Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

24 JAN, 2025 | 11:09 AM
image
 

மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்துசெய்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுசூழல்; அறக்கட்டளை நிறுவனம் உட்பட பல அமைப்புகள் இந்த திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுசூழல் மதிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளன என்பதாலும் மன்னார் வலசப்பறவைகளிற்கான பகுதி என்பதாலும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

மன்னார் ஆயர் உட்பட மன்னார் மக்களும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த திட்டத்தை இரத்துச்செய்வேன் என உறுதியளித்திருந்த அனுரகுமாரதிசநாயக்க இலங்கையில் காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச கேள்விப்பத்திரத்தை கோருவேன் என தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/204752

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தலைவா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்ய தீர்மானிக்கவில்லை - நளிந்த ஜயதிஸ்ஸ

25 JAN, 2025 | 07:07 PM
image
 

(எம்.மனோசித்ரா)

அதானி குழுமத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. மாறான வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து, அந்த இணக்கப்பாட்டை மீளாய்வு செய்வதற்கு மாத்திரமே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

குறித்த மீளாய்வு குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அதானி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (25)  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதானி குழுமத்தினால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்உற்பத்தி திட்டங்கள் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பில் அதானி நிறுவனமும் தெளிவுபடுத்தியிருந்தது.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை கடந்த அரசாங்கத்தால் இந்த திட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய மீளாய்வு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை மாத்திரமே அரசாங்கம் எடுத்துள்ளது. அதனைவிடுத்து வேறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மீளாய்வுக்குழு அதன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மீளாய்வின் பின்னர் அந்த அறிக்கைக்கமைய எவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வது என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும். 

வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்தது.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்து, கொள்வனவு விலைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காரணம் கடந்த அரசாங்கம் இணக்கப்பாடு தெரிவித்திருந்த விலைகளுடன் எம்மால் இணங்க முடியாது. எனவே தான் அதனை மீளாய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது என்றார்.

https://www.virakesari.lk/article/204881

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்பட்டு தலைவருக்கு நன்றி சொல்லி போட்டேனோ🤔? நன்றி வாபஸ்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அவசரப்பட்டு தலைவருக்கு நன்றி சொல்லி போட்டேனோ🤔? நன்றி வாபஸ்🤣

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதானி குழுமத்திற்கு கொடுக்கபட்ட அனுமதி  இரத்து செய்யபடும் என்பது போல்  ஜேவிபி காட்டி கொண்டது  கம்யூனிச தத்துவத்தில் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விளங்க நினைப்பவன் said:

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதானி குழுமத்திற்கு கொடுக்கபட்ட அனுமதி  இரத்து செய்யபடும் என்பது போல்  ஜேவிபி காட்டி கொண்டது  கம்யூனிச தத்துவத்தில் ஒன்று

தேங்காயின் விலைகூடிய காரணத்தால் "பொல் சம்பல்" சாப்பிடுவதை தவிருங்கள் என  ஜெ.வி.பி தோழர்(பிரதி அமைச்சர்) அறிவுரை சொல்கின்றார் ...பொல் சம்பலும் பாணும் தான் ஒர் ஏழையின் தேசிய உணவு ...அதை தவிருங்கள் என கம்னியூஸ்ட்கள் பாடம் எடுக்கின்றனர் ..
பக்கா இடதுசாரிகள் ...அமைச்சர் சந்திரசேகரை பார்த்தாலே தெரிகின்றது...வடமாகாண சபையில் ஆளுனர் பதவி ஏற்கும் பொழுது விபூதி சந்தனத்தை தவிர்த்த அமைச்சர் ,இன்று அவை அவரின் நெற்றியை அலங்கரிக்கின்றது ...சிவப்பு சேர்ட் உடன் நின்ற தோழர்கள் இன்று சுரிதார்(ஆண்கள் அணியும்) அணிகின்றார் கலர் கலராக....சிங்கள தோழர்களும் சலைத்தவர்கள் அல்ல..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.