Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரை எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழக்கப்படவில்லை என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ( Ramanathan Archchuna) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை 2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று (07) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இருந்து  நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் தனக்கு சரியான பதிலை வழங்குமாறும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபாநாயக்கர், இது தொடர்பில் பதில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மற்றும் இது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/today-parliment-speech-dr-archuna-against-sajith-1736230580

  • கருத்துக்கள உறவுகள்

குழுவின் அறிக்கையின் பின்னர் அர்ச்சுனா குறித்து தீர்மானம் - சபாநாயகர்

07 JAN, 2025 | 12:56 PM
image
 

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனறு நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்கின்றது அதன்அறிக்கையை அடிப்படையாக வைத்து  நாடாளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/203212

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவின் தலைவிதி தீர்மானம் குழு விசாரணைக்கு பிறகு!

அர்ச்சுனாவின் தலைவிதி தீர்மானம் குழு விசாரணைக்கு பிறகு!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தலைவிதி குழு விசாரணையின் முடிவுகளை சார்ந்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று அறிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு உரிமை பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அர்ச்சுனாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சபாநாயகர் கூறினார்.

“எதிர்க்கட்சி சபாநாயகரின் ஆலோசனையின் முடிவுக்கு காத்திருக்கின்றது,” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக் தெரிவித்தார்.

மேலும் அண்மையில் தவறான நடத்தையால் குற்றம் சாட்டப்பட்ட குறித்த எம்.பி., தற்போது விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார்.

https://athavannews.com/2025/1415485

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. என்ன நடக்கின்றது என தொடர்ந்து அவதானிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நியாயம் said:

மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. என்ன நடக்கின்றது என தொடர்ந்து அவதானிப்போம்.

டிக்டொக் மக்கள் ஆதரவா?😅

  • கருத்துக்கள உறவுகள்

இவர்ட செடிலுக்கு இவரை ஒருக்கா நல்லாப்போட்டு எடுக்கோணும்!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

டிக்டொக் மக்கள் ஆதரவா?😅

டிக்டொட் ஸ்ரார் எல்லாரும் எம்பி ஆகமுடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, RishiK said:

டிக்டொட் ஸ்ரார் எல்லாரும் எம்பி ஆகமுடியுமா? 

ஆகிவிட்டாரே மருத்துவர் ..அவர் படித்த பல்கலைகழகத்துக்கு இவரது பேச்சுக்கள் அழகல்ல....நொடிக்கு நொடி டொக்கடர் அர்ஜுனா ,,,கூறும் இவர் ..மருத்துவர் ஒருவர் என்ன பண்புகளை கொண்டிருக்க வேணும் என்ற எண்ணமே இல்லாமல் இன்னுமொரு பெண்ணின் பெயரை சொல்லி.....

அதன் விளைவுகளை டிக்டொக் மக்கள் அனுபவிக்க போவதில்லை ...அவரை முன்னுக்குகொண்டு வந்த யூ டியுப் அடியான்களும் அனுபவிக்க போவதில்லை ...
ஒர் இனம் மறைமுக பாதிப்புக்கு உள்ளாக போகிறது 
ஒர் சாதாரண மனிதன் இவரை போல கதைத்தால் ஏற்றுக்கொள்ளலாம் ,ஆனால் மருத்துவர் இப்படி தரக்குறைவாக தனிநபர் தாக்குதல் செய்வது ஏற்புடையது அல்ல ..மேலும் இவர் தான் தேசியத்தலைவரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு இவ்வளவு இழிவாக பேசுவது அழகல்ல...யூ டியுப் அரசியல் என்பது வேறு நிஜ அரசியல் வேறு ...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பேசுவதால் நல்ல யூ டியுப் வருமானம் வருமோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

செடிலுக்கு

செடில் என்றால் என்ன வாலி?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

செடில் என்றால் என்ன வாலி?

நாத்தம்,நாற்றம்,வாடை என நான் புரிந்து வைத்துள்ளது..வேறு அத்தமும் இருக்கலாம்🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

நாத்தம்,நாற்றம்,வாடை என நான் புரிந்து வைத்துள்ளது..வேறு அத்தமும் இருக்கலாம்🤔

இவரைப்பொறுத்தவரையில் ஆர்வக்கோளாறு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

நாத்தம்,நாற்றம்,வாடை என நான் புரிந்து வைத்துள்ளது..வேறு அத்தமும் இருக்கலாம்🤔

அது வெடில்!

 

32 minutes ago, ஈழப்பிரியன் said:

செடில் என்றால் என்ன வாலி?

spacer.png

செடில் குத்தி காவடி ஆடுவார்கள்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா சத்தமாவது போடுகிறார் மற்றவர்களின் அசுமாத்திரத்தைக் காணவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அது வெடில்!

 

spacer.png

செடில் குத்தி காவடி ஆடுவார்கள்!

 

 

விளக்கத்திற்கு நன்றி கிருபன்.

46 minutes ago, RishiK said:

அருச்சுனா சத்தமாவது போடுகிறார் மற்றவர்களின் அசுமாத்திரத்தைக் காணவில்லை. 

அடுத்த தேர்தலுக்குக் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

செடில் என்றால் என்ன வாலி?

அதிக பந்தா விடுற ஆக்கள், ஒருத்தரையும் கணக்கெடுக்காமல் திமிறிக்கொண்டு திரியிற ஆக்களை யாழ் இந்துவில் படிக்கிற காலங்களில் ‘செடில் விடுற ஆக்கள்’ எண்டு சொல்றனாங்கள். கூடுதலா பெட்டையளுக்குத்தான் யூஸ்பண்றனாங்கள்! 😂 

 

  • கருத்துக்கள உறவுகள்

செடில் காட்டுற ஒரு ஆளுக்கு செடில் காட்டுற மற்ற ஆளை பிடிக்காது தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாலி said:

அதிக பந்தா விடுற ஆக்கள், ஒருத்தரையும் கணக்கெடுக்காமல் திமிறிக்கொண்டு திரியிற ஆக்களை யாழ் இந்துவில் படிக்கிற காலங்களில் ‘செடில் விடுற ஆக்கள்’ எண்டு சொல்றனாங்கள். கூடுதலா பெட்டையளுக்குத்தான் யூஸ்பண்றனாங்கள்! 😂 

 

நன்றி வாலி.

நாங்க இந்துவில் குப்பை கொட்டிய காலங்களில் (1966-1972)மருந்துக்கும் மாணவிகளோ ஆசிரியைகளோ இல்லை.

கொஞ்சம் கலவனாக இருந்திருந்தால் வெட்கம் ரோசத்திலாவது கொஞ்சம் படித்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது நாடாளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அருச்சுனா எம். பி தெரிவித்துள்ளார்.

Ramanathan Archchuna

இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை

 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது எனவும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.'

Ramanathan Archchuna

இந்த நிலைமையை சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அர்ச்சுனா, இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Ramanathan Archchuna

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.