Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 FEB, 2025 | 07:45 PM

image

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர்  விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (25) வருகை தந்திருந்தார்.

அமைச்சருக்கும், பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி பேசப்பட்டாலும் மீனவர் பிரச்சினை குறித்த விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அமைச்சர் எடுத்துரைத்தார். 

இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் என இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கூறும்போது,

ஆம், மனிதாபிமான முறையிலேயே அணுகுகின்றோம், சம்பவ தினத்தன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலேயே அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டினார்.

அதேபோல பெரும்பாலான மீனவர்கள் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தால் திரும்பி செல்கின்றனர் எனவும், ஒரு சிலரே அத்துமீறுகின்றனர் எனவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக தமிழகத்திலுள்ள பணபலம் படைத்த முதலாளிமார், அரசியல்வாதிகள் மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்த முற்படுகின்றனர் எனவும், தமது வாழ்வாதாரம் பற்றி மட்டுமே அவர்கள் சிந்திக்கின்றனர் எனவும், வடக்கு மீனவர்களின் நிலை பற்றி சிந்திப்பதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை வடக்கு மீனவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி வழங்கியது. அதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை மதித்து, நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பு தமது தரப்புக்கு உள்ள விடயத்தையும் அமைச்சர் மேற்படி சந்திப்பின்போது எடுத்துரைத்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

https://www.virakesari.lk/article/207682

அமைச்சர் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார். இதற்கு முதல் இருந்தவர்கள் எல்லாம் இந்த விடயத்திலும் இந்தியாவிடம் பம்மிக் கொண்டே இருந்தவர்கள்.

இந்த மீனவர் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வராமல் விடுவதே ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் ஊருக்கு சென்ற பொது, பல மீனவர்களை சந்தித்து கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் அநுராவின் அரசாங்கத்தில் பெரும் நம்பிக்கையில் இருக்கின்றார்கள், தாங்கள் அநுராவின் அரசாங்கத்திடம் ஒன்றும் எதிகாக்கவில்லையெனவும், இந்தியன் மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடியை தடுப்பதே தமக்கு செய்யும் பெரும் உதவி என கூறினார்கள், மேலும் கடந்த காலங்களை போல் இல்லாமல் தற்போது இந்தியன் மீனவர்களின் வருகை குறைந்ததிருப்பதாகவும் சொன்னார்கள்.

ஊரிலே நின்ற பொது அதிகாலையே கடற்கரைக்கு போய் மீன் வாங்குவதை வழமையாக கொண்டு இருந்தேன். பாசையூர், குருநகர், பன்னை பாலம், மண்டைதீவு, காக்கைதீவு (மாலை நேரம்) , நாவாந்துறை என பல இடங்களில் மீன் வாங்கி இருந்தேன். புலம் பெயர் தேசங்களில் என்ன தான் சொகுசு வாகனங்கள் ஓடினாலும், ஊரிலே காற்றோட்டமாக சாரமும் உடுத்துக்கொண்டு சைக்கி்ளில் போய் மீன் வாங்குவது ஒரு சுகமான அனுபவம் தான்.🤪

1 hour ago, zuma said:

ஊரிலே நின்ற பொது அதிகாலையே கடற்கரைக்கு போய் மீன் வாங்குவதை வழமையாக கொண்டு இருந்தேன். பாசையூர், குருநகர், பன்னை பாலம், , , நாவாந்துறை என பல இடங்களில் மீன் வாங்கி இருந்தேன்.

நான் ஊருக்கு போனால், மீன் வாங்க செல்லும் இடங்களில் தான் நீங்களும் வாங்கி இருக்கின்றீர்கள்.

கொழும்புத்துறை ஜெட்டிக்கு கிட்ட இப்ப மீன் விற்பதில்லையா?

1 hour ago, zuma said:

ஊரிலே காற்றோட்டமாக சாரமும் உடுத்துக்கொண்டு சைக்கி்ளில் போய் மீன் வாங்குவது ஒரு சுகமான அனுபவம் தான்.🤪

புலம்பெயர் நாட்டில் இருந்தாலு, சாறம் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓடும் skill இன்னும் இருக்கின்றதை அறிய ஆச்சரியமாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

நான் ஊருக்கு போனால், மீன் வாங்க செல்லும் இடங்களில் தான் நீங்களும் வாங்கி இருக்கின்றீர்கள்.

கொழும்புத்துறை ஜெட்டிக்கு கிட்ட இப்ப மீன் விற்பதில்லையா?

ஆம், கொழும்புத்துறையை தவற விட்டிட்டேன்.

29 minutes ago, நிழலி said:

புலம்பெயர் நாட்டில் இருந்தாலு, சாறம் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓடும் skill இன்னும் இருக்கின்றதை அறிய ஆச்சரியமாக இருக்கு

சமருக்கு இங்கும் பொழுது போக்குக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சைக்கிள் ஓடுகின்றனன் ( சாரத்தோடு அல்ல ) , அதனால் என்னவே பெரிய பெரிய கஷ்டமாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே, கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (25) வருகை தந்திருந்தார்.

என்ன பிரதி உயர்ஸ்தானிகர் ,அமைச்சுக்கு சென்றுள்ளார்?...இன்னும் 10 வருடங்கள் சென்றாலும் இவர்களால் இந்த பிரச்சனை தீர்க்கப்பட போவதில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

என்ன பிரதி உயர்ஸ்தானிகர் ,அமைச்சுக்கு சென்றுள்ளார்?...இன்னும் 10 வருடங்கள் சென்றாலும் இவர்களால் இந்த பிரச்சனை தீர்க்கப்பட போவதில்லை ...

அதுக்கிடையில கடலும் கிட்டத் தட்ட வனாந்திரமாக மாறியிருக்கும் புத்தன்…!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புங்கையூரன் said:

அதுக்கிடையில கடலும் கிட்டத் தட்ட வனாந்திரமாக மாறியிருக்கும் புத்தன்…!

உண்மை ...இந்தியாவுக்கு கடல் எல்லை பாகிஸ்தானுடனும் பங்களாதேசுடனும் உண்டு ...ஆனால் சிறிலங்காவுடன் தான் இழுபறிகளும் செய்திகளும்....ஏனைய நாடுகளுடன் மீனவர்கள் எல்லை தாண்டினால் எந்த வித துப்பாக்கி சூடும் நடை பெறுவதில்லை ...கச்சை தீவு காலம் தொடக்கம் இந்த பிரச்சனைஉண்டு இனியும்தொடரும்... அதானி குழுமம் வெளியேறியது ....இந்தியாவின் மறைமுக திட்டங்கள் சில அமுல்படுத்த படும்...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

உண்மை ...இந்தியாவுக்கு கடல் எல்லை பாகிஸ்தானுடனும் பங்களாதேசுடனும் உண்டு ...ஆனால் சிறிலங்காவுடன் தான் இழுபறிகளும் செய்திகளும்....ஏனைய நாடுகளுடன் மீனவர்கள் எல்லை தாண்டினால் எந்த வித துப்பாக்கி சூடும் நடை பெறுவதில்லை ...கச்சை தீவு காலம் தொடக்கம் இந்த பிரச்சனைஉண்டு இனியும்தொடரும்... அதானி குழுமம் வெளியேறியது ....இந்தியாவின் மறைமுக திட்டங்கள் சில அமுல்படுத்த படும்...

புத்தன், உங்கட வளவுக்குள்ள பத்து பிலா மரங்கள் காய்ச்சுத் தள்ளுது எண்டு வெளி ஆக்கள் வளவுக்குள்ள வந்து புடுங்கிறது சரியா?

அவை சொந்தக்காரர் எண்டாலும்..களவு களவு தானே।

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

wmremove-transformed-5.jpeg?resize=600%2

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம், கடற்றொழில் அமைச்சர் விசேட கோரிக்கை!

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றியம் மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் கடற்றொழில் அமைச்சருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி உயர்ஸ்தானிகர், இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டதுடன், மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பவ தினத்தன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலேயே இவ்  அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார்.

https://athavannews.com/2025/1423095

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.