Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அந்த பட்டதாரிகளை ஒன்றிணைத்து ஏதாவது தொழில் முயற்சியில் ஈடுபடுத்தலாம் புலம் பெயர் உறவுகளின் நிதி பங்களிப்புடன் ...

வெளிநாடு வருவது, எப்படியாவது அரச உத்தியோகம் பெற்றே தீருவது, ஊருக்கு படம் காட்டி கலியாணம் செய்வது, குனிந்து நிமிர்ந்து ஒரு பேப்பர் எடுக்கக் கூடாது, வேர்க்கக் கூடாது, காலில் மண் படக்கூடாது, கமக்கட்டு மணக்கக் கூடாது,  என்று வாழ்வின் குறிக்கோள்கள் இப்படிப் போகும் இவர்களை நம்பி எந்த தொழிலிலும் இறங்கக் கூடாது.

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

வெளிநாடு வருவது, எப்படியாவது அரச உத்தியோகம் பெற்றே தீருவது, ஊருக்கு படம் காட்டி கலியாணம் செய்வது, குனிந்து நிமிர்ந்து ஒரு பேப்பர் எடுக்கக் கூடாது, வேர்க்கக் கூடாது, காலில் மண் படக்கூடாது, கமக்கட்டு மணக்கக் கூடாது,  என்று வாழ்வின் குறிக்கோள்கள் இப்படிப் போகும் இவர்களை நம்பி எந்த தொழிலிலும் இறங்கக் கூடாது.

 

பார்ப்போம் இந்த சொறி குணங்களை அனுரா மாற்றுகிறாரா இல்லையா என...இரு தேசிய இனங்களின் சொறி குணங்களை மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு உந்த இடதுசாரிகளுக்கு இருக்கு பார்ப்போம் ..

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் போராட்டம் 

29 Jan, 2025 | 04:30 PM
image
 

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழ்ப்பாணத்தில் இன்று (29) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். 

இதன்போது பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.

“வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும்”, “படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம்”, “பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரயோசனம்”  என்றவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ். நகரினூடாக  மாவட்ட செயலகத்துக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின்போது போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தமை தொடர்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவரை நாளைய தினம் வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை பொலிஸாரால் வழங்கப்பட்டது. 

அதனையடுத்து, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் போராட்டம் நண்பகல் வேளையில் நிறைவடைந்தது. 

01__1_.jpg

01__2_.jpg

01__4_.jpg

01__5_.jpg

01__6_.jpg

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழில் போராட்டம்  | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.