Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாதம்ஸ் சும்மா “அடிச்சு” விடுகின்றீர்கள்😂🤣

தமிழ் தேசியம் வளர சீமானை ஒன்றும் தலைவர் கண்டடையவில்லை. புலிகளின் ஆவணப்படத்தை இயக்கக்கூடத் தெரிவு செய்யப்படவில்லை என்பதுதான் வரலாறு!

தலைவர் தன் வழியில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்க ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்துதான் தனக்குப் பிறகு புலிகள் அமைப்பை மொத்தமாகவும், சில்லறையாகவும் பிரித்து எடுங்கள் என்று இறுதிக் கட்டங்களில் சொன்னார். அதை நேரில் கேட்ட யாழ் உறவையே புலிகளின் அமைப்பில் இல்லை என்று நிறுவும் போக்கும் இந்த யாழ் களத்தில் பார்ர்ததுதான்! 

இந்த ஆதரவு கொடுக்கும் போராளிகள் யார்? பையன், ஓணாண்டி, நாதம்ஸ்?😂🤣

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்களான அனைத்துலகச் செயலகமும், தலைமைச் செயலகமும் கூட சீமானைப் புறக்கணித்துவிட்டார்கள் அல்லது கண்டுகொள்வதில்லை.

 

சேர்க்கை:

1993 இல் விடுதலைப் புலிகள் பத்திரிகை (புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை) வைகோவை தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் என்று கூறியது.

ஆதாரம் இணைப்பில் உள்ளது:

https://tamileelamarchive.com/article_pdf/article_0b5150d211e28e703c01866b7b0cc204.pdf

எக்சல் மண்டபத்தில் வந்த வெறுப்பு என்று காரணம் சொன்ன உங்கள் கருத்து மேலோட்டமானது.

நீங்கள் குறித்த காலத்தில் இரு குழுக்கள், இரு மாவீரர் நிணைவுகள். 

இந்தப் புடுங்குப்பாட்டுக்குள், தமிழகத்தை சேர்ந்த பலர் இழுபட்டு, இப்போது ஒரு நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளனர்.

இதில் நீங்கள் கூறிய செயலகங்களில் எது உத்தியோகபூர்வமானது, எது சுத்துமாத்து: யார் அறிவர்.

அதேவேளை, தயக்கத்துடன் நான் கேள்விப்பட்ட ஒருவிடயத்தையும் பகிர்கிறேன்.

தலைவரின் அண்ணர் குடும்பத்துக்கும், தலைவர் மணைவி குடும்பத்துக்கும் இடையே நடக்கும் பனிப்போர் காரணம்::: அதுவே தான்! ஊகித் திருப்பீர்கள்.!

1993வேறு, 2009 வேறு!

அது போகட்டும். சீமானோ, நாதகவோ எமக்கு எதுவும் செய்வார்கள் என்று நான் எதிர்பார்காததால், அவர்கள் தமது அரசியலுக்கு பிரபாகரன் பெயரை பயன்படுத்துகிறார்கள் என புரிவதால், அதன் காரணமும் புரிவதால் no tension, no angry!

சுபாஸ் சஸ்திரபோஸ் தலைவரின் முன்மாதிரி. எதற்காக இந்தியரை முன்மாதிரி என்ற யாரும் அங்கே கொந்தளிக்கவில்லை. தலைவரையும் கேட்கவில்லை.

அதே வேளை, திமுக IT விங் நம் தலைவரை அவமதிப்பதையும் ஏற்க முடியாது.

 

 

Edited by Nathamuni

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

என்ன கிருபன், இப்போதுதான் நித்திரையால் எழும்பி வருகிறீர்களா? சந்தோஷின்  காணாளியை பார்க்கவில்லையா? சீமான் ஆவணப்படமெடுக்க வரவில்லை என்று அவரே சொல்லியிருக்கிறார்? அப்போ ஏன் சீமான் தலைவரை சந்திக்கப்போனார்? குசலம் விசாரிக்கவா?

எப்போ,

அந்த காலத்தில் வன்னிக்கு போய் தலைவரோடு சில நிமிடம் கழித்த ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருந்தது.

சீமானின் பணி - தமிழ் நாடு திரும்பி பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

Nothing more nothing less.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, செவ்வியன் said:

காரணம் கர்நாடாகவிற்கு தேவையான பலமான தலைமை அங்கிருந்தது. அங்கு பாஜக வலுவான கட்சி, தலைமை ஏற்க ஆட்களுக்கு பஞ்சமில்லை.

 உங்களின் கேள்வியின் நோக்கம் புரிகிறது, கர்நாடாகவை கன்னடர் அல்லாதோர் ஆள முடியுமா என்பதே. ஆம் ஆண்டிருக்கிறார்கள். ஓர் உதாரணத்தின் இணைப்பு கீழே.

https://en.m.wikipedia.org/wiki/Dharam_Singh

என்னை பொறுத்தவரை அவர் யாரென்பது முக்கியமில்லை, யாருக்கான ஆட்சியை அவர் முன்னெடுக்கிறார் என்பதே முக்கியம்.

கிழக்கின் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் தமிழர் தானே, அவர் யாருக்கான முதலமைச்சராக இருந்தார்?

சிங் என்ற பெயரை வைத்து முடிவு செய்கிறீர்கள் போலும்?

அவர் பிறந்தது கர்நாடகாவில்: பிரிட்டிஸ் கால Hyderabad stare!

அப்ப முதல்வர் ஸ்ராலின் ரஸ்யரா?

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

நல்லா முட்டு கொடுக்கிறீர்கள். நம்மிலும் கீழோர் என்பது பகுத்தறிவு பற்றியதா? விளங்கீடும்! 

எது பகுத்தறிவு? கள்ளுக்கடைகளை மூடும் போராட்டத்திற்காக தனது தோப்பில் 500  தென்னை மரங்களை வெட்டிச்சாய்த்தவராம் பெரியார். பெண்விடுதலைக்கு தலைமயிரை ஆண்கள் போலவெட்டிக்கொள்ளுங்கள், ஆண்கள் போல உடையணியுங்கள், திருமண பந்தத்திற்குள் செல்லாதீர்கள், கர்ப்பப்பையை அகற்றுங்கள் என்பதெல்லாம் முற்போக்கு சிந்தனை.

 

இந்த விடயங்களை எங்கே கேள்விப் பட்டீர்கள்? ஏனெனில், நிச்சயமாக நீங்கள் பெரியாரின் வெளியீடுகளை வாசிக்கவில்லை, துணுக்குகளாக-snippets யாரோ முகநூலில் வெட்டிப் போடுவதை context விளங்காமல் எடுத்து வந்து "இது பிற்போக்கு வாதம் என்கிறீர்கள்"😂. இது வழமையாக உங்கள் போன்ற தீவிர வலதுசாரிகள், தகவல் அறியும் ஆர்வமில்லாதோர் செய்வது தான்.

"தமிழ் எழுத்துக்கள் இலகுவாக்கப் பட வேண்டும், இப்போது தமிழ் காட்டு மிராண்டி மொழியாக இருக்கிறது" என்பதில் முன்பகுதியை  நீக்கி விட்டு பின்பகுதியை மட்டும் சீமான் தம்பிகள் இங்கே தூக்கித் திரிந்தனர். இதே போன்ற பின்னணி விளங்காத ரிக் ரொக் மண்டையர்களின் வேலை தான்!

பெரியாரின் மேற்கருத்துக்களை முழுவாக்கியங்களாக வாசிக்கப் பாருங்கள். முடியாவிட்டால், இது போல அறிவலட்சியத்தையாவது வெளிக்காட்டாமல் பேசாமல் இருங்கள்!

8 hours ago, Eppothum Thamizhan said:

நான் வீரமணி மனதுவைத்தால் என்று சொன்னது பெரியாரின் பத்திரிகைகள், புத்தகங்களை அரசுடமையாக்குவது பற்றியது.

 

இதைப் பற்றி ஏற்கனவே விளக்கியாகி விட்டது. பெரியாரின் பிரசுரங்களை , எழுத்துக்களைப் பகிரங்கப் படுத்த எந்த "மணி" 😎யும் மனசு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியாரின் எழுத்துக்களை யாரும் தேடிப் பிரசுரிக்கலாம். வீரமணிக்கு பதிப்புரிமை இல்லை. செய்தி மிகவும் பழசு, ஆனாலும் அப்டேற் செய்து கொள்ளுங்கள்👇.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/periyar-self-respect-propaganda-institution-withdraws-copyright-infringement-suit-related-to-republishing-of-dk-founders-literary-works/article66081301.ece

https://timesofindia.indiatimes.com/city/chennai/high-court-refuses-permission-to-amend-periyar-copyright-plea/articleshow/7214075.cms

https://www.newindianexpress.com/cities/chennai/2009/Jul/28/hc-rejects-plea-on-using-periyar-writings-71795.html

சீமான் தரப்பின் விடய ஞானமில்லாத ஆட்களின் மண்டையைக் கழுவும் தில்லாலங்கடி வேலைகளுக்கு இந்த பதிப்புரிமை பற்றிய பொய் சிறந்த உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சிங் என்ற பெயரை வைத்து முடிவு செய்கிறீர்கள் போலும்?

அவர் பிறந்தது கர்நாடகாவில்: பிரிட்டிஸ் கால Hyderabad stare!

அப்ப முதல்வர் ஸ்ராலின் ரஸ்யரா?

 

நீங்கள் முழுமையாக படிக்கவில்லைப் போல், அவர் ராஜ்புத்திரர் பூர்விக கன்னடரில்லை. நாதகவினர் மொழியில் கர்நாடகத்திற்கு அவரொரு வந்தேறி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

 

சீமானின் பணி - தமிழ் நாடு திரும்பி பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

 

எதைப்பற்றி? தமிழ்த்தேசியத்தை தானே!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

😊

உங்களது, அன்ரன் பாலசிங்கம் சிஐஏ காரர் type, RAW கதைகளில் எனக்கு ஆர்வம் இல்லை.

முக்கியமாக RAW External agency, IB is internal. ஆகவே முன்னையது உள்ளூர் அரசியலில் மூக்கை நுழைக்கும் remit இல்லை என்பதே எனது நிலை!

திராவிடம் என்ற சொல் எந்த பழம் தமிழ் இலக்கியங்களிலும் இல்லை.

இது பிரிட்டிஸ் காலத்தில் தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழரை குறிக்க பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வகையிலே, சிங்களம் பாவிக்க தொடங்கியிருக்கலாம் என்பது எனது அவதானிப்பு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

உங்களது, அன்ரன் பாலசிங்கம் சிஐஏ காரர் type, RAW கதைகளில் எனக்கு ஆர்வம் இல்லை.

முக்கியமாக RAW External agency, IB is internal. ஆகவே முன்னையது உள்ளூர் அரசியலில் மூக்கை நுழைக்கும் remit இல்லை என்பதே எனது நிலை!

 

 

😂உங்கள் இந்த "நிலைப்பாட்டை" றோவுக்கு சொல்லி விட்டீர்களா? அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? தேசிய பாதுகாப்பிற்கு உள் (domestic) அரசியலில் இருந்து ஆபத்து வந்தால் IB ஆ றோ வா எதிர்வினையாற்றும்?

7 minutes ago, Nathamuni said:

திராவிடம் என்ற சொல் எந்த பழம் தமிழ் இலக்கியங்களிலுமா இல்லை.

 

இருக்கிறது. மிக ஆரம்பத்திலேயே ரசோதரன் எழுதி விட்டார் . தெரிவு செய்து வாசிக்காமல் எல்லாக் கருத்துக்களையும் வாசித்த பின்னர் நேரத்தை விரயம் செய்வதா இல்லையா என்று யோசியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, செவ்வியன் said:

நீங்கள் முழுமையாக படிக்கவில்லைப் போல், அவர் ராஜ்புத்திரர் பூர்விக கன்னடரில்லை. நாதகவினர் மொழியில் கர்நாடகத்திற்கு அவரொரு வந்தேறி.

நான் பார்த்த வகையில் அவரது குடும்பம், கர்நாடகாவின், சிறுபான்மையான ரஜபுத்திர இனம்.

தமிழகத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டியர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். அதேபோல் குஜராத்தில் இருந்து வந்து மதுரையில் குடியேறிய (செளராஷ்டிரர்கள் என்று நிணைக்கிறேன்) சிறு குழுவின் வம்சாவழியே பாடகர் டிஎமஎஸ்.

ரிசி, பிரிட்டிஸ் பிரதமராக மக்கள் தெரிவு செய்யவில்லை!

அதே வேளை தமது பூர்வீகத்தை மறைக்க கிறிஸ்தவர்களாகி பின்னர் பெளத்தராகி, தமிழருக்கு எதிராக இனவாதம் பேசி சிங்களவரை ஏமாத்தி ஆட்சிக்கு வந்த தமிழர்களும் இலங்கை அரசியலில் இருந்தார்கள்.

இலங்கையில் போர்த்துக்கேயர் கொண்டு வந்த ஆபிரிக்கர்களும் வாழ்கிறார்கள்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

 

அதே வேளை தமது பூர்வீகத்தை மறைக்க கிறிஸ்தவர்களாகி பின்னர் பெளத்தராகி, தமிழருக்கு எதிராக இனவாதம் பேசி சிங்களவரை ஏமாத்தி ஆட்சிக்கு வந்த தமிழர்களும் இலங்கை அரசியலில் இருந்தார்கள்.

 

இது வரை சிறி லங்கா 16 பிரதமர்களையும் , 10 ஜனாதிபதிகளையும் கண்டிருக்கிறது.  யார் உருமறைப்புச் செய்த "தமிழர்கள்"?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

சிங் என்ற பெயரை வைத்து முடிவு செய்கிறீர்கள் போலும்?

அவர் பிறந்தது கர்நாடகாவில்: பிரிட்டிஸ் கால Hyderabad stare!

அப்ப முதல்வர் ஸ்ராலின் ரஸ்யரா?

 

ஆனால் அவர் ethnic Kannadika இல்லை.

அதாவது தூய இனவழி கன்னடர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆனால் அவர் ethnic Kannadika இல்லை.

அதாவது தூய இனவழி கன்னடர் அல்ல.

ஹாஹா அவருக்கு இது புரியும், ஆனால் அவரை எப்படியாவது கன்னடராக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்

27 minutes ago, Nathamuni said:

நான் பார்த்த வகையில் அவரது குடும்பம், கர்நாடகாவின், சிறுபான்மையான ரஜபுத்திர இனம்.

 

 

அப்படியான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் தான் கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார்.

நீங்களே கூறியது போல் இனவாத அரசியலை தாண்டி உலகில் பல இடங்களில் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் வரலாற்றில் நிலைப்பது அவர்களின் செயல்பாடுகளினால் மட்டுமே அன்றி இந்த இனத்தில் பிறந்தவருக்காக என்பதருக்காக அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

நான் பார்த்த வகையில் அவரது குடும்பம், கர்நாடகாவின், சிறுபான்மையான ரஜபுத்திர இனம்.

தமிழகத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டியர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். அதேபோல் குஜராத்தில் இருந்து வந்து மதுரையில் குடியேறிய (செளராஷ்டிரர்கள் என்று நிணைக்கிறேன்) சிறு குழுவின் வம்சாவழியே பாடகர் டிஎமஎஸ்.

ரிசி, பிரிட்டிஸ் பிரதமராக மக்கள் தெரிவு செய்யவில்லை!

அதே வேளை தமது பூர்வீகத்தை மறைக்க கிறிஸ்தவர்களாகி பின்னர் பெளத்தராகி, தமிழருக்கு எதிராக இனவாதம் பேசி சிங்களவரை ஏமாத்தி ஆட்சிக்கு வந்த தமிழர்களும் இலங்கை அரசியலில் இருந்தார்கள்.

இலங்கையில் போர்த்துக்கேயர் கொண்டு வந்த ஆபிரிக்கர்களும் வாழ்கிறார்கள்.

 

 

நாதம், சம்பந்தமில்லாமல் அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள். கீழே உள்ள பட்டியலில் மதம் மாறி, உருமறைப்புச் செய்த தமிழர்/கள் யார்?

 Sirimavo Bandaranaike

       
  Ranasinghe Premadasa        
  Ranil Wickremesinghe        
  Dudley Senanayake        
  Ratnasiri Wickremanayake        
  D. M. Jayaratne        
  D. S. Senanayake        
  Mahinda Rajapaksa        
  Dingiri Banda Wijetunga        
  S. W. R. D. Bandaranaike        
  Dinesh Gunawardena        
  John Kotelawala        
  J. R. Jayewardene        
  Wijeyananda Dahanayake        
  Harini Amarasuriya        
  Chandrika Bandaranaike
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, செவ்வியன் said:

ஹாஹா அவருக்கு இது புரியும், ஆனால் அவரை எப்படியாவது கன்னடராக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்

அப்படியான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் தான் கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார்.

நீங்களே கூறியது போல் இனவாத அரசியலை தாண்டி உலகில் பல இடங்களில் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் வரலாற்றில் நிலைப்பது அவர்களின் செயல்பாடுகளினால் மட்டுமே அன்றி இந்த இனத்தில் பிறந்தவருக்காக என்பதருக்காக அல்ல.

என்ன சொல்ல வருகிறீர்கள்?

தமிழகத்தில் தமிழரல்லாதோர் முதல்வராகிவிட்டனர்.

இன்றைய நிலையில் கன்னடத்தில் கன்னடரல்லாதோர் முதல்வராக சாத்தியம் இல்லை. 

தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கவுன்சிலர் சிலர் உள்ளே செல்லவே முடியாத கன்னட வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்களது, அன்ரன் பாலசிங்கம் சிஐஏ காரர் type, RAW கதைகளில் எனக்கு ஆர்வம் இல்லை.

இப்படி நான் எங்கும் சொன்னதில்லை.

ஆனால் பாலா அண்ணை மேல் சொல்லப்படுவது வெறும் ஆதரமற்ற அவதூறு. Speculation.

ஆனால் முத்துகுமார் கொலை முதல், சீமான் அவரை மறக்கடிப்பது வரை நான் சந்தர்ப்பசாட்சியங்களை circumstantial evidence அடுக்கியுள்ளேன்.

1 hour ago, Nathamuni said:

முக்கியமாக RAW External agency, IB is internal. ஆகவே முன்னையது உள்ளூர் அரசியலில் மூக்கை நுழைக்கும் remit இல்லை என்பதே எனது நிலை!

 

மிகவும் தவறான புரிதல்.

தமிழ் தேசியம் என்பது is an external and internal threat to India இந்தியாவின் இருப்புக்கு உள்ளும், புறமுமான ஆபத்து என்பதே டில்லியின் நிலைப்பாடு.

ஆகவே சகல இந்திய மத்திய மாநில ஏஜென்சிகளும் இதில் ஒருங்கிணையும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

திராவிடம் என்ற சொல் எந்த பழம் தமிழ் இலக்கியங்களிலும் இல்லை.

 

இதற்குத்தான் முன்பு உங்களிடம் ஒரு கேள்வி எழுப்பினேன்.

பத்துப்பாட்டு, எட்டு தொகை, பதிண்கீழ்கணக்கு….இதில் எந்த இலக்கியதில் “தமிழ்” என்ற சொல் மொழியை அன்றி இனத்தை குறிப்பதாக முதலில் வருகிறது?

திராவிடம், தமிழ் என்பது எல்லாமுமே பின்னாநாளில் நாம் பயன்படுத்திய பெயர்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம் அவர்கள் தம்மை அந்த பெயரால் அழைத்திருக்கமாட்டார்கள்.

37 minutes ago, செவ்வியன் said:

ஹாஹா அவருக்கு இது புரியும், ஆனால் அவரை எப்படியாவது கன்னடராக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்

ஆனால் அதே formula உதயநிதிக்கு பொருந்தாது🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இதற்குத்தான் முன்பு உங்களிடம் ஒரு கேள்வி எழுப்பினேன்.

பத்துப்பாட்டு, எட்டு தொகை, பதிண்கீழ்கணக்கு….இதில் எந்த இலக்கியதில் “தமிழ்” என்ற சொல் மொழியை அன்றி இனத்தை குறிப்பதாக முதலில் வருகிறது?

திராவிடம், தமிழ் என்பது எல்லாமுமே பின்னாநாளில் நாம் பயன்படுத்திய பெயர்கள்.

சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோம் அவர்கள் தம்மை அந்த பெயரால் அழைத்திருக்கமாட்டார்கள்.

ஆனால் அதே formula உதயநிதிக்கு பொருந்தாது🤣.

நல்ல கேள்வி!

நீண்ட பதில் தரவேண்டும். நேரம் இருந்தால் பார்ப்போம். கறி என்ற சொல் பழம் தமிழ் இலக்கியங்களில் எத்தனை முறை வருகிறது?

By the way, can you help our friend Justin  Aiya with his big list!! 🤪

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

நல்ல கேள்வி!

நீண்ட பதில் தரவேண்டும். நேரம் இருந்தால் பார்ப்போம். கறி என்ற சொல் பழம் தமிழ் இலக்கியங்களில் எத்தனை முறை வருகிறது?

By the way, can you help our friend Justin  Aiya with his big list!! 🤪

கறிக்கான விளக்கமும் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு மட்டும் அல்ல, இதை போல பல கேள்விகளுக்கு பதில் தரமுடியாத….

அது என்ன….ஆ…..நிறைகுடம் நீங்கள் என்பது யாழ் அறிந்ததுதான்🤣.

இனி என்ன எஸ்சாகிவிட்டு நிர்வாகத்தின் மீது பழியை போடவேண்டியதே🤣.

பிகு

நீங்கள் இங்கே எனக்கான பதிலில் ஜஸ்டின் அண்ணாவை இழுத்து குழுவாதம் ஏற்படாதா என ஏங்குவது புரிகிறது 🤣.

வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நல்ல கேள்வி!

நீண்ட பதில் தரவேண்டும். நேரம் இருந்தால் பார்ப்போம். கறி என்ற சொல் பழம் தமிழ் இலக்கியங்களில் எத்தனை முறை வருகிறது?

By the way, can you help our friend Justin  Aiya with his big list!! 🤪

அப்ப இது பழைய நாதம் தான், ஒன்றும் மாறவில்லை😂:

எதையாவது கோராவில் பார்த்து விட்டு அப்படியே நம்பி இங்கே எழுதுவது, சம்பந்தமில்லாமல் அலட்டுவது, பதில் அளிக்கப் பட்ட பிறகு மீளப் போய் தன்னுடைய ஒரிஜினல் பதிவை மாற்றுவது, பதில் தெரியாத இடத்தில் "ஐயாவுக்கு வயசு, எனவே மரியாதை" என ageism trope இனை எடுத்து விடுவது.

இந்தக் கோலத்தில் நிழலிக்கு நாகரீக உரையாடலில் "memo" வேற😎!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள்?

தமிழகத்தில் தமிழரல்லாதோர் முதல்வராகிவிட்டனர்.

இன்றைய நிலையில் கன்னடத்தில் கன்னடரல்லாதோர் முதல்வராக சாத்தியம் இல்லை. 

தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கவுன்சிலர் சிலர் உள்ளே செல்லவே முடியாத கன்னட வாதம்.

கன்னடர் அல்லாதவர் கர்நாடகவில் முதல்வராக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு தான் அந்த உதாரணத்தை கொடுத்தேன்.

அதே போல் எனக்கு தெரிநிது கர்நாடாகவிலும், மகாராஷ்டிராவிலும் கூட தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இலங்கை போன்றே தேர்தலில் போட்டியிட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றே ஆளுகின்ற உரிமையை பெறுகிறார்கள். மக்கள் நலனுக்கு எதிராக நடைபெற்றால் மறுமுறை ஆட்சியை பிடிப்பது கடினம். மக்களும், சட்டமும் அனுமதிக்கும் போது வேறு யார் தடுக்கமுடியும்.

அமெரிக்கா, கனடாவில் ஆள்பவர்கள் என்ன பூர்வகுடி சிவப்பிந்தியர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

"தமிழ் எழுத்துக்கள் இலகுவாக்கப் பட வேண்டும், இப்போது தமிழ் காட்டு மிராண்டி மொழியாக இருக்கிறது" என்பதில் முன்பகுதியை  நீக்கி விட்டு பின்பகுதியை மட்டும் சீமான் தம்பிகள் இங்கே தூக்கித் திரிந்தனர். இதே போன்ற பின்னணி விளங்காத ரிக் ரொக் மண்டையர்களின் வேலை தான்!

பெரியாரின் மேற்கருத்துக்களை முழுவாக்கியங்களாக வாசிக்கப் பாருங்கள். முடியாவிட்டால், இது போல அறிவலட்சியத்தையாவது வெளிக்காட்டாமல் பேசாமல் இருங்கள்!

 

தான் தட்டச்சில் ஏற்றவேண்டும் என்பதற்காக எழுத்துக்களை இலகுவாக்கினாரே ஒழிய உச்சரிப்பு, மொழியை மாற்றவில்லையே. அதற்கு ஏன் காட்டுமிராண்டி மொழி என்று கூற வேண்டும்.  இத்தனைக்கும் எழுத்து உருமாற்றத்தை முதலில் அறிமுகப்படுத்தியது,  கொண்டுவந்தது குருசாமி என்பவர். வரலாறு தெரியாவிட்டால் படித்துவிட்டு வந்து எழுதுங்கள். நாம் இங்கு மனிதர் பேசும் பாஷையை பற்றி விவாதிக்கிறோம் மிருக பாஷையை அல்ல, நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க  .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதைப் பற்றி ஏற்கனவே விளக்கியாகி விட்டது. பெரியாரின் பிரசுரங்களை , எழுத்துக்களைப் பகிரங்கப் படுத்த எந்த "மணி" 😎யும் மனசு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியாரின் எழுத்துக்களை யாரும் தேடிப் பிரசுரிக்கலாம். வீரமணிக்கு பதிப்புரிமை இல்லை. செய்தி மிகவும் பழசு, ஆனாலும் அப்டேற் செய்து கொள்ளுங்கள்👇.

பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி, அவரது கருத்துக்கள் முற்போக்கானவை என்றால் பெரியாரின் நாளிதழ்களான குடிஅரசு, விடுதலை போன்றவற்றை அரசுடைமையாக்கி எல்லோருக்கும் சென்றடையக்கூடியதாக செய்தால் பெரியாரைப்பற்றி எல்லோரும் அறிந்து கொள்வார்களே! ஏன் திராவிட கட்சிகள் செய்யவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

ஓணாண்டியாரின் மைன்ட் வாய்ஸ்,

அடேய்களா,

கருத்து எழுதினாத்தானே நான் ஏறுக்குமாறா கதை சொல்லுவதை கண்டு பிடித்து எனக்கு மொக்காடு போடுவீங்க…

இனி வெறும் வீடியோதான்…🤣

யாழ் சேவர் பிரண்டாலும் பரவாயில்லை.

நீங்களாச்சு, நிராஜ் டேவிட் ஆச்சு🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

அப்ப இது பழைய நாதம் தான், ஒன்றும் மாறவில்லை😂:

எதையாவது கோராவில் பார்த்து விட்டு அப்படியே நம்பி இங்கே எழுதுவது, சம்பந்தமில்லாமல் அலட்டுவது, பதில் அளிக்கப் பட்ட பிறகு மீளப் போய் தன்னுடைய ஒரிஜினல் பதிவை மாற்றுவது, பதில் தெரியாத இடத்தில் "ஐயாவுக்கு வயசு, எனவே மரியாதை" என ageism trope இனை எடுத்து விடுவது.

இந்தக் கோலத்தில் நிழலிக்கு நாகரீக உரையாடலில் "memo" வேற😎!

இந்த மாதிரி, கிறுக்குத்தனமான அலப்பறைகளால் தான் பதில் தர விரும்புவதில்லை.

நீங்களும் இன்னும் அதே பழசு தான்.

நல்லா இருங்கள். சந்திப்போம்.

17 minutes ago, Eppothum Thamizhan said:

பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி, அவரது கருத்துக்கள் முற்போக்கானவை என்றால் பெரியாரின் நாளிதழ்களான குடிஅரசு, விடுதலை போன்றவற்றை அரசுடைமையாக்கி எல்லோருக்கும் சென்றடையக்கூடியதாக செய்தால் பெரியாரைப்பற்றி எல்லோரும் அறிந்து கொள்வார்களே! ஏன் திராவிட கட்சிகள் செய்யவில்லை? 

பெரியார் ஒரு பனியர்!

யாழ் காரை நகரில் தியாகராசா என்ற எம்பி இருந்தார்.

அவருக்கு பனித் தியாகர் என்ற பட்டம் வந்தது, உந்த பெரியார் ரைப் வேலைகளினால் தான்.

இவர் வாழும் காலத்தில் யாருமே பெரிதாக ஈழத்தில் தூக்கிப் பிடிக்கவில்லை.

இங்கே யாழ்களத்தில் தூக்கிக் காவடி ஆடுவது சிரிப்புத் தான். 

Edited by Nathamuni

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.