Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்  விசுவநாதன் ருத்ரகுமரன் (Visvanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழீழ மக்கள்

இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த்துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம் | Gov Of Tamil Eelam Based Abroad Condemns Seeman

இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தேசியத் தலைவர் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.

விடுதலை இயக்கம்

நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர்.

தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் தேசியத் தலைவரதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை. 

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம் | Gov Of Tamil Eelam Based Abroad Condemns Seeman

இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் நமது தேசியத் தலைவரை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம்.

தேசியத் தலைவரால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும்.

இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும்.

தேசியத் தலைவர்

இத்தகைய அணுகுமுறை தேசியத் தலைவர் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும்.

தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை.

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம் | Gov Of Tamil Eelam Based Abroad Condemns Seeman

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும்.

சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/gov-of-tamil-eelam-based-abroad-condemns-seeman-1738583911

  • கருத்துக்கள உறவுகள்

இவரையும் துரோகி என்று

அழைக்க சீமானின்

முரட்டு முட்டுக் கொடுப்போர் சங்கம்

போலி போட்டோஷொப் பட புலவர் சங்கம்

பா ஜ கவின் தீவிர நாதம் இசைப்பவர்கள்

தலைவர் விடயத்திலும் போலி துவாரகா விடயத்திலும் பொட்டர் அண்ணை விடயத்திலும்

கம்மென்று இருந்து விட்டு

இப்ப பம்மிக் கொண்டு சீமானிற்கு ஆதரவு கொடுக்கும்

முன்னால் போலி மெய்பாதுகாவலர்கள்

வியாபாரிகள்

விசுக்கோத்துகள்

விசிலடிச்சான் குஞ்சுகள்

இன்னும் ரெடியாகவில்லையா?

ரெடியாகவில்லையா??

ரெடியாகவில்லையா???

  • கருத்துக்கள உறவுகள்

காலம்தாழ்தியேனும் ….

வரவேற்கப்பட வேண்டிய செய்கை.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் சுத்துமாத்து செயல்களை கண்டித்த இவர் பாராட்டபட வேண்டியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளின் அழிவுக்கு பின்னர் செய்த ஒரே நல்ல சம்பவம் இதுதான் 

On 3/2/2025 at 12:19, வைரவன் said:

இவரையும் துரோகி என்று

அழைக்க சீமானின்

முரட்டு முட்டுக் கொடுப்போர் சங்கம்

போலி போட்டோஷொப் பட புலவர் சங்கம்

பா ஜ கவின் தீவிர நாதம் இசைப்பவர்கள்

தலைவர் விடயத்திலும் போலி துவாரகா விடயத்திலும் பொட்டர் அண்ணை விடயத்திலும்

கம்மென்று இருந்து விட்டு

இப்ப பம்மிக் கொண்டு சீமானிற்கு ஆதரவு கொடுக்கும்

முன்னால் போலி மெய்பாதுகாவலர்கள்

வியாபாரிகள்

விசுக்கோத்துகள்

விசிலடிச்சான் குஞ்சுகள்

இன்னும் ரெடியாகவில்லையா?

ரெடியாகவில்லையா??

ரெடியாகவில்லையா???

இவர்கள் எல்லோரும் தமது வண்டவாளங்கள் வெளியே தெரிந்து விட்டதே என்று எல்லாம் எண்ணி தலைகுனிவார்கள் என்று எதிர்பார்க வேண்டாம் 

இவர்கள் இப்பொழுது உரித்திரகுமாரை வைத்து உரிக்கப் போகின்றர்கள் 

On 3/2/2025 at 13:30, goshan_che said:

காலம்தாழ்தியேனும் ….

வரவேற்கப்பட வேண்டிய செய்கை.

ஓம் மிகவும் காலம் தாழ்த்தி சொல்லப்பட்ட செய்தி இது. கிட்டத்தட்ட 15 வருடமாக பரப்பப் பட்ட பொய்யை இந்த செய்தி எளிதில் வீழ்த்தி விடாது. ஒரு தலைமுறையையே மூளைச் சலவை செய்ய வைத்து இருக்கின்றான் சீ சீமான் 

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒரே பொய் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு உள்ளது.

15 -16 வயதில் செய்திகளை வாசிக்க தொடங்கும் ஒரு இளைய தலைமுறையின் சிந்திக்கும் முறை இந்த சீமான் வகையறாக்களால் மாற்றப்பட்டு உள்ளது 

விஷப் பாம்புகளை இனியும் விட்டு வைக்கக் கூடாது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.