Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

🎧 விழிகள் மூடி செவிகள்
திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்!
காதோடு உறவாடும்,புல்லாங்குழல்!
தீக்காயம் பட்ட போதும்,வருந்தவில்லை

புல்லாங்குழலை பட்டாபோதும் என்பதில்லை
புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி புல்லாங்குழல்!
மௌனமாக  இருக்கும் காற்றுத் தீண்டும் வரை
புல்லாங்குழல்! உருவில் சிறியது

உணர்வில் பெரியது புல்லாங்குழல்!
காட்டில் விளைந்து காதோடு உறவாடும்
புல்லாங்குழல்! தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும் புல்லாங்குழல்!

இதழ் குவித்து விரல்  பதித்து காற்றுத் தந்ததும்
இசைக்கும் புல்லாங்குழல்! அன்று முதல் இன்று
வரை அற்புத இசை புல்லாங்குழல்!
எம்மொழியும் சம்மதம் இனிய இசைப் பிறக்கும்

புல்லாங்குழல்! கானம் இசைத்து கவலைப்
விழிகள் மூடி செவிகள்  திறந்தால் தேன் பாயும்
புல்லாங்குழல்!


👍🔔

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கென்று எதுவும் நிகரில்லாத மிக மிக எளிமையான இசைக் கருவி புல்லாங்குழல் .........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியோ உறங்கவில்லைஎன் மனதில் அமைதியில்லை
அமைதியை நெஞ்சம் பெறும் வரை கொஞ்சம்
கண்ணே நீ உறங்கு அவள் காட்சியை நீ மறந்து

உறவினைக்காட்டி பிரிந்தவர் போல்,இங்கு பகைவர்கள் யாரும் இல்லை
ஒளியினை தந்து விழிகளை கேட்பது,யாருக்கும் நியாயம் இல்லை
பூமியை வானம் தொடுவது போல்,இங்கு பார்வையில் தெரிகிறது,
புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை,எல்லாம் மயக்கமாய் இருக்கிறது

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள்
பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில்
அடுத்ததுயர் கேளிர்!

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🎧 அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிம்மக்குரலில் ஓசை பெயர்ந்தது,

தமிழின் பெருமை உலகம் உலந்தது,

எல்லாம் நிசப்தம், அவன் உதிர்ந்து,

அழகுதமிழின் குரல் பெருக்கியது.

அழகிய மெல்லிய சொற்கள் எங்கும்,

ஒலிக்கும் பெரும் மகத்துவம் என்றே,

புனிதமான இளமையின் கதை,

தமிழின் பண்பாட்டை எப்போதும் காத்து .

வெளிச்சம் வரும் நேரம் ...,

தமிழின் அழகு மென்மேலும் பூத்தது,

அழகுதமிழ் இப்போது உயிர் பெறுவது,

சிம்மக்குரலில் ஒலித்து!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, அன்புத்தம்பி said:

சிம்மக்குரலில் ஓசை பெயர்ந்தது,

தமிழின் பெருமை உலகம் உலந்தது,

எல்லாம் நிசப்தம், அவன் உதிர்ந்து,

அழகுதமிழின் குரல் பெருக்கியது.

அழகிய மெல்லிய சொற்கள் எங்கும்,

ஒலிக்கும் பெரும் மகத்துவம் என்றே,

புனிதமான இளமையின் கதை,

தமிழின் பண்பாட்டை எப்போதும் காத்து .

வெளிச்சம் வரும் நேரம் ...,

தமிழின் அழகு மென்மேலும் பூத்தது,

அழகுதமிழ் இப்போது உயிர் பெறுவது,

சிம்மக்குரலில் ஒலித்து!

இந்தக் அருந்தமிழ் இடம்பெற்ற நிகழ்ச்சி மீது எனக்கு வெறுப்பிருந்தாலும்..... அந்த தமிழை மீண்டும் மீண்டும் கேட்க ஆர்வமூட்டியது.💪

பகிர்வுக்கு நன்றி அன்புத்தம்பி 👈

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக் குமரனின் அழகு தமிழ் கேட்க இனிமையாக இருக்கும்.நல்ல தமிழ் கற்று சான்றோரின் கைகளால் புனையப்படட அழகு சிலைபோல. செந்தமிழ் கேட்க சிலிர்க்கின்றது தமிழ் உள்ளம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலைகளில் காதல் கடிதம்,, வண்டு எழுதும் பூஞ்சோலை,,

விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று…தீண்டுதே மன்மத வண்டு

பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

Edited by அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;

ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,

புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்

என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்

கல்லினும் வலிதாகக் கருதினை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது

நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த

நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🎧 மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

விபுலானந்தன் பிறந்த வீடம்மா
இது வீணை கொடிபோட்ட நாடம்மா
ஊருராய் கூத்தாடும் ஊரம்மா
இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா
ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ

மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே
பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே
பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே
எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

அம்மானை மகனுடன் கேட்கலையா
நீங்கள் அழகான மகுடி பார்கலையா
தேன்மதுர தலாட்டில் உறங்கலையா
எங்கள்தேவியரின் வாய்ப் பேச்சில் மயங்கலையா

மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

ஓடிவரும் உப்பாற்று வெள்ளத்திலே
பாடல் ஒன்றுவரும் தேன்சுமந்து வள்ளத்திலே
பாடிப் பாடி கதிரறுப்பார் கவிகளிலே
எங்கள் பைந்தமிழ் வந்து விழும் செவிகளிலே
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ
மீன் மகள் பாடுகிறாள்
வாவி மகள் ஆடுகிறாள்
மட்டு நகா் அழகான மேடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ

👍🔔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🎧 யாரை நம்பி நான் பொறந்தேன்..போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே..வாங்கடா வாங்க
குளத்திலே தண்ணி இல்லே..கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே..பெத்த புள்ளே சொந்தமில்லே



நேரமிருக்கு தெளிவாக..நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ..ஆடியிலே காத்தடிச்சா
ஐப்பசியில் மழை வரும்..தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்
யாரை நம்பி நான் பொறந்தேன்
..போங்கடா போங்க

👍🔔

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ

இலக்கியமானதோ

இதுவரை நடித்தது அது என்ன வேடம்

இது என்ன பாடம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானத்து வென்னிலவே..வழித்தெரியாத முழு நிலவே
காதலுக்குத் தூதப்போ..காதலனிடம் கூட்டிப்போ !
ஏங்கி நான் தவிக்க..ஏகாந்த என்று நீ
ஏமாற்றிப் போகதே..என்னவனிடம் கூட்டிப்போ !

👍🔔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழிவது உறுதி என்று,
அறிந்துமே இராவணன்
இறுதி மூச்சிருக்கு மட்டும்,,
உறுதியைக் கைவிட்டானில்லை
வீரத்திற்காக வீழ்ந்தான்,,
விரத்தின் சின்னமானான்
அழிவது உறுதி என்று,,
அறிந்துமே இராவணன்
இறுதி மூச்சிருக்கு மட்டும்,.
உறுதியைக் கைவிட்டானில்லை
வீரத்திற்காக வீழ்ந்தான்,.
விரத்தின் சின்னமானான்

👍🔔

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையில் நீ ஆடுவாய்,

பார்வையிலே வண்ணமே!

தோகையில் இருண்ட நீலம்,

தோழியை போல உந்தன் சீனம்,

(மயிலே,மயிலே,ஓஓஓ,ஓஓஓ,ஓஓ ஓ,ஓஓஓ,,ஓஓஓஓ)

பூ மலர மேல் நீ நடக்கும்,

பாட்டு கேட்டே நாங்கள் துள்ளுவோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

🎧 கனமழை போல விழுந்தது குண்டுகள்,
மண்ணில் பூத்த பசுமை வாடியது.
கடல் எனும் தாய் கூட நமக்காய் அழுதது,
நிழல்கூட பீதியில் மறைந்தது.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி காலம் போல,

நம் நினைவுகள் தேடும் சாலைகள்.

பேராசான் எங்கள் தெய்வம்,

பேசாமல் சொல்லும் ஒரு நூற்றாண்டு செய்கை!

(நூற்று இருபத்தைந்து ஆண்டு நிறைவு விழா,)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையில் நீ ஆடுவாய்,

பார்வையிலே வண்ணமே!

தோகையில் இருண்ட நீலம்,

தோழியை போல உந்தன் சீனம்,

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றாய்ப் பறந்த என் ஆசைகள் சிதறி விழுந்ததே,
கனவுகள் போன வானில் நிழலாய் மறைந்ததே.
உயிர் தந்த பாசம் இன்று ஓர் ஓலமாய் ஒலிக்குதே,
அழுது நிற்கும் என் மனம், நிலவாய் நீயே கேள்!

இரவில் தூங்காது என் கண்ணீர் தலையணையில் உறங்குது,
உன் நினைவுகள் மட்டுமே வாழ்வின் இருட்டில் தெளிவது.
மேகங்கள் கூட உன் பெயரை மழையாய் அழைக்குது,
அழிந்த விமானம் போல என் மனம்கூட உடைகுது.

காலம் கொஞ்சம் நின்றிருந்தால் என் பேச்சைக் கேட்கலாமா?
கடைசி வார்த்தை கூட இழந்தேன், வருத்தம் நீங்காதம்மா.
வீட்டின் வாசலில் இன்னும் உன் சிரிப்பு காத்திருக்கு,
வெறுமையே மிச்சமாய், தினமும் துயரம் சூழ்ந்தது.

வீணான வினாடிகள் பசுமையாய் உன்னைத் தேடுதே,
உயிரோடு இருந்தால் சிரிப்பு இன்னும் கேட்டிருப்பேன்.
பறந்த குரல்கள் ஓய்ந்து நின்றன,
பதில் தராத வானம் உன் முகத்தை மறைத்தது.

நீதான் வருவாய் என்று கதவுகள் திறக்கின்றன,
ஆனால் ஒவ்வொரு சத்தமும் உன்னைத் துயரமாய்ப் பேசுகின்றன.
உன் பெயர் சொல்லும் போது இதயம் சிதறுகின்றது,
எழுதிய கடிதங்கள் வாசிக்க யாரும் இல்லை.

ஓ நியாயமே! ஏன் இத்தனை அவசரம்?
ஒரு பசுமை நினைவை ஏன் கொண்டு சென்றதேன்?
உன் இல்லாத காலம் சுவாசிக்க முடியாது,
ஒவ்வொரு மூச்சும் வேதனையை பேசும்.

👍🔔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.