Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

April 25, 2025

‘ஷொப்பிங் பையுடன்’ புத்தளத்துக்கு வந்தவர்கள் இன்று பத்துக் கப்பல்களை வாங்கும் நிலைக்கு வந்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தா அனைத்து அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் எவரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். அனைத்து விடயங்களையும் விசாரிப்போம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதே உண்மையான அரசியல். உங்களுக்குத் தெரியும் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் அதிகாரம் படைத்த சிலருக்கு விதிவிலக்காக இருந்தன. அது சாதாரண மக்களுக்காகவே இருந்தது.

ஆனால், இன்று அந்த நிலை இல்லை. அனைத்தையும் மாற்றியுள்ளோம். உங்களின் வாக்குகளால் அனைத்து விடயங்களும் மாற்றப்பட்டுள்ளன. லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபட்ட பெரும் பணமுதலைகளைப் பிடித்து, அவர்களைத் தண்டிக்கும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னொரு காலத்தில், அமைச்சர்களைக் கண்டு பொலிஸார் ஓடியொழிந்தார்கள். இன்று பொலிஸாருக்குப் பயந்து அமைச்சர்கள் ஓடியொளிகின்றனர்.

ராஜபக்சவே பெரிய முதலை

‘வடமாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள் பிடிக்கமாட்டீர்களா? என்று கிளிநொச்சியில் வைத்து ஒருவர் என்னிடம் கேட்டார். நிச்சயமாகப் பிடிப்போம். கள்வர்களைப் பிடிப்பதில் வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடு எமக்கில்லை.

இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்குச்  சொப்பின் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும். டக்ளஸ் எல்லா அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார்.

நாங்கள் யாரையும் பாரபட்சம் பாக்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். பெரிய முதலைகள் கொழும்பிலே தான் இருக்கிறார்கள்.

ராஜபக்ச மிகப்பெரிய முதலை. நாமல், யோஷித ஆகியோருக்கு எதிராகப் பொதுமக்களின் பணத்தை சூறையாடியதற்காக வழக்குகள் பதிவுசெய்துள்ளோம்.

எனவே உங்கள் வாக்குகள் மூலம் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமைகொள்ளுங்கள். நாட்டின் பாதாளக் குழுக்களை உருவாக்கியது ராஜபக்சக்களும், விக்கிரமசிங்கக்களும், பிரேமதாஸக்களுமே.

பொட்டுவைத்தாலும் சோதனை

முன்பு சோதனைச் சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச்சென்றால் இருமுறை சோதனை செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒருதரம் செய்வார்கள், முஸ்லிம் மக்கள் என்றால் மூன்றுதரம் சோதனை செய்வார்கள், அதை மாற்றும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம்.

நாங்கள் இந்த அரசை பொறுப்பெடுத்து 5 மாதங்களே ஆகின்றது. ஓட்டோவை வேகமாகத் திருப்பலாம் பேருந்தையும் கப்பலையும் வேகமாகத் திருப்புவது கடினமே. பிழையான வழியில் சென்ற தேசத்தையே திருப்ப நாம் முற்பட்டுள்ளோம்.

உங்களுக்கும் எனக்கும் கிடைத்தது சொர்க்கமான பூமி அல்ல. வங்குரோத்தான ஒரு நாடு. ரணில் இந்த நாட்டை ஆண்டபோது டொலரின் பெறுமதி காலை ஒரு விலையிலும் மாலை ஒரு விலையிலும் (?) இருந்தது. இன்று அதில் ஒரு உறுதித்தன்மை காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார பிரச்சனைகள் தீர்வதற்குக் கொஞ்சகாலம் எடுக்கும். ஆனால், நிச்சயம் தீர்த்துவைப்போம்.

கம்பன்பில ராஜபக்சவின் கோளையாள்

தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அரசியல் அநாதைகளாக அவர்கள் மாறியுள்ளனர். அவர்கள் இனவாதத்தை விதைக்கிறார்கள்.

ஈஸ்ரர் தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானைக் கைதுசெய்திருக்கிறோம். அவரைக் கைதுசெய்தவுடன் அவருடன் தொலைபேசி அழைப்பில் கதைக்கவேண்டும் என முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா? பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில் விக்கிரமசிங்க.

அவர்கள் இருவரும் நண்பர்களா? ஒருபோதும் இல்லை. கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகிறார்? அவர் ராயபக்சவின் கோளையாள்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய விசாரணை நடத்தப்படும்போது ராஜபக்ச, ரணில், சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். நாட்டை வளப்படுத்த முற்படும்போது கள்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்-என்றார்.

https://www.ilakku.org/டக்ளஸ்-தொடர்பில்-சகல-விட/

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்குச்  சொப்பின் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும்.

றிஷாத் பதியுதீனையா சொல்கிறார் இவர்?

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இது சகஜம்ப்பா!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

றிஷாத் பதியுதீனையா சொல்கிறார் இவர்?

ஓம். சொப்பிங் பையுடன் வந்தவர் றிஷாத் பதியுதீன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2025 at 16:50, RishiK said:

அரசியலில் இது சகஜம்ப்பா!

இவர்களுடைய அரசியல் பேச்சக்களும் வழமையான சுத்து மாத்து தான் ஒரு பேராசிரியர் கடத்தப்பட்டு கொலை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யபட்டார் இந்த ஜேவிபி அமைச்சர் எப்படி பேய்காட்டுகின்றார்

On 25/4/2025 at 07:39, கிருபன் said:

ஈஸ்ரர் தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானைக் கைதுசெய்திருக்கிறோம்.

ராஜபக்சவே பெரிய முதலை ] ஆனால் பெரிய முதலைக்கு கைது விதிவிலக்கு

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2025 at 18:17, தமிழ் சிறி said:

ஓம். சொப்பிங் பையுடன் வந்தவர் றிஷாத் பதியுதீன் தான்.

இல்லை அவர் பரப்பரை. பணக்காரர் அவரின் தந்தை அமைச்சராக இருந்த ஞாபகம் உண்டு” சிறிமா ஆட்சியில்,..சரியா????

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

இல்லை அவர் பரப்பரை. பணக்காரர் அவரின் தந்தை அமைச்சராக இருந்த ஞாபகம் உண்டு” சிறிமா ஆட்சியில்,..சரியா????

ரிஷாட் பதியுதீன் பரம்பரை பணக்காரர் அல்ல.

நீங்கள் கூறுவது…. பதியுதீன் மஹ்மூத். அவர்தான் ஶ்ரீமாவோ ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2025 at 02:23, satan said:

றிஷாத் பதியுதீனையா சொல்கிறார் இவர்?

என்ன சாத்தான் .....குழந்தைப் பிள்ளைபோல...இவருடைய தேர்தல் மந்திரமே சொப்பிங் பைதான்🤣

1 hour ago, தமிழ் சிறி said:

ரிஷாட் பதியுதீன் பரம்பரை பணக்காரர் அல்ல.

நீங்கள் கூறுவது…. பதியுதீன் மஹ்மூத். அவர்தான் ஶ்ரீமாவோ ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

எல்லா முகமதுவும் ...அரசியலுக்க்கு..வந்தபிந்தான் ..மூட்டை மூட்டையாக பணம் பண்ணினவை..அதிவும் தமிழருக்கு துரோகம் செய்து

1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் கூறுவது…. பதியுதீன் மஹ்மூத். அவர்தான் ஶ்ரீமாவோ ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

Edited by alvayan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.