Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

01 MAR, 2025 | 03:59 PM

image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், நடைபெற உள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பாக தங்கள் மூவருடனும் கலந்துரையாடியது. 

இக்கலந்துரையாடல் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய்வதற்கே ஆனது. இது சம்பந்தமாக கலந்துரையாட  எதிர்வரும் 3ஆம் திகதியை செல்வம் அடைக்கலநாதன் உடன் நிர்ணயித்திருந்தோம்.

எனினும் அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது தாங்கள் எமது கட்சி யைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை கடந்த 23 ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் அமைந்தது. இது எமக்கு தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியமை இயல்பானதும் தவிர்க்க முடியாதாதமாகும்.

நாம் இந்த முயற்சியை மேற்கொண்டது தனிய தேர்தலுக்காக அல்ல. எமது முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே ஆகும் என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த முயற்சியை மேலும் தொடரவே விரும்புகிறேன் இதற்கான தங்களது இணக்கம் இருக்குமானால் நாம் தொடர்ந்து பேசலாம்.

அதேநேரம் நாம் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு - கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன் னரே ஏற்பாடு செய்தல். இதற்கும் தங்களது உடன்பாடு இருக்கும் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம். தங்களது துரித பதிலுக்கு நன்றி உடையவராவோம் - என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/207990

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் சிறிதரன் தலைமைஆசை துடைத்தெறியப்படும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

விரைவில் சிறிதரன் தலைமைஆசை துடைத்தெறியப்படும்

அதேதான்! நாங்கள் கேட்டோம் நீங்கள் எங்களுடன் இணையவில்லை, அதனால டக்கிலஸை சேர்த்துக்கொண்டோம் என்று கூறி அவரை அழைத்து சிறிதரனுக்கு குடைச்சல் கொடுத்து கட்சியை விட்டு வெளியேற்றுவதே சுமந்திரனின் திட்டம். சுமந்திரன் சொல்லியிருக்கிறார், தேர்தலில் சிறிதரனுக்கு அடுத்து தான் அதிக வாக்குகள் பெற்றதால் சிறிதரன் ஏதாவது காரணத்தால் பதவி விலகினால் தான் பாராளுமன்றம் செல்லக்கூடிய ஏது இருப்பதாகவும், யாழ்ப்பாணத்திற்கு இரண்டு ஆசனம் கிடைத்திருந்தால் தான் பாராளுமன்றம் போயிருப்பேன் என்றும் விளக்கமளித்துள்ளார். இவ்வளவு காலமும், தமிழரசுக்கட்சி எதுவும் மக்களுக்கு செய்யவில்லை, எனக்கு வாக்களித்தால் நான் பலவற்றை நிறைவேற்றுவேன் என்று புலம்பியும், என்னையும் தமிழ்கட்சிகளுடன் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியும் கிடைக்காத சந்தர்ப்பம் இப்போ தானாக,  சிவஞானத்தின் அழைப்பு கிடைத்ததில் டக்கிளஸ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். கூட்டிக்கழித்துப்பார்த்தால் சுமந்திரன் தமிழரசுக்கட்சியை தனது அதிகாரத்துக்குள் கொண்டுவருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதேநேரம் சுமந்திரனால் கழற்றி விடப்பட்ட தேசியக்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள விளைகின்றன, அவர்களும் டக்கிலஸை தம்மோடு இணைப்பது பற்றி சிந்திப்பதாக தெரிகின்றது.  டக்கிளஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து விலகுவேன் என்று ஏற்கெனவே அறிவித்தவர். அவரில் ஒருவரே சுமந்திரனும். ஏதோ தமிழரசுக்கட்சியில் நுழைந்ததால் அரசியலில் தானும் ஒருவர் என்று சொல்லிக்கொண்டவர். குழப்பிகளை மக்கள் விருப்பத்திற்கு மாறாக இணைத்துக்கொண்டால்: அழிவை தேடி மக்களை வேறொரு பக்கத்திற்கு நீங்களாகவே அனுப்புகிறீர்கள். சுமந்திரன் தமிழரசுக்கட்சியை சின்னாபின்னமாக்கி தனது கைக்குள் கொண்டுவரலாம், ஆனால் அக்கட்சி தொடர்ந்து உயிர் வாழுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். தன் கட்சியில் உண்மையாக இல்லாமல் தில்லு முல்லு செய்பவர், மக்களுக்கு எதை சாதிக்கப்போகிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனத்தின் நலன் கருதியா அல்லது உங்களின் தனிநலன் கருதியா? அவர்களை கழட்டி விடும்போது உந்த ஞானம் எங்கே போனது? அங்கும் பாடி, இங்கும் பாடி இறுதியில் தனித்தே விடப்படப்போகிறார் இந்தக்கூத்தாடி.

13 hours ago, ஏராளன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய்வதற்கே ஆனது.

13 hours ago, ஏராளன் said:

அதேநேரம் நாம் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு - கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன் னரே ஏற்பாடு செய்தல்.

அவசரமாக தங்களது இடத்தை மக்களிடத்தில் தக்கவைப்பதும், அவர்களை திட்டமிட்டு ஒன்றுசேரவிடாமல் தடுப்பது, தம்மேல் எழும் விமர்சனங்களை தவிர்ப்பது முக்கிய நோக்கம். தொடர்ந்து குழிபறிப்புகளை செய்துகொண்டு, உறுப்பினர்களை வெளியேற்றிக்கொண்டு இந்த அழைப்பை விட வெட்கமில்லையா இவருக்கு? கூடி இருந்தவர்களை தொலைத்துவிட்டு, அதற்காக வருத்தப்படாமல், மீண்டும் அவர்களோடு உறவைபுதுப்பிக்க முயலும்போது அது உண்மையான உறவுமில்லை, அவர்கள் அதே ஆட்களாகஉங்களுக்கு திருப்பி கிடைக்கவும் மாட்டார்கள். இதுதான் உங்களின் சாணக்கியம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

அதேநேரம் நாம் தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு - கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாக தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன் னரே ஏற்பாடு செய்தல். இதற்கும் தங்களது உடன்பாடு இருக்கும் என்றால் நாம் தொடர்ந்து பேசலாம். தங்களது துரித பதிலுக்கு நன்றி உடையவராவோம் - என்றுள்ளது.

வாய்ப்பில்லை ஐயா.

நடக்கிறதை கதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போங்கோ என்று விரட்டினால் போகோணும், வாங்கோ என்று கூப்பிட்டால் வந்திடணுமா? அது எந்தக்கோட்டுச்சட்டம்? பதவியாசை பிடித்த உங்களுக்கே இந்த திமிர் என்றால், எங்களுக்கும் தன்மானம் இருக்கு. ஓரங்கட்டுவீர்கள், சவால் விடுவீர்கள், கட்சி உங்களது சின்னத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளை போடுவீர்கள், பின் பதவி கொடுக்கவில்லை என்று கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்றுஅபாண்டமா பழிபோடுவீர்கள். உங்களோடு இணைவானேன் வருத்தப்படுவானேன்? உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பாத்துக்கொள்கிறோம். உங்கட சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழர்களுக்காக பேசவில்லை.பின்னால் இருக்கும் ஓரிருவருக்காக பேசுகிறார்.

இவர்களை நம்பினால் தமிழர்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்.

1 hour ago, satan said:

நீங்கள் போங்கோ என்று விரட்டினால் போகோணும், வாங்கோ என்று கூப்பிட்டால் வந்திடணுமா? அது எந்தக்கோட்டுச்சட்டம்? பதவியாசை பிடித்த உங்களுக்கே இந்த திமிர் என்றால், எங்களுக்கும் தன்மானம் இருக்கு. ஓரங்கட்டுவீர்கள், சவால் விடுவீர்கள், கட்சி உங்களது சின்னத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளை போடுவீர்கள், பின் பதவி கொடுக்கவில்லை என்று கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்றுஅபாண்டமா பழிபோடுவீர்கள். உங்களோடு இணைவானேன் வருத்தப்படுவானேன்? உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பாத்துக்கொள்கிறோம். உங்கட சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர் தமிழர்களுக்காக பேசவில்லை.பின்னால் இருக்கும் ஓரிருவருக்காக பேசுகிறார்.

இவரும் சத்தியலிங்கமும் தலையாட்டிகள், அவர்களுக்கென்று ஒரு கொள்கை கிடையாது, தன்மானம் கிடையாது, நீதி நேர்மை கிடையாது, சுயமாக சிந்திக்க தெரியாது, எடுப்பார்க்கைப்பிள்ளைகளை பயன்படுத்துகிறார்கள். பின்னர் இவர்களையே சாடி வெளியேற்றுவார்கள். அப்போ, சிவஞானம் ஊடகங்களை கூட்டி ஒப்பாரிவைப்பார்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இவர் தமிழர்களுக்காக பேசவில்லை.பின்னால் இருக்கும் ஓரிருவருக்காக பேசுகிறார்.

இவர்களை நம்பினால் தமிழர்களுக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்.

இவர்கள் தமிழ் மக்களின் நன்மை கருதி… எந்த ஒரு தூர நோக்கும் அற்ற சுயநலக் கும்பல்கள்.

சொந்தப் புத்தி அறவே கிடையாது. எல்லாம்… சுமந்திரனின் கண் அசைவுக்கு ஆடும் பொம்மைகள்.

சுத்துமாத்து சுமந்திரன்… எப்படிப் பட்ட யோக்கியர் என்று, உலகுக்கே தெரியும். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.