Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை கூடி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கும் என்றும் நெதன்யாகு அறிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் காஸாவில் போர் முடிவுக்கு வரவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, பல மாத மத்தியஸ்த பணிக்குப் பிறகு, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக நேற்று அறிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா மற்றும் கத்தார் இடையேயான தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஜனவரி 19ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

ஹமாஸ் முதற்கட்டமாக 33 பணயக்கைதிகளை விடுவிக்கும், பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியானது, போர்நிறுத்தத்தின் ஆறு வாரங்களுக்குள் பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவதற்கும் அனுமதிக்கிறது.

மத்தியஸ்தர்களான கத்தார் மற்றும் எகிப்தின் அனுசரணையில் பாலஸ்தீனிய அகதிகள் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள்.

காசாவின் புனரமைப்பு மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தம் முழுமையான போர்நிறுத்தம், துருப்புக்கள் திரும்பப் பெறுதல் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்யும் என்று பைடன் வாஷிங்டனில் தெளிவுபடுத்தியிருந்தார்.
 

https://oruvan.com/ceasefire-agreement-reached-with-hamas-israeli-prime-minister-announces/

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

large.IMG_8021.jpeg.591727cf01a2d8ecbdd4

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி

17 JAN, 2025 | 07:53 PM
image
 

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அனுமதியளிக்குமாறு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது பாதுகாப்பு அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அடுத்த கட்டமாக யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் அனுமதியளிக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/204109

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே இந்த ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசுக்கு சில நபர்களின் பெயர்கள் தெரிவாகி இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு - முதலாவது பணயக் கைதி நாளை விடுவிக்கப்படும் சாத்தியம்

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கூடுகிறது. 

குறித்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் நாளைய தினம் முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நாளை முதல் போர் நிறுத்தம் அமுல்ப்படுத்தப்படும். 

மூன்று கட்டங்களாக அமுல்ப்படுத்தப்படவுள்ள இந்த போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக பல பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததன் பின்னர், 33 பணயக் கைதிகளை ஹமாஸ் தரப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

அதேநேரம், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

குறித்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 116 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

https://www.hirunews.lk/tamil/393989/போர்-நிறுத்த-ஒப்பந்தம்-தொடர்பிலான-வாக்கெடுப்பு-முதலாவது-பணயக்-கைதி-நாளை-விடுவிக்கப்படும்-சாத்தியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி

Published By: Rajeeban

18 Jan, 2025 | 09:23 AM
image

காசா யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கலாம் என தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேலின் அமைச்சரவையும் உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலிய நேரப்படி நள்ளிரவு வரை தொடர்ந்த கடும் விவாதங்கள் கருத்துபரிமாற்றங்களின் பின்னர் அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இரண்டு வலதுசாரி அமைச்சர்கள் ஹமாசுடன் உடன்படிக்கை செய்துகொள்வதை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஒருமாதகாலமாக கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் யுத்த நிறுத்தம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை குறித்த விபரங்கள் வெளியாகாத போதிலும்,ஆறுவார கால  ஆரம்பகட்ட யுத்தநிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதாகவும்,இதன்போது இஸ்ரேலிய படையினர் படிப்படியாக காசாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுவார்கள் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இக்காலப்பகுதியில் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளன.

இக்காலப்பகுதியில் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்,எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ள 50வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களும் மற்றும் சிறுவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யுத்தநிறுத்தத்தின் 16 வது நாள் இரண்டாவது கட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும்,இதன்போது அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்வது , நிரந்தர யுத்த நிறுத்தம்,இஸ்ரேலிய படையினரை காசாவிலிருந்து முற்றாக விலக்கிக்கொள்வது குறித்து ஆராயப்படும்

 

https://www.virakesari.lk/article/204121

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/1/2025 at 09:37, Kavi arunasalam said:

large.IMG_8021.jpeg.591727cf01a2d8ecbdd4

டொனால்ட் ரம்பும் பைடனும் சேர்ந்தே இந்த அமைதி நடவடிக்கையை மேற்கொண்டாதாக செய்திகள் உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.