Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர்.

 

 

வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்! | Foreign Tamils Interested Investing In The North

இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் ஆர்வமுள்ளவர்கள்  இலங்கைமுதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார். 

அதேபோன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பாகவும் எம்.பி றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

https://jvpnews.com/article/foreign-tamils-interested-investing-in-the-north-1736356551#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, RishiK said:

அதேபோன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பாகவும் எம்.பி றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் போது இலங்கை திரும்ப விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்களை பார்க்கும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உண்மையாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கும் போது இலங்கை திரும்ப விரும்புகின்ற புலம்பெயர் தமிழர்களை பார்க்கும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உண்மையாகிறது.

என்ன விதம் விதமான கலியாணமண்டபம் கட்டி விடுவினம்....மாப்பிள்ளை ..பொம்பிள்ளைகு திரும்பவும் வெளிநாட்டில் இருந்துதான்  ஆள் போகவேணும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, alvayan said:

என்ன விதம் விதமான கலியாணமண்டபம் கட்டி விடுவினம்....மாப்பிள்ளை ..பொம்பிள்ளைகு திரும்பவும் வெளிநாட்டில் இருந்துதான்  ஆள் போகவேணும்..

மூண்டு மாடி வீடுகள் கட்டி குருவியள்,ஆடு மாடுகளுக்கு விடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலவதியான மருந்துக்கள் காலவதியான உணவுகள்  முட்டை தேங்காய் எண்ணை போன்வற்றுக்கு கூட இறக்குமதியை நம்பி இருக்க வேண்டிய சோம்பேறிகள் வாழும்  நாட்டில் என்ன முதலீடு செய்யலாம்?

ஒரு வருத்தம் வந்தால் தனியார் வைத்திய சாலைகள் பணம் பிடுங்கும் பேய்களாய் மாறி விடும் நாட்டில் எப்படி மனிதன் நிம்மதியாய் போய் வாழுவான் ?

பொழுது பட்டால் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சொல்கிறார்களாம் காரணம் அவ்வளவுக்கு ரவுடிய்சம் கொள்ளை கொலைகள் திருட்டு 2௦௦9க்கு முதல் அப்படியா இருந்தது ?

 

Edited by பெருமாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.