Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் மானத்தைக் காயப்படுத்தும் அவதூறுகள்: சமூக ஊடகங்களில் ஏற்படும் ஆபத்துகள்…

சமூக ஊடகங்கள் இன்று தகவல் பரிமாற்றத்திற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குகின்றன... ஆனால், சிலர் இதை தவறாக பயன்படுத்தி, தனிநபர்களின் உரிமைகளை மீறுவதும் அவதூறு செய்யவும் செயல்படுகின்றனர்... கடந்த 2010-களில் நியூஜஃப்னா என்ற இணைய தளம், பொய்யான தகவல்களையும், ஆபாசமான கட்டுரைகளையும் வெளியிட்டு, பலரின் தனிப்பட்ட வாழ்க்கையை சீரழித்தது... இதில், பலரின் புகைப்படங்களை தவறாக இணைத்து, அவதூறுகளை பரப்பி, அந்த நபர்களின் குடும்பங்களையும் சமூக வாழ்வையும் பாதித்தனர்...

அந்தச் செயல்கள் தற்போது மறுபடியும் தோன்றத் தொடங்கியுள்ளன... ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்ற முகநூல் பக்கம், பெண்களின் நிர்வாண படங்களையும் அவதூறுகளையும் வெளியிட்டு, பெண்களின் மானத்தையும் தனியுரிமையையும் உடைத்து வருகின்றது…. இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்தாகும். சமூக ஊடகங்களில் இவ்வாறான செயல்களை தவிர்க்கும் வகையில், பொறுப்பற்ற சமூக விரோத செயல்களை தடுக்க அரசு மற்றும் பொது அமைப்புகள் களமிறங்க வேண்டும்...

இந்த அவதூறுகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியக் காரணம், சமூகத்தில் பொறுப்பில்லாத சில நபர்களின் செயல்களே... பொய்யான தகவல்களை பகிர்வது, அவற்றுக்கு விருப்பு செய்து பகிர்வது போன்ற செயல்கள், தவறான தகவல்களை விரைவாக பரப்பக் கூடும்... இதனால் பலர் ஆபத்துக்குள்ளாகின்றனர்... நியூஜஃப்னா போலவே, ஊழல் எதிர்ப்பு அணி வன்னி பக்கமும் சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்...எனக்கு தெரிந்து, நியூஜஃப்னாவை விட இந்த பக்கம் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் சீரழிவு மிகப்பெரியதாக இருக்கும்…

பெண்களின் பாதுகாப்பு, தனியுரிமை, சமூக நெறிமுறைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்றே எடுக்கப்பட வேண்டும்... சமூகத்தில் பொறுப்பற்ற நபர்கள் பரப்பும் தவறான தகவல்களை தடுக்க, சமூகவிருப்பங்களைப் பகிரும் முன் உண்மையைக் கண்டறியும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்... பெண்களின் பாதுகாப்பிற்கும், தனிமனித உரிமைக்குமான ஆதரவை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது…

இந்த முகநூல் பக்கத்தை யாழ் சைக்கோ எம்பி அர்ச்சுனாவும் தமிழடியான் எனும் யூரியுப்காறரின் தலைமையில் சைக்கோ அர்ச்சுனாவின் சில அடிப்பொடிகளும் நடத்துவதாக நம்பத்தகுந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைக்கிறது.. குறிப்பிட்ட நபர்களும் அதை அந்த பக்கத்தில் மறைமுக உறுதிப்படுத்தி உள்ளனர்..

ஆயினும்..

நியூஜஃப்னாவில் இருந்து இந்த ஊழல் எதிர்ப்பு வன்னி அணி பக்கம் வரை யார் மூலகாரணம் அர்ச்சுனாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ அல்லது அவர்போன்ற சைக்கோக்களோ அல்ல... அர்ச்சுனாவில் பழியை போட்டுவிட்டு எல்லா நேரமும் தப்ப முடியாது:.. அர்ச்சுனாவோ, கிருஷ்ணாவோ, ஊழல் எதிர்ப்பு அணியோ.... எங்கட சனம் எண்ட மூடர்கூடத்தின் ஆதரவு இல்லாமல் ஒருத்தரும் இங்க எதுவும் நகர்த்தமுடியாது... உண்மையான Culprits எந்த சமூக பொறுப்புமற்ற மக்கள்தான்…

இவற்றை முளையிலேயே கிள்ள யாழ் இணையம் போன்ற சமூக பொறுப்புள்ள அனைத்து ஊடகங்களும் உறுப்பினர்களும் வாசகர்களும் எதிர்வினை ஆற்றவேண்டும்..

—-—-

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதிலும் ஒரு போதும் இணைந்தில்லை. ஆதரித்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நன்றி பாணபத்திரரே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பெண்களின் மானத்தைக் காயப்படுத்தும் அவதூறுகள்: சமூக ஊடகங்களில் ஏற்படும் ஆபத்துகள்…

உண்மை பெண்களை இழிவுபடுத்துகின்றார்களாம்

அர்ச்சுனாவும் லண்டன் தமிழ் அடியானும் தானாம் நடத்துகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கமற்றவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? தங்கள் எண்ணத்திலிருப்பதே வெளியில் வரும். தங்களையும் சமூகத்தில் முதன்மைப்படுத்துவதற்கு வேறேது அவர்களிடமுண்டு? அவர்களிடமுள்ளதை கொடுக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை பெண்களை இழிவுபடுத்துகின்றார்களாம்

அர்ச்சுனாவும் லண்டன் தமிழ் அடியானும் தானாம் நடத்துகின்றனர்

உண்மையா..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

உண்மையா..

என்னைவிட இலங்கை விடயங்கள் அதிகம் தெரிந்தவர்கள் சொன்னார்கள் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்பி அர்ச்சுனா தலைமையில் தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள்…

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா.உ.அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா,வம்பன் டொட்கொம் போன்ற பக்கங்கள், ஈழப் பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் வகையில் செயல்படுகின்றன…

வட கிழக்கில் வாழும் பெண்கள் எப்படிச் செயல்பட வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்றெல்லாம் இந்த இணைய பக்கங்களை நடத்தும் காவாலிகள் தீர்மானிக்கிறார்கள்...

இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது... இது தலிபான்கள் செயல்களைப் போல் ஆபத்தானதாக மாறி வருகிறது….

எல்லாவற்றிலும் காலம்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டதைப்போல எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுகிறார்கள்... அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது...

தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள், டாக்டர் அர்ச்சுனா, வன்னி ஊழல் தடுப்பு அணி, அதை இயக்கும் அர்ச்சுனா அடிப்பொடி லண்டன் தமிழ் அடியான் குழுவினர் ஈழப் பெண்களை இலக்குவைத்து பிளக்மெயில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.... பொட்டம்மான் போன்ற மிகச்சிறந்த புலநாய்வுப் போராளிகள் வாழ்ந்து மடிந்த மண்ணில் அடுத்தவன் வீட்டு கழிவறையையும் படுக்கை அறையையும் எட்டிப்பார்க்கும் இந்தப் பரதேசிகள்தான் புலனாய்வுப் புண்ணாக்குகளாம்.. ஈழப் பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்..

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா, வம்பன் டொட்கொம், போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது….

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அர்ச்சுனா தலைமையில் தமிழ் அடியான் மற்றும் மோசமான தலிபான்கள் பற்றிய பதிவுக்கு நன்றி தோழரே

  • கருத்துக்கள உறவுகள்

போரால் வீழ்த்தப்பட்ட ஒரு சமுதாயத்தில் இப்படியான விளைவுகள் எதிர்பார்த்தவையே. இதைத்தான் சொல்லுறது "பனையாலை விழுந்தவனை மாடேறி உழக்கியது." என்று. தன்னம்பிக்கையற்ற ஆண்களின்  இலக்கு, பெண்கள். அவர்களின் எழுச்சியை பொறுக்க மாட்டார்கள், எல்லாவிதத்திலும் அடக்கி, ஒடுக்கி மேலெழ விடாமல் கலாச்சாரம் என்கிற வேலிக்குள் அடைப்பார்கள். முன்னேற முயற்சிக்கும் சமுதாயத்திற்கு இது நல்லதல்ல. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.