன்னது போல் - இதில் இந்தியாவை மீறி இலங்கை தண்டிக்கபட வாய்ப்புகள் அரிது. ஆனால் இதுவும் கேள்வி 4 க்கு முக்கியம். 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை - இந்த கோரிக்கைதான் சகலதுக்கும் அச்சாணி. இதை கைவிட்டால் - குறைந்த பட்ச அதிகாரபரவலாக்கலை கூட கைவிட்டதற்கு சமன்.  காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த குற்ற விசாரணை, புலம்பெயர் மென்வலு இவை அனைத்தையும் leverage பண்ணி இந்த அதிகாரத்தை பெறுவதே நமக்கான குறைந்த பட்ச தீர்வாக இருக்க முடியும்.  5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம் - ஒரு கடைசி பேரம் பேசலில் காத்திரமன, மீள பெற முடியாத காணி அதிகாரத்தை பெறும் போது, ஒரு காம்ப்ரமைசாக, இனவாதிகளை சாந்தபடுத்த. இதை விட்டு கொடுக்கலாம் (வேறு வழியில்லை - தமிழர் பொலிசை எந்த சிங்களவனும் ஏற்க போவதில்லை). ஆனால் இதன் போது ஒரு பொறுப்பு கூறல் மிக்க, சேவை பிராந்தியங்களின் இன பரம்பலை ஒத்த பொலிஸார்ரை கொண்ட தேசிய பொலிஸ் சேவை அமைவதை வலியுறுத்தலாம்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • பதிலுக்கு நன்றி. உங்கள் நக்கலில் உள்ள கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன். இந்த நக்கல் நானே யாழில் பலதடவை அடித்ததுதான்🤣. புலம்பெயர் தமிழர் அப்படி எல்லாம் வரமாட்டார்கள். போராட்டம் நடக்கும் போதே எஸ் ஆனவர்கள் (வன்), இப்போ வருவார்களா (வேனா). அப்படி வந்தாலும் மனிசிமாரை டிவோஸ் எடுத்து போட்டுத்தான் வரவேண்டும் - பிள்ளயள் சொல்லவே வேண்டாம். உங்களுக்கு ஒன்று விளங்க வேண்டும் புலம்பெயர் தமிழர் ஊரின் அரசியலில் ஈடுபாடு காட்டுவது என்பது மிக வேகமாக அருகி வரும் ஒன்று. யாழில் எழுதுவோரை பார்த்து நீங்கள் முழு சமூகமும் இப்படி என எண்ணக்கூடாது. முதல் புலம்பெயர் தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக விடை பெறுகிறது.  ஆகவே  ஊரில் உள்ள உங்களுக்கு இந்த புலம்பெயர் சமூகத்தின் வெளிநாட்டு இருப்பின் மூலமாக ஒரு அரசியல் அளுத்தம் கொடுத்து ஏதேனும் நல்லது நடப்பதற்கான காலச்சாளரம் (window of opportunity) மூடிக்கொண்டே வருகிறது. யூதர்கள் போல் இந்த உணர்வை, இருப்பின்பால் வரும் மென்வலுவை, அடுத்த சந்ததிகளில் நாம் கட்டிகாப்போமா, பயன்படுத்துவோமா என்பது பலத்த கேள்விக்குரியதே. புலம்பெயர் தமிழர் நாமும் அப்படி ஓர்மமாக இருக்க வாய்ப்பில்லை, நாம் அப்படி இருந்தாலும் புலத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் வாயால் போட்டடிப்பீர்கள், இதை இனவாதிகள் மேலும் தூண்டி விடுவார்கள். இதுதான் இந்த புலம்பெயர் தமிழர் மென்வலுவின் போக்குவழி (trajectory). நிற்க, ஆனால் மேலே கேட்ட கேள்வி இப்போதும் புலம்பெயர் தேசத்தில் ஊர் அரசியலில் ஆர்வமாக இருப்போரிடம் + ஊரில் இருந்து எழுதுவோரிடம்.   ஊரில் உள்ள மக்களில் இன்று வரை (கிழக்கில் அறுதி பெரும்பான்மை) தமிழ் தேசிய அரசியலை தேர்ந்து எடுத்துள்ள நிலையில் - அவரவர் நிலைப்பாடு என்ன என்பதையே. உண்மையில் சாத்தான் சொன்னது போல இது பொறி வைக்கும் கேள்வி அல்ல. நீங்கள் நக்கலாக இல்லை என சொன்னாலுக், மேலே உள்ள அனைத்தையும் ஆம் என்றே பதில் அளிப்பீர்கள் என தெரிந்ததே.  அதுதான்  யதார்தம். என்றைக்கு நீங்கள் கருணா/பிள்ளையான் வாக்காளராக மாறினீர்களோ அன்றே நீங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வந்து விட்டீர்கள். ஆனால் உங்களிடம் வெளிப்படைத்தன்மை உள்ளது. அதே போல் வட கிழக்கு தமிழ் வாக்காளர் பெரும்பான்மை இந்த கேள்விகளுக்கு இல்லை என்றே வாக்களிக்கும் என கடந்த தேர்தல் முடிவை வைத்து ஒரு எடுகோளை எடுக்கலாம் என நினைக்கிறேன்.  இந்த சூழ்நிலையில் புதிதாக சிந்திப்போம் என கூறும் கு.சா அண்ணை, சாத்ஸ் போன்றோரை நோக்கியே எனது கேள்வி. நீங்கள் புத்தர் சிலை முளைத்தால், இனி என்ன செய்வது என கடந்து போக அல்லது அனுகூலம் வரின் நிண்டு கும்பிட தயாரான ஆள்…. ஆனால் உங்களை போல அல்ல இவர்கள். புத்தர் சிலை முளைத்தாலும் கெம்புகிறார்கள், அனுர இனவாதியாக செயல்பட்டார் என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் புதிதாக முயல்வோம் என்கிறார்கள். அவகாசம் கொடுப்போம் என்கிறார்கள். ரணில், மைத்திரி காலத்தில் சுமந்திரன் எடுத்த நிலைப்பாட்டை எடுக்கும் இவர்களுக்குத்தான் என் கேள்விகள். உங்களுக்கோ, (எனது பார்வையில்) @islandக்கோ அல்ல.  தமிழ்தேசியத்தை பொறுத்த மட்டில் நீங்கள் இருவரும் பூட்ட கேசுகள். ரதி அன்ரியையும், யாழ், வன்னி, மட்டகளப்பில் என் பி பிக்கு போட்டவர்களையும் இந்த பூட்ட கேசு லிஸ்டில் சேர்க்கலாம். எனது கேள்வி இப்போதும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்த படி அனுர ஆதரவு நிலையிலும் இருப்போருக்க்கே. ஊரில் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வாக்கு போட்டோருக்கும் என் கேள்விகள் அல்ல. அவர்கள் நிலைப்பாடும் உங்களை போலவே தெளிவானது. ஆனால் உங்களினற்கு நேர் எதிரானது.   எனக்கு எழும்பி பல்லு தீட்டவே சோம்பலா கிடக்கு…🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.