Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-255.jpg?resize=750%2C375&ssl

துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்!

மீத்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், அவரது ஆறு வயது மகளும் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.

தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்களில் பயணித்த கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், மோட்டார் சைக்கிளின் சாரதியான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகனும், மகளும் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மகன் எல்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1422010

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-276.jpg?resize=750%2C375&ssl

மீத்தெனிய துப்பாக்கி சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு!

மீத்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூட்டில் சமப்வ இடத்தில் உயிரிழந்த 39 வயதுடைய நபரின் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (18) இரவு 10.15 மணியளவில் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிளின் சாரதியான கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது 06 வயதுடைய மகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயதுடைய பாதிக்கப்பட்டவரின் மகனும் நேற்று மாலை உயிரழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேநேரம், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணையையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1422159

  • கருத்துக்கள உறவுகள்

மித்தேனிய கொலை- கொல்லப்பட்டவர் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கனமானவரா?

20 Feb, 2025 | 02:42 PM

image

மித்தேனிய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட 39 வயது நபர் கஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக மிரட்டி பணம் பறித்தல் உட்பட ஏனைய குற்றச்சாட்டுகள்இருந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18ம் திகதி இரவு இவர் மோட்;டார் சைக்கிளில் தனது இரண்டு பிள்ளைகளுடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை சுடப்பட்டார்.கடவத்தை சந்திக்கு அருகில் 10.15 அளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்,படுகாயமடைந்த அவரது ஆறு வயது மகளும் 9 வயது மகனும் தங்காலை எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், தங்காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் மகள் உயிரிழந்தார்,காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகன் பின்னர் உயிரிழந்தார்.

கொல்லப்பட்டவரின் மனைவி வெளிநாட்டில் வசிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்டவர் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவுடனான  யூடியுப் நேர்காணல்  ஒன்றின் போது ராஜபக்ச குடும்பத்தின் நண்பன் என தன்னை அடையாளம் காட்டியிருந்தார்.

அந்த பேட்டியில் இலங்கையில் பெரும் குற்றவாளி கும்பலொன்று இயங்குவதாக தெரிவித்திருந்த அவர் அதிகாரிகள் அந்த குற்றவாளி கும்பலிற்கு ஆதரவளிக்கின்றனர் தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்திருந்தார்.

விதானகமகே ஆயுதங்களை வைத்திருந்தார்,தினமின தெரிவித்துள்ளது.

இந்த நபருக்கு மகிந்த குடும்பத்துடன் நெருங்கிய உறவிருந்தது ஆனால் இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் உறவுகள் பாதிக்கப்பட்டன என தினமின தெரிவித்துள்ளது.

யூடியுப் பேட்டியில் ராஜபக்ச குடும்பத்தினரின் சர்ர்பில் பல குற்றநடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தவரே விதானகமகே.

முன்னாள் எஜமான்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட பின்னர் தான்சிறையிலிருந்தவேளை தன்னை கொலை செய்வதற்காக ஒருவரை நியமித்திருந்தனர் என இவர் தெரிவித்திருந்தார்.

மித்தேனிய கொலை- கொல்லப்பட்டவர் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கனமானவரா? | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-302.jpg?resize=750%2C375&ssl

மித்தெனிய துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது!

தந்தை, இரு பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்த மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூட்டினை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகன் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவரின் ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகன் மறுநாள் உயிரழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர், மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

https://athavannews.com/2025/1422432

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20250219114220.webp?resize=750%2C375&ssl

மித்தெனிய முக்கொலை சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபர்களை 72 மணி நேரம் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம்திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே என்ற நபரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1422554

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-323.jpg?resize=750%2C375&ssl

மித்தெனிய துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!

கடந்த 18 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதான தெலம்புயாய வெகந்தாவல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலம்புய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூட்டினை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகன் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவரின் ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகன் மறுநாள் உயிரழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

https://athavannews.com/2025/1422627

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-163.jpg?resize=750%2C375&ssl

மித்தெனிய துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது!

மித்தேனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் துபாய்க்கு செல்ல முயன்றபோது கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.

பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு மித்தேனியாவில் உள்ள கடேவத்த சந்திக்கு அருகில் தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனால், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற “கஜ்ஜா” என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மகனும் மகளும் படுகாயமடைந்த நிலையில் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆறு வயது மகள் உயிரிழந்தார், அதே நேரத்தில் ஒன்பது வயது மகன் மறுநாள் இறந்தார்.

“பேக்கோ சமன்” என்று பிரபலமாக அறியப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் கஞ்சா பொதியை திருடியதற்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறெனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1424944

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போ...
No image preview

104K views · 1K reactions | டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட...

டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போது சிக்கிய மித்தெனிய முக்கொலை சந்தேக நபர் #sooriyanfmnews #sooriyanfm #sooriyan #hirunews #tamilnews #news #arrest...

டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போது, சிக்கிய மித்தெனிய முக்கொலை சந்தேக நபர்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

arrest-1.jpg?resize=670%2C375&ssl=1

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது!

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச்  செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர ஶ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு வாயிலுக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி, குற்றச் செயலானது கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவியமைக்காக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தலல்ல தெற்கு, கந்தர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
https://athavannews.com/2025/1429472

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.