Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Simrith   / 2025 மார்ச் 18 , பி.ப. 07:00 - 0    

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது, மனுதாரருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.

ஹெனாகம, பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு பதிலளிக்கும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி 2020 ஆம் ஆண்டு பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் மனுதாரர் கைது செய்யப்பட்டார். அவரது அடுத்தடுத்த தடுப்புக்காவல் இரண்டு தனித்தனி தடுப்பு உத்தரவுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது, ஒன்று 1929 ஆம் ஆண்டு 17 ஆம் எண் நச்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனவரி 30, 2020 அன்று வெளியிடப்பட்டது, மற்றொன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிப்ரவரி 6, 2020 அன்று வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பின் பிரிவுகள் 12, 13(1), மற்றும் 13(2) ஆகியவற்றின் அடிப்படையில் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

அரசியலமைப்பின் 20வது திருத்தம் இன்னும் நடைமுறைக்கு வராததால், இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியவந்தது. 

அந்த வகையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிப்ரவரி 06, 2020 அன்று பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு அரசியலமைப்பை மீறுவதாகும், எனவே அதற்கு எந்த சட்ட செல்லுபடியும் இல்லை.

Tamilmirror Online || கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

அந்த வகையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிப்ரவரி 06, 2020 அன்று பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு அரசியலமைப்பை மீறுவதாகும், எனவே அதற்கு எந்த சட்ட செல்லுபடியும் இல்லை.

உங்க பாரடா சிரிலாங்காவில் சட்டம் ஒழுங்கு ,மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுராவின்ட ஆட்சியில தான் நடக்கின்றது ..மனுநீதி கண்ட சோழனின் மறு அவதாரம் அனுரா ....ஜெயவேவா

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

உங்க பாரடா சிரிலாங்காவில் சட்டம் ஒழுங்கு ,மனுநீதி கண்ட சோழ‌னுக்கு பிறகு நம்ம தோழன் அனுராவின்ட ஆட்சியில தான் நடக்கின்றது ..மனுநீதி கண்ட சோழனின் மறு அவதாரம் அனுரா ....ஜெயவேவா

தமிழர்களுக்கு இப்படி ஏதாவது நடந்தால் என்னை தூக்கத்தால் எழுப்பி விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களுக்கு இப்படி ஏதாவது நடந்தால் என்னை தூக்கத்தால் எழுப்பி விடவும்.

நடக்கும் அதற்கு நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக மாறி அதன் பின்பு உங்கள் மதஅடையாளத்தை இழக்க வேண்டும் ...அதற்கு முதல் உங்களுடைய பெயர் "ஈழப்பிரியன்"என்பதை துறக்க வேணும் தயாரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நடக்கும் அதற்கு நீங்கள் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக மாறி அதன் பின்பு உங்கள் மதஅடையாளத்தை இழக்க வேண்டும் ...அதற்கு முதல் உங்களுடைய பெயர் "ஈழப்பிரியன்"என்பதை துறக்க வேணும் தயாரா?

வெளிநாடுகளில பெயருகளை வெட்டிவெட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆங்கில பெயரா தமிழா சிங்களமா என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

கேட்டால் நீட்டுப் பெயர் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில பெயருகளை வெட்டிவெட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆங்கில பெயரா தமிழா சிங்களமா என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

கேட்டால் நீட்டுப் பெயர் என்கிறார்கள்.

மார்க்கண்டு ...மார்க்.

சண்முகலிங்கம்....சாண்(shan)

சம்குகநாதன் ....சாம்

இரத்தினம்...ரட்,ரட்டி🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில பெயருகளை வெட்டிவெட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆங்கில பெயரா தமிழா சிங்களமா என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

கேட்டால் நீட்டுப் பெயர் என்கிறார்கள்.

நீங்கள் வெட்டி விட்டீர்களா இல்லையா? உங்கள் பெயரை கேட்டேன். வெள்ளைகாரண்ட வாயில் நுழையாத பெயரை வைத்திருந்தால், அவன் எப்படி உங்களை கூப்பிடுவான் என நினைக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நீங்கள் வெட்டி விட்டீர்களா இல்லையா? உங்கள் பெயரை கேட்டேன். வெள்ளைகாரண்ட வாயில் நுழையாத பெயரை வைத்திருந்தால், அவன் எப்படி உங்களை கூப்பிடுவான் என நினைக்கிறீர்கள்? 

இனி வெட்டி என்ன விட்டென்ன.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இனி வெட்டி என்ன விட்டென்ன.

ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

இனி வெட்டி என்ன விட்டென்ன.

அண்ணை, அவசரப்பட்டு ஏதும் செய்துவிடாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை, அவசரப்பட்டு ஏதும் செய்துவிடாதீர்கள்

14 hours ago, satan said:

இனி வெட்டி என்ன விட்டென்ன.

ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?

சாத்தான் அந்த தம்பி இலங்கையில் நின்று கூட எவ்வளவு அக்கறையாக கதைக்குது.

நீங்கள் என்னடா என்றால் வெட்டாமல் ஓயமாட்டீர்கள் போல.

நன்றி நீர்வேலியான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.