Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 Mar, 2025 | 05:24 PM

image

யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் சனிக்கிழமை (15)  ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவரையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


இதன்போது, மீனவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தற்கமைய தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.


46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 

காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2025 at 16:07, பிழம்பு said:

காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுப்பு!

images-2-3.jpg?resize=298%2C169&ssl=1

கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போயுள்ள இரு மீனவர்கள் தமிழகத்தில் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர பொலிஸ் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

பின்னர், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த 15 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வந்ததாக கூறியுள்ளனர்.

இருவரையும் கைது செய்துள்ள தமிழக பொலிஸார், இவர்கள் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்தார்களா எனும் சந்தேகத்துடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1425933

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ உயிருடன் கரை சேர்ந்தார்களே, அதுவே போதும் . ..........! 😁

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-283.jpg?resize=750%2C375&ssl

இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்‍டேட்!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று படகின் எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும்  தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றன.

https://athavannews.com/2025/1426006

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.