Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு; 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா

Published By: DIGITAL DESK 2   31 DEC, 2024 | 05:19 PM

image

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம்  இன்று செவ்வாய்க்கிழமை (31)  வெளியிட்டு வைத்தது.

மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பள பட்டியலைச் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டுவைத்து இவ்வாறு தெரிவித்தனர்.

மாவட்டத்தில் 450 மேற்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீட்டுவேலை  தொழிலாளர்களுக்குத் தொழில் வழங்குபவர்கள் ஒருவேலைக்கு  அழைத்து ஏனைய வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளங்களை வழங்காது சாப்பாட்டு பொதியை வழங்கி அத்துடன் குறைந்த ஊதியத்தை வழங்கி அவர்களை அவமதித்து நடாத்தி வருகின்றனர்.

இவ்வாறு வீட்டு வேலை தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளத்தைப்  பெற்றுக் கொள்வதற்காகச்  சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்துள்ளோம். அதற்கமைய 8 மாணிநேர வேலைக்கு 2000 ரூபாவும், 4 மணித்தியால வேலைக்கு 1500 ரூபாவும், ஒருமணிநேர வேலைக்கு 500ரூபாவும், 8 மணித்தியாலயத்திற்கு மேல் வேலை செய்தால் ஒரு மணித்தியாலயத்திற்கு 250 ரூபாவும், தங்கி வேலை செய்வோருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும் தொழில் வழங்குபவர்கள் வழங்கப்படவேண்டும் எனச் சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்து அதனை இன்று துண்டுப்பிரசுரம் மூலமாக பொது இடங்களில் விநியோகிக்க உள்ளோம்.

எனவே எமது சங்கம் கண்டியை தலைமையுமாகக் கொண்டு பல மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. இந்த சங்கத்திலுள்ள வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த சங்கத்தில் இணையாத வீட்டுவேலை தொழிலாளர்கள் இணைந்து கொள்ளமுடியும் என்றனர்.

இதனையடுத்து சம்பள பட்டியல் துண்டுப் பிரசுரத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளித்து வெளியிட்டு  வைத்த பின்னர் துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

WhatsApp_Image_2024-12-30_at_12.44.13.jpWhatsApp_Image_2024-12-31_at_12.27.20__1WhatsApp_Image_2024-12-31_at_12.27.19.jp

https://www.virakesari.lk/article/202639

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வீட்டு வேலை என்று குறிப்பிடுவது….
வீடு கூட்டுதல்,  தூசி தட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்றவை என நினைக்கின்றேன்.
“எமது உழைப்பின் பெறுமதியை, நாமே நிர்ணயிப்போம்” என்ற கோசம் நன்றாகத்தான் உள்ளது.
இவர்கள் குறிப்பிடும் தொகையை…. கொடுப்பதற்கு பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் போலுள்ளதே.

 50,000 ரூபா மாதச் சம்பளத்தை ஓரளவு கல்வி கற்ற அரச ஊழியர்களுக்கே கொடுப்பது இல்லை என நினைக்கின்றேன்.

மற்றும்படி… வீட்டு வேலையாளர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

50,000 ரூபா மாதச் சம்பளத்தை ஓரளவு கல்வி கற்ற அரச ஊழியர்களுக்கே கொடுப்பது இல்லை என நினைக்கின்றேன்.

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்

உண்டாவதெங்கே சொல் என் தோழா

உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்

உண்டாகும் என்றே சொல் என் தோழா

கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்

கண்டவர் உண்டோ சொல் என் தோழா

கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து

காண்பதில் தான் இன்பம் என் தோழா 

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் 

இன்பம் உண்டாவதில்லை என் தோழா 

அரிய கைத் தொழில் செய்து 

அனைவரும் பகிர்ந்துண்டு

அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்

கிட்டுவதே இல்லை என் தோழா

உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்

உண்டாகும் என்றே சொல் என் தோழா 

--சி.ஏ.லட்சுமணதாஸ்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள் வீட்டு வேலை என்று குறிப்பிடுவது….
வீடு கூட்டுதல்,  தூசி தட்டுதல், பாத்திரம் கழுவுதல் போன்றவை என நினைக்கின்றேன்.
“எமது உழைப்பின் பெறுமதியை, நாமே நிர்ணயிப்போம்” என்ற கோசம் நன்றாகத்தான் உள்ளது.
இவர்கள் குறிப்பிடும் தொகையை…. கொடுப்பதற்கு பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் போலுள்ளதே.

 50,000 ரூபா மாதச் சம்பளத்தை ஓரளவு கல்வி கற்ற அரச ஊழியர்களுக்கே கொடுப்பது இல்லை என நினைக்கின்றேன்.

மற்றும்படி… வீட்டு வேலையாளர்களுக்கு தகுந்த ஊதியம் கொடுக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சம்பளத்தை நிர்ணயம் செய்பவர்கள் 8 மணித்தியாலம் வேலை செய்வதையும் உத்தரவாதப்படுத்தவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

 

இவ்வாறு வீட்டு வேலை தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளத்தைப்  பெற்றுக் கொள்வதற்காகச்  சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்துள்ளோம். அதற்கமைய 8 மாணிநேர வேலைக்கு 2000 ரூபாவும், 4 மணித்தியால வேலைக்கு 1500 ரூபாவும், ஒருமணிநேர வேலைக்கு 500ரூபாவும், 8 மணித்தியாலயத்திற்கு மேல் வேலை செய்தால் ஒரு மணித்தியாலயத்திற்கு 250 ரூபாவும், தங்கி வேலை செய்வோருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும் தொழில் வழங்குபவர்கள் வழங்கப்படவேண்டும் எனச் சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்து அதனை இன்று துண்டுப்பிரசுரம் மூலமாக பொது இடங்களில் விநியோகிக்க உள்ளோம்.

 

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரியநேத்திரன் அவர்கள் தனது மாத வருமானம் 60 ஆயிரம் ரூபாய்கள் என்றே குறிப்பிட்டிருந்தார் என்று ஒரு ஞாபகம். இவர் என்ன இவ்வளவு குறைவான சம்பளத்தில் இருக்கின்றாரே, இவர் என்ன வேலை செய்கின்றார் என்ற யோசனை வந்தது.

ஊரில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர், தனது சம்பளம் 30 ஆயிரம் என்றே சொல்லியிருந்தார். அது தற்காலிக வேலை, அதை நிரந்தரமாக்க என்ன செய்யலாம் என்று அவர் முயன்று கொண்டிருந்தார்.

50 ஆயிரம் என்பது அதிகமாகவே தெரிகின்றது.

எட்டு மணித்தியாலத்திற்கு மேல் வேலை செய்தால், ஒவ்வொரு மணி நேரத்திற்கான கொடுப்பனவும் அதிகரிக்க வேண்டும் - ஒன்றரை அல்லது இரு மடங்குகள். இவர்கள் ஏன் அரைவாசியாக்கி இருக்கின்றார்கள்..............

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

50 ஆயிரம் என்பது அதிகமாகவே தெரிகின்றது.

2022இல் நான் கொழும்பில் தங்கியிருந்த வீட்டில் வேலைக்கு வரும் பெண்ணுக்கு (வேலை நேரம் 9.00-16.00) நாளொன்றுக்கு ரூபா 1,500/_  கொடுத்தார்கள். 

அரியநேந்திரன்  ஒன்றுமே செய்யாமல் சும்மா சங்கு ஊதுவதற்கு 60,000/_ கூட என்பது என் கணக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kavi arunasalam said:

2022இல் நான் கொழும்பில் தங்கியிருந்த வீட்டில் வேலைக்கு வரும் பெண்ணுக்கு (வேலை நேரம் 9.00-16.00) நாளொன்றுக்கு ரூபா 1,500/_  கொடுத்தார்கள். 

அரியநேந்திரன்  ஒன்றுமே செய்யாமல் சும்மா சங்கு ஊதுவதற்கு 60,000/_ கூட என்பது என் கணக்கு.

கொடுப்பனவின் அளவு வேலை செய்யும் பிரதேசத்திற்கு ஏற்ப மாறுபட வேண்டும் என்பதைச் சொல்ல மறந்து போய்விட்டேன். கொழும்பில் 50 ஆயிரம் கொடுத்தாலும் போதாதே.............

இங்கு அமெரிக்காவில் கலிஃபோர்னியா, நியூ யோர்க் போன்ற இடங்களுக்கு என்று வேறு ஒரு கணக்கு இருக்கும். தொழில்நுட்பத்துறையில் இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.

அரியநேந்திரன் அரசவேலையில் இருக்கவில்லையா................ கட்சியா சம்பளம் கொடுத்தது......... நானும் போய் சேரப் போகின்றேன்..............🤣.   

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

2018 ல் கல்லுகளுடன் கூடிய வளவு  துப்புரவாக்குவதற்கு இருவருக்கு ஒருநாளைக்கு 1500 x 2 =  3000 ரூபா இரண்டுநாள் 6000 ரூபா குடுத்ததாய் ஞாபகம் . .......நானும் அவர்களுடன் வேலை செய்தபடியால் எனக்கு 3000 ரூபா லாபம் . ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை 8 மணித்தியாலம் வேலை செய்கிறார்கள்.8.30 க்கு வந்து 12 -14.30 சாப்பாட்டு நேரம்.5 மணிக்கு வீடு.மற்றது 8 மணித்தியாலம் 2000 ருபா 4 மணித்தியாலத்துக்கு 1500 என்பது இடிக்குதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.