Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   25 DEC, 2024 | 05:59 PM

image

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 

IMG-20241225-WA0060.jpg

வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் இன்று புதன்கிழமை காலை (25.12.2024) வயாவியானில் நடைபெற்றது. 

IMG-20241225-WA0058.jpg

அந்தப் பிரதேச மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த உ.சந்திரகுமாரன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இந்த மண்ணை நேசிக்கும் ஒருவர். நாம் தற்போது எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது. கட்டம் கட்டமாக எமது காணிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நாம் முழுமையாக நம்புகின்றோம்.

IMG-20241225-WA0056.jpg

பலாலி வீதியில் வசாவிளான் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆளுநரின் கோரிக்கையால் அது நடைபெற்றது. அதேபோன்று ஏனைய இடங்களும் நாம் எதிர்பாராத நேரத்தில் விடுவிக்கப்படும் என நம்புவோம்.

IMG-20241225-WA0061.jpg

அரசியல் கலப்பற்று ஒற்றுமையாக இது நடைபெறவேண்டும். அதைவிட எமது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எம் முன்னோர்கள் நினைவாக மரங்களை நட்டு பசுமைத் தேசமாக மாற்றுவோம் என்றார். 

இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு ஆளுநர், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம். மக்களும் எதிர்பார்த்ததைப் போன்று மீள்குடியமர்ந்தார்கள்.

2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி. 

இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம். 

இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன்.

வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.

இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் வடக்கு ஆளுநரால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், வலி. வடக்கு பிரதேச சபை செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்வை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும்கரங்கள் மற்றும் பூனையன்காடு இ;ந்து மயான அபிவிருத்திச் சபை என்பன ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/202147

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 

என்ன... மெல்ல, சுருதி மாறுது. 
மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில்... பரவாயில்லைப் போல இருக்கே. 

சிங்கள அரச அதிகாரிகளை விட... தமிழ் அரச அதிகாரிகள் மோசமானவர்கள் 
என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளதை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினர் அடாவடியாக மக்களின் காணிகளில் உள்ளார்கள். அவர்கள் அவற்றை விடுவிக்கவேண்டும்.

ஆளுநர் கோரிக்கை சரியாகத்தானே உள்ளது சிறியர்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறியர்? கொஞ்ச நாளாக எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை உங்களால், ஏதாவது மனச்சிக்கலா?  

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, satan said:

என்ன சிறியர்? கொஞ்ச நாளாக எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை உங்களால், ஏதாவது மனச்சிக்கலா?  

ஆளுநரது பெயரை  சிறியர்  சுமந்திரன் என்று கவனக் குறைவாக  வாசித்திருப்பார், உடனே கோபம் கண்மண் தெரியாமல் வந்திருக்கும். பொரிந்து தள்ளிவிட்டார்........🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன.

இந்தப்பிரதேச விடுவிப்புக்கு பலர், தாமே காரணமென உரிமை கோரியிருந்தனரே? யாரோ செய்யும் செயல்களுக்கு தாம் உரிமை கோருவது, தாம் செய்யும் தவறுகளுக்கு மற்றவரை குற்றம் சுமத்துவது கையாலாகாதவரின் செயல்!

14 hours ago, ஏராளன் said:

இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான்.

ஒருவருடைய பாதிப்புகளையும் வலிகளையும் அதே பாதிப்புகளை அனுபவித்தவராலேயே முழுமையாக அடையாளம் கண்டு தீர்வை பெற முடியும். வெறும் பதவிகளுக்காக வருபவர்கள் அதன் பின்னாலேயே அலைவர். இனிவருங்காலத்தில் இப்படியானவர்களை மக்கள் இனங்கண்டு அரசியலுக்கு கொண்டுவரவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயம் said:

இராணுவத்தினர் அடாவடியாக மக்களின் காணிகளில் உள்ளார்கள். அவர்கள் அவற்றை விடுவிக்கவேண்டும்.

ஆளுநர் கோரிக்கை சரியாகத்தானே உள்ளது சிறியர்.

 

1 hour ago, satan said:

என்ன சிறியர்? கொஞ்ச நாளாக எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை உங்களால், ஏதாவது மனச்சிக்கலா?  

தலைப்பையும்…. முதல் பந்தியையும் வாசித்து விட்டு கருத்து எழுதினால் இப்பிடியான பிழை வரத்தான் பார்க்கும். 😂 🤣
தவறுக்கு வருந்துகின்றேன் நியாயம் & சாத்தான். 🙂

13 minutes ago, Kapithan said:

ஆளுநரது பெயரை  சிறியர்  சுமந்திரன் என்று கவனக் குறைவாக  வாசித்திருப்பார், உடனே கோபம் கண்மண் தெரியாமல் வந்திருக்கும். பொரிந்து தள்ளிவிட்டார்........🤣

உங்களுக்குத்தான்… பிரச்சினை சரியாக   விளங்கியிருக்கு. 😁 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.