Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.

பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வாறான பின்னணியில் நேற்று வழக்கு நிறைவடைந்து வரும்போது பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த யுவதியை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

https://madawalaenews.com/21431.html

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதம் ஒன்றாக இருந்து... தாம்பத்திய உறவில் ஈடுபட்டவர்களை கடத்துவதால் என்ன லாபம். திருமணம் செய்ய முதல் தடுத்திருக்க வேண்டிய வேலை இது.

அமெரிக்கன் கட்டைதுரை @ஈழப்பிரியன் ஊரில்தான் நிற்கிறார். இது... அவரின் ஏரியா. இதுக்கு அவர் ஒரு பஞ்சாயத்து செய்து நல்ல தீர்ப்பை சொல்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு மாதம் ஒன்றாக இருந்து... தாம்பத்திய உறவில் ஈடுபட்டவர்களை கடத்துவதால் என்ன லாபம். திருமணம் செய்ய முதல் தடுத்திருக்க வேண்டிய வேலை இது.

அமெரிக்கன் கட்டைதுரை @ஈழப்பிரியன் ஊரில்தான் நிற்கிறார். இது... அவரின் ஏரியா. இதுக்கு அவர் ஒரு பஞ்சாயத்து செய்து நல்ல தீர்ப்பை சொல்வது நல்லது.

சார் நான் இருபாலை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

சார் நான் இருபாலை.

சாரி, எனக்கு... இருபாலைக்கும், இளவாலைக்கும்.... கொன்புயூஸ் ஆயிட்டு சார். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=1747521376144972 👈

யாழில்... காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய சகோதரன்.

வெளியாகிய அதிர்ச்சி காணொளி! 👆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு வயது வந்தவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து வாழ்கின்றார்கள். இந்த ரவுடிகளுக்கு என்ன பிரச்னை? யாழ்பாணத்தவர்கள் இன்னும் நாகரீகம் அடையாத சமுதாயமாக உள்ளார்களே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.