Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 முத்தையா முரளிதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் வழங்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தவர். 

muttiah muralitharan - முத்தையா முரளிதரன்

2010 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.  

முத்தையா முரளிதரன், Ceylon Beverages என்ற குளிர்பான நிறுவனத்தை இலங்கையில் தொடங்கி நடத்தி வருகிறார்.

குளிர்பான நிறுவனம்

இந்த நிறுவனத்தை இந்தியாவில் விரிவுபடுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரனின் இந்த நிறுவனத்திற்காக, 25.75 ஏக்கர் நிலத்தை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு இலவசமாக வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இலவச நிலம்

இது குறித்து காஷ்மீர் மாநில சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய் தாரிகாமி, "இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது?" என கேள்வியெழுப்பினார். 

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஏ.மிர், "இந்தியர் அல்லாத ஒருவருக்கு பைசா கூட செலவழிக்காமல் நிலம் வழங்கப்பட்டது ஒரு தீவிரமான பிரச்னை. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்." என கூறினார். 

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு விளக்கமளித்த விவசாய அமைச்சர் ஜாவேத் அஹ்மத் தார், "இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இது தொடர்பாக எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மை நிலவரத்தை அறிய ஆய்வு செய்வோம். இந்த விவகாரத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்வோம்" என கூறினார்.   

https://news.lankasri.com/

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஏ.மிர், "இந்தியர் அல்லாத ஒருவருக்கு பைசா கூட செலவழிக்காமல் நிலம் வழங்கப்பட்டது ஒரு தீவிரமான பிரச்னை. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்." என கூறினார். 

3 minutes ago, பெருமாள் said:

இந்த நிறுவனத்தை இந்தியாவில் விரிவுபடுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினியம் கேன் தயாரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இவரின் மனைவி இந்திய பிரஜை அல்லவா?

இவ்வளவு பணத்தை ஒருவர் முதலிடுவது இந்தியாவுக்கு நட்டமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீர் என்று வந்து டேவிட் கேமரூனை யாழில் உள்ள அகதி முகாம்களை பார்வை இட்டு கேள்விகளை வைக்க இந்த கோடாலி காம்பையும் அவரின் மைன்ட் செட் ஐ மாத்த வைத்தது சிங்களம் .

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு கிரிக்கெற்றில் கப்டன் பதவி கொடுக்க தயங்கியதே இவர் ஒரு தமிழர் என்பதற்காக, ஆனால் அவர் சிங்களத்துக்கே வக்காலத்து வாங்கினார். கதிர்காமர் சிங்களத்துக்காக ஓடியோடி வக்காலத்து வாங்கி தமிழரை அழிப்பது நிஞாயமாக்கினார், ஆனால் அவர் தமிழர் என்பதற்காக பிரதம மந்திரி பதவி வழங்கப்படவில்லை. தமிழரிடம் இருந்து வருமானம், தங்கள் செயலுக்கு வக்காலத்து தமிழர் கொடுக்க வேண்டும். ஆனால் பதவி, சம உரிமை, அதிகாரம் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. இன்னும் சுமந்திரன் பிரதமர் கனவோடு நகர்வதே வரலாற்றில் இருந்து பாடம் கற்கவில்லை என்பதற்கு உதாரணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.