Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது

vedukunaari-malai.jpg

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது.

IMG_0591.jpg

அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

IMG_0593.jpg

அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.

இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர்.

IMG_0584.jpg

இதேவேளை புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது.

https://akkinikkunchu.com/?p=314068

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான விடயம். சென்ற வருடம்… ரணில் அரசாங்கத்தில், உதயகம்மன்பில போன்ற இனத்துவேசிகள்.. பல பேருந்துகளில் சிங்கள மக்களையும், பொலிசாரையும் கூட்டிக் கொண்டு வந்து… பக்தர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0593.jpg?resize=750%2C375&ssl=1

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள்.

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது.

அந்தவகையில் நேற்று மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.

இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர்.

இதேவேளை காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.

https://athavannews.com/2025/1423270

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செயல் . .......! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. இனவாதிகள் அடக்கி வாசிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

நல்லது. இனவாதிகள் அடக்கி வாசிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

தூண்டிவிட தலைவர்கள் இல்லை.

இந்த வருடம் இவ் கோயிலில் சிவராத்திரி பூஜை நிகழும் போது, அனுர அரசு எவ்வாறு நடந்து கொள்ளும் என்ற கேள்வியுடன் இருந்தேன். ஏனெனில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து சஜித்துடன் அனுரவும் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார்.

சிங்கள இனவாதிகள் இந்த முறை விட்டுப் பிடிப்பம் என்று அமைதியாக இருக்கின்றனர். இதையே சாக்காக வைத்து வெற்று இனவாத பேச்சுகளை தமிழ் மக்கள் முன் பேசி வாக்கு சேகரித்து விட்டு பின்னர் சும்மா இருக்கும் தமிழ் தேசிக்காய் அரசியல்வாதிகளும் இதனால் அமைதியாக இருக்க வேண்டி உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.