Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-101.jpg?resize=750%2C375&ssl

மத்தள விமான நிலையம் தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம்!

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்,

மத்தள விமான நிலையத்தை பொருத்தமான வெளிநாட்டு பங்காளியுடன் இலாபம் ஈட்டும் முயற்சியாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மத்தள விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து வருடங்களில் 38.5 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது.

இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1424388

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சக் காலம் இந்த விமான நிலையத்தில், நெல் காயப் போட்டார்கள்.

இப்போ.... காயப் போட, நெல்லும் இல்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் பழுதுபார்க்கும் நிலையமாக மாறவுள்ளது மத்தள விமான நிலையம் 

Published By: Digital Desk 3

07 Mar, 2025 | 02:36 PM

image

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமானம் நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் நிலையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் பொருத்தமான வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 38.5 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற விரும்புகிறோம்," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208531

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்சக் காலம் இந்த விமான நிலையத்தில், நெல் காயப் போட்டார்கள்.

இப்போ.... காயப் போட, நெல்லும் இல்லைப் போலுள்ளது.

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, சார்ஜாவிலிருந்து மத்தள ஊருக்கு சில வாரங்கள் விமான போக்குவரத்து இருந்தது.

விமான நிலையத்தின் டிஸ்ப்ளேயில் பார்த்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, சார்ஜாவிலிருந்து மத்தள ஊருக்கு சில வாரங்கள் விமான போக்குவரத்து இருந்தது.

விமான நிலையத்தின் டிஸ்ப்ளேயில் பார்த்தேன்.

இரண்டு மூன்று விமான நிறுவனங்கள்… மத்தள விமான நிலையத்திற்கு தமது விமானங்களை இயக்கிய நினைவு உள்ளது.

குறுகிய காலத்தில் அதனை நிறுத்தி விட்டார்கள்.

இது… கட்டிய செலவை விட… பராமரித்த செலவு அதிகம். 😂

ராகு காலத்தில்… பூமி பூஜை செய்து, அத்திவாரம் போட்டுள்ளார்கள் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்காங் ஐ பின்புலமாக கொண்ட Aitken Spence Ltd இந்த நிறுவனம் விமானங்களை ரீசைக்கிள் (recycle) செய்யப்போவதாகவும் பெருமளவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் முன்பு செய்தி வாசித்தேன். தெற்காசியாவிலேயே பெரிய விமானம் திருத்தும் இடமாக இதை மற்ற இருப்பதாகவும் இருந்தது. இதில் சிறு தொழிவாய்ப்பு நன்மை இருப்பினும் நீண்ட கால நோக்கில் தேவையற்ற உதிரிகளை குப்பையாக போட்டு விட்டு சென்று விட கூடிய தீமையும் உண்டு.

இரத்மனலையில் ஏற்கனவே ஐரோ ஸ்பெஷ இன்ஜினியரிங் ( Aero Space Engineering) பிரிவு இருக்கிறது என்று எண்ணுகிறேன் அதை என்னும் மேம்படுத்தி அதிகமான மாணவர்களை உள்ளவாங்கி மேம்படுத்தி .... முற்றுமுழுதாக அந்த குறித்த கொம்பனியின் தனியார் மயமில்லாது இலங்கை அரசும் இணைந்து (Joint Venture) நடாத்தும் ஒரு முயற்சியாக இருந்து திறம்பட செய்வார்கள் ஆனால். பெருத்த லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும் சாத்தியம் நிறையவே உண்டு. பல ஐரோப்பிய அமெரிக்க விமான நிறுவனகளே அங்கு தமது விமானங்களை திருத்துவதற்கு செல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஹாங்காங் ஐ பின்புலமாக கொண்ட Aitken Spence Ltd இந்த நிறுவனம் விமானங்களை ரீசைக்கிள் (recycle) செய்யப்போவதாகவும் பெருமளவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் முன்பு செய்தி வாசித்தேன். தெற்காசியாவிலேயே பெரிய விமானம் திருத்தும் இடமாக இதை மற்ற இருப்பதாகவும் இருந்தது. இதில் சிறு தொழிவாய்ப்பு நன்மை இருப்பினும் நீண்ட கால நோக்கில் தேவையற்ற உதிரிகளை குப்பையாக போட்டு விட்டு சென்று விட கூடிய தீமையும் உண்டு.

இரத்மனலையில் ஏற்கனவே ஐரோ ஸ்பெஷ இன்ஜினியரிங் ( Aero Space Engineering) பிரிவு இருக்கிறது என்று எண்ணுகிறேன் அதை என்னும் மேம்படுத்தி அதிகமான மாணவர்களை உள்ளவாங்கி மேம்படுத்தி .... முற்றுமுழுதாக அந்த குறித்த கொம்பனியின் தனியார் மயமில்லாது இலங்கை அரசும் இணைந்து (Joint Venture) நடாத்தும் ஒரு முயற்சியாக இருந்து திறம்பட செய்வார்கள் ஆனால். பெருத்த லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும் சாத்தியம் நிறையவே உண்டு. பல ஐரோப்பிய அமெரிக்க விமான நிறுவனகளே அங்கு தமது விமானங்களை திருத்துவதற்கு செல்வார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் ...தப்பா நினைக்காடையுங்கோ ...விமானம் கட்டுநாயக்காவில் இறங்கும் பொழுது பழுதடைந்து விட்டது என்றால் எப்படி மீண்டும் மத்தள விமானநிலையத்துக்கு எடுத்து செல்வது ...கட்டுநாயக்காவிலிருந்து மத்தளத்துக்கு நீண்ட ஒடு பாதையை சீனா போட்டு கொடுக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, putthan said:

எனக்கு ஒரு சந்தேகம் ...தப்பா நினைக்காடையுங்கோ ...விமானம் கட்டுநாயக்காவில் இறங்கும் பொழுது பழுதடைந்து விட்டது என்றால் எப்படி மீண்டும் மத்தள விமானநிலையத்துக்கு எடுத்து செல்வது ...கட்டுநாயக்காவிலிருந்து மத்தளத்துக்கு நீண்ட ஒடு பாதையை சீனா போட்டு கொடுக்குமோ?

வான்பரப்புக்கள் கண்டங்கள் ரீதியாகவும் நாடுகள் ரீதியாகவும் பிரிக்கப்பட்டு குறிப்பிடட குழுமங்களுக்களின் சட்ட்திட்ட்ங்கள் விதிமுறைகளுக்குள் உட்படுத்த பட்டுத்தான் செயல்படுத்த படுகிறது.

குறிப்பாக ஐரோப்பிய வான்பரப்பு The European Union Aviation Safety Agency (EASA) வின் கட்டுபாட்டுக்குள் இருக்கும் இதற்குள் வரும் விமானங்கள் இந்த இந்த விதிமுறைக்குள் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையை எழுதி இருப்பார்கள். அந்த விதிகளுக்கு உள்ளன விமானங்களைத்தான் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஐரோப்பாவிற்கு சேவைக்கு அமர்த்துவார்கள். அது தவிர சர்வதேச பாதுகாப்பு சபை என்றும் ஒன்றும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது.

அமெரிக்க ஐரோப்பா ஆசியா அவுஸ்திரேலிய விதிமுறைகளில் கொஞ்ச கொஞ்ச மாற்றம் இருக்கும். இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு பிளேனில் இன்ன பழுது இருக்கிறது என்று பதிவானால் அது ( அந்த விமானத்தை தயாரித்த நிறுவனத்தின் பரிந்துரைக்களுக்கு உடபட்டு Boeing + Airbus ) மற்றும் FAA (Federal Aviation Administration) யின் பரிந்துரைகளுக்கு உடபட்டு சீர்செய்த பின்புதான் மீண்டும் வானில் பறக்க முடியும்.

மீண்டும் வானில் பறக்க கூடிய அளவிற்கு ( அவர்களின் விதிகளுக்கு உடபட்டு) திருத்திய பின்புதான் இரண்டு விமானிகள் அதை எங்கு திருத்த வேண்டுமோ அங்கு கொண்டு சென்று மிகுதி பகுதிகளை திருந்துவார்கள்.

பொதுவாக இவ்வாறு நடப்பது அரிது எதாவது விபத்து நடந்தால் மட்டுமே இப்படியொரு சூழ்நிலை ஏற்படும்.

மற்றும்படி குறிப்பிட்ட மணித்தியாலங்கள் பறந்த பின்பு இன்ன இன்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதை விமானங்களை செய்யும் நிறுவனங்கள் வலியுறுத்தி இருப்பார்கள் அதன் பிரகாரம் திருத்தவேண்டிய இடத்திற்கு கொண்டு சென்று திருந்துவார்கள்.

அதுபோல குறிதளவு மணித்தியாலங்கள் பறந்த பின்பு ஒரு விமானம் பறப்புக்கான தகுதியை இழந்துவிடும். மேற்கொண்டும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பறக்க விரும்பினால் இன்ன இன்ன வேலைகள் செய்ப்படவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்கள். அப்போது விமான நிறுவனங்கள் திருத்துவது லாபமா எறிவது லாபமா என்று கணக்கு பார்த்துவிட்டு விமானத்தை கைவிட முடிவு செய்தால் (மாத்தறையில் உருவாக இருக்கும்) இடங்களுக்கு கொண்டு செல்வார்கள் .

தற்போதைய உக்ரைன் யுத்தம் தொடங்கிய பின்பு அமெரிக்க விமான நிறுவனகளை ரசிய வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளார்கள். அதனால் அண்ணளவாக ஒரு மணித்தியாலம் கூடுதலாக பறந்துதான் பசிப்பிக்கை கடக்கும் விமானங்கள் ஜப்பான் சீன தென்கொரிய நாடுகளை சென்றடைகின்றன. விமான நிறுவனங்களுக்கு வீண் பெட்ரோல் செலவு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

வான்பரப்புக்கள் கண்டங்கள் ரீதியாகவும் நாடுகள் ரீதியாகவும் பிரிக்கப்பட்டு குறிப்பிடட குழுமங்களுக்களின் சட்ட்திட்ட்ங்கள் விதிமுறைகளுக்குள் உட்படுத்த பட்டுத்தான் செயல்படுத்த படுகிறது.

குறிப்பாக ஐரோப்பிய வான்பரப்பு The European Union Aviation Safety Agency (EASA) வின் கட்டுபாட்டுக்குள் இருக்கும் இதற்குள் வரும் விமானங்கள் இந்த இந்த விதிமுறைக்குள் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையை எழுதி இருப்பார்கள். அந்த விதிகளுக்கு உள்ளன விமானங்களைத்தான் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஐரோப்பாவிற்கு சேவைக்கு அமர்த்துவார்கள். அது தவிர சர்வதேச பாதுகாப்பு சபை என்றும் ஒன்றும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது.

அமெரிக்க ஐரோப்பா ஆசியா அவுஸ்திரேலிய விதிமுறைகளில் கொஞ்ச கொஞ்ச மாற்றம் இருக்கும். இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு பிளேனில் இன்ன பழுது இருக்கிறது என்று பதிவானால் அது ( அந்த விமானத்தை தயாரித்த நிறுவனத்தின் பரிந்துரைக்களுக்கு உடபட்டு Boeing + Airbus ) மற்றும் FAA (Federal Aviation Administration) யின் பரிந்துரைகளுக்கு உடபட்டு சீர்செய்த பின்புதான் மீண்டும் வானில் பறக்க முடியும்.

மீண்டும் வானில் பறக்க கூடிய அளவிற்கு ( அவர்களின் விதிகளுக்கு உடபட்டு) திருத்திய பின்புதான் இரண்டு விமானிகள் அதை எங்கு திருத்த வேண்டுமோ அங்கு கொண்டு சென்று மிகுதி பகுதிகளை திருந்துவார்கள்.

பொதுவாக இவ்வாறு நடப்பது அரிது எதாவது விபத்து நடந்தால் மட்டுமே இப்படியொரு சூழ்நிலை ஏற்படும்.

மற்றும்படி குறிப்பிட்ட மணித்தியாலங்கள் பறந்த பின்பு இன்ன இன்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதை விமானங்களை செய்யும் நிறுவனங்கள் வலியுறுத்தி இருப்பார்கள் அதன் பிரகாரம் திருத்தவேண்டிய இடத்திற்கு கொண்டு சென்று திருந்துவார்கள்.

அதுபோல குறிதளவு மணித்தியாலங்கள் பறந்த பின்பு ஒரு விமானம் பறப்புக்கான தகுதியை இழந்துவிடும். மேற்கொண்டும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பறக்க விரும்பினால் இன்ன இன்ன வேலைகள் செய்ப்படவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்கள். அப்போது விமான நிறுவனங்கள் திருத்துவது லாபமா எறிவது லாபமா என்று கணக்கு பார்த்துவிட்டு விமானத்தை கைவிட முடிவு செய்தால் (மாத்தறையில் உருவாக இருக்கும்) இடங்களுக்கு கொண்டு செல்வார்கள் .

மிக்க நன்றி மருதர் ...பயனுள்ள தகவலை தந்தமைக்கு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.